DSpace Repository

இரகுவம்சத்தின் ஆற்றுப்படலம் ஓர் ஆய்வு நோக்கு

Show simple item record

dc.contributor.author Kumaran, E.
dc.date.accessioned 2026-08-25T06:07:15Z
dc.date.available 2026-08-25T06:07:15Z
dc.date.issued 2022
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12915
dc.description.abstract இரகுவம்மிசம் யாழ்ப்பாண மன்னர் காலப்பகுதியில் ஈழத்தில் தோற்றம் பெற்ற காவியங்களில் ஒன்றாகும். இதனை இயற்றியவர் அரசகேசரி. வடமொழியில் மகாகவி காளிதாசரால் பாடப்பட்ட ரகுவம்ச காவியத்தினைத் தழுவி இக்காவியம் தமிழில் பாடப்பட்டுள்ளது. இரகுவம்மிச காவியத்தின் முதலாவது படலம் ஆற்றுப்படலமாகும். இதில் இருபத்தாறு செய்யுள்கள் உள்ளன. சரயுநதியின் உற்பத்தி, ஊட்டம், வளம், அழகு என்பவற்றை இப்படலம் விரிவாக வர்ணிக்கின்றது. மூலநூலில் இல்லாத படலம் ஒன்றினை அரசகேசரி தனது காவியத்தில் சேர்த்துக் கொண்டதன் காரணம் அல்லது பின்னணி யாது என்பதை வினாவாக முன்வைத்து இந்த ஆய்வு நகர்தப்படுகின்றது. இரகுவம்மிச காவியத் தொடக்கத்தில் ஆற்றுப்படலத்தினை அரசகேசரி அமைத்ததன் நோக்கம், ஆற்றுப் படலத்தினை அவர் கட்டமைத்திருக்கும் நுட்பம். அவரின் கவித்துவம் அதில் வெளிப்படும் வகை, அவரின் தனித்துவத்தினை அடையாளப் படுத்துவதில் ஆற்றுப்படலத்தின் முக்கியத்துவம் என்பவற்றை ஆராய்வதே இந்த ஆய்வின் நோக்கமாகும். இந்த ஆய்வு விவரண முறையியலின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றது. பகுப்பாய்வு. ஒப்பாய்வு அணுகுமுறைகள் ஆற்றுப்படலத்தினை நுணுகி நோக்குவதற்கும் கம்பராமாயணம் போன்ற காவியங்களுடன் இதனை ஒப்பு நோக்குவதற்கும் பயன்படுத்தப் பட்டுள்ன. இவ்வாய்வின் மூலம் ஆற்றுப்படலம் இரகுவம்மிச காவியத்தில் பெறும் இடம், அதனைக் கட்டமைப்பதில் அரசகேசரி காட்டியிருக்கும் அக்கறை. அதில் அவரின் கலைத்துவம் வெளிப்படும் பாங்கு என்பவற்றினை விளங்கிக் கொள்ள முடியும். en_US
dc.language.iso other en_US
dc.publisher University of Jaffna en_US
dc.subject இரகுவம்மிசம் en_US
dc.subject அரசகேசரி en_US
dc.subject காவியம் en_US
dc.subject ஆற்றுப்படலம் en_US
dc.title இரகுவம்சத்தின் ஆற்றுப்படலம் ஓர் ஆய்வு நோக்கு en_US
dc.type Conference paper en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record