Abstract:
கவிஞர் வைரமுத்து, அவர் தனக்கு முன்னுள்ள திரையிசைப் பாடல்களைப் பின்பற்றியும் சமகாலத்துக் கவிஞர்களைப் பின்பற்றியும் தனக்கென ஒரு படைப்பாற்றலை உருவாக்கித் திரையுலகில் முக்கியமான ஒருவராகத் திகழ்கின்றார். இவ் ஆய்வின் நோக்கமாக கவிஞர் வைரமுத்துவின் திரையிசைப் பாடல்களில் தத்துவ நோக்குப் பற்றிப் பெரிதும் யாரும் கவனம் எடுப்பதில்லை. அதனால் அதனை ஆய்வுசெய்யும் நோக்கில் இவ் ஆய்வு முன்னெடுக்கப்படுகின்றது. அரசியல், சமூகம், காதல், உலகு, உயிர், கடவுள் எனப் பல பொருளில் தத்துவத்தைப் பேசுவதைத் தரிசிக்கலாம். கவிஞர் வைரமுத்துவின் பாடல்களில் தத்துவப் பாடல்கள் காணப்படுகின்றன என்பதே ஆய்வின் கருதுகோளாக அமைகின்றது. இவ்வாய்வானது விமர்சன ஆய்வுமுறை, விபரண ஆய்வுமுறை என்ற ஆய்வு முறையியல்களைக் கொண்டுள்ளது.