Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8352
Title: உலக மயமாதலில் ஓவியக்கலை எதிர்கொள்ளும் சவால்கள் இலங்கையின் 20ஆம் நூற்றாண்டு ஓவியக்கலையினூடான ஒரு பார்வை
Authors: Prakash, R.
Keywords: பாரம்பரிய ஓவியம்;நவீன ஓவியம்;காலணித்துவம்;மேற்கத்தேய நாகரீகம்
Issue Date: 2016
Publisher: University of Jaffna
Abstract: இலங்கையின் 20ம் நூற்றாண்டில் கலை வடிவங்கள் யாவும் தமது பாரம்பரிய கலை மரபுகளில் இருந்து விடுபட்டு புதிய கலை மரபுகளிற்குள் ஊடுருவிச் செல்கின்றன. இங்கு ஓவியக்கலையானது புதிய கோணங்களை நாடிச் செல்லும், ஆக்கபூர்வ உணர்வு வெளிப்பாடுகளைக் கொண்டமைந்த, ஒரு தனித்துவமான கண்ணோட்டத்தை வழங்கும் படைப்புக்களாக வெளிப்படுத்தப்படுகின்றது. இந்த நவீன கலை வரவுகளை ஊக்கப்படுத்தும் செயற்பாட்டினை உலகமயமாதலின் பின்னணியில் அவதானிக்க முடியும். இதனை இலங்கையில் மாறுபட்ட முறைகளில் அமைந்த ஓவியக்கலைப்படைப்புக்களின் வெளிப்பாடுகளின் ஊடாக இனங்காண முடியும். இலங்கையின் 20ம் நூற்றாண்டு ஓவியக்கலை கட்டுப்பாடுகளற்ற ஓவியப்பரப்பு விஸ்தீரணத்தின் உருவாக்கத்தில் தோன்றுவதற்கு, உலகமயமாதலின் செயற்பாடுகளே முக்கிய காரணியாக விளங்குகின்றமையை இந்த ஆய்வுக் கட்டுரையின் மூலம் சுட்டிக்காட்ட முடியும்.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8352
ISSN: 2478-1061
Appears in Collections:2016 NOVEMBER ISSUE 16 VOL III



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.