<?xml version="1.0" encoding="UTF-8"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">
  <title>DSpace Collection:</title>
  <link rel="alternate" href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8690" />
  <subtitle />
  <id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8690</id>
  <updated>2026-04-17T17:33:51Z</updated>
  <dc:date>2026-04-17T17:33:51Z</dc:date>
  <entry>
    <title>நாட்டார் கலைமரபில் வசந்தன்  கூத்து   ஓர் ஆய்வு</title>
    <link rel="alternate" href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8698" />
    <author>
      <name>Balasundram, E.</name>
    </author>
    <id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8698</id>
    <updated>2022-12-05T07:44:07Z</updated>
    <published>1985-01-01T00:00:00Z</published>
    <summary type="text">Title: நாட்டார் கலைமரபில் வசந்தன்  கூத்து   ஓர் ஆய்வு
Authors: Balasundram, E.
Abstract: நடனக்கலையின் படிமுறை வளர்ச்சியானது பூர்வீக நடனம், கிராமிய நடனம், சாஸ்திரிய நடனம் என்ற மூவகைப்பட்ட பரிணாமவளர்ச்சி நிலை களைக் கொண்டதாகும். வேட்டை, போர், சடங்கு என்ற நிலைகளைப் பிரதிபலிப்பனவாகப் பூர்வீக நடனங்கள் அமையும். கிராமிய நடனங்கள் நாகரீக வளர்ச்சி நிலைகளை உள்வாங்கி, இதிகாசக் கதைகள், வரலாற்றுக் கதைகள், மக்களின் வாழ்வியல் முறைகள், அவர்களது மரபுகள், நம்பிக்கை கள், பொழுதுபோக்குகள். கேளிக்கைகள், தொழில்முறைகள் முதலி யனவற்றை உள்ளடக்கமாகக் கொண்டு தாளம்பட்ட ஆடலும் பாடலும் அமையப்பெற்றனவாகக் காணப்படும். சாஸ்திரிய இலக்கண வரையறை களுக்கு உட்பட்டனவாக இராகம், தாளம் ஆகியவற்றுக்கு அமைய நிகழ்த் தப்படுவனவே சாஸ்திரிய நடனங்களாகும்.1 இவற்றுள் கிராமிய நடனங் களில் ஒன்றாகிய வசந்தன் கூத்துப்பற்றி நாட்டார் வழக்கியல் நோக்கில் இக்கட்டுரை ஆராய்கிறது.</summary>
    <dc:date>1985-01-01T00:00:00Z</dc:date>
  </entry>
  <entry>
    <title>பௌத்த சிற்பங்கள் ஊடாக அறியப்படும் இலங்கை - ஆந்திர உறவுகள்</title>
    <link rel="alternate" href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8697" />
    <author>
      <name>Pushparatnam, P.</name>
    </author>
    <id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8697</id>
    <updated>2022-12-05T07:41:39Z</updated>
    <published>1985-01-01T00:00:00Z</published>
    <summary type="text">Title: பௌத்த சிற்பங்கள் ஊடாக அறியப்படும் இலங்கை - ஆந்திர உறவுகள்
Authors: Pushparatnam, P.
Abstract: இலங்கை பிரதேச ரீதியில் தனிப்பட்ட நிலப்பரப்பைக் கொண்டிருந் தாலும் பண்பாட்டு வளர்ச்சியில் அது பாரதத்துடன் சிறப்பாக, தென்னிந் தியாவுடன் பண்டைய காலம் தொட்டு நெருங்கிய தொடர்பு கொண்டு வளர்ந்துவந்துள்ளது. ஆயினும் இலங்கையின் புராதன பண்பாட்டு வர லாற்றை ஆராய்ந்த பலரும் வடஇந்தியத் தொடர்புக்கு முக்கியத்துவம் கொடுத்ததுபோல் தென்னிந்தியத் தொடர்பை ஆராய்வதில் அதிக அக் கறை காட்டவில்லை. இதற்கு இலங்கையின் ஆதிகால வரலாற்றைக் கூறும் பாளி இலக்கியங்களில் தென்னிந்தியாவைப் பகைமை நாடாகவும், வட இந்தியாவைப் பாரம்பரிய நட்புறவு கொண்ட பிரதேசமாகவும் கூறப்பட் டுள்ளமையே முக்கிய காரணமாகும். ஆயினும் அண்மைக்கால தொல் லியல், மானிடவியல், சமூகவியல் போன்ற ஆய்வுகள் வரலாற்றுக்கு முற் பட்ட காலத்தில் இருந்து இலங்கைக்கும் திராவிட மொழி பேசும் தென் னிந்தியப் பிரதேசங்களான இன்றைய தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம் என்பவற்றிற்கும் இடையே நெருங்கிய கலாசாரத் தொடர்புகள் இருந்துள்ளன என்பதை நிரூபித்துள்ளன. இவற்றின் ஓர் அம்சமாகவே இக்கட்டுரையில் இலங்கை - ஆந்திர பௌத்த சிற்பக்கலை உறவு பற்றி ஆராயப்படுகின்றன.</summary>
    <dc:date>1985-01-01T00:00:00Z</dc:date>
  </entry>
  <entry>
    <title>தமிழில் யாப்பும் யாப்பியலும் வரலாற்று நோக்கு</title>
    <link rel="alternate" href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8696" />
    <author>
      <name>Subramanian, N.</name>
    </author>
    <id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8696</id>
    <updated>2022-12-05T07:39:54Z</updated>
    <published>1985-01-01T00:00:00Z</published>
    <summary type="text">Title: தமிழில் யாப்பும் யாப்பியலும் வரலாற்று நோக்கு
Authors: Subramanian, N.
Abstract: யாப்பு என்ற சொல் பொதுவாக அமைப்பு ஆக்கம் என்னும் பொருண் மைகளை உடையது; சிறப்பாக இலக்கியக் கட்டமைப்பின் புறநிலையாகிய மொழிவடிவத்தைக் குறித்துப் பெருவழக்காகப் பயில்வது. தமிழிலே 'பா', உரை என இரு முக்கிய வடிவ நிலைகள் உள. பாவின் இயல்புகள் சில அமைந்த நூற்பா (சூத்திரம்) என்ற வடிவநிலையொன்றும் உண்டு. இவற் றுள் உரை என்பது. 'பாட்டிடை வைத்த குறிப்பு' முதலாக நால்வகைப் படும் எனத் தொல்காப்பியம் கூறும். 1 இந்த உரை பின்னர் நூல்களுக் குப் பொருள் விரிக்கும். பதவுரை, பொழிப்புரை, விருத்தியுரை முதலி யனவாகவும் கட்டுரை, புனைகதை முதலான ஆக்கங்கட்குரிய உரைநடை என்ற ஊடகமாகவும் தனிவளர்ச்சி பெற்றது. நூற்பா என்பது இலக்கணம், தத்துவம் தொடர்பானவற்றைக் கூறுவதற்குரிய செறிவான அமைப்புடைய தாகத் தொன்றுதொட்டுப் பயின்று வருகின்றது. இவற்றினின்று குறிப்பிடத் தக்க வேறுபாடுடையதான 'பா' வடிவமே தமிழிலக்கியப் பரப்பின் தலை யாய ஊடகமாகக் கடந்த நூற்றாண்டிறுதிவரை பயின்று வந்தது. இது 'பாட்டு' எனவும் வழங்கப்பெறும். மேற்படி பா, உரை, நூற்பா ஆகிய மூன்று வடிவநிலைகளையும் ' தொகுத்துச் சுட்டும் பொதுச்சொற்களாக யாப்பு, செய்யுள் என்பன தொல்காப்பியத்தில் பயின்றன. நாளடைவில் யாப்பு, செய்யுள் என்பன 'பா' வடிவத்துக்கு மட்டும் உரிமை பூண்டன வாகப் பொருட்சுருக்கம் எய்தின. யாப்பியல், செய்யுளியல் என்பன இயல் ஆகவே அமையலாயின. 2 இந்நிலையில், ஈண்டு யாப்பு, யாப்பியல். என்னும் சொற்கள் பா வடிவத்தையும் அது தொடர்பான சிந்தனைகளையுமே சுட்டியமைகின்றன. கடந்த ஏறத்தாழ இரண்டாயிரமாண்டுத் தமிழ் வர லாற்றில் இவை எய்திய பரிணாமத்தைத் தொகுத்து நோக்குவதாக இக் கட்டுரை அமைகிறது.</summary>
    <dc:date>1985-01-01T00:00:00Z</dc:date>
  </entry>
  <entry>
    <title>ஈழத்து நவீன தமிழ் நாடக மரபின் தோற்றம்</title>
    <link rel="alternate" href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8695" />
    <author>
      <name>Mounakuru, S.</name>
    </author>
    <id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8695</id>
    <updated>2022-12-05T07:36:59Z</updated>
    <published>1985-01-01T00:00:00Z</published>
    <summary type="text">Title: ஈழத்து நவீன தமிழ் நாடக மரபின் தோற்றம்
Authors: Mounakuru, S.
Abstract: ஈழத்தின் இன்றைய நவீன தமிழ் நாடக நெறி பெருமளவு பொது மக்கள் மத்தியிற் பிரசித்தமாகாவிடினும் தன்னளவில் அது பல புதிய பரிமாணங்களைக் கண்டிருக்கிறது. மொழிபெயர்ப்பு நாடகங்கள், மோடி நாடகங்கள், நடனத்தை உள்வாங்கிய நாடகங்கள் பரிசோதனை நாடகங் கள் என அது பன்முகப்பாடு கொண்டதாகவுள்ளது உலக அரங்கின் செழுமைகளைத் தமிழுக்கு இந் நவீன நாடகங்கள் அறிமுகம் செய்தன; செய்கின்றன. இன்றைய நவீன நாடகங்கள் சிலவற்றில் பலகலைக் கலவை களைக் காணுகிறோம். 'கூத்தின் ஆட்டங்கள், திரெஜெடியின் கோரஸ், கொமெடியின் அங்கவீச்சுக்கள். பிரெஃரின் தொலைப்படுத்தல் உத்தி ஆதி யன ஒன்று சேர்ந்து தனித்தனியே நிற்காமல் புதிய நாடக வடிவங்கள் ஆக்கப்படுகின்றன. ''1&#xD;
இந் நவீன நாடக நெறியின் இயக்கு சக்திகளாக அமைபவை சமூக வர லாற்றுக் காரணிகளே. இன்றைய நவீன நாடக நெறியின் அடித்தளங்கள் ஆரம்பகால நவீன நாடகங்களே. நவீன நாடகங்களின் தோற்றம்பற்றிய அறிவு இன்றைய நாடக நெறிகளைப் புரிந்து கொள்ளும் திறவுகோலாகும். இக்கட்டுரை ஈழத்து நவீன தமிழ் நாடக மரபின் தோற்றம் பற்றி ஆராய்கிறது.</summary>
    <dc:date>1985-01-01T00:00:00Z</dc:date>
  </entry>
</feed>

