<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rdf:RDF xmlns:rdf="http://www.w3.org/1999/02/22-rdf-syntax-ns#" xmlns="http://purl.org/rss/1.0/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">
  <channel rdf:about="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10383">
    <title>DSpace Collection:</title>
    <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10383</link>
    <description />
    <items>
      <rdf:Seq>
        <rdf:li rdf:resource="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10587" />
        <rdf:li rdf:resource="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10586" />
        <rdf:li rdf:resource="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10585" />
        <rdf:li rdf:resource="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10584" />
      </rdf:Seq>
    </items>
    <dc:date>2026-04-17T17:39:50Z</dc:date>
  </channel>
  <item rdf:about="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10587">
    <title>மொழிபெயர்ப்பும் பதிப்புரிமையும்: மொழிபெயர்ப்புக்கும்  மூலநூலிற்கும் வழங்கப்படும் பதிப்புரிமை எல்லை  பற்றிய விளக்கநிலை ஆய்வு</title>
    <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10587</link>
    <description>Title: மொழிபெயர்ப்பும் பதிப்புரிமையும்: மொழிபெயர்ப்புக்கும்  மூலநூலிற்கும் வழங்கப்படும் பதிப்புரிமை எல்லை  பற்றிய விளக்கநிலை ஆய்வு
Authors: Salina, S.
Abstract: மொழிபெயர்ப்பென்பது விசேடமான ஆற்றல் தேவைப்படும் ஒரு நுட்பமான கலையாகும். &#xD;
இதனால் தான் அதை விஞ்ஞானமாகவும் கலையாகவும் அழைக்கின்றனர். இப்பணியை &#xD;
நிறைவேற்றும் மொழிபெயர்ப்பாளன் இடைவிடாது நூல்களைக்கற்பவராகவும் எல்லா &#xD;
விடயங்கள் குறித்து அறிவுடையவராகவும் இருக்கவேண்டுமென்று எதிர் பார்க்கப்படுகின்றது. &#xD;
அந்தவகையில் தான் எதிர்கொள்ளும் மொழிபெயர்ப்பினை செவ்வனே செய்து&#xD;
மூலநூலாசிரியரின் கருத்தைப் பிறிதொரு மொழியில் கொண்டுசேர்க்கத் துணைபுரிவதால் &#xD;
மொழிபெயர்ப்பாளனும் நூலாசிரியராக மதிக்கப்பட்டு சட்டரீதியாக அவரது படைப்பிற்குப் &#xD;
பதிப்புரிமை கிடைக்கின்றது. இருந்தபோதிலும் மூலநூலாசிரியர் போல் பதிப்புரிமையின் &#xD;
அனைத்து சிறப்பம்சங்களையும் அவர்கள் பெற்றிடுவதில்லை என வெனுட்டி&#xD;
குறிப்பிட்டுள்ளார். மூலநூலாசிரியரின் அனுமதியின்றி எந்தவொரு நூலையும்&#xD;
மொழிபெயர்க்க இயலாதவர்களாகின்றனர். இத்தகைய கட்டுப்பாடுகள் இருப்பினும் கூட &#xD;
மூலநூலசிரியரது நூலொன்றின் மொழிபெயர்ப்பிற்கு விற்பனை அதிகரிக்கும்போது &#xD;
கிடைக்கும் இலாபத்தில் குறிப்பிட்டளவு இலாபத்தை மொழிபெயர்ப்பாளர்கள் பெற்றுக் &#xD;
கொள்ளவும் இப்பதிப்புரிமை இடமளிக்கின்றது. எனவே இவ் ஆய்வின் நோக்கமானது &#xD;
மொழிபெயர்ப்பாளனுக்கும் மூலநூலாசிரியருக்கும் இடையிலான பதிப்புரிமை&#xD;
சிறப்புரிமைகளையும் அவர்களுக்கிடையிலான வேறுபாடுகளையும் லோரன்ஸ்&#xD;
வெனுட்டியின் ஸ்கன்டல்ஸ் ஒப் ரான்ஸ்சிஷேன் எனும் நூலினையும் இலங்கையின் &#xD;
புலமைச்சொத்து பாதுகாப்பது தொடர்பிலான 2003ம் ஆண்டின் 36ம் இலக்க&#xD;
புலமைச்சொத்துச் சட்டத்தையும் அடிப்படையாகக் கொண்டு ஆராய்வதாகும். இவ்வாய்வு &#xD;
பின்வரும் பிரச்சினையை ஆராய்கிறது: மொழிபெயர்ப்பு ஒரு மூலப்படைப்பு என்பதைப் &#xD;
பற்றிக் குறிப்பிடுகையில் மொழிபெயர்ப்பு பதிப்பரிமைச்சட்டத்திலேயே எல்லையுள்ளதா? &#xD;
மேலும் இப்பதிப்பரிமைச் சட்டம் இலங்கை மொழிபெயர்ப்பாளர்களுக்கு எத்தகைய &#xD;
வரையறைகளையும் சலுகைகளையும் வழங்குகின்றது என்பதைப்பற்றியும் ஆராய்கிறது. &#xD;
இதற்கு ஒப்பீட்டு ஆய்வு முறை மற்றும் விவரிப்பு ஆய்வு முறை ஆகிய ஆய்வுமுறைகள் &#xD;
பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாய்வு எதிர்கால மொழிபெயர்ப்புத்துறை மாணவர்களுக்கும் &#xD;
மொழிபெயர்ப்பு ஆய்வில் ஈடுபடுபவர்களுக்கும் மொழிபெயர்ப்பின் எல்லையையும்&#xD;
முக்கியத்துவத்தை அறிந்துகொள்ள உதவும்.</description>
    <dc:date>2023-01-01T00:00:00Z</dc:date>
  </item>
  <item rdf:about="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10586">
    <title>பச்சிலைப்பள்ளிப் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட பகுதியின்  நெற்ப்பயிர்ச்செய்கையுடன் தொடர்பான பிரச்சினைகள</title>
    <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10586</link>
    <description>Title: பச்சிலைப்பள்ளிப் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட பகுதியின்  நெற்ப்பயிர்ச்செய்கையுடன் தொடர்பான பிரச்சினைகள
Authors: Kajenthiny, T.; Subajiny, U.
Abstract: கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள பச்சிலைப்பள்ளிப் பிரதேச செயலர் பிரிவில் &#xD;
நெற்செய்கை முக்கிய பயிர்ச்செய்கையாக மேற்கொள்ளப்படுகின்றது. பச்சிலைப்பள்ளிப் &#xD;
பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியின் நெற்செய்கையுடன் தொடர்பான&#xD;
பிரச்சினைகளை ஆராய்வதாக இவ் ஆய்வு அமைகின்றது. உற்பத்திச் செலவு அதிகரித்த &#xD;
போதும் ஏக்கருக்கான விளைச்சலின் அளவு குறைவாகவுள்ளமையால் விவசாயிகளால் &#xD;
எதிர்பார்க்கும் இலாபத்தைப் பெறமுடியாதுள்ளமை முக்கிய பிரச்சினையாக அடையாளப் &#xD;
படுத்தப்பட்டுள்ளது. நெற்செய்கையின் விளைநிலப்பரப்பு மற்றும் நெல்உற்பத்தி அளவுகள் &#xD;
என்பவற்றில் காலரீதியாக ஏற்பட்டுள்ள மாற்றங்களை கண்டறிதல், நெற்செய்கையின் &#xD;
இடம்சார் பரம்பல்களை கண்டறிதல், பிரதேச நெற்செய்கையாளர்களால் எதிர்நோக்கப்படும் &#xD;
பிரசச் pனைகளை கணட் றிதல,; பிரதேச நெறn; சயi; கயுடன் தொடாபு; படட் பிரசச் pனைகளுகக் hன &#xD;
தீர்வுகளையும் ஆலோசனைகளையும் முன்வைத்தல் ஆகிய நோக்கங்களை&#xD;
அடிப்படையாகக்கொண்டு 2010-2019 வரையான காலப்பகுதியை உள்ளடக்கி இவ்வாய்வு &#xD;
மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ் ஆய்விற்கு முதலாம் நிலைத் தரவுகளான நேரடி அவதானம், &#xD;
வினாக்கொத்து, நேர்காணல், மையக்குழுக் கலந்துரையாடல், பங்குபற்றலுடனான கள &#xD;
அய்வு முறைகளிலும் இரண்டாம் நிலைத்தரவுகளான புள்ளிவிபரங்கள், ஆண்டறிக்கைகள், &#xD;
எண்ணிலக்கத் தரவுகளை போன்றனவும் பெற்றுக்கொள்ளப்பட்டன. வினாக்கொத்து&#xD;
முறையான தரவுசேகரிப்பில் ஒழுங்குமுறையான மாதிரி எடுப்பின் அடிப்படையில்&#xD;
நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்ற 17 கிராமசேவகர் பிரிவுகளிலும் 30மூ ஜப் பிரதி &#xD;
நிதித்துவப்படுத்தும் வகையில் மாதிரிகள் தெரிவுசெய்யப்பட்டு தரவுகள் கேகரிக்கப்பட்டன. &#xD;
அவர்களிடம் பெறப்பட்ட தரவுகள் நுஒநட மென்n;பாருளிலும், இடம்சார் பரம்பல்கள் புவியியல் &#xD;
தகவல் முறைமை நுட்பம் (யுசஉ அயி 10.4) மூலமும் படமாக்கப்பட்டது. விவசாயத்தில் &#xD;
நெற்செய்கையின் பங்கு, நெற்செய்கையாளர்கள் எதிர்N;நாக்கும் பிரச்சினைகள் போன்றன &#xD;
விபரணப்புள்ளி;விபர ரீதியான (னநளஉசipவiஎந ளவயவளைவiஉயட) முறை மூலம் பகுப்பாய்வு&#xD;
செய்யப்பட்டது. ஆய்வின் முடிவாக நெல் விளைநிலப்பரப்பு, உற்பத்தி அளவுகளில் கால &#xD;
ரீதியாக மாறுதல்கள் காணப்படுவதுடன், நெற்செய்கையின் இடம்சார் பரம்பல் கிராமங்கள் &#xD;
ரீதியாக வேறுபட்டுள்ளது. ஆய்வுப் பிரதேசத்தில் ஏக்கருக்குரிய நெல் உற்பத்தியானது &#xD;
சராசரியாக 1000-1500 மப வரை கிடைக்கின்றதுடன் செலவு ஏக்கருக்கு 25000 - 30000 ரூபா &#xD;
வரை வேறுபடுகின்றது. இப் பிரதேசத்தில் நெல் விளைச்சல் போதாhத நிலையே &#xD;
காணப்படுவதோடு நெற்செய்கையின் போது விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர் &#xD;
நோக்குகின்றமை கண்டறியப்பட்டதுடன் நெற்செய்கை உற்பத்தியை அதிகரிப்பதற்கான &#xD;
பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.</description>
    <dc:date>2023-01-01T00:00:00Z</dc:date>
  </item>
  <item rdf:about="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10585">
    <title>ஒளிப்படக்கருவிக்கு நடித்தலின் சவால்கள்:  மேடை நடிகர்கள் மற்றும் நடிகரல்லாதோரின் நடிப்பு  அனுபவங்களை அடிப்படையாகக்கொண்ட ஆய்வு</title>
    <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10585</link>
    <description>Title: ஒளிப்படக்கருவிக்கு நடித்தலின் சவால்கள்:  மேடை நடிகர்கள் மற்றும் நடிகரல்லாதோரின் நடிப்பு  அனுபவங்களை அடிப்படையாகக்கொண்ட ஆய்வு
Authors: Rathitharan, K.
Abstract: இந்த ஆய்வானது முழுநீள திரைப்படமொன்றின் தயாரிப்பு நடைமுறையில் பங்கு &#xD;
பற்றியவர்களது (நடிகர்கள், நடிகரல்லாதோர்) நடிப்பு வெளிப்பாட்டின் இடர்களை&#xD;
அடிப்படையாகக்கொண்டு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இலங்கைத் தமிழ்நாடகம், தமிழ் &#xD;
திரைப்படம் என்று நோக்குகின்ற போது நாடகத்துறையில் நடிப்பிற்காக செய்யப்படும் &#xD;
பயிற்சிகள் போல திரைப்படத் துறைக்கு கிடைக்காது இருப்பதன் குறைபாட்டை&#xD;
அண்மைக்கால குறும்படங்கள், முழுநீள திரைப்படங்கள் என்பவற்றில் காணமுடிகிறது. &#xD;
அண்மைக்காலங்களாக திரைப்படங்களைவிட குறும்படங்களே முதன்மையான&#xD;
தயாரிப்புக்களாக காணப்படுகின்றன. இலங்கைத் தமிழ் குறு{ முழுநீள திரைப்படங்களில் &#xD;
நடிப்பு பகுதியினை முதன்மைப்படுத்தாமையால் கலைத்துவ ஈர்ப்பு குறைந்தளவிலேயே &#xD;
காணப்படுகிறது என்பது ஆய்வின் பிரச்சினையாக கொள்ளப்படுகிறது. இந்த ஆய்வுப் &#xD;
பரப்பானது இலங்கைத் தமிழ்த்திரைப்படத்துறையில் நீண்ட கால வரலாற்றில் நடிப்பின் &#xD;
போக்குகள் எப்படி இருந்தன என்பதைக் காட்டிலும் குறுக்குவெட்டுமுகமான அணுகு &#xD;
முறையில் சமகால இலங்கைத் தமிழ்ப்படங்களில் நடிப்புத் தடைகளை இனங்காணல் &#xD;
மற்றும் நிவர்த்திசெய்தற் பொருட்டு ஒரு முழுநீளதிரைப்படத்தை தகவல் சேகரிப்பிற்கு &#xD;
பயன்படுத்தப்பட்டது. அத்தோடு நடிப்பை மேம்படுத்துவது, குறைபாடுகளை போக்க &#xD;
வழிகண்டறிவது போன்றவை ஆய்வு நோக்கங்களாக உள்ளன. மேலும் இந்த ஆய்வானது, &#xD;
அனுபவம் சார்ந்த வெளியினுள் நின்று பண்புசார் ஆய்வு அணுகுமுறையில்&#xD;
'வியாக்கியானிப்புவாதம்' என்ற வகையினுள் வருவதோடு சுய அனுபவங்களையும்&#xD;
மையமாகக்கொண்ட, ஆய்வாளனும் ஆய்வின் ஒரு பகுதியாக அமைந்திருக்கின்ற &#xD;
'நிலைத்துவத்தன்மை' என்கிற அமைப்பினுள்ளும் நின்று இவ் ஆய்வு மேற்கொள்ளப் &#xD;
பட்டுள்ளது. இங்கு ஒரு முழுநீள திரைப்படத்தில் நடித்தவர்களது நடிப்பு அனுபவங்களையும் &#xD;
அப்படத்தில் ஒரு பாத்திரமாக நடித்த மற்றும் நெறிப்படுத்திய ஆய்வாளனின்&#xD;
அனுபவங்களையும் அடிப்படையாகக் கொண்டு தகவல்கள் திரட்டப்பட்டன. தகவல் &#xD;
பகுப்பாய்வில் இலங்கைத் தமிழ்ப் படங்களது நடிப்பின் குறைபாட்டை போக்குவதில் &#xD;
அகவயம், புறவயம் மற்றும் சூழ்நிலைமை என்கின்ற மூன்று வகையான பாத்திரவுருவாக்க &#xD;
நுட்பங்கள் தீர்வாகவும் எதிர்காலப் பயிற்சிகளுக்கான முன்மொழிவாகவும் கண்டறியப் &#xD;
பட்டன. இவ் ஆய்வானது ஒளிப்படத்துறையில் ஈடுபடு வோருக்கும், ஏனைய கலைப் &#xD;
பயிலுனர்களுக்கும் கலைத்துறை கல்விப் புலத்தினருக்கும் பயன்தரும்.</description>
    <dc:date>2023-01-01T00:00:00Z</dc:date>
  </item>
  <item rdf:about="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10584">
    <title>கோவிட்-19 பெருந்தொற்றுக் காலப்பகுதியில் மொழிப்  பயன்பாடுகள் - சமூக மொழியியல் ஆய்வு</title>
    <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10584</link>
    <description>Title: கோவிட்-19 பெருந்தொற்றுக் காலப்பகுதியில் மொழிப்  பயன்பாடுகள் - சமூக மொழியியல் ஆய்வு
Abstract: மனிதன் தனது கருத்துக்களை ஏனையோருடன் பரிமாறிக்கொள்வதற்கான ஊடகமாக &#xD;
திகழும் மொழியானது தானும் வளர்ந்து தன்னைப் பயன்படுத்தும் மனிதனையும் வளர்த்து &#xD;
தனியாற்றல் பெற்றதாக விளங்குகின்றது. எண்ணத்தின் வடிவமாகவும் நாகரீகத்தின் &#xD;
சின்னமாகவும் திகழும் இத்தகைய மொழி சமுதாயம் சார்ந்ததாகும் மொழி இல்லையேல் &#xD;
சமுதாயம் இல்லை சமுதாயம் இல்லையேல் மொழி இல்லை என்று கூறுமளவிற்கு இரண்டும் &#xD;
இரண்டறக்கலந்தவை. இந்த உறவை அடிப்படையாகக்கொண்டு மொழியானது அது &#xD;
சார்ந்துள்ள சமுதாயத்தினையும் பண்பாட்டினையும் பிரதிபலிக்கும் கண்ணாடி என்று &#xD;
குறிப்பிடப்படுகிறது. இதன் அடிப்படையில் சமுதாயத்தில் காலத்திற்கு காலம் ஏற்படுகின்ற &#xD;
மாற்றங்களுக்கேற்ப மொழியும் அத்தகைய மாற்றங்களை உள்வாங்கி வளர்ச்சியடைந்து &#xD;
வருகின்றது. இவ்வாறு சமுதாய மாற்றங்களை தன்னுள் ஏற்று நெகிழ்ச்சி நிலைப் &#xD;
புத்தன்மையை பெற்று சொல்வளம் பெருக்கி வளர்ச்சியடைந்து வருகின்ற தமிழ் &#xD;
மொழியினை ஆவணப்படுத்துவது முக்கியமான ஒன்றாகும். அந்தவகையில்&#xD;
இரண்டாயிரத்து இருபதாம் ஆண்டிலிருந்து தமிழ்மக்களின் மொழிக்கையாளுகையில் &#xD;
கோவிட்-19 பெருந்தொற்று நோய்நிலைமையுடன் தொடர்புடைய சொற்தொகுதிகளின் &#xD;
வருகையானது புதிதாக இடம்பெற்ற மொழி மாற்றங்களுள் முக்கியமானதாகவும் மக்களால் &#xD;
நாளாந்தம் பிரயோகிக்கப்பட்டு வருவதாகவும் காணப்படுகிறது. எனவே இவ்வாய்வின் &#xD;
பிரதான நோக்கம், கோவிட்-19 பெருந்தொற்றுக் காலப்பகுதியில் தமிழ்மொழிப்&#xD;
பயன்பாட்டினுள் வருகைதந்த சொற்தொகுதிகளை கண்டறிந்து அவை தமிழ்மக்களின் &#xD;
மொழிப்பயன்பாட்டில் கையாளப்படுகின்ற பல்வேறுபட்ட விதங்களை அடையாளப்&#xD;
படுத்துவதாகும். அதேவேளை துணை நோக்கமாக அடையாளப்படுத்தப்படும் சொற்களின் &#xD;
தோற்றுவாய், கட்டமைப்புகள் மற்றும் சொற்பொருள் மாற்றங்களை வெளிப்படுத்துதல் &#xD;
என்பதுமாகும். எனவே இவ்வாய்வுக்கான முதல்நிலைத்தரவுகளானவை பங்குபற்றல் அற்ற &#xD;
அவதானிப்பு முறை ஊடாக மக்களது நேரடிச்சூழல், இலத்திரனியல் ஊடக&#xD;
மொழிப்பரிமாற்றங்களை அவதானிப்பதன் ஊடாக சேகரிக்கப்பட்டுள்ளதுடன், துணை &#xD;
நிலைத்தரவுகளானவை ஆய்வுச்சஞ்சிகைகள், பத்திரிகைகள், ஆய்வுக்கட்டுரைகள் சுகாதார &#xD;
சபை மற்றும் அரசாங்கத்தினால் வெளியிடப்படும் சுற்றறிக்கைகள் ஊடாக சேகரிக்கப்பட்டு &#xD;
சமுதாய மொழியியல் நோக்கில் பகுத்தாராய்ந்து விபரண முறையியல் அடிப்படையில் 11 &#xD;
வகையான மொழிப்பயன்பாட்டு; முறைகள் அடையாளப்படுத்தப் பட்டிருப்பதோடு அவற்றின் &#xD;
தோற்றுவாய். மொழிக்கட்டமைப்பு, மற்றும் சொற்பொருள் மாற்றங்களும் வெளிக்&#xD;
கொணரப்பட்டு ஆய்வின் முடிவுகளாக தொகுத்து ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.</description>
    <dc:date>2023-01-01T00:00:00Z</dc:date>
  </item>
</rdf:RDF>

