<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
  <channel>
    <title>DSpace Collection:</title>
    <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8407</link>
    <description />
    <pubDate>Fri, 17 Apr 2026 17:38:02 GMT</pubDate>
    <dc:date>2026-04-17T17:38:02Z</dc:date>
    <item>
      <title>ஈழமும் இந்து மதமும் - பொலநறுவைக் காலம்</title>
      <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8491</link>
      <description>Title: ஈழமும் இந்து மதமும் - பொலநறுவைக் காலம்
Authors: Sittampalam, S.K.
Abstract: ஈழவரலாற்றில் பொலநறுவைக் காலம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது எனலாம். அரசியற்றுறையை நோக்கும்போது இந்நாட்டில் ஏற்பட்ட தமிழ்ப் படை எடுப்புகள் உக்கிரமடைந்து காணப்பட்டதோடு பொலநறுவை ராசதானியின் வீழ்ச்சியில் இதுவரை ஒரு தலைநகரை மைய மாக வைத்து ஆண்ட மரபு மறைய, பல்வேறு தலைநகர்களை அமைத்து ஆளும் மரபு தலை எடுத்ததோடு வடபகுதியில் சுதந்திரத் தமிழ் அரசின் எழுச்சியும் கருக்கட்டிய காலமாகவே இக்காலம் அமைகின்றது. கிறிஸ்தவ சகாப்தத்திற்கு முன் பிருந்தே தமிழகத்திலிருந்து ஈழத்தின் மீது படை எடுப்புகள் மேற்கொள்ளப்பட்டாலும்கூட அநுராதபுர காலத்தின் பிற் பகுதியில் அதுவும் குறிப்பாக கி.பி. 8ஆம், 9ஆம், 10ஆம் நூற்றாண்டுகளில் உக்கிரம் அடைந்தன. இத்தகைய நிலைக்கு மன்னர்களது வலிமையின்மை மட்டுமன்றித் தமது அதிகாரத்தை வலுப்படுத்துவதற்குத் தென்னிந்திய படைப்பிரிவினர் தயவிலே தங்கியிருக்க வேண்டிய நிலையும் முக்கிய காரணி யாக அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். அத்துடன் படை எடுத்தவர்கள்கூட இந்நாட்டிற்கு அழிவை ஏற்படுத்தத் தவறவில்லை என வும் சூளவம்சம் குறிப்பிடுகின்றது. உதாரணமாக, முதலாவது சேனன் (கி.பி. 831-51) அநுராதபுரத்தில் அரசாட்சியை மேற்கொண்டபோது சிறீ மாற சிறீவல்ல என்பவன் தலைமையில் இங்கு வந்த தமிழர் படை இங் குள்ள தமிழர்களது ஆதரவோடு நகரைச் சிதைக்க அந்நகர் யக்ஷர்களால் சூறையாடப்பட்ட நகர்போன்று காட்சி கொடுத்தது எனச் சூளவம்சம் குறிப்பிடுகிறது. இவ்வாறே தான் இவனுக்குப் பின்னர் ஆட்சிபீடமேறிய மன்னர் பலரும் வலிமையற்றவர்களாகக் காணப்பட்டனர். மூன்றாவது உதயன் (கி.பி.945-53) காலத்தில் பராந்தக சோழனின் படை எடுப்பு நிகழ்ந் தது. உதயன் ஒரு சோம்பேறி மட்டுமல்ல, குடிகாரனும்கூட. நான்காவது மகிந்தன் காலம் ஓரளவு அமைதி காணப்பட்ட காலமாக விளங்கினாலும் கூட, பின்வந்த ஐந்தாவது சேனன் (கி.பி.972-81), ஐந்தாவது மகிந்தன் (கி.பி. 981-1017) போன்றோர் வலிமையற்று இருந்ததோடு இவர்கள் காலத் தில் ஈழத்திலுள்ள திராவிடப் படைப்பிரிவினரின் கையும் ஓங்கியிருந்தது. இப்படையினர் கலகத்துக்கஞ்சி மகிந்தன் றோகனைக்கு ஓடவேண்டியிருந்தது. படையில் மட்டுமன்றிப் பொதுவாகவே தமிழர் செல்வாக்கு அநுராதபுர கால அரசின் இறுதிக் காலத்தில் மேலோங்கியிருந்தது. தமிழர் வசமிருந்த நிலங்கள் 'தமேழத்வலதெமின்' எனவும், தமிழர் வசித்த கிராமங்கள் ‘தமெல்- கம்மின் ' எனவும் தமிழரிடமிருந்து பெறப்பட்ட வரி 'தமெலகுழி' எனவும் இக்காலச் சான்றுகளில் குறிக்கப்பட்டுள்ளன. இத்தகைய சூழ்நிலை யில் தான் தென்னிந்தியாவில் பேரரசமைத்த சோழர் ராஜராஜன் தலைமை யில் (கி.பி. 985-1016) ஈழத்தின் மீது படை எடுத்தனர்.</description>
      <pubDate>Sun, 01 Jan 1984 00:00:00 GMT</pubDate>
      <guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8491</guid>
      <dc:date>1984-01-01T00:00:00Z</dc:date>
    </item>
    <item>
      <title>இலங்கையில் முயற்சியாளர் வர்க்க எழுச்சியும் அதன் முதலாளித்துவ இணக்கப் பான்மையும்</title>
      <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8490</link>
      <description>Title: இலங்கையில் முயற்சியாளர் வர்க்க எழுச்சியும் அதன் முதலாளித்துவ இணக்கப் பான்மையும்
Authors: Nithyananthan, V.
Abstract: நவீன உலகின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பொருளாதாரப் பிரச்சினை யாகிய 'குறைவிருத்தி நிலை' பற்றி ஆராய்ந்துள்ள எஸ். பீ.டீ. டி. சில்வா, தமது நூலின் அறிமுகத்திற் குறைவிருத்தி நிலை என்பது ' - வரையறுக் கப்பட்ட ஓர் அரசியல்-வரலாற்றுச் செய்முறையின் விளைவு' என்றும் அக் காரணத்தினால் அதனை 'மரபு ரீதியான பொருளியல், அபிவிருத்திக் கோட் பாடு என்பவற்றிற்குப் புறம்பாகப் பலதரப்பட்ட துறைகளாகிய அரசியல், பொருளியல், வரலாறு, சமூகவியல் ஆகியவற்றையும் கணிப்பிற் கொண்டே ஆராய முற்படவேண்டும்' எனவும் எடுத்துக் கூறுகின்றார். ' அவ்வகையில் இலங்கையின் குறைவிருத்தி நிலையை உருவாக்குவதிலும் அது நீடித்திருப் பதிலும் இச்சக்திகள் பலவும் தனித்தனியாகவும் ஒருமித்த வகையிலும் பாரிய செல்வாக்குச் செலுத்தியிருக்கின்றன, இன்றும் செலுத்துகின்றன. அதற்கா தாரமாக இலங்கையின் அபிவிருத்தி அநுபவத்திலிருந்து அநேக எடுத்துக்காட்டுக்களைச் சுட்டிக்காட்ட முடியும். அவற்றுள் அடிப்படைத் தன்மை வாய்ந்த ஒன்றாகிய முயற்சியாளர் வர்க்க எழுச்சி பற்றி ஆராய் வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.&#xD;
முயற்சியாளர் வர்க்கமே நாடுகளில் இடம்பெறும் பொருளாதார மாறுபாடுகளுக்குரிய முன்னோடியாக என்றுமே திகழ்ந்து வந்துள்ளது. அரசாங்கக் கொள்கை முயற்சியாளரின் செயற்பாட்டைப் பாதிக்க வல்லதாயிருந்த போதும், பல சந்தர்ப்பங்களில், அவர்களே அரசாங்கக் கொள்கைக்குப் பொறுப்புடையவர்களாயிருந்தார்கள்; அல்லது அதன் மீது தமது செல்வாக்கைப் பிரயோகித்து அதனைத் தமது தேவைக்கேற்ப மாற்றியமைக்கக் கூடிய சக்தி பெற்றிருந்தார்கள். இலங்கை மாத்திரம் எந்த வகையிலும் அதற்கு விதி விலக்காயிருக்கவில்லை. உள் நாட்டு முயற்சி யாளர் வர்க்கத்தின் தோற்றம், வளர்ச்சி, அது மேற்கொண்ட முதலீ டுகள் என்ற யாவும் சுதந்திர இலங்கையின் பொருளாதார முன்னேற்றத் -தின் தன்மையை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளாயமைந்தன.&#xD;
ஒரு குடியேற்ற நாடாயிருந்து சுதந்திரம் பெற்றதென்ற வகையில், இலங்கையின் முயற்சியாளர் வர்க்கம், பொதுவாக, அது போன்ற ஏனைய நாடுகளின் வர்க்கங்களையொத்த தொன்றெனக் கூற முடிந்தாலும், அதற்கே உரித்தான சில தனித் தன்மைகளும் இலங்கை முயற்சியாளர் வர்க் கத்திற்கு இல்லாமற் போய் விடவில்லை. அவ்வாறான தனியான பண்புகள் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியை மாத்திரமன்றி அதன் சமூக அமைப்பு, அரசியல் வளர்ச்சி என்பவற்றையும் பெரிதும் செல்வாக்கினுக் குட்படுத்தி நாட்டின் பிரச்சினைகளை வேறான ஒரு பாதையில் திசை திருப்பி விடுவதற்குப் பொறுப்பாயிருந்தன. இலங்கை இன்று எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளின் பட்டியலில் உச்ச நிலையில் இருக்கும் இன நெருக்கடி கூட, நுணுகிப் பார்ப்பின், ஒரு வகையில் அத்தகைய செல்வாக்கின் விளை வென்றே கூறலாம்.</description>
      <pubDate>Sun, 01 Jan 1984 00:00:00 GMT</pubDate>
      <guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8490</guid>
      <dc:date>1984-01-01T00:00:00Z</dc:date>
    </item>
    <item>
      <title>இலங்கைத் தமிழ் வணிக கணங்களும் நகரங்க ளும் (கி. பி. 1000 - 1250)</title>
      <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8489</link>
      <description>Title: இலங்கைத் தமிழ் வணிக கணங்களும் நகரங்க ளும் (கி. பி. 1000 - 1250)
Authors: Pathmanathan, S.
Abstract: இலங்கையிற் சோழராட்சி ஏற்பட்டதிலிருந்து பதின்மூன்றாம் நூற் றாண்டுவரையான காலப் பகுதியிலே தமிழ் வணிகர் குழாங்கள் பல சமு தாயத்திற் பெருஞ்செல்வாக்குப் பெற்றிருந்தன. தென்னிந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான அரசியல் , வாணிப, கலாசாரத் தொடர்பு களின் பயனாகவே திசையாயிரத்து ஐநூற்றுவர், வீரவளஞ்சியர் , நானா தேசிகள் முதலான வணிகர் அமைப்புக்கள் இலங்கையில் வளர்ச்சியடைந் தன. கி றீ ஸ்து சகாப்தத்திற்கு முற்பட்ட நூற்றாண்டுகளிலிருந்து தொடர்ச்சியாகவே இலங்கைக்கும் தென்னிந்தியாவுக்குமிடையில் வாணிபம் நடைபெற்றுவந்தது. இலங்கையில் உற்பத்தியான முத்து, இரத்தினம், யானைத் தந்தம் முதலான போகப் பொருட்கள் அதிக பெறுமதி வாய்ந் தன வாயிருந்தன. பல நாடுகளிலுள்ள உயர்ந்தோர் குழாத்தினர்கள் அத் தகைய பொருள்களை விரும்பிப் பயன்படுத்தினார்கள். அவை தென்னிந் தியத் துறைமுகங்களுக்கு ஏற்றிச் செல்லப்பட்டு, அங்கிருந்து கடல் வழி யாகவும் தரை வழியாகவும் தூரதேசங்களுக்கு அனுப்பப்பட்டன. இலங்கைக் குத் தேவைப்பட்ட துணி வகைகள், உணவுப் பொருள்கள். உலோ கப் பொருள்கள் முதலியவற்றுட் குறிப்பிடத்தக்க பகுதி தென்னிந்தியத் துறைமுகங்களினூடாக அங்கு எடுத்துச் செல்லப்பட்டன. புராதன காலத்தி லிருந்து தென்னிந்தியாவும் இலங்கையும் ஒரே வர்த்தக நிலையமாக இணைந் திருந்தன.&#xD;
பாக்குநீரிணை வழியான இந்திய - இலங்கை வர்த்தகம் பெரும்பாலும் தமிழக வணிகர் வசமாயிருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழக வணி கரின் நடமாட்டங்களும் நடவடிக்கைகளும் இலங்கையின் துறைமுகப் பட் டினங்களிலும் அவற்றை அடுத்துள்ள கரையோரப் பகுதிகளிலும் நகரங் களிலும் தமிழரின் குடியேற்றங்கள் ஏற்படுவதற்கு வழியமைத்தன. கி. பி. பத்தாம் நூற்றாண்டிலிருந்து இலங்கையிலே தமிழ் வணிகரின் செல்வாக்கு மிகக் கூடுதலான அளவிலே ஏற்படலாயிற்று. கூட்டுறவு முறையிலமைந்த தமிழ் வணிகரமைப்புக்கள் அக்காலத்திலிருந்து இலங்கை வர்த்தகத்திலே பங்கு கொள்ளத் தொடங்கியமை குறிப்பிடத்தக்கது. அத்தகைய அமைப் புக்கள் இலங்கை வாணிபத்திலும் சமுதாயத்திலும் ஏற்படுத்தியிருந்த செல் வாக்கினைத் தெளிவான முறையிற் புரிந்து கொள்வதற்குத் தென்னிந்தியா விலே அய்யாவொளே , வீரவளஞ்சியர், நானாதேசிகள் போன்ற கூட்டத் தவர் உருவாகி வளர்ச்சியடைந்தமையினை இங்கு சுருக்கமாக எடுத்துரைப் பது அவசியமாகின்றது.</description>
      <pubDate>Sun, 01 Jan 1984 00:00:00 GMT</pubDate>
      <guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8489</guid>
      <dc:date>1984-01-01T00:00:00Z</dc:date>
    </item>
    <item>
      <title>பயிர்ச்செய்கைப் பிரதேசம் ஒன்றில் நீர்ப்பாய்ச்சல் திட்டமிடுதலில் சில முக்கிய அம்சங்கள்</title>
      <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8488</link>
      <description>Title: பயிர்ச்செய்கைப் பிரதேசம் ஒன்றில் நீர்ப்பாய்ச்சல் திட்டமிடுதலில் சில முக்கிய அம்சங்கள்
Authors: Kanapathipillai, A.
Abstract: நீர்ப்பாய்ச்சுதலின் நீண்டகால குறுங்காலத் திட்டங்களை இடுதல் நீர்ப் பாசனத்தை அடிப்படையாகக் கொண்ட விவசாய நாடு ஒன்றிற்கு மிக அத்தியாவசியமானதாகும், அதிவரட்சி, இடைவரட்சி, வரட்சிப் பிர தேசங்களில் நீர் கிடைப்பது அருமையாகவுள்ளதாலும் நீரின் தேவை அதிக மாக இருப்பதனாலும் கிடைக்கும் நீரினைக் குறித்த சூழலுக்கு ஏற்புடைத் தாகப் பயன்படுத்துவதற்கு நீர்ப்பாய்ச்சல் திட்டமிடுதல் ஆதாரமாக உள்ளது. நீர்ப்பாய்ச்சுதலைத் திட்டமிடுதல் மூலம் ஒரு அலகு நீருக்கான உற்பத்தித்திறனை முன்னரிலும் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புக் காணப்படு கிறது. இத்தகைய முயற்சிகளில் திட்டமிடற் பிரதேசங்களின் நீர்ச்சம நிலையினைக் கணிப்பீடு செய்வது வலியுறுத்தப்படுவதொன்றாகவும் உள்ளது.&#xD;
ஒரு பிரதேசத்தில் படிவு வீழ்ச்சி, ஆவியாக்க ஆவியுயிர்ப்பு நிலைமைகளை அடியொற்றி மண் ஈரத்திலோ, நீரின் இருப்பிலோ ஏற்படும் மாற்றத் தின் அளவினைக் கணிப்பிடுவது நீர்ச்சமநிலையில் பிரதான அம்சமாகும். நீர்ச்சமநிலையைக் கணிப்பிடுவதில் கழுவு நீர் அளவினைத் துணிந்து கொள்ள முடிகிறது. தோண்த்துவைட்டின் இலகுவான கால நிலை நீர்ச்சமநிலைச் சமன்பாடுகளைப் பிரயோகிப்பதன் மூலம் கழுவு நீர் போன்ற (ward, 1972) நீர்ச்சமநிலையின் ஏனைய அங்கங்களையும் அளவீடு செய்யலாம்.&#xD;
தோண்த்துவைட் போன்றோர் பயன்படுத்திய காலநிலை நீர்ச்சமநிலை யினை (Thornthwaite, 1948, Thornthwaite and Mather, 1955) ஒரு பிர தேசத்தில் பிரயோகிக்கின்றபோது இலகுவான முறையில் அமைந்த மூன்று வேறுபட்ட தன்மைகளுக்கிடையில் பல காலநிலைப் பிரதேசங்களைக் காண முடிகிறது. ஒருபிரதேசம் அங்குள்ள தாவரங்களினாற் பயன்படுத்தக் கூடிய அளவினைவிடக் கூடிய மழைவீழ்ச்சியினைப் பெறுகின்ற பொழுது அதன் விளைவாக மேலதிக நீர் கிடைக்கப்பெறுகிறது. இது ஆறுகளின் ஓட்டங்களுக்கு ஆதாரமாக உள்ளது. வருடமுழுவதிலும் மேலதிக நீர் கிடைக்கின்றபொழுது என்றுமுள்ள ஆறுகள் அப்பிரதேசத்திற் காணப் படுகின்றன. தாவரங்களினாற் பயன்படுத்தக்கூடிய நீரளவினைவிடக் குறை வான மழைவீழ்ச்சி பெறப்படுகின்ற பிரதேசங்களில் நிரந்தரமான ஆறு கள் காணப்படுவதில்லை. இரண்டிற்கும் இடைப்பட்ட பிரதேசங்களான ஒருபருவத்தில் மேலதிக நீரும் மற்றைய பருவத்தில் நீர்ப் பற்றாக்குறையும் நிலவுகின்ற பகுதிகளில் பருவ ஆறுகளின் ஓட்டங்களையும், வரட்சித் தாக் கங்களையும் அவதானிக்க முடிகிறது.</description>
      <pubDate>Sun, 01 Jan 1984 00:00:00 GMT</pubDate>
      <guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8488</guid>
      <dc:date>1984-01-01T00:00:00Z</dc:date>
    </item>
  </channel>
</rss>

