Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8460
Title: அம்பாறை மாவட்டத்தின் நிலப்பிரச்சனைகளும் குடியேற்றப் பிரச்சனைகளும்
Authors: Mohamed Siththik, M.Y.
Issue Date: Jul-1983
Publisher: University of Jaffna
Abstract: இது இலங்கையிலுள்ள பரப்பில் கூடிய மாவட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இது ஒரு செறிவு குறைந்த மாவட்டமும் ஆகும். செறிவு குறைவாக இருப்பதற்குக் காரணம் பெரும் பகுதி நிலம் வளம் உள்ள, நெற்பயிர்ச் செய்கைக்குரிய நிலமாகக் காணப் படுவதாகும். பெரும்பாலான மக்களின் ஜீவனோபாயத்தின் மூலதாரமாக நெற்பயிர்ச் செய்கையே அமைந்துள்ளது. இம் மாவட்டத்தில் மொத்தமாக 3,88.786 மக்கள் வாழ்கிறார்கள். இவர்களுள் 1,61,754 முஸ்லீங்களும், 1,46,371 சிங்களவர்களும், 78,315 இலங்கைத் தமிழர்களும் வாழ்கிறார் கள். விகிதாசார ரீதியாக கூறுவதானால் இலங்கைச் சோனகர்களும், சிங் களவர்களும் இலங்கைத் தமிழர்களும் முறையே 41-6%, 37*6%, 20•1% தினராகவுள்ளனர். இது ஐந்து பாராளுமன்ற அங்கத்தவர்களைக் கொண் டது. தனி அங்கத்தவர் தொகுதிகள் மூன்றும் இரட்டை அங்கத்தவர் தொகுதி ஒன்றும் இதனுள் அடங்குகின்றன. வரலாற்றினைப் பின் நோக்கிப் பார்த்தால் இம் மாவட்டத்தின் பூர்வீகக் குடிகளாக முஸ்லீம்கள் உள்ளனர். இவர்களது வரலாறு சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளையுடையது. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாக இந் நாட்டின் நிரந்தரக் குடிகளாக வாழ்ந்து வந்துள்ள அராபியர்களின் வழித் தோன்றல்கள் இவர்கள். முஸ்லீம்களின் ஒரு பரம்பரைத் தாயகமாக் திகழ்வதும் இம் மாவட்டமாகும். இலங்கை முஸ்லீம்களுக்கென இருக்கின்ற ஒரேயொரு முஸ்லீம் மாவட்டமும் இது வாகும். முஸ்லீம்களை ஒரு சிறுபான்மைத் தேசிய இனம் எனக் கூறிக் கொள்வதற்கு இருக்கின்ற ஒரேயொரு ஆதாரமும் இம் மாவட்டமே . இம் மாவட்டத்தின் வந்தேறு குடிகளாகச் சிங்களவர்கள் உள்ளனர். இவர்களது வரலாறு 1647ல் இருந்தே ஆரம்பிக்கின்றது. 1947 ம் ஆண்டில் 1394 சிங் களவர்கள் மட்டுமேகாணப்பட்டனர்.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8460
Appears in Collections:1983 JULY ISSUE 2 Vol I



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.