Abstract:
கீழ்க்கண்ட கேள்விகளால் எனது ஆய்வுக் கட்டுரையை மேம்படுத்த
விரும்புகிறேன்: சமூக எதார்த்தங்களை உள்வாங்குவதில் சமயங்களுக்கு உள்ள
சிக்கல்கள் யாவை? சமூகச் சிந்தனை வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும்
மாற்றத்திற்கும் சமகாலத்தில் சமயங்களின் பங்களிப்புகளாக எவற்றைக் குறிப்பிட
முடியும்? சமுதாயம் - பொருளியல் - அரசியல் - பண்பாடு போன்ற தளங்களில்
சமயம் எத்தகைய தாக்கங்களை உருவாக்குகின்றன? வழிபாடுகளுக்கும்
சடங்குகளுக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிற சமயங்கள் சமூகத்தில்
பற்றியெரியும் எந்தச் சிக்கல்களையும் கவனிப்பதில்லை என்கிற எதார்த்த நிலைக்கான
காரணங்கள் எவை? பொருளியல் - அரசியல் - பண்பாடு போன்றவற்றின் வெளிச்சத்தில்
காலத்திற்கேற்பத் தன்னைத் தகவமைவுப்படுத்திக் கொள்ள சமயங்கள் எத்தகைய
உரையாடல்களை மேற்கொள்ளலாம்?
எனது ஆய்வு சமயங்களின் கடந்த காலச் சமூகப் பங்களிப்புகளை அலசி
ஆராய்வதோடு நிகழ்காலத்தில் அவற்றின் நேர்மறையான, முற்போக்கான
பங்களிப்புகளையும் கணக்கில் கொள்கிறது.