<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
  <channel>
    <title>DSpace Collection:</title>
    <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8409</link>
    <description />
    <pubDate>Fri, 17 Apr 2026 17:31:40 GMT</pubDate>
    <dc:date>2026-04-17T17:31:40Z</dc:date>
    <item>
      <title>ஈழமும் இந்து மதமும் - அநுராதபுர காலம்</title>
      <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8504</link>
      <description>Title: ஈழமும் இந்து மதமும் - அநுராதபுர காலம்
Authors: Sittampalam, S.K.
Abstract: வம்சங்களையும், தலை நகர்களையும் மையமாக வைத்து வரலாற்றைப் பகுத்து ஆராயும் மரபு வரலாற்றாசிரியரிடையே உண்டு. நம்நாடும் இதற்கு விதிவிலக்கல்ல. இத்தகைய தலைநகர்களில் அநுராதபுரம் மிகப் பழையது மட்டுமன்றி நீண்ட காலம் நீடித்து நிலைத்த தலைநசராகவும் விளங்கியது. இதன் முதல் மன்னனாகிய தேவநம்பிய தீஸன் (கி. மு. 247-207) காலந் தொடக்கம் சோழராற் தோற்கடிக்கப்பட்ட ஐந்தாவது மகிந்தன் காலம் வரை (கி.பி. 993) இது தலை நகராக விளங்கியது. இது தலைநகராக விளங்கினாலும்கூட இதன் ஆரம்பகாலத்தில் குறைந்தது சில நூற்றாண்டு வரை நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் சிற்றரசுகள் தளைத்திருந்தன . பாக்குநீரிணையின் இக்கரையில் ஏற்பட்ட அரசியல் வளர்ச்சி போன்று அக் கரையிலும் (தமிழ்நாட்டில்) சேர, சோழ, பாண்டிய வம்சங்களின் ஆட்சி யின்கீழ் தனி அரசுகள் நிலைபெற்ற காலத்தில் குறு நில மன்னராட்சி நிலை பெற்றிருந்ததும் வரலாறு. சுருங்கக்கூறின் திராவிடரின் பெருங்கற்கால கலாச்சார வழிவந்த பாக்குநீரிணையின் இருபகுதிகளிலும் கி. மு. 3ஆம் நூற் றாண்டில் ஏற்பட்ட அரசியல் வளர்ச்சி இஃதாகும். (Sitrampalam, S. K. 1980)&#xD;
தமிழக வரலாற்றில் கி. பி. 6ஆம் நூற்றாண்டு ஒரு திருப்புமுனையாகும். இக்காலத்தில் எழுச்சி பெற்ற பல்லவ வம்சத்தின்கீழ் தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக மாறிமாறி வம்சங்களால் ஆட்சி செய்வதற்கு வித்திடப் பட்டதோடு நாயன்மார்களும் ஆழ்வார்களும் ஏற்படுத்திய பக்தி இயக்கம் பௌத்தம், ஜைனம் ஆகிய மதங்களை நலிவுறச் செய்து இந்து மதத்தை யும் இந்துக் கலைகளையும் முன்னிலைக்கு இட்டுச்செல்லப் பின்வந்த பாண்டிய சோழ வம்சங்கள் இவற்றை வளர்த்தெடுத்தன. ஈழ வரலாற்றிலும் கி.பி. 7 ஆம் நூற்றாண்டு ஒரு முக்கிய காலகட்டமாகும். கிறீஸ்துவின் பிறப்பிற்கு முற்பட்ட காலத்திலிருந்தே தமிழகத்தோடு அரசியல், கலாச் சார, வணிகத் தொடர்புகள் காணப்பட்டாலும் கி.பி. 7 ஆம் நூற்றாண்டு தொடக்கம் தமிழக - ஈழ உறவுகளில் முன்பில்லாதவாறு ஒருவகையான இறுக்கம் காணப்பட்டது. முதலாம் தத்தோபதிஸ (கி. பி. 643-650), இரண்டாம் தத்தோபதிஸ (கி. பி. 650-667), மூன்றாம் அக்கிரபோதி (கி. பி. 633-643) தமிழகத்திலிருந்து கொண்டுவந்த படையினருதவியுடன் அரசுரிமை பெற்றனர். மானவம்மன் (கி.பி. 684-718) பல்லவ அரச உதவியுடன் தனது அரசுரிமையைப் பெற்றான். இவனது மூன்று மக் களும் பல்லவ அரண்மனையிலேயே பிறந்தோராவர். இதனால் கி.பி. 7 ஆம், 8 ஆம் நூற்றாண்டுகளில் அநுராதபுரத்தில் தமிழகச் செல்வாக்கு அதிகரித் துக் காணப்பட, பின்னர் ஏற்பட்ட பாண்டிய வம்ச எழுச்சியும் 9 ஆம் நூற்றாண்டில் இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது.</description>
      <pubDate>Sun, 01 Jan 1984 00:00:00 GMT</pubDate>
      <guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8504</guid>
      <dc:date>1984-01-01T00:00:00Z</dc:date>
    </item>
    <item>
      <title>யாழ்ப்பாணக் குடாநாட்டில் சுண்ணாம்புக் கற்பாறைகளை அகற்றுவதனால் ஏற்படக்கூடிய விளைவுகள்</title>
      <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8503</link>
      <description>Title: யாழ்ப்பாணக் குடாநாட்டில் சுண்ணாம்புக் கற்பாறைகளை அகற்றுவதனால் ஏற்படக்கூடிய விளைவுகள்
Authors: Mathanakaran, R.; Gunasegaram, T.
Abstract: புவிச் சரித வரலாற்றுக் காலத்தில் ஏறத்தாழ இருபத்தைந்து மிலி யன் ஆண்டுகளுக்கு முன்பு நிலவியதாகக் கருதப்படுகின்ற மயோசீன் காலத் தில் யாழ்ப்பாணக் குடா நாடு கடல் பகுதியிலிருந்து மேலுயர்த்தப்பட் டது. கடல் பகுதியினுள் படிவு செய்யப்பட்ட பல்வேறு அடையல் களும், ஆழமற்ற பகுதிகளிலிருந்து உயிரினங்களும், சேதனவுறுப்புகளும், மேலுயர்த் துகையின் பின், கரைசல்பட்டு இறுகிச் சுண்ணாம்புக் கற்பாறைகளாயின. இவ்வாறு தோன்றிய சுண்ணாம்புக் கற்பாறை குடாநாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வேறுபட்ட தன்மையுடையதாகவும், வெவ்வேறு ஆழத்திலும் காணப்படுகின்றது. இதுவரை குடாநாட்டின் பல பகுதிகளின் மேற் பரப்பிலும், ஆராய்ச்சிக்காக இடப்பட்ட துளைகளின் மூலமும், குழாய்க் கிணறுகளை அமைப்பதற்குத் துளையிடப்பட்டபோதும் பெறப்பட்ட மாதிரி களை அடிப்படையாகக்கொண்டு இங்கு காணப்படுகின்ற சுண்ணாம்புக் கற் பாறையினை முருகைக் கற்பாறைத் தன்மையினைக்கொண்ட சுண்ணாம்புக் கற்பாறை என்றும், (Coralline limestone) மக்கித் தன்மையுடைய உலர்ந்த சுண்ணாம்புக் கற்பாறை என்றும், (Chalky limestone) மணல் தன்மை கூடிய (Silica content) வைரச் சுண்ணாம்புக் கற்பாறை என்றும் (Cherty limestone) மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். குடாநாட்டின் வடபகுதியில் சுண்ணாம்புக் கற்பாறைகள் உயர்த்தப்பட்ட நிலையிலும் தெற்காகவும், தென்மேற்காகவும் சாய்ந்தும் காணப்படுகின்றன. இப்பாறைகள் குடா நாட்டின் சில பாகங்களில் ஏறத்தாழ 350 அடி தொடக்கம் 450 அடி ஆழம்வரை அமைந்துள்ளதாக அறியப்பட்டுள்ளது. இவை தோன்றிய முறையில் வெவ்வேறு அடையல்களாகவும், இதில் அமைந்துள்ள உயிரின சேதனவுறுப்புகளின் காரணமாக இடத்துக்கிடம் வேறுபட்ட சேர்க்கை யினால் வேறுபட்ட அளவில் நுண்துளைமையைக் கொண்டுள்ளவையாக வும், அதற்கேற்ப நீரை உட்புகவிடக்கூடிய தன்மையுடையனவாகவும் இருக்கின்றன. அத்துடன் நீரில் கரையும் தன்மையைக் கொண்டிருப் பதனால் குடாநாட்டின் மேற்பரப்பின்கீழ் இப்பாறைகள் கரைந்து, மூட்டு களும், வெடிப்புகளும், பிளவுகளும் தோன்றியிருப்பதுடன் நீர் தேங்கி நிற் கக்கூடிய குகைகளையும், இடைவெளிகளையும் கொண்டமைந்துள்ளன. ஊடு புக விடக்கூடிய சுண்ணாம்புக் கற்பாறையினூடாக நீர் கீழ்நோக்கிக் கசிந்து, இத்தகைய இடைவெளிகளினூடே தேங்கி நீர்தாங்கு படுக்கையாக அமைந்துள்ளன.</description>
      <pubDate>Sun, 01 Jan 1984 00:00:00 GMT</pubDate>
      <guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8503</guid>
      <dc:date>1984-01-01T00:00:00Z</dc:date>
    </item>
    <item>
      <title>ஐந்தாம் வகுப்பு மாணவர் தமிழ்மொழிப் பயிற்சிகளில் சில அவதானிப்புகள்</title>
      <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8502</link>
      <description>Title: ஐந்தாம் வகுப்பு மாணவர் தமிழ்மொழிப் பயிற்சிகளில் சில அவதானிப்புகள்
Authors: Parvathy, K.
Abstract: இன்று பாடசாலைகளிலே தமிழ்மொழியை மாணவர்கள் கற்பதற்கும் ஆசிரியர்கள் கற்பிப்பதற்குமென மொழிப் பாடநூல்கள் தராதரப்படுத். தப்பட்டு எழுதப்பட்டுள்ளன. தராதரப்படுத்தப்பட்ட ஒவ்வொரு நூலி லும் உள்ள பாடப் பொருள்களும் பாடப்பொருள்களை விளக்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட மொழியும், மொழி அறிவைத் தெளிவுபடுத்துவதற் கும் வளர்ப்பதற்குமென ஆங்காங்கே கொடுக்கப்பட்ட மொழிபற்றிய விளக்கங்களும் பயிற்சிகளும் ஏதோ ஒரு வகையில் தராதரப்படுத்தப் பட்டுள்ளன .&#xD;
மொழி ஆசிரியர்கள் பெரும்பாலும் நூலில் உள்ள ஒரு பாடத்தை வகுப்பிலே முதற்கண் விளக்குகின்றனர். பாடத்தின் முடிவில் மொழி அறிவு', 'எழுத்து' எனும் பகுதிகளை விளக்கி மாணவரைக்கொண்டு பயிற்சிகளைச் செய்விக்கின்றனர். பயிற்சிகள் வாய்மூலமாகவோ எழுத்து மூலமாகவோ செய்விக்கப்படுகின்றன. பாடநூலுக்கு அப்பால் உள்ள பயிற்சிகளையும் மாண வர்கள் வகுப்பறையில் செய்கின்றனர். மாணவர்கள் மொழிப் பாடநூலை மட்டுமன்றி, சமூகக்கல்வி, சமயம், சுகாதாரம், விவசாயம், கணிதம், சித் திரம், சங்கீதம் போன்ற ஏனைய பாடநூல்களையும் படித்து எழுதுவதை யும் ஒரு வகை மொழிப் பயிற்சியாகவே கொள்ளுதல் வேண்டும்.&#xD;
பொதுவாகக் கற்றல், கற்பித்தலில் பயிற்சிகளுக்கு (exercises) உரிய இடத்தை விதந்து கூறவேண்டியதில்லை. மொழிக்கல்வியில் பயிற்சிகள் மிக இன்றியமையாதவை. மொழி, பழக்கத்தால் கைகூடுவது. 'மொழி என் பது ஒரு சமூகப்பழக்கம் என்பர் மொழியியலாளர். மொழிப் பழக்கத்தைப் பயிற்சிகள் உறுதிப்படுத்த வல்லன. பயிற்சிகள் தராதரப்படுத்தப்பட்டவை யாக (graded) அமைந்திருத்தல் இன்றியமையாதது. மாணவர் பயிற்சி களின் பயனை அடைவதற்குப் பலகாரணிகள் மொழிக்கல்வியின் பின் னணியில் அமைந்துள.</description>
      <pubDate>Sun, 01 Jan 1984 00:00:00 GMT</pubDate>
      <guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8502</guid>
      <dc:date>1984-01-01T00:00:00Z</dc:date>
    </item>
    <item>
      <title>இலங்கையின் வன்னிப் பிரதேச விவசாய அபிவிருத்தி</title>
      <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8501</link>
      <description>Title: இலங்கையின் வன்னிப் பிரதேச விவசாய அபிவிருத்தி
Authors: SivaChandran, R.
Abstract: இலங்கையின் வன்னிப் பிரதேசம் 2924 சதுரமைல் பரப்புடையது. யாழ்ப்பாணக் குடாநாடும் தீவுகளும் தவிர்ந்த வடமாகாணப் பகுதியே வன்னிப் பிரதேசமென வழங்கப்படும். இதற்குத் தெற்கேயும் கிழக்கேயும் உள்ள சில பகுதிகள் வன்னிப் பிரதேசத்தினுள் அடங்குவனவெனக் கொள்ளப்படுகின்றபோதிலும் இவ்வாய்வு மேற்படி பிரதேசத்தையே வன் னிப் பிரதேசமெனக் கொள்கின்றது. இது இலங்கையின் மொத்த நிலப் பரப்பில் 11 வீதத்தையும், வடமாகாணத்தின் மொத்த நிலப்பரப்பில் 87.2 வீதத்தையும் கொண்டுள்ளது. மன்னார் மாவட்டம், முல்லைத்தீவு மாவட்டம், வவுனியா மாவட்டம், யாழ்ப்பாணமாவட்டத்தின் வன்னிப் பகுதி (கிளிநொச்சி மாவட்டம்) என்பன இதனுள் அடங்கும். இவை நிர்வாகத்திற்காகப் பதினான்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை மன்னாரில் நான்கும், முல்லைத்தீவில் நான்கும், வவுனியாவில் நான்கும், யாழ்ப்பாணமாவட்ட வன்னிப்பகுதியில் இரண்டு மாக அமைந்துள்ளன.&#xD;
வன்னிப் பிரதேச விவசாய அபிவிருத்தி ஏலவே உள்ள விவசாய நிலங்களில் உற்பத்தித்திறனை அதிகரிப்பதன் மூலமும் புதிய நிலங்களை விவசாயச் செய்கைக்குட்படுத்தி விளைபரப்பினை அதிகரிப்பதன் மூலமும் பெறப்படலாம். இவற்றிற்கான வாய்ப்புகள் இங்கு நிறைய உள்ளன. எனினும் பிரதேசத்தின் பௌதிகச் சூழல், பண்பாட்டுச் சூழல் என்பன இந்நடவடிக்கைகளுக்குப் பல்வேறு தடைகளையும் கட்டுப்பாடுகளையும் விளை விக்கக்கூடியனவாக அமைந்துள்ளன.</description>
      <pubDate>Sun, 01 Jan 1984 00:00:00 GMT</pubDate>
      <guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8501</guid>
      <dc:date>1984-01-01T00:00:00Z</dc:date>
    </item>
  </channel>
</rss>

