dc.description.abstract |
சுயதொழில் முயற்சியாளர்களின் வாழ்க்கைத்தரத்தை விருத்தி செய்வதில் வாழ்வாதார அபிவிருத்தி திட்டங்களின் பங்களிப்பு என்ற ஆய்வானது J/367 கிராமசேவையாளர் பிரிவினை அடிப்படையாக கொண்ட ஆய்வாக அமைகின்றது. இப் பிரதேச சுயதொழில் முயற்சியாளர்களால் பெற்றுக் கொள்ளப்படுகின்ற வாழ்வாதார அபிவிருத்தி திட்ட உதவிகள் அவர்களின் வாழ்க்கைத்தரத்தில் எத்தகைய மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது என்பதனையும் அவர்களின் வருமானம் உயர்வடைந்துள்ளதா என்பதையும் கண்டறிவதே இவ் ஆய்வின் நோக்கமாக காணப்படுகின்றது.முதலாம் நிலை மற்றும் இரண்டாம் நிலைத் தரவுகளை அடிப்படையாக கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.முதலாம் நிலைத் தரவுகள் வாழ்வாதார அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக சுயஉதவித் தொகைகளை பெற்றுக் கொள்ளும் 60 பயனாளிகளை வருமானத்தின் அடிப்படையில் ஒவ்வொரு தொழில் செய்பவர்களிலும் 50 வீதமானோர் என தெரிவு செய்து முதலாம் நிலைத்தரவுகளானவை வினாக்கொத்து வடிவில் கரவெட்டி J/367 கிராமசேவகர் பிரிவில் வாழும் சுயதொழிலாளர்களிடம் வழங்கப்பட்டு தரவுகள் சேகரிக்கப்படுகின்றன. வினாக்கொத்துக்கள் திறந்த வினாக்களை உடையதாகவும் அமைந்துள்ளது.வினாக்கொத்து(iresr Scale) இல் அமைக்கப்பட்டு உயர் அளவில் ஏற்றுக்கொள்கின்றேன், ஏற்றுக்கொள்ளவில்லை, முற்றாக ஏற்றுக்கொள்ளவில்லை எனும் ஒழுங்கு முறையில் தமது சரியான தெரிவினை தெரிவு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது. SPSS,Ms-Excel ஆகிய கணனி மென்பொருட்களைப் பயன்படுத்தி பகுப்பாய்வு செய்யப்பட்டு முடிவுகள் பெறப்பட்டுள்ளன. வருமானம், கல்வி, சுகாதாரம் போன்ற குறிகாட்டிகள் உயர்ந்த மட்டத்தில் காணப்படுகின்றது. வருமானம் அதிகரிப்பானது பொருட்கள் சேவைகளை நுகர்வதற்கே செலவிடப்படுகின்றமையால் முதலீடுகளை ஏற்படுத்துவதில் இவர்கள் அதிக அக்கறை செலுத்தவில்லை.இதன் விளைவாக சுயதொழிலாளிகளின் வாழ்க்கைத்தர மட்டமானமானது நடுத்தர மட்டத்தில் காணப்படுகின்றமை முடிவாக கண்டறியப்பட்டுள்ளது. இப்பிரதேச மக்களின் வாழ்க்கைத்தரம் மேலும் உயர்ந்த மட்டத்தில் அதிகரிக்க வேண்டுமாயின் பெற்றுக் கொள்ளப்படும் வருமானத்தின் ஒரு பகுதியை சேமிப்பிற்காக ஒதுக்க வேண்டும். இதன் மூலம் முதலீட்டினை அதிகரித்து மேலும் வருமானத்தினை அதிகரித்து கொள்ள முடியும் என ஆய்வு வலியுத்துகின்றது. |
en_US |