<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rdf:RDF xmlns:rdf="http://www.w3.org/1999/02/22-rdf-syntax-ns#" xmlns="http://purl.org/rss/1.0/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">
  <channel rdf:about="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8282">
    <title>DSpace Collection:</title>
    <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8282</link>
    <description />
    <items>
      <rdf:Seq>
        <rdf:li rdf:resource="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8293" />
        <rdf:li rdf:resource="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8292" />
        <rdf:li rdf:resource="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8291" />
        <rdf:li rdf:resource="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8290" />
      </rdf:Seq>
    </items>
    <dc:date>2026-04-17T17:39:51Z</dc:date>
  </channel>
  <item rdf:about="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8293">
    <title>யாழ்ப்பாண மாவட்டத்தில் காலநிலை மாற்றமும் தணிப்பு நடவடிக்கைகளும்</title>
    <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8293</link>
    <description>Title: யாழ்ப்பாண மாவட்டத்தில் காலநிலை மாற்றமும் தணிப்பு நடவடிக்கைகளும்
Authors: Prathebaraja, N.
Abstract: காலநிலை மாற்றம் என்பது உலகின் முக்கியமான பேசு பொருளாக மாறியுள்ளது. காலநிலையின் அனைத்து கூறுகளிலும் தன்னுடைய நிலைத்திருப்பை கொண்டிருக்கின்ற யாழ்ப்பாண மாவட்டமும் காலநிலை மாற்றத்தினையும் அதன் பாதிப்புக்களையும் எதிர்கொண்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தின் காலநிலை மாற்றத்தினை அறிந்து கொள்வதற்காக மழைவீழ்ச்சி மற்றும் வெப்பநிலையில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் பற்றி அறிந்து கொள்ளும் நோக்குடன் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தின் மழை அவதான நிலையங்களில் இருந்து ஐம்பத்தைந்து வருட காலத்திற்கு பெற்றுக் கொள்ளப்பட்ட மழைவீழ்ச்சி வெப்பநிலைத் தரவுகள் சராசரி நியம விலகல் மற்றும் புவியியல் தகவல் ஒழுங்கு முறை என்பனவற்றை பயன்படுத்தி பகுப்பாய்வு செய்யப்பட்டு முடிவுகள் பெறப்பட்டன. யாழ்ப்பாண மாவட்டத்தின் மழையின் செறிவில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஒரு பருவ வறட்சியினையும் ஒரு பருவ வெள்ளத்தினையும் இப்பிரதேசத்தில் ஏற்படுத்துகின்றது. அத்துடன் மழை நாட்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளதுடன் நவம்பர் 20ஆம் திகதி தொடக்கம் டிசெம்பர் 20ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாவட்டத்தின் மொத்த மழைவீழ்ச்சியில் 80% ஆன மழைவீழ்ச்சி கிடைப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. ஆண்டுச் சாரசரி வெப்பநிலை 0.025° C இனால் அதிகரித்துள்ளதுடன் யாழ்ப்பாண மாவட்டத்தில் தென்மேல் பருவக்காற்று காலத்தில் கிடைக்கும் சராசரி வெப்பநிலை.our C இனால் அதிகரித்துள்ளது. இரவில் அளவீடு செய்யப்படுகின்ற இழிவு வெப்பநிலையின் அளவு 0.038 'C இனால் அதிகரித்துள்ளதுடன் சாரீரப்பதனின் அளவும் குறைவடைந்துள்ளது. மேலும் ஆவியாக்கத்தின் விகிதம் omm அதிகரித்துள்ளதுடன் காற்றின் திசை மற்றும் வேகம் எதிர்வு கூற முடியாத அளவுக்கு குழப்பம் அடைந்துள்ளது. வினைத்திறன் மிக்க நடவடிக்கைகள் மூலம் இக்காலநிலை மாற்றப் பாதிப்புக்களை தணிக்க முடியும். என்பதுடன் ஒருங்கிணைந்த உறுதியான செயற்பாடுகள் எதிர்காலப் பாதிப்புக்களை குறைக்கவல்லன.</description>
    <dc:date>2015-01-01T00:00:00Z</dc:date>
  </item>
  <item rdf:about="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8292">
    <title>யாழ்ப்பாணப் பொருளாதாரக் கட்டமைப்பு (1930 - 1958) ஈழகேசரிப் பத்திரிகையினை அடிப்படையாகக் கொண்டது</title>
    <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8292</link>
    <description>Title: யாழ்ப்பாணப் பொருளாதாரக் கட்டமைப்பு (1930 - 1958) ஈழகேசரிப் பத்திரிகையினை அடிப்படையாகக் கொண்டது
Authors: Arunthavaraja, K.
Abstract: இலங்கையின் வடபகுதியில் அமைந்து பாரம்பரிய பொருளாதார பண்பாட்டு நிறுவனங்களுடன் அடையாளங் காணப்படுகின்ற பிரதேசமாக யாழ்ப்பாணப் பிரதேசம் காணப்படுகின்றது. யாழ்ப்பாணக் குடாநாட்டினையும் அயலில் காணப்படுகின்ற தீவுகளையும் உள்ளடக்கிய இத்தகைய பிரதேசத்தினுடைய வளர்ச்சியில் அல்லது அபிவிருத்தியில் புராதன காலந் தொடக்கம் அதனது பொருளாதார நடவடிக்கைகள் பிரதான இடத்தினைப் பெற்றுள்ளன. யாழ்ப்பாண அரசர்களுடைய காலத்திலும் சரி பின்வந்த ஐரோப்பியர்களது ஆட்சிக்காலங்களிலும் சரி அவர்களினால் யாழ்ப்பாணப் பிரதேசத்தினது பொருளாதாரத்தின் அடிப்படையினைத் தென்னிலங்கையிலோ அல்லது மலைநாட்டிலோ மேற்கொண்டதனைப் போன்று மாற்ற முடியவில்லை. மாறாக அவற்றுடன் இணைந்த வகையிலேதான் அவர்கள் தமது பொருளாதார நகர்வினையும் சுரண்டலையும் மேற்கொண்டு வந்தனரன்பதே உண்மை. இதற்கு இறுதியாக 1948 வரை இலங்கை முழுவதிலும் ஆதிக்கத்தினைச் செலுத்திய ஆங்கிலேயரும் கூட விதிவிலக்க அமையவில்லை. இத்தகைய ஆங்கிலேயரது ஆட்சிக்காலத்தின் இறுதிப் பகுதியளவில் தமிழ் மக்களைச் சகல துறைகளிலும் முன்னேற்ற வேண்டுமென்ற நோக்கத்தினைப் பிரதானமாக முன்னிறுத்தி, யாழ்ப்பாணத்தினைத்தளமாகக்கொண்டு வெளிவர ஆரம்பித்த ஈழகேசரி என்ற தமிழ் வார வெளியீட்டின் ஊடாக அக்காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட பொருளாதாரக் கட்டமைப்பு அல்லது பொருளாதார நிலை பற்றியும், அக்கால யாழ்ப்பாணப் பிரதேசத்தின் பொருளாதாரத்தினை முன்னேற்றச்செய்யும் பொருட்டு இப்பத்திரிகை தெரிவிக்கின்ற கருத்துக்கள் பற்றியும் அறிய முடிகின்றது. இவ்வகையில் இப்பத்திரிகையானது கொண்டிருந்த நோக்கங்களில் யாழ்ப்பாணத்தினது பொருளாதார அபிவிருத்தியும் ஒன்றன்பது அவதானிக்கத்தக்கது. இது அவ்வப்போது தனது வெளியீடுகளின் மூலமாகத் தேசத்தின் பொருளாதாரத்தினை உயர்த்துவதற்கான ஆலோசனைகளை அரசிற்கும் மக்களுக்கும் தெரிவித்தும் வந்தது. எனவே ஈழகேசரிப் பத்திரிகை வெளிவந்தகால (19301958) யாழ்ப்பாணப் பிரேேதசத்தினது பொருளாதார நிலையினை அறிய விரும்புகின்ற எவருக்கும் இது சிறந்த வரலாற்று ஆவணம் என்பதில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை.</description>
    <dc:date>2015-01-01T00:00:00Z</dc:date>
  </item>
  <item rdf:about="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8291">
    <title>குடியேற்றங்களால் உருவான தொன்மங்கள் - நல்லூர் அரசமரபின் உருவாக்கத்திற்கு அடிப்படையாக அமைந்த குடியேற்றங்கள் தந்த தொன்மங்கள் பற்றிய ஆய்வு</title>
    <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8291</link>
    <description>Title: குடியேற்றங்களால் உருவான தொன்மங்கள் - நல்லூர் அரசமரபின் உருவாக்கத்திற்கு அடிப்படையாக அமைந்த குடியேற்றங்கள் தந்த தொன்மங்கள் பற்றிய ஆய்வு
Authors: Krishnarasa, S.
Abstract: இலங்கைப் பண்பாட்டில் யதார்த்தமாகக் காணலாம். இவ்வாய்வின் நோக்கமானது மத்திய கால வடஇலங்கையில் இலக்கிய மரபுகளில் பதியப்பட்ட நல்லூர் இராசதானியுடன் தொடர்புடைய வரலாற்றுத் தொன்மங்களைப் பற்றியும் அவற்றின் வடிவங்களைப் பற்றியும் ஆராய்வதாக அமைந்துள்ளது. கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட யாழ்ப்பாண இராச்சியம் பற்றிய ஆய்வுகளில் நல்லூர் இராசதானியுடன் தொடர்புடையதாகக் கருதப்பட்ட தொன்மங்கள் வெறுமனே ஐதீகங்கள் என்ற அடிப்படையில் கையாளப்பட்டிருந்தனவே தவிர அவற்றிற்கும் இடைக்கால வடஇலங்கைச் சமூக உருவாக்கத்திற்குமிடையிலான கருத்தாடல்கள் தொடர்பாக ஆராயப்பட்டிருக்கவில்லை. எஸ்.பத்மநாதன், கா. இந்திரபாலா ஆகியோர் அவற்றை தென்னாசியாவின் குறிப்பிட்ட பிரதேசங்கள் தொடர்ச்சியாக வரலாற்றுத் தொன்மங்களை அபரிமிதமாகக் கொண்டிருப்பதற்கான காரணம் பற்றி ஆராயும் போது அங்கு சர்வதேச வாணிகத்துறையும், பௌதிக இயற்கை வள - மூலவளங்களுடன் தொடர்புபட்ட வகையிலான உள்நாட்டு சந்தைப் பரிவர்த்தனை நடவடிக்கைகளுமே தொடர்ச்சியான குடியேற்றமுறைச் செயற்பாடுகளினை தூண்டிய காரணிகளாக அமைந்திருந்தன. தென்னாசியாவில் குறிப்பிட்ட பிரதேசங்கள் வரலாற்றுக் காலத்திலிருந்தே தொடர்ச்சியாகக் குடியேற்ற நடைமுறைக்குள் உட்பட்டு வந்திருந்தமையின் பின்னணியில் தொன்மங்களும் அவற்றினை அடிப்படையாகக் கொண்டவரலாற்றழுத்தியல் மரபுகளும் உருவாக்கம் பெற்றமையை இலக்கிய வரலாற்றுச் சான்றுகள் உறுதிப்படுத்தியுள்ளன (பக்தவச்சலபாரதி. இலக்கிய மானிடவியல், ப.291). சர்வதேச வாணிபக் கூட்டுக்களுக்கான வாணிப மார்க்கங்களுக்குரிய கேந்திரஸ்தானங்கள் அவற்றின் சமுத்திரவியல் பக்கத் தொடர்புகள் காரணமாக வேகமான வரலாற்று வளர்ச்சியை அடைந்து கொண்டிருந்தமையைக் காண்கின்றோம். புராதன இந்தியாவில் கேரளம், நேபாளம், காஸ்மீர்என்பன அத்தகையதொரு வாணிபமார்க்கத்திலமைந்த தனித்துவமான பொருளாதார வளம் மிக்க செழிப்பான புலங்களாகவும், சமய அடிப்படையில் தனித்துவமான முறையிலமைந்த சமய வரலாற்று மரபுகளுக்குரிய தொன்மங்களையும் கொண்டிருக்கும் பிராந்தியங்களாகவும் விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இலங்கையிலும் அத்தகையதொரு பன்முகப்படுத்தப்பட்ட வாணிப, பொருளாதார, சமய வரலாற்று தொடர்புகள் இலங்கையிலும் ஏற்பட்டிருந்தமைக்கான இலக்கிய, தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன. இலங்கைத் தீவின் தென்கிழக்கிலங்கைப் பிராந்தியம் யாவா மற்றும் மலேசியா, பாலித்தீவு போன்ற தென்கிழக்காசிய நாடுகளிலிருந்து தொன்மையான குடியேற்றங்களைக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. உரோகணத்தின் வரலாறு மற்றும் புராதன காலப் பன்மைப் பண்பாட்டு வளர்ச்சி நிலைகளை அங்கிருந்து கிடைத்துவரும் புராதனதொல்லியற்சின்னங்களிலிருந்தும், இராவணா மற்றும் பஞ்சவர் ஆட்சி மரபுகளிலிருந்தும், கௌதம புத்தருடைய மகியங்கணைக்கான முதல் வருகை பற்றிய தொன்மங்களிலிருந்தும் காணமுடிகின்றது. வட இலங்கையைப் பொறுத்தவரையிலும் குறிப்பாக யாழ்ப்பாணக்குடாநாடு பொறுத்தும் இத்தகைய பண்பாட்டு நிலைமைகளை விளக்கும் தொன்மங்கள் குடியேற்றங்கள் வாயிலாக ஏற்பட்டிருந்தமைக்கான வரலாற்று மூலங்களை மத்திய கால இலக்கிய மரபுகளினூபாக் கண்டு கொள்ள முடிகின்றது. நல்லூர் இராசதானியில் அக்கால முகாமைத்துவ நடவடிக்கைகளை மையப்படுத்திய வகையில் எழுந்த அரச பாரம்பரியம் பற்றிய தொன்மங்கள் கூட குடியேற்ற முறைகளாலேயே உருவாக்கப்பட்டமையை வட வரலாற்றுக்கருவுடைய ஐதீகங்கள் (Historicsal Myths) என்ற அடிப்படையிலேயே அவற்றின் இருப்பினைக் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறான ஓர் ஆய்வியல் சூழலில் இலக்கிய மானிடவியல்</description>
    <dc:date>2015-01-01T00:00:00Z</dc:date>
  </item>
  <item rdf:about="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8290">
    <title>வாழ்வாதாரச் சொத்துக்களின் இடம்சார் பாங்கும், வறுமையின் பரிமாணமும்  : ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவை சிறப்பாகக் கொண்டதும்ம்</title>
    <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8290</link>
    <description>Title: வாழ்வாதாரச் சொத்துக்களின் இடம்சார் பாங்கும், வறுமையின் பரிமாணமும்  : ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவை சிறப்பாகக் கொண்டதும்ம்
Authors: Subajini, U.; Suthakar, K.
Abstract: வாழ்வாதாரம் என்பது வாழ்க்கைத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு மூலமாகும். நிலைத்து நிற்கக்கூடிய வாழ்வாதாரமானது தனிப்பட்டவர்கள் ஒவ்வொருவரும் அவர்களுடைய வாழ்வாதாரத்தை கட்டியெமுப்புவதற்கு அடிப்படையாக அமையும் இயற்கை, சமூக . லௗதிக, மானிட மற்றும் நிதி மூலதனம் ஆகிய ஐந்து சொத்துக்களில் தங்கியுள்ளது (kristanson, et al ; 2005) நிலைத்து நிற்கக் கூடிய வாழ்வாதார உத்திகளும் சொத்துக்களும் வறுமையான மக்களின் வாழ்வாதாரத்தில் சுற்றுச்சூழல் வளங்களின் பங்கினை மிகவும் ஆழமாக ஆராய்வதற்கான ஒரு வழியை வழங்குகின்றது. (kristalson, et al., 2005). வாழ்வாதாரச் சொத்துக்களின் பரம்பலும், அவற்றின் அளவுகளும் மக்களின் வறுமையை தீர்மானிப்பவையாக விளங்குகின்றன. வறுமை என்பது இடம் சார்ந்த ரீதியில் சமனற்றுக் காணப்படும் ஒரு தோற்றப்பாடாகும். வறுமையினுடைய இடம் சார் பரிணாமத்தினை காட்சிப்படுத்தும் ஒரு பிரபல்யமான வழிமுறையாக வறுமை பற்றிய படமானது இப்பாழுது காணப்பட்டு வருகின்றது. ஒட்டு கட்டான் பிரதேச செயலர் பிரிவிலுள்ள வாழ்வாதாரச் சொத்துக்களை அடையாளப்படுத்தி அவற்றின் இடம்சார் பாங்கினை படமாக்குவதன் மூலம், வாழ்வாதாரச் சொத்துக்களின் அடிப்படையில் வறுமையின் இடம் சார்ந்த பரம்பலை அறிவதே இவ் ஆய்வின் நோக்கமாகும். இவ் ஆய்வானது முதலாம் மற்றும் இரண்டாம் நிலைத்தரவுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெற்றுக் கொள்ளப்பட்ட தரவுகள் Arc GIS தொழிநுட்பத்தை பயன்படுத்தி இங்குள்ள இருபத்தேழு கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள வாழ்வாதாரச் சொத்துக்கள் அடையாளப்படுத்தப்பட்டு, படமாக்கப்பட்டு அவற்றின் இடம்சார் பாங்குகளை அடிப்படையாகக் கொண்டு வறுமை மதிப்பிடப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்ட கிராம சேவகர் பிரிவுகளில் வாழ்வாதாரச் சொத்துக்களின் பரம்மல் மட்டங்கள், ஒரே மாதிரியாக காணப்படவில்லை. வாழ்வாதாரச் சொத்துக்களின் பரம்பலில் காணப்பட்ட வேறுபாடுகளே வறுமை மட்டங்களிலும் வேறுபாடுகள் காணப்படக் காரணமாகும். எனவே கிராம சேவகர் பிரிவு ரீதியாக காணப்படுகின்ற வாழ்வாதாரச் சொத்துக்களின் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்து அவற்றின் பரம்பலை சமப்படுத்துவதன் மூலம் வறுமையினைக்குறைக்க முடியும். இவ்வாய்வினை மேற்கொண்டதன் மூலம் இப்பிரதேசத்தின் வாழ்வாதாரச் சொத்துக்களின் இடம் சார்பாங்கிற்கும் வறுமைக்கும் இடையிலான தொடர்பினை அறிய முடிந்துள்ளது.</description>
    <dc:date>2015-01-01T00:00:00Z</dc:date>
  </item>
</rdf:RDF>

