Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11624
Title: இலங்கையில் சைவசமயத்தின் தொன்மை பிராமிக் கல்வெட்டினை முதன்மையாகக் கொண்டது
Authors: Dinosha, S.
Dilakshana, B.
Keywords: சைவம்;இலங்கை;பிராமிக் கல்வெட்டு;தொல்பொருள் சின்னங்கள்
Issue Date: 2017
Publisher: University of Jaffna
Abstract: இலங்கையை இந்துசமய வரலாற்றின் அடிப்படையில்நோக்கும்போதுவரலாற்றுச் சின்னங்களின் அடிப்படையில் சைவமதமே இலங்கையின் தொன்மையான மதமாக கருதப்படுகின்றது. அந்த வகையில் தொல்பொருள் சான்றுகளின் அடிப்படையில் இலங்கையின் சைவசமயத்தின் தொன்மை வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளமையானது சைவசமய வரலாறு இலங்கை வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றுள்ளமையை தெரியவைக்கின்றது. குறிப்பாக கி.மு. 3 ஆம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி.4ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டப்பரப்பினுள் கிடைக்கப்பெறுகின்ற பிராமிச்சாசனங்களின் மூலம் வெளிப்படுத்தப்படும் விடயங்கள் தமிழருடைய பாரம்பரியத்தையும் அவர்கள் ஆரம்பகாலங்களில் இருந்து இலங்கையில் பரிணாமம் அடைந்த வரலாற்றினையும் எடுத்துக்காட்ட உதவுகின்றது. அந்த வகையில் பிராமிக் கல்வெட்டின் மூலம் சைவசமயத்தின் பழமை எந்தளவிற்கு இலங்கை வரலாற்றில் முக்கியத்துவத்தினை பெற்றுக் கொண்டது என்பதனை முதன்மைப் படுத்தும் முகமாக இவ்வாய்வுக் கட்டுன எழுதப்படுகின்றது.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11624
Appears in Collections:History



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.