Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8302
Title: தொல்காப்பியமும் பாணினீயமும் எழுத்தியல் பற்றிய ஓர் ஓப்பியல் ஆய்வு
Authors: Pathmanaban, S.
Keywords: சூத்திரம்;அக்ஷரம்;லிபி;பாஷா;மாத்திரை
Issue Date: 2016
Publisher: University of Jaffna
Abstract: இந்தியப் பண்பாட்டு மரவில் தமிழ் மொழியும் சம்ஸ்கிருதமொழியும் தனித்துவம் மிக்க செவ்வியல் மரபுகளுடன் விளங்குகின்றன. இந்நிலையில் தமிழ்மொழி தென்மொழி என்றும் அழைக்கப்படும் தனித்துவத்துடன் விளங்குகின்றன. இம்மரபில் இவ்விரு மொழிகளுக்குமான மொழியியல் அந்தஸ்தில் திராவிட மொழிக் குடும்பத்தினையும், ஆரிய மொழிக் குடும்பத்தினையும் மூலத் தன்மையாகக் கொண்டமையை உணர முடிகின்றது. இம்மரபில் இந்தோ - ஆரியமரபில் சம்ஸ்கிருதமொழியின் மரபு மேலோங்கிச் செல்வதை மொழியியற் பார்வையில் நோக்க முடிகின்றது. இவ்வகையில் தமிழ் மொழியின் முதல் இலக்கண நூல் என்பது தொல்காப்பியம், சம்ஸ்கிருத மொழியின் முதல் இலக்கண நூல் பாணினீயம் என்பதும் எழுத்தியல் நிலையில் எத்தகைய கருத்துக்களைத் தம்முட் கையாண்டுள்ளன என்பதையும், இவ்விரு இலக்கண நூல்களும் அவ்வவ் மொழிக்குரிய தனித்துவத்துடன் விளங்கும் மேன்மை உயர் நிலையின் ஓர் ஒத்தநோக்குடைய சிந்தனையாக அமைவதனை நோக்க முடிகின்றது. மொழி என்றும் நிலையில் பேசப்படும் தன்மையும், ஒலியியல் முறையிலேயே அவ்வெழுத்துக்கள் முக்கியத்துவம் பெறுவதனையும் காண முடிகின்றது.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8302
ISSN: 2478-1061
Appears in Collections:2016 FEBRUARY ISSUE 16 VOL I



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.