Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4994
Title: பெற்றோர்- பிள்ளை உறவு நிலைகளினை மேம்படுத்துவதில் திருக்குறள் கருத்துக்களின் செல்வாக்கு
Authors: Menaka, S.
Keywords: பெற்றோர்- பிள்ளை உறவு;திருக்குறள்;உளவியல்
Issue Date: 2020
Abstract: ஒரு தனிமனிதனின் முழுமையான ஆளுமை விருத்தியில் பெற்றோர்- பிள்ளை உறவு என்பது மிகவும் அத்தியாவசியமானது என்பது உளவியல் உண்மை. இன்றைய காலத்தில் அத்தகைய பெற்றோர்- பிள்ளை உறவின்; முக்கியத்துவம் அறியப்படாமல் அவை உதாசீனப்படுத்தப்படுகின்றன. இதனால் பெற்றோர்களும் பிள்ளைகளும் உளரீதியாகக் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையினை சரியான முறையில் கையாண்டு கொள்வதற்குபெற்றோர் பிள்ளை உறவின் நடத்ததைக் கோலங்களினையும் அவற்றினை மேம்படுத்த உதவும் நுட்பங்களினையும் உலகப் பொது மறை நூலாம் திருக்குறளில் முன்மொழியப்பட்ட கருத்துக்களினை ஆதராமாகக் கொண்டு தொகுத்துக் கூறுவதே இவ் ஆய்வின் நோக்கமாகக் காணப்படுகின்றது. இதற்காக திருக்குறளின் விளக்க உரை நூல்களில் இருந்து இரண்டாம் நிலையடிப்படையில் தரவுகள் பெறப்பட்டு அவை விபரண ரீதியாக பொருள்கோடல் செய்யப்பட்டுள்ளது. உண்மையில் திருவள்ளுவர் பெற்றோர்- பிள்ளை உறவு தொடர்பான சிறந்த கருத்துக்களினைக் கூறியுள்ளார்.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4994
Appears in Collections:Philosophy



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.