Abstract:
பல்லினச் சமூகத்தவர்கள் வாழ்ந்து வருகின்ற யாழ்ப்பாண மாவட்டத்தல் முஸ்லீம் மக்களுக்கென அச்சமூகத்தில் தனியான சிறப்பும் அவர்களுக்கென அப்பகுதியில் நீண்டதொரு வரலாற்றுப் பாரம்பரியமும் உண்டென்பது மறப்பதற்கில்லை யாழ்ப்பாண மாவட்டத்தில் முஸ்லீம் மக்களது வருகை பற்றியும் அவர்களத ஆரம்பக்கால குடியேற்றங்கள் தொடர்பாகவும் வரலாற்றாசிரியர்களிடமும் ஆர்வலர்களிடமும் பல தரப்பட்ட கருத்து முரண்பாடுகள் காணப்படுகின்ற போதிலும் இக்கருத்துக்கள் அனைத்தும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வருகின்ற முஸ்லீம் மக்களின் முக்கியத்துவத்தினை அதிகரிக்கின்ற வகையிலே தான் அமைந்து காணப்படுகின்றன. பிற்பட்ட சந்தயினர்களுக்கு தங்களது வரலாற்றினை தெளிவாக அறிந்து கொள்வதற்கு எந்தவிதமான உறுதியான சான்றுகளையும் அராபியர்கள் விட்டடுச்செல்லாத நிலையில் வெறுமனே இவர்களது ஆரம்பக்கால வரலாறு பெருமளவுக்குக் கர்ணபரம்பரம்பரைக்கதைகளையே சான்றுகளாக கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.