Abstract:
தமிழ் இலக்கிய இலக்கண நூல்களுக்குப் பொருள் கூறி விளக்கும் மரபு நீண்டகாலமாகவே இருந்து வருகின்றது. இன்று நாம் காணும் உரைகள் யாவும் ஒரே காலத்தில் திடீரென்று தோன்றியவை அல்ல. அவை காலப்போக்கிற்கு ஏற்றவாறு முதலில் சிறிய அளவில் அரும்பி மெல்ல மெல்ல வளர்ந்து முழுமை பெற்றனவாகும். தமிழ்மொழி வளர்ச்சிக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் உரையாசிரியர் ஆற்றிய பணி, நூலாசிரியர் பணிக்கு அடுத்த படியாகத் திகழ்கின்றது. மறைந்த பழந்தமிழ் நூல்களை நாம் இழந்த நிலையிலும் அவற்றுள் சிலவற்றையும் அவற்றின் பெயர்களையும் அறிவதற்கு உதவியாக அமைந்தவை உரையாசிரியர்களது உரைகளே ஆகும்.
தமிழ் உரைமரபானது வாய்மொழியாக வழங்கி வந்து பின்னர் குறிப்புரை, விரிவுரை, விளக்கவுரை, உரைக்கு உரை எழுதுதல், பல்வேறு உரைகளைத் தொகுத்துக் காணுதல், உரைகளைப் பற்றிய ஒப்பீட்டுத் திறனாய்வும், உரைகளைப் பதிப்பித்தல் என்றவாறு தமிழ் உரை மரபின் வளர்ச்சி நிலைகளைக் கண்டுகொள்ளலாம். இத்தகைய சூழ்நிலையில் வ.உ.சிதம்பரனாரும் உரையாசிரியர் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். இன்னிலை, திருக்குறளின் அறத்துப்பால், சிவஞானபோதம் ஆகிய மூன்றிற்கும் வ.உ.சி உரை எழுதியுள்ளார். இவர் எழுதியுள்ள உரைகளுள் இன்னிலை விருத்தியுரை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
பெற்றுக்கொள்ளும்
இன்னிலை விருத்தியுரையில் வெளிப்பட்டு நிற்கின்ற விவரணங்களினூடாகப் தகவல்களை ஒழுங்கமைத்தும் பகுப்பாய்வு செய்தும் வ.உ.சி யின் உரைச்சிறப்புக்கள் வெளிக்கொணரப்படும்.