Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/5351
Title: மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் சமுர்த்தி கொடுப்பனவின் பங்கு முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஹிஜ்ஜிராபுரம் (ஆரு 115) கிராமத்தினை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
Authors: Priyanka, K.
Subajini, U.
Keywords: சமுர்த்தி நிகழ்ச்சித்திட்டம்;வறுமை;வாழ்க்கைத்தரம்
Issue Date: 2021
Publisher: University of Jaffna
Abstract: இலங்கையில் வறுமை ஒழிப ;பில் முக்கிய அங்கமாக வகிப்பது சமுர்த்தி நிகழ்ச்சித்திட்டம் ஆகும். 2030ம ; ஆண்டளவில் இலங்கையினை ஒரு வறுமையற்ற நாடாகக் கொண்டுவருவதே இங்குள ;ள அரசின் நோக்கமாகும். அந்த வகையில் முல்லைத்த Pவு மாவட்டத்தின் கரைத்துறைப ;பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஹிஜ்ஜிராபுரம் கிராமம் பின்தங்கிய கிராமமாக காணப்படுவதுடன் வறுமைபட்ட மக்கள் அதிகமாகக் காணப்படும் பிரதேசமாகவும் காணப்படுகின்றது. அந்த வகையில் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதில் சமுர்த்தி நிகழ்ச்சித்திட்டத்தின் பங்கு : முல்லைத்த Pவு மாவட்டத ;தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஹிஜ்ஜிராபுரம் கிராமத்தினை அடிப்படையாக கொண்டு இவ் ஆய்வானது மேற்கொள்ளப ;பட்டுள்ளது. ஆய்வுப் பிரதேசத்தில் 47வீதமான மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களாக உள்ளார்கள் இவர்கள ; அனைவருக்கும ; சமுர்த்திக் கொடுப்பனவானது கிடைக்கின்றது. இவ்வாறு கொடுப்பனவுகள ; கிடைத்தாலும் மக்கள் பல்வேறு பிரச்சினைகளினை எதிர்நோக ;குகின்றார்கள ;. இவ் ஆய்வானது மூன்று நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமுர்த ;தி நிகழ்ச்சித்திட்டத்தின் பங்களிப்பினை இணங்காணல், ஹிஜ்ஜிராபுரம் கிராமத்தின் சமுர்த்திக் கொடுப்பனவின் பின்னர் மக்களின் வாழ்க்கைத்தர நிலையினை கண்டறிதல் மற்றும ; சமுர்த்தி பயனாளிகள் எதிர்நோக ;கும் பிரச்சினைகளினைப் பகுப்பாய்வு செய்தல் மூலம் முடிவுகள ; பெறப்பட்டுள்ளன. இவ் ஆய்விற்காக முதலாம் நிலைத் தரவுகள் மற்றும் இரண்டாம் நிலைத்தரவுகள் போன்றன பெறப்பட்டுள்ளன. முதலாம் நிலைத்தரவுகளாக நேர்காணல், வினாக்கொத ;து, இலக்கு குழு கலந்துரையாடல், நேரடி அவதானிப்பு போன்றனவற்றின் மூலம் தரவுகள் பெறப்பட்டுள்ளன. அதாவது ஆய்வுப்பிரதேசத ;தில் உள்ள சமுர்த ;தி பயனாளிகளிடம ; குழு கலந்துரையாடலின் மூலமும், கிராம சேவகர் மற்றும ; சமுர்த்தி உத்தியோகத ;தர்களினை நேர்காணலின் மூலமும், சமுர்த ;தி நிகழ்ச்சித ;திட்டத ;தினால் கடன் உதவித்திட்டம் கிடைக்கப்பெற்றுள்ள 94 குடும்பங்களிடம ; வினாக்கொத்துக்களினை கொடுத்து ஆய்வாளரினால் நிரப்பப்பட்டு தரவுகள் பெறப்பட்டுள்ளன. இரண்டாம் நிலைத்தரவுகளாக சமுர்த்தி செயலாற்று அறிக்கைகள், மாவட்ட புள்ளிவிபரவியல் கையேடுகள், கிராமசேவகர் அறிக்கைகள், சமுர்த்தி வங்கி அறிக்கைகள் மூலமும் தரவுகள் பெறப்பட்டுள்ளன. இங்கு பெறப்பட்டுள்ள தரவுகளினைக் கொண்டு விபரணப் பகுப்பாய்வு மற்றும ; பண்பு சார் பகுப்பாய்வினை பயன்படுத்தி ஆளு நுஒஉநட மூலம் முடிவுகள் பெறப்பட்டுள்ளதுடன் அட்டவணைகளாகவும் வரைபடங்களாகவும ; முடிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆய்வுப் பிரதேசத்தில் மக்களுக்கு சமுர்த்தி நிகழச்சித்திட்டத்தினால் பல்வேறு உதவித்திட்டங்கள் கிடைக்கப ;பெற்றாலும் அங்குள்ள மக்கள் பல்வேறு பிரச்சினைகளினை எதிர்நோக ;குகின்றார்கள். அதாவது, சமுர்த ;திக் கொடுப்பனவானது மக்களுக்கு காலதாமதமாக கொடுக்கப்படுகின்றது, குடும்ப அங்கத்தவர்கள் அதிகமாக உள்ளமையினால் கொடுப்பனவுகளின் அளவு போதாமையாக உள்ளமை, தொழில் முயற்சிகளினை மேற்கொள்ளுவதற்கு மூலப்பொருள் பற்றாக்குறையாகக் காணப்படுகின்றமை, சமுர்த ;தி நிகழ்ச்சித்திட்டத ;தினால் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களினை மக்கள் சரியான முறையில் ம Pளச்செலுத்த முடியாமல் காணப்படுகின்றமை, மக்களுக்கு சமுர்த்தி நிகழ்ச்சித்திட்டம் பற்றி போதிய தெளிவூட்டல் இன்மை போன்ற பிரச்சினைகள் காணப்படுகின்றன. இவ்வாறு காணப ;படும் பிரச்சினைகளினை த Pர்த ;துக்கொள்வதற்காக மக்களுக்கு உரிய காலத்தில் கொடுப்பனவுகள் கொடுக்கப்படுவதுடன் மக்களுக்கு நிகழ்ச்சித்திட்டம ; பற்றி தெளிவூட்டுதல், கடன்களினை மீளசெலுத்துவதற்கான கால அவகாசத்தினை கூட்டுவதன் மூலம் மக்களின் பிரச்சினைகளினை ஓரளவிற்குக்குறைத்துக்கொள்ள முடியும் போன்ற பரிந்துரைகள் முன்வைக்கப ;பட்டுள்ளன
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/5351
ISSN: 2820-2392
Appears in Collections:Geography



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.