Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4773
Title: தென்னிந்திய - இலங்கை அரசியல் உறவுகள் (சோழர் காலம் வரை)
Authors: Arunthavarajah, K.
Issue Date: 2011
Publisher: Southern Tamil Nadu Through the Ages
Abstract: வரலாற்று ஆதாரங்களின்படி தென்னிந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் இரண்டு நாடுகளுக்குமிடையில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே (Pசந ர்ளைவழசiஉயட Pநசழைன) இருந்து வந்ததை அறிந்து கொள்ள முடிகின்றது. அந்தவகையில் தென்னிந்தியாவின் செல்வாக்கு இலங்கையில் மேலோங்கியிருந்த காலம் சோழர் காலமே. சோழ அரசு, பேரரசாக உருவாக்கம் பெற்ற போது இலங்கை மன்னர்கள் சோழ மன்னர்களுக்கு எதிராக சேரருடனும் பாண்டியருடனும் நல்லுறவினை வைத்துக் கொண்டார்கள். இதனைவிடச் சோழர்களின் வர்த்தக விஸ்தரிப்பு நடவடிக்கைகள் இலங்கையை தமது மண்டலமாகப் பின்னாளில் மாற்றிக் கொள்ள அவர்களுக்கு உதவியது. தென்னிந்தியாவில் எழுச்சி பெற்ற அரச வம்சங்களுக்கும் இலங்கை அரசர்களுக்கும் இடையில் இத்தகைய உறவு ஐரோப்பியர்கள் காலம் வரை தொடர்ந்து வந்தமை பொதுவாக குறிப்பிடப்பட வேண்டியதொரு விடயமாகும். இவ்வுறவுகளின் ஊடாக ஒன்றின் மேல் மற்றதன் செல்வாக்கு என்றுமே கணிசமான அளவு இருந்து வந்துள்ளமை கவனத்தில் கொள்ளத்தக்கது. இத்தகையதொரு பின்னணியில் பின்னாளில் ஆங்கிலேயர்களின் காலத்தில் மேலும் இந்தியாவி;ன் செல்வாக்கு இலங்கையில் பரவுவதற்கான வாய்ப்பு உண்டானது.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4773
Appears in Collections:History



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.