<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rdf:RDF xmlns:rdf="http://www.w3.org/1999/02/22-rdf-syntax-ns#" xmlns="http://purl.org/rss/1.0/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">
  <channel rdf:about="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8283">
    <title>DSpace Collection:</title>
    <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8283</link>
    <description />
    <items>
      <rdf:Seq>
        <rdf:li rdf:resource="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8311" />
        <rdf:li rdf:resource="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8310" />
        <rdf:li rdf:resource="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8309" />
        <rdf:li rdf:resource="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8308" />
      </rdf:Seq>
    </items>
    <dc:date>2026-04-17T17:33:42Z</dc:date>
  </channel>
  <item rdf:about="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8311">
    <title>கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிற்கான நிலப்பயன்பாட்டுப் பாங்குகள்: செய்மதிவிம்பங்கள் மற்றும் பங்குபற்றுதலுடனான களவாய்வினை அடிப்படையாகக் கொண்டது</title>
    <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8311</link>
    <description>Title: கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிற்கான நிலப்பயன்பாட்டுப் பாங்குகள்: செய்மதிவிம்பங்கள் மற்றும் பங்குபற்றுதலுடனான களவாய்வினை அடிப்படையாகக் கொண்டது
Authors: Subajini, U.; Karunakaran, S.
Abstract: ஒரு நாட்டினுடைய அல்லது பிரதேசத்தினுடைய அபிவிருத்தி தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு நிலப்பயன்பாடுகள் பற்றிய ஆய்வுகள் அவசியமாக உள்ளன. நிலப்பயன்பாடு என்பது" ஒரு குறித்த நிலத்துடன் இணைந்த மனித செயற்பாடுகளை குறித்து நிற்கும் அதேநேரம் நிலப்போர்வையானது நிலமேற்பரப்பில் போர்த்தியிருக்கும் இயற்கை மற்றும் செயற்கைத் தோற்றப்பாடுகளைக்" குறிக்கின்றது. ஆரம்ப காலத்தில் இருந்தே நிலப்பயன்பாடுகள் பற்றிய ஆய்வுகளும், அவற்றினை படமாக்கும் முயற்சிகளும் நடைபெற்றுக் கொண்டே வந்துள்ளன. தற்காலத்தில் நிலப்பயன்பாடுகளை படமாக்குவதற்கு வளர்ச்சியடைந்த ஒரு தொழினுட்பமாக செய்மதி தொலையுணர்வுத் தொழினுட்பம் விளங்குகின்றது. இந்தவகையில் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவின் நிலப்பயன்பாட்டுப் பாங்கினை செய்மதி விம்பங்கள் மற்றும் பங்குபற்றுதலுடனான களவாய்வினை அடிப்படையாகக் கொண்டு கண்டறிதலே இவ் ஆய்வின் நோக்கமாக உள்ளது. செய்மதி விம்பங்கள் மற்றும் பங்குபற்றுதலுடனான களவாய்வுகள் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட தரவுகள் புவியியல் தகவல் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி நிலப்பயன்பாட்டுப் பாங்குகளின் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இங்கு காணப்படும் பாருத்தமற்ற நிலப்பயன்பாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றை ஒழுங்குபடுத்த வேண்டிய தேவை இருக்கின்றது என்பதை ஆய்வின் முடிவுகள் எடுத்துக் காட்டியுள்ளன. செய்மதி விம்பங்களில் காணப்படுகின்ற தெளிவில்லாத நிலப்பயன்பாட்டுப் பாங்குகளை பங்குபற்றுதலுடனான களவாய்வை மேற்கொண்டதன் மூலமே அறிய முடிந்துள்ளது. எதிர்காலத்தில் நிலப்பயன்பாடுகள்லாருத்தமாக இருப்பதற்கும், நிலப்பயன்பாடுகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் இவ்வாய்வுபயனுடையதாக அமையும். எனவே இவ் ஆய்வுக்கட்டுரையின் மூலம் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவின் நிலப்பயன்பாட்டு பாங்குகளை அறிய முடிந்துள்ளதுடன், நிலைத்து நிற்கும் நிலப்பயன்பாட்டுப் பாங்குகளை உருவாக்குவதற்கு மக்களுடைய கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டிய தேவையும் உள்ளது என்ற விடயத்தையும் இவ்வாய்வு வெளிக் கொணர்ந்துள்ளது.</description>
    <dc:date>2016-07-01T00:00:00Z</dc:date>
  </item>
  <item rdf:about="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8310">
    <title>மனித உரிமைகள் மற்றும் அதன் நடைமுறைச் சாத்தியம் பற்றிய சமுதாய மட்டத்திலான கருத்தாடல்கள் : யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை மையமாகக் கொண்ட ஒரு விடய ஆய்வு</title>
    <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8310</link>
    <description>Title: மனித உரிமைகள் மற்றும் அதன் நடைமுறைச் சாத்தியம் பற்றிய சமுதாய மட்டத்திலான கருத்தாடல்கள் : யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை மையமாகக் கொண்ட ஒரு விடய ஆய்வு
Authors: Jeevasuthan, S.
Abstract: தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்களில் விவாதிக்கப்பட்டது போன்று கடந்த மூன்று தசாப்தகாலங்களில் இனமுரண்பாடுகளின் போது இலங்கையில் வன்முறை மிகவும் ஆபத்தானதோர் நிலையிலிருந்துள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த ஏழு வருடங்கள் இன்னும் அதிகமான வன்முறை மற்றும் மனித உரிமை மீறல்களைக் கண்ணுற்ற காலப்பகுதியாகக் காணப்படுகின்றது. இந்தச் சூழலில் இவ் ஆய்வானது நீதி மற்றும் மனித உரிமைகள் பற்றி மக்களின் நோக்கு நிலை எவ்வாறு உள்ளது என்பது பற்றியும், உள்ளூர்ச் சூழலில் மனித உரிமைகளைப் பேணிப் பாதுகாப்பதுஇ அவற்றை மேம்படுத்துவது தொடர்பிலும், அவர்களின் கருத்துநிலை எவ்வாறுள்ளது என்பது பற்றியும் ஆய்வு செய்வதுடனஇ மனித உரிமைகள் மட்டுப்படுத்தப்படும் சூழல் பற்றியும் ஆராய்கின்றது. இவ் ஆய்வானது இரண்டு மாவட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஆறு பிரதேசசெயலர் பிரிவுகளில் நோக்கம் கருதிய மாதிரியெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்ட 30 பங்குபற்றுனர்களிடமிருந்து திரட்டப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளது. பிரதான ஆய்வின் முடிவுகளானது நீதி நிலைநாட்டப்படுதல் என்பது எல்லாக் குழுக்களையும், வெவ்வேறு நிறுவனங்களின் கீழுள்ள தனிநபர்களையும் சமமாகவும், நீதியாகவும் கையாள்வதுடன் தொடர்புபட்டது என்பதுடன் இலாறுப்புக்கூறல் என்பது மனித உரிமைகள் மற்றும் வன்முறை விடயத்தில் மிகவும் முக்கியமானது என்றும் வாதிடுகின்றது. மேலும் இவ்வாய்வானது தர்க்கரீதியான நோக்கில் குற்றம், குற்றமின்மை, பொறுப்புக்கூறல் போன்ற கருத்தாடல்களை மீள்பரிசீலனை செய்வதுடன், இவ் விடயதானம் தொடர்பாக ஏற்கனவே காணப்படுகின்ற புலமைத்துறைக்கு பங்களிப்புச் செய்வதாகவும், மனித உரிமைகள் துறையில் புதிய ஆய்வுகளிற்கான ஆரம்பத்திசைகாட்டலாகவும் அவ் ஆய்வு நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.</description>
    <dc:date>2016-07-01T00:00:00Z</dc:date>
  </item>
  <item rdf:about="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8309">
    <title>பழந்தமிழ் இலக்கிய நூல்களை ஒழுங்கமைத்தலில் தூயி தசம பகுப்பாக்க விதிமுறைகளின் பிரயோகம் : ஒரு விளக்கநிலை ஆய்வு</title>
    <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8309</link>
    <description>Title: பழந்தமிழ் இலக்கிய நூல்களை ஒழுங்கமைத்தலில் தூயி தசம பகுப்பாக்க விதிமுறைகளின் பிரயோகம் : ஒரு விளக்கநிலை ஆய்வு
Authors: Visakaruban, M.
Abstract: நூலகங்கள் நல்ல முறையில் சேவை புரிய வேண்டுமானால் அங்கு சேகரிக்கப்படும் ஆவணங்கள் யாவும் பயனுடையவகையிலும் நிரந்தரமாகவும் புத்தகத் தட்டுக்களிலே ஒழுங்கமைக்கப்பட வேண்டியது இன்றியமையாதது. சரியான முறையில் ஒழுங்கமைப்பதன் மூலம் மாத்திரமே நூல்களை எளிதில் இனங்கண்டு பயன்படுத்திக்கொள்ள முடியும். நூலகங்களின் இத்தகைய ஒழுங்கமைப்புச் செயற்பாட்டிற்கு அடிப்படையாக உள்ளவை நூலகப்பகுப்பாக்க மற்றும் பட்டியலாக்க விதிமுறைகள் ஆகும். இதற்கான கருவிநூல்களாக தயிதசமப் பகுப்பாக்கம், ஆங்கில அமெரிக்கப் பட்டியலாக்கம் ஆகியவை இரண்டும் இலங்கையின் நூலகங்களிலே அதிகளவாகப் பயன்ப டுத்தப்படுகின்றன. இவ்விதிமுறைகள் மேனாட்டார் சிந்தனையில் உதித்து உருக்கொண்டவை ஆகும். இவை கீழைத்தேய பழந்தமிழ் நூல்களை ஒழுங்கமைத்துக்கொள்வது தொடர்பான விதிமுறைகளை நுணுக்கமாக உருவாக்குவதில் பெரிதும் சிரத்தை கொள்ளவில்லை. சங்க மற்றும் சங்கமருவிய காலத்தமிழ் இலக்கியங்கள் தமிழ்மொழியின் செந்நெறி இலக்கியங்களாக விதந்துரைக்கப்படுகின்றன. இவை தமிழ் மரபிற்கேயுரிய தனித்துவம் வாய்ந்த இலக்கியத் தொகுதிகள் ஆகும். இந்நூல்கள் எமது பிரதேசத்திலேயே அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் இவை நூலகங்களிலே அதிக எண்ணிக்கையில் சேகரிக்கப்படுகின்றன. ஏனைய பிரதேசங்களிலிருந்தும் இத்தகைய நூல்களைத்தேடி வாசகர் எமது பிரதேச நூலகங்களுக்கே வருகை தருகின்றனர். எனவே இவற்றைக் கருத்துள்ள வகையில் நுணுக்கமாக ஒழுங்கமைத்துப் பாதுகாக்க வேண்டிய பாரிய கடமைப்பாடு எமது பிரதேச நூலகவியலாளர்களுக்கு உண்டு. பிரதேச வெளியீடுகளை ஒழுங்கமைக்கக் கூடிய அங்கீகரிக்கப்பட்ட நியமங்கள் இதுவரை காணப்படவில்லை. இதனால் மேனாட்டாரது விதிமுறைகள் இதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. தூயிதசமப் பகுப்பாக்கம் இலக்கிய நூல்களுக்கான ஒழுங்கமைப்பைப் பற்றிக் குறிப்பிடும் போது உலகின் முதன்மை மொழிகளிலமைந்த இலக்கியங்களான ஆங்கில, ஜெர்மனிய, பிரான்சிய, இத்தாலிய, ஸ்பானிய, இலத்தீன் மற்றும் கிரேக்க, இலக்கியங்களை ஒழுங்குபடுத்துவதற்காக வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு குறிப்பிடப் பிடுகின்றது. அந்த அறிவுறுத்தல்களைச் செவ்வனே பழந்தமிழ் இலக்கியங்களுடன் பொ ருந்திப்பார்த்து ஒழுங்கமைக்கும் போது, நடைமுறையில் சில ஒவ்வாத தன்மைகள் உணரப்படுகின்றன. பழந்தமிழ் இலக்கியங்களுள் ஒன்றான திருமுருகாற்றுப்படை சங்க இலக்கியப் பத்துப்பாட்டு நூல்களுள் முதலாவது நூலக வகையீடு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தூயிதசமப் பகுப்பாக்கத்தின் துணை அட்டவணை (3 - A) குறிப்பிடும் உருவகப் பிரிவுகளின்படி தமிழ்க்கவிதை நூலாக ஒழுங்கமைத்துக் கொள்ளலாம். அல்லது திருமுருகாற்றுப்படை கூறும் உட்பொருளை அடிப்படையாகக் கொண்டு அறுவகைச் சமய நெறிகளுள் ஒன்றாகக் கருதி கௌமாரம் பற்றிக் கூறும் நூல்களுடனும் ஒழுங்கமைத்துக்கொள்ளலாம். இவ்வாறே பதினெண் கீழ்க்கணக்கு நூலாகிய திருக்குறள் தமிழ்க்கவிதை என்பதனுள் ஒழுங்கமைக்கப்படலாம் அல்லது நீதிநூல் என்னும் வகையால் தூயிதசமப் பகுப்பாக்கம் குறப்பிடும் ஒழுக்கவியல் என்ற பாடத்துறைக்குள் ஒழுங்கமைக்கப்படலாம். இவ்வாறான சூழ்நிலையில் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு பதினெண்மேற்கணக்கு பதினெண்கீழ்க்கணக்கு என்ற பழந்தமிழ் இலக்கியத்தொகுதிகளைக் குறிப்பிடும் மரபுவழிபட்ட சொற்றொடர்களைச் சீரமைவுத் தலையங்கங்களாக உபயோகித்து வேறுபட்ட உட்பொருள்களைக் கொண்ட நூல்களை ஒரே பாடத்துறைக்குள் ஒரு தொகுதியாக ஒழுங்குபடுத்துவது பொருத்தமானதா? என்பதில் தெளிவின்மை காணப்படுகின்றது.</description>
    <dc:date>2016-07-01T00:00:00Z</dc:date>
  </item>
  <item rdf:about="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8308">
    <title>யாழ்ப்பாணத்து இந்துக் கோயில்களும் அவற்றின் நிர்வாகப் பிரச்சினைகளும்</title>
    <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8308</link>
    <description>Title: யாழ்ப்பாணத்து இந்துக் கோயில்களும் அவற்றின் நிர்வாகப் பிரச்சினைகளும்
Authors: Arulanantham, S.
Abstract: இலங்கைத்தீவின் வடபாலமைந்துள்ள யாழ்ப்பாணத்திற்கென தனித்துவமான இந்துப் பண்பாட்டுப் பாரம்பரியம் காணப்படுகின்றது. ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்குக்குறையாத இந்துப்பண்பாட்டு வரலாறு அதற்குள்ளதை தொல்லியல் சான்றுகள் எடுத்துக்காட்டுகின்றன. பெருங்கற்பண்பாட்டுக் காலத்திலிருந்தே யாழ்ப்பாணத்தின் முன்னோடிச் சமயமான இந்து சமயம் (Proto Hiduism) வளர்ச்சி பெற்று வந்துள்ளமையை காணமுடிகின்றது. ஆயினும் கி.பி. 6ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட இந்து சமயத்தோடு தொடர்புபட்டிருந்த கோயில்களையும் அவற்றின் எச்சங்களையும் இன்று அடையாளம் காண்பது சிரமமானதாகும். யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை கதிரைமலையை மையமாகக் கொண்ட உக்கிராசிங்கன் கதை (கதிரையாண்டார் கோயில்) மற்றும் மாருதப்புரவீகவல்லிகதை (மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில்), நகுலமுனிவரின் கதை நகுலேஸ்வரம்) போன்றன இந்துக் கோயில்களின் உருவாக்கத்தோடு தொடர்புபடுத்தப்படுவதைக் யாழ்ப்பாணவரலாற்றோடு தொடர்புடைய இலக்கியச் சான்றுகள் எடுத்துக்காட்டுகின்றன. போத்துக்கேயரின் ஆட்சியிலும் ஒல்லாந்தரின் ஆட்சியின் முற்பகுதியிலும் யாழ்ப்பாணத்துக் கோயில்கள் பல இடித்தழிக்கப்பட்ட வரலாறு பதியப்பட்டுள்ளது. ஒல்லாந்தர் ஆட்சியின் பிற்பகுதியில் வழங்கப்பட்ட சமயவழிபாட்டுக்கான அனுமதிக்குப்பின்னர் அமைக்கப்பட்ட கோயில்களே இன்று யாழ்ப்பாணத்தில் காணப்படுகின்றன. அக்காலத்திலிருந்து இன்றுவரைப் பலகோயில்கள் யாழ்ப்பாணத்தில் காணப்பட்டாலும் அவை பல்வேறு காரணங்களினாலும் 30 ஆண்டுக்கால உள்நாட்டு யுத்தத்தினாலும் அழிக்கப்பட்டும், அழிவடைந்தும் காணப்படுகின்றன. இவற்றுள் பலகோயில்கள் அன்றும் இன்றும் நிர்வாக முரண்பாடுகளினால் நீதிமன்றங்களை நாடி வருவதனை அவதானிக்க முடிகின்றது. யாழ்ப்பாணத்தில் பிரபல்யம் வாய்ந்த சில இந்துக்கோயில்களின் நிர்வாகப் பிரச்சினை தொடர்பான நீதிமன்ற வழக்குகள் பற்றியும் அதனால் ஏற்பட்டுள்ள விளைவுகள் குறித்தும் ஆராய்வதாகவே இக்கட்டுரை அமைகின்றது. இவ்வாய்வானது விபரண ஆய்வுமுறையியலை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டுள்ளது. இவ்வாய்வுக்கட்டுரைக்கான தரவுகள் இந்து சாதனப்பத்திரிகை மற்றும் நீதிமன்றப் பதிவேடுகள் என்பவற்றிலிருந்து பற்றுக்கொள்ளப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணத்து இந்து சமுதாயம் இன்று பல்வேறு சவால்களை எதிர்கொண்டே பாரம்பரியத்தையும் பண்பாட்டடையும் பாதுகாக்க வேண்டிய நிலையிலுள்ளது. சமூகத்தை நல்வழிப்படுத்தக் கூடிய கோயில்களால் அதனைச் செய்யமுடியவில்லை. இதற்கு அவற்றில் காணப்படும் நிர்வாகப் பிரச்சனைகளே பிரதான காரணமென்பதை எடுத்துக்காட்டுவதே இவ்வாய்வின் நோக்கமாகும்.</description>
    <dc:date>2016-07-01T00:00:00Z</dc:date>
  </item>
</rdf:RDF>

