dc.description.abstract |
மொழி என்பது மனித சமுதாயத்தின் அடிப்படையான தொடர்பு சாதனமாகவும், கருத்துப்பரிமாற்ற ஊடகமாகவும் தொழிற்படுகின்றது. அதாவது பிறருடன் கருத்துக்களை பரிமாறும்போது சில வேளைகளில் மொழிபெயர்ப்பு செய்யவேண்டிய நிலை தோன்றுகின்றது. இந்தவகையில் மொழிபெயர்ப்பு என்பது ஒரு மொழியிலுள்ளவற்றை கருத்து சிதைவின்றி இன்னுமொரு மொழிக்கு மாற்றுவதாகும். இவ்வாறு மொழிபெயர்ப்பு செய்யும்போது பல்வேறுபட்ட காரணிகளின் நிமித்தம் மொழிபெயர்ப்பில் பல்வேறு இடர்பாடுகள் ஏற்படுகின்றன. அவ்வகையில் இந்த ஆய்வானது "கண்தெரியாத இசைஞன்” என்ற மொழிபெயர்ப்பு நாவலில் பயன்படுத்தப்பட்டுள்ள மொழிபெயர்ப்பு உத்திகள் என்ற ஆய்வு தலைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பார்வையற்ற இளைஞரை படம்பிடித்துக் காட்டுவதாய் அமைந்த ரஸ்யன் எழுத்தாளரான “HelenAltschuler” என்பவரால் எழுதப்பட்ட “The blind musician” என்ற நாவலினுடைய மொழிபெயர்ப்பு நாவலான ரா.கிருஸ்ணையா அவர்கள் எழுதிய "கண் தெரியாத இசைஞன்" என்ற நாவலை மொழிபெயர்க்கும்போது மொழிபெயர்ப்பாளர் கையாண்டுள்ள மொழிபெயர்ப்பு உத்திகள், மொழிநடை உத்திகள், மொழிபெயர்க்கும்போது மேற்கொண்டுள்ள சவால்கள், மொழிபெயர்ப்பு உத்திகளின் பொருத்தப்பாடுகள் மற்றும் இந்நாவல் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அமைந்துள்ளதா என்பதை அறிவதாகவே இந்த ஆய்வு அமைகின்றது. எனவே இந்த ஆய்விற்காக ஆய்வாளரது மிகவும் பரீட்சயமான தெரிவான மொழிபெயர்ப்பு என்ற துறை தெரிவு செய்யப்பட்டு இது வரை எவராலும் தெரிவு செய்யப்படாத இரண்டு நாவல்களைத் தெரிவு செய்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் மொழிபெயர்ப்பு என்பது மிகவும் முக்கியமானதொரு பணியாக காணப்படுகின்றது. |
en_US |