Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12275
Full metadata record
DC FieldValueLanguage
dc.contributor.authorLibika, T.-
dc.contributor.authorRajkumar, A.-
dc.date.accessioned2026-02-27T05:43:28Z-
dc.date.available2026-02-27T05:43:28Z-
dc.date.issued2025-
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12275-
dc.description.abstractஇன்றைய காலத்தில் பல்வேறுபட்ட வன்முறை வடிவங்களாகக் காணப்படுகின்ற போதிலும் வீட்டு வன்முறை முக்கியமானதாகக் காணப்படுகின்றது. வீட்டு வன்முறை வீட்டில் உள்ள பல்வேறு மட்டங்களில் இடம்பெறுகின்ற போதிலும், கட்டிளமைப் பருவத்தில் ஏற்படுகின்ற வன்முறை அவர்களிடத்தில் பல்வேறுபட்ட உளப்பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. அதாவது உடல், உள, உணர்வு. சமூக ரீதியாகப் பாதிப்பதோடு மனச்சோர்வு, மன அழுத்தம். பதகளிப்பு போன்ற பல்வேறு வகையான உளப் பாதிப்புகளை எதிர்கொள்கின்றவர்கள் ஆகுகின்றனர். இவ்வாய்விலே 63 மாதிரிகள் நோக்கம் கருதிய மாதிரி எடுப்பில் தெரிவு செய்யப்பட்டு ஆய்வுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாய்வானது கட்டிளமைப்பருவத்தினரிடத்தில் வீட்டு வன்முறையால் ஏற்படும் உளப்பாதிப்புகளை இனங்காணுவதனை நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ் ஆய்வின்போது பண்புசார் தரவுகள் கருப்பொருள் ரீதியான பகுப்பாய்வு முறைக்கும். அளவுசார் தரவுகள் விபரணப் புள்ளிவிபரவியல் ரீதியான முறையில் மென்பொதி (SPSS-21) முறையைப் பயன்படுத்தித் தரவுப் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. T.Test, Regression, Correlation, Mean, Chi-Square Test போன்ற முறைகளைப் பயன்படுத்தித் தரவுப் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வினுடைய முடிவுகளாக, வீட்டு வன்முறைக்கு உள்ளாகும் கட்டிளமைப் பருவப் பிள்ளைகள் உளப் பாதிப்புகளான (M=17>4123> P = 0.000) 0.000) மனச்சோர்வு, (M-15.861. P-0.000) மன அழுத்தம், (M=24.3861>P=0.000) பதகளிப்பு என்பவற்றை எதிர்கொள்வது கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல்( (M-12.3361> P = 0.000) உடல் ரீதியான வன்முறைகளை எதிர்கொள்ளும் கட்டிளமைப் பருவ மாணவர்களின் மன அழுத்தம் மற்றும் பதகளிப்பிற்கும் இடையேயும், (P = 0.001 >r=0.786) குடும்ப வருமானத்திற்கும் மாணவர்களின் பதகளிப்பிற்கு இடையேயும் தொடர்பு உள்ளமை அறியமுடிகின்றது. மேலும், (P = 0.019. X² = 35.173) சிறுபராயத்தில் எதிர்கொண்ட வன்முறைகள் கட்டிளமைப் பருவத்தினரின் மனச்சோர்வில் தாக்கம் செலுத்துகின்றமை போன்ற (P = 0.019) முடிவுகள் பகுப்பாய்வு மூலம் இங்கே பெறப்பட்டுள்ளன. இவ்வாய்வினுடைய பரிந்துரை எனும் போது, வீட்டு வன்முறை தொடர்பாகக் கட்டிளமைப் பருவத்தினர் இடையே சரியான விழிப்புணர்வுகளை உருவாக்குவதுடன், அது தொடர்பான சரியான தெளிவூட்டலையும் அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான வழிமுறைகளையும் வழங்குவதுடன், பெற்றோரிடமும் இது தொடர்பான தெளிவூட்டலை வழங்குவதும் அவசியமானதாகக் காணப்படுகின்றது.en_US
dc.language.isootheren_US
dc.publisherFaculty of Arts University of Jaffna, Sri Lankaen_US
dc.subjectவன்முறைen_US
dc.subjectஉளப்பாதிப்புen_US
dc.subjectகட்டிளமைப் பருவத்தினர்en_US
dc.subjectமனச்சோர்வுen_US
dc.subjectபதகளிப்புen_US
dc.titleவீட்டு வன்முறைக்கு ஆளாகும் கட்டிளமைப் பருவப் பிள்ளைகளின் உளப்பாதிப்புகள்en_US
dc.typeConference paperen_US
Appears in Collections:URSA 2025



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.