dc.description.abstract |
இலங்கையில் சம்ஸ்கிருத மொழி வளத்திற்குப் பங்காற்றியவர்களுள் யாழ்ப்பாணத்துத் திருநெல்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்டு இந்தியாவில் இலங்கையர் எனும் சிறப்போடும் பெருமையோடும் சைவசித்தாந்த தத்துவத்திற்கு பணியாற்றியவர் சுவாமி ஞாdப்பிரகாசர் ஆவார். fp.பி. 17ம் நூற்றாண்டை சார்ந்த இவர் சம்ஸ்கிருத மொழியில் சிவாகம மரபும், சிவயோகம், சைவசித்தாந்த தத்துவம் சார்ந்த சிறப்புடன் ஆக்க இலக்கியங்களின் கர்த்தாவாகவும், உரையாசிரியராகவும் விளங்கி சம்ஸ்கிருத மொழி வளத்திற்கு ஆற்றிய பங்களிப்புகளுள் சிவயோகரத்தினம் பற்றியதே இவ்வாய்வு ஆகும். சாஸ்திரம் சார்ந்த சமஸ்கிருத மொழி மரபில் இலக்கிய வளமாகவும் உரைவளமாகவும், ஆய்வு செய்யத்தக்க தன்மையில் சுவாமி ஞானப்பிகாசரது ஆக்கங்கள் கருத்தாழம் மிக்கன. மொழிவளமும், இலக்கியவளமும், தத்துவவளமும் நிறைந்தன. அனுபவ முதிர்ச்சியுடையன. தர்க்கவாதம் நிறைந்த சாஸ்திரரீதியான அணுகுமுறைகள் சிறப்புமிக்கன ஆகும். சிவாகமங்களிலும், யோக சாஸ்திரங்களும் விளக்கிக் கூறப்படும் சிவயோக சாதனை மரபுகள் அனுபவரீதியாக விளக்கும் சிறப்பு சிவயோகரத்தினம் நூலுக்குரிய தனித்துவமாகும். இதனடிப்படையில் ‘சுவாமி ஞானப்பிரகாசரின் சிவயோகரத்தினம்’ எனும் இவ்வாய்வு ஐந்து இயல்களையும் நிறைவுரையையும் கொண்டதாக அமைகிறது. ஆய்வின் பின்னிணைப்பாக ‘சிவயோகரத்தினத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு’ இடம்பெறுகின்றது. சம்ஸ்கிருத மொழிப்புலத்தளத்திலிருந்து சுவாமி ஞானப்பிரகாசரின் பணிகள் சைவசித்தாந்த தத்துவம், மொழியியல், மொழிநடை, தருக்கம், சிவாகமமரபு, யோகசாதனை, இலக்கிய உத்திகள் எனும் பல்வேறு பரிணாமத்திற்கு வழிகாட்டியாகவும் விளங்குகின்றது. |
en_US |