<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rdf:RDF xmlns:rdf="http://www.w3.org/1999/02/22-rdf-syntax-ns#" xmlns="http://purl.org/rss/1.0/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">
  <channel rdf:about="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8333">
    <title>DSpace Collection:</title>
    <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8333</link>
    <description />
    <items>
      <rdf:Seq>
        <rdf:li rdf:resource="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8358" />
        <rdf:li rdf:resource="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8357" />
        <rdf:li rdf:resource="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8356" />
        <rdf:li rdf:resource="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8355" />
      </rdf:Seq>
    </items>
    <dc:date>2026-04-17T16:05:43Z</dc:date>
  </channel>
  <item rdf:about="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8358">
    <title>ஒப்பியல் இலக்கியத்தின் விரிபடு எல்லைகள் மற்றும் அதன் எதிர்காலம் : ஓர் ஆய்வு நோக்கு</title>
    <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8358</link>
    <description>Title: ஒப்பியல் இலக்கியத்தின் விரிபடு எல்லைகள் மற்றும் அதன் எதிர்காலம் : ஓர் ஆய்வு நோக்கு
Authors: kumaran, E.
Abstract: ஒப்பியல் இலக்கியம் பத்தொன்பதாம் நூற்றாண்டு முதற்கொண்டு தனக்கெனத் தனித்துவமான கோட்பாடுகள் மற்றும் முறையியல்களுடன் வளர்ச்சி பெற்று வருகின்றது. சமகாலத் தேவைகள், எதிர்பார்ப்புகள், நோக்கங்களுடன் ஒப்பியல் இலக்கியத்தினை இற்றைப்படுத்துவதற்கான முக்கிய ஆய்வுகளும் அவ்வப்போது நிகழ்ந்து வந்துள்ளன. இவற்றின் வழி ஒப்பிலக்கியக் கோட்பாடுகளில் மாற்றங்களும், சேர்க்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன புதிய கோட்பாடுகளும் அவ்வப்போது அறிமுகம் செய்யப்பட்டுமுள்ளன. இம்மாற்றங்கள், வளர்ச்சிகள், புதிய அறிமுகங்களுக்குப் பின்னால் அக்காலகட்ட சமூக, பண்பாட்டுச் சூழல்கள் மற்றும் ஒப்பியல் இலக்கியக் கோட்பாட்டாளர்களின் நுண் அரசியல் என்பன செல்வாக்குச் செலுத்தி வந்துள்ளதை மறுத்தலியலாது. இலக்கியம் பற்றிய ஆய்வுப் புலங்கள் யாவற்றிலும் இத்தகைய தாக்கங்களை அவதானிக்க முடிந்தாலும் ஒப்பியல் இலக்கியத்தில் இதுகுறித்து அதிக சிரத்தை எடுக்கப்பட்டு வந்தமைக்கு , அது இருவேறு மொழி மற்றும் பண்பாட்டுச் சூழலுக்கிடையில் இடைவினையினை மேற்கொள்வதே காரணமாகும். இதுவரை பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற் றாண்டிலும் வளர்ச்சி பெற்ற ஒப்பியல் ஆய்வுக் கருதுகோள்கள், கோட்பாடுகள், முறையியல்கள் அடிப்படையிலேயே ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு வந்துள்ளன. இந்நிலையில் இருபத்தோராம் நூ ற்றாண்டில் ஒப்பியல் இலக்கியத்தின் போக்கு அதற்கான கோட்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்று சிந்திப்பது அவசியமாகின்றது. பின் காலனித்துவம், கீழைத்தேயவியல், ஆபிரிக்க இலக்கிய எழுச்சி, சீன ஒப்பிலக்கிய ஆய்வுகளின் பெருக்கம் என்பன ஒப்பியல் இலக்கியத்தின் புதிய வழிகள் எவ்வாறு அமைதல் வேண்டும் என்பதை அடையாளப்படுத்தியுள்ளன. இவற்றின் வழி ஒப்பியல் இலக்கியத்தின் எதிர்காலம் குறித்த கருத்துக்களை முன்வைப்பதே இவ்வாய்வின் நோக்கமாக அமைகின்றது. இதன் மூலம் பண்பாட்டு அடையாளங்களைச் சிதைக்காத வகையிலும், மொழித் தனித்துவங்களைப் பேணத்தக்கதாகவும் அதேநேரத்தில் உலக இலக்கியத் தரத்துக்கு ஏற்றவகையிலான படைப்பாளுமை வளர்த்தெடுக்கும், எதிர்கால ஒப்பியல் இலக்கிய ஆய்வுகளின் திசைவழி குறித்த தெளிவினைப் பெற்றுக் கொள்ள முடியும்.</description>
    <dc:date>2016-01-01T00:00:00Z</dc:date>
  </item>
  <item rdf:about="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8357">
    <title>இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான 60 வருட இராஜதந்திர உறவு: தந்திரோபாயக் கூட்டாண்மை - ஒரு மீளாய்வு</title>
    <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8357</link>
    <description>Title: இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான 60 வருட இராஜதந்திர உறவு: தந்திரோபாயக் கூட்டாண்மை - ஒரு மீளாய்வு
Authors: Krishnamohan, T.
Abstract: இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து சீனாவுடன் சமாதான சகவாழ்வு தத்துவத்தினடிப்படையில் பரஸ்பர உறவினை வளர்த்து வந்தாலும், 1957 ஆம் ஆண்டு தொடக்கம் இராஜதந்திர உறவினை வளர்த்து வருகிறது. இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவு ஆரம்பிக்கப்பட்டு (1957- 2017) அறுபது வருடம் நிறைவடைகிறது.சீனக்குடியரசு மக்கள் சீனக்குடியரசாக மறுஅவதாரம் எடுத்த காலத்தில் அதனை இலங்கை அங்கீகரித்துக் கொண்டதுடன், நிலைத்திருக்கும் அபிவிருத்திக்காக இரண்டு நாடுகளும் இணைந்து பணியாற்றி வந்துள்ளன. சிறிய பெரிய நாடுகள் பரஸ்பரச் சமத்துவம், நட்புறவு, பரஸ்பர நன்மைக்கான கூட்டுறவு என்பவற்றை நூற்றாண்டு கடந்து மதித்துப் பேணிவருவதற்கு இரு நாடுகளும் சிறந்த உதாரணமாகும். கடந்த அறுபது வருடங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு சர்வதேச அதிகார ஒழுங்கு மாற்றத்திற்கு ஈடுகொடுத்து உறுதியாகவும், ஆரோக்கியமாகவும் நிலைத்திருக்கிறது. முப்பது வருடங்களாக நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தில் 2009 ஆம் ஆண்டு இலங்கை வெற்றிபெறுவதற்குச் சர்வதேச நாடுகளுடன் இணைந்து சீனா பலமான உதவிகளை வழங்கியது. உள்நாட்டுயுத்தத்திற்குப் பின்னர் தேசக்கட்டுமானத்திற்காகக்குறைந்த வட்டியிலான நீண்டகாலக் கடன்கள், முதலீடுகளை இலங்கைக்குச் சீனா வழங்கி வருகிறது. தொடர் உள்கட்டுமானத் திட்டங்களான நுரைச்சோலை நிலக்கரி மின்நிலையம், கொழும்புத் துறைமுக புதிய கொள்கலன்களைக் கையாளும் மையம், கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலைய அதிவேக நெடுஞ்சாலை, ஹம்பாந்தோட்டைத் துறைமுக மேம்படுத்தல், தெற்கு அதிவேக நெடுஞ்சாலை போன்றன இலங்கையின் சிதைவடைந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பச் சீனா வழங்கிய உதவிகளுக்கான சில உதாரணங்களாகும். இரண்டு நாடுகளும் இணைந்து கொழும்புத் துறைமுக நகரக் கட்டமைப்பினை உருவாக்கி வருகின்றன. கைத்தொழில்மையமாக இலங்கையினை புதிப்பிப்பதற்குச் சீனா ஆழமானதொரு அத்திவாரத்தை இட்டுள்ளது. இரண்டு நாடுகளுக்கும் வெற்றி என்னும் கோட்பாட்டினடிப்படையில் கடந்த பல வருடங்களாக சீனா முன்னெடுத்துவரும் பட்டுவீதிப் பொருளாதாரக் கட்டமைப்பிற்கு இலங்கை தனது முழுமையான ஆதரவினை வழங்கி வருகிறது. இருபத்தியொராம் நூற்றாண்டில் சீனாவினை மையப்படுத்திய உலகப் பொருளாதாரச் செயற்பாடுகளுக்குப் பொருத்தமான பட்டுவீதிப் பொருளாதராத் திட்டத்திற்கு இலங்கை வழங்கும் ஆதரவு இருநாடுகளுக்குமிடையிலான தந்திரோபாயக் கூட்டுப் பங்காளர் உறவிற்கும், இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கும் ஏற்ற எதிர்காலத்தைக் கோடிட்டுக் காட்டுகிறது.</description>
    <dc:date>2016-01-01T00:00:00Z</dc:date>
  </item>
  <item rdf:about="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8356">
    <title>கறுப்புப்பணத்தின் பொருளாதாரத் தாக்கங்கள் இந்தியா பற்றிய சிறப்பு நோக்கு</title>
    <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8356</link>
    <description>Title: கறுப்புப்பணத்தின் பொருளாதாரத் தாக்கங்கள் இந்தியா பற்றிய சிறப்பு நோக்கு
Authors: Chandrasegaram, S.
Abstract: பொருளாதாரம் ஒன்றில் அமைக்கப்பட்ட பொருளாதார நடவடிக்கைகளுக்கு அப்பால் அமைக்கப்படாத பொருளாதார நடவடிக்கைகள் மூலம் உருவாக்கப்படுகின்ற கறுப்புப் பணமானது எவ்வாறு ஒரு பொருளாதாரத்தை பாதிப்புக்கு உள்ளாக்குகின்றது என்பதை எடுத்து விளக்கி இந்தியாவின் கறுப்புப் பண அளவுகளையும் அவற்றின் போக்குகளையும் எடுத்து விளக்குவதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும். கோட்பாட்டு ரீதியாக பணத்தின் அளவு அதன் வேண்டப்பட்ட அளவை விட அதிகரிக்கும் போதும் அல்லது குறையும்போதும் பொருளாதாரத்தில் பண நிரம்பலால் கிடைக்கப்பெறும் நன்மைகள் இல்லாது போகின்றன. இந்தக் கோட்பாடு அடிப்படையில் கறுப்பு பணமானது பொருளாதாரத்தில் பல தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. பொருளாதார திட்டமிடல் குழப்பப்படுகின்றது. இந்தியாவில் கறுப்பு பணம் பல்வேறு மூலங்களில் இருந்து உருவாக்கப்படுகின்றது. உலகிலே கறுப்புப் பணத்தை கொண்டிருக்கின்ற நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருக்கின்றது. கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கு 2016 மோடியின் அரசாங்கத்தாலும் முன்னைய அரசாங்களினாலும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நடவடிக்கைகள் வெற்றியடைவதற்கு பல சவால்கள் தடையாக உள்ளன. இந்தியாவில் முழுமையான அரசியல் பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்தங்கள் மூலமே கறுப்புப் பணத்தை ஒழித்து அதை பொருளாதார அபிவிருத்திக்கு பயன்படுத்த முடியும்.</description>
    <dc:date>2016-01-01T00:00:00Z</dc:date>
  </item>
  <item rdf:about="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8355">
    <title>மாமடு கிராம நெல் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் பிரச்சினைகள்</title>
    <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8355</link>
    <description>Title: மாமடு கிராம நெல் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் பிரச்சினைகள்
Authors: Vijitha, R.
Abstract: இலங்கையின் பொருளாதார கட்டமைப்பில் விவசாயம் முக்கிய இடம் பெறுகின்றது. விவசாயம் உள்நாட்டு விவசாயம், பெருந்தோட்ட விவசாயம் எனும் இரண்டு வகையாகக் பாகுபடுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் உள்நாட்டு விவசாயத்தில் நெற்செய்கை பிரதான இடம் வகிக்கின்றது. இன்று இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் நெல் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு சந்தைப்படுத்தப்படுகின்றது. நெல் உற்பத்தி சந்தைப்பருத்தல் தொடர்பாக பல்வேறுபட்ட ஆய்வுகள் காலந்தோறும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வகையில் மாமருகிராமத்தின் நெல் உற்பத்தி முறைகளையும், சந்தைப்படுத்தல் உத்திகளையும் நெல் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தலுக்கான தடைகளையும் கண்டறிந்து இத்தடைகளுக்கான தீர்வினை முன்வைப்பதே இவ் ஆய்வின் நோக்கமாகும். இவ்வாய்வுமுதலாம், இரண்டாம் நிலைத்தரவுகளைப் பயன்படுத்தி விபரணப்புள்ளிவிபரவியல் அடிப்படையில் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஆய்வுப்பிரதேசத்தில் விவசாயிகளின் பிரதான பயிர்ச்செய்கையாகநெற்செய்கை காணப்படுகிறது. நெற்செய்கை மூலமே மக்கள் அதிகளவு வருமானத்தைக் பெற்றுக்கொள்கின்றனர். இங்கு நெல் உற்பத்தி அதிகரிக்கும் போது விவசாயிகளின் வருமானமும் அதிகரிக்கின்றது. அத்துடன் உற்பத்தி செய்யப்படுகின்ற நெல்லினை விவசாயிகள் அதிகளவு தனியாரிடமே சந்தைப்படுத்துகின்றனர். உற்பத்தி ரீதியாக நீர் ஓரளவு போதுமானதாகக் காணப்படுகின்ற போதும் நிலம், கூலி, கடன் , மூலதனம், உயர்ந்தரக நெல்லினம் தொழில்நுட்ப பயன்பாடு போன்ற உற்பத்தி சார்ந்த பிரச்சினைகளும் விலைத்தளம்பல் போக்குவரத்துப் பிரச்சினை, களஞ்சியப்படுத்தல் வசதியின்மை, அரசாங்க துறையின் திருப்திகரமற்ற செயற்பாடு போன்ற சந்தைப்படுத்தல் பிரச்சினைகளும் இவ் ஆய்வின் மூலம் இனங்காணப்பட்டுள்ளன. இவற்றிற்கான தீர்வாக்குறுகிய காலத்தில் அதிகளவு விளைச்சலைத் தரக்கூடிய நெல் இனங்களை அறிமுகப்படுத்துவதுடன் நெல்லிற்கான உத்தரவாத விலைத்திட்டத்தினை சரியான முறையில் நடைமுறைப்படுத்தி விவசாயிகளின் வருமானத்தினை உறுதிப்படுத்தக் கூடிய நடவடிக்கைகளையும் சட்ட ரீதியாக மேற்கொள்ளுதல், நவீன இயந்திர சாதனங்களின் பயன்பாட்டினை அதிகரித்தல் போன்ற செயற்பாடுகளின் மூலம் இப்பிரதேசத்தின் நெல் உற்பத்தி, சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளை முன்னேற்ற முடியும்.</description>
    <dc:date>2016-01-01T00:00:00Z</dc:date>
  </item>
</rdf:RDF>

