<?xml version="1.0" encoding="UTF-8"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">
  <title>DSpace Collection:</title>
  <link rel="alternate" href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8411" />
  <subtitle />
  <id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8411</id>
  <updated>2026-04-17T17:33:37Z</updated>
  <dc:date>2026-04-17T17:33:37Z</dc:date>
  <entry>
    <title>'அம்பிடு' என்னும் சொல் பற்றி ஒரு குறிப்பு</title>
    <link rel="alternate" href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8437" />
    <author>
      <name>Raththinamalar, K.</name>
    </author>
    <id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8437</id>
    <updated>2022-11-09T07:17:56Z</updated>
    <published>1983-11-01T00:00:00Z</published>
    <summary type="text">Title: 'அம்பிடு' என்னும் சொல் பற்றி ஒரு குறிப்பு
Authors: Raththinamalar, K.
Abstract: அம்பிடு' என்னும் வினைச் சொல் யாழ்ப்பாணத்துப் பேச்சு வழக்கில் வழங்கக் காண்கிறோம். 'அகப்படு' என்னும் வினைச் சொல் இலக்கிய வழக்கில் வழங்கக் காண்கின்றோம். இவ்விரு சொற்களும் ஒரே பொரு ளைக் குறிப்பன.&#xD;
சில சொற்கள் தோற்றத்திலே தொடர்பு உள்ளவை. 'அம்பிடு', 'அகப்படு' ஆகிய இரு சொற்களுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா ? இரு வடிவங்களினதும் ஒலிகளையும் பொருளையும் நோக்குமிடத்து இவற் றைத் தொடர்பற்ற தனித்தனித் தோற்றங்கள் எனக் கொள்வதைவிட ஒன்றில் இருந்து மற்றது தோன்றியது எனக் கொள்வதே பொருத்தமாகத் தோன்றுகிறது. இவ்வாறு ஒன்றில் இருந்து மற்றது தோன்றியது எனக் கொள்ளுமிடத்து ஏதோ ஒன்றைக் காலத்தால் முந்தியதாகக் கொள்ளுதல் வேண்டும். அது எது? அது எவ்வாறு? என ஆராய்வதே இக்குறிப்பின் நோக்கமாகும்.&#xD;
இலக்கியத்திலே வரும் சொற்கள் தாம் காலத்தால் முந்தியவை என் னும் ஒரு நம்பிக்கையைப் பொதுவாக அறிஞர் பலரிடம் காண்கின்றோம். இதனை எற்றுக் கொண்டால் 'அகப்படு' என்பதையே காலத்தால் முந்திய தாகக் கொள்ளவேண்டும். ஆயின் அவ்வாறு இங்கு கொள்ள முடியவில்லை. 'அம்பிடு' என இன்று பேச்சு வழக்கில் உள்ள வடிவத்தின் ஒரு முந்திய தோற்றத்தையே காலத்தால் முற்பட்டது எனக் கொள்வது பொருத்த மானது போலத் தோன்றுகிறது.</summary>
    <dc:date>1983-11-01T00:00:00Z</dc:date>
  </entry>
  <entry>
    <title>யாழ்ப்பாணப் பகுதியில் மீன்பிடித்தொழில் அபிவிருத்தி</title>
    <link rel="alternate" href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8436" />
    <author>
      <name>Rubamoorthy, K.</name>
    </author>
    <id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8436</id>
    <updated>2022-11-09T07:16:28Z</updated>
    <published>1983-11-01T00:00:00Z</published>
    <summary type="text">Title: யாழ்ப்பாணப் பகுதியில் மீன்பிடித்தொழில் அபிவிருத்தி
Authors: Rubamoorthy, K.
Abstract: கடலின் ஆழமற்ற கண்டமேடைகள் காணப்படும் இடங்கள் மீன் பிடித்தொழிலுக்கு வாய்ப்பான இடங்களாகும். இப்பகுதிகளில் மீனிற்கு வேண்டிய ''பிளங்ரன்'' என்னும் உணவுவகை அதிகளவில் பெருகி வளர வாய்ப்புக் காணப்படுகிறது. இலங்கையைச் சுற்றியுள்ள இக்கண்டமேடை பொதுவாக ஒடுங்கியதாகக் காணப்படினும், யாழ்ப்பாணத்தை அடக்கிய வடபகுதியில் இது சற்று அகலமாகக் காணப்படுகின்றது.&#xD;
1983ஆம் ஆண்டு இங்கு 45,000 தொன் மீன் உற்பத்தி செய்யப் பட்டிருக்கின்றது. இலங்கையின் மொத்தப் பெறுமதியின் அடிப்படையில் பார்க்கும்போது இது 620 மில்லியன் ரூபா பெறுமதி உடையதாகும். இதே ஆண்டில் யாழ்ப்பாணப் பகுதியின் நெல் உற்பத்தி 96,560 தொன் ஆகும். எனவே மீன் உற்பத்தி ஏறத்தாழ இதன் 50 சதவீதத்தை வகிப்பதுடன் உணவிலும் புரதச்சத்திலும் முக்கிய பங்கை வகிக்கிறது.&#xD;
கடந்த காலத்தை நோக்கினாலும் இலங்கையின் மீன் உற்பத்தியில் யாழ்ப்பாணம் 18-24 சதவீதத்தை வகித்துவந்திருக்கின்றது. 1963 ஆம் ஆண் டிலிருந்து 1983ஆம் ஆண்டு வரையிலுமான 20 ஆண்டுகளில் ஆண்டொன் றிற்கு யாழ்ப்பாணத்தின் மீன் உற்பத்தி 6.6 சதவீதம் அதிகரித்து வந் திருக்கின்றது. இலங்கையின் உற்பத்தி அதிகரிப்புடன் பார்க்கும்பொழுது யாழ்ப்பாணத்தின் அதிகரிப்பு அதிகமாகவே காணப்படுகின்றது. சென்ற 5 ஆண்டு காலத்தை நோக்கும் பொழுது இலங்கையின் மீன் பிடி 5.5 சத வீதமாக அதிகரிக்க, யாழ்ப்பாணப் பகுதியின் மீன்பிடி 6.7 சதவீதமாக அதிகரித்து வந்துள்ளது.</summary>
    <dc:date>1983-11-01T00:00:00Z</dc:date>
  </entry>
  <entry>
    <title>தமிழர் வழிபாட்டில் செவ்வேளும் திருமாலும்</title>
    <link rel="alternate" href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8435" />
    <author>
      <name>Shanmugathas, A.</name>
    </author>
    <id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8435</id>
    <updated>2022-11-09T07:13:37Z</updated>
    <published>1983-11-01T00:00:00Z</published>
    <summary type="text">Title: தமிழர் வழிபாட்டில் செவ்வேளும் திருமாலும்
Authors: Shanmugathas, A.
Abstract: பண்டைத்தமிழர் வாழ்க்கை இயற்கையோடு இயைந்தது. வாழ்க்கை நடைமுறைகள் இயற்கை நிலைக்கேற்பவே அமைந்தன. தமது ஆற்றலுக்கு மேற்பட்டவற்றைத் தமிழர் உயர்ந்த நிலையில் வைத்து வழிபாடு செய்த னர். 'வழிபாடு'' என்னுஞ் சொல், வழியிற் செல்லுகை, பின்பற் றுகை, வணக்கம், பூசனை, வழக்கம், சமயக்கோட்பாடு எனப் பல பொருள் களைத்தரும். 1 வாழ்க்கையிலே நாம் செல்லுகின்ற திசையினைக் காட்டுவ தாக இன்று ''வழிபாடு'' கருதப்படுகின்றது. பழந்தமிழர்களது நடை முறைகளையே இன்றும் தமிழர் பெரும்பான்மையாகக் கடைப்பிடித்து வரு கின்றனர். வழிபாட்டுநிலையும் அத்தகையதே. பழந்தமிழ் இலக்கியங்கள் பழைய வழிபாட்டு நடைமுறைகளைத் தெளிவுறப் பதிவு செய்து வைத்துள் ளன. அவ்விலக்கியச் செய்திகள் எமது இன்றைய வழிபாட்டு நடைமுறை களை நாம் விளங்கிக் கொள்ளவும் நல்லுதவி புரிகின்றன.&#xD;
சங்க இலக்கியத் தொகுப்பு நூலினுள் ஒன்றான பரிபாடல் தமிழர் வழிபாடு பற்றிய செய்திகளைக் கூறுகின்றது. அந்நூல் தொகுப்பு நூலாக இன்றிருப்பதால் ஆய்வுக்குரியதாகவும் உள்ளது. ''பரிபாட்டமுதம்'' எனச் சான்றோராற் புகழப்பட்ட பரிபாடல் தொகை நூல் எட்டுடன் ஐந் தாவதாக நின்று விளங்கியதை,&#xD;
''நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறு நூ றொத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல் கற்றறிந்தார் ஏத்துங் கலியோ டகம்புறமென் றித்திறத்த எட்டுத்தொகை''</summary>
    <dc:date>1983-11-01T00:00:00Z</dc:date>
  </entry>
  <entry>
    <title>ஈழத்தில் இந்து இந்து இலக்கியங்கள் (பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை)</title>
    <link rel="alternate" href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8434" />
    <author>
      <name>Sinnaiya</name>
    </author>
    <id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8434</id>
    <updated>2022-11-09T07:11:53Z</updated>
    <published>1983-11-01T00:00:00Z</published>
    <summary type="text">Title: ஈழத்தில் இந்து இந்து இலக்கியங்கள் (பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை)
Authors: Sinnaiya
Abstract: கி. பி. பதினான்காம் நூற்றாண்டிலிருந்தே ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு தொடர்பான வரலாற்றுப் போக்கினை அடையாளம் காண முடிகிறது. பதினான்காம் நூற்றாண்டிலிருந்து ஈழத்தில் எழுந்துள்ள இலக் கியங்களை நோக்கின் அவற்றுள் இந்துசமய இலக்கியங்கள் பெரும்பான்மை இடத்தினைப் பெற்றுள்ளமையினை அறியலாம். சமூகத்தில், சமயத்தின் பங்கும் தேவையும் சிலகாலப்பகுதிகளிற் கூடியும், சிலகாலப்பகுதிகளிற் குறைந்தும் காணப்பட்டதற்கேற்ப சமய இலக்கியங்களும் சிலகாலப் பகுதிகளிற் கூடு தலாகவும் சிலகாலப்பகுதிகளிற் குறைவாகவும் தோற்றம் பெற்றுள்ளன. எனினும் இடையீடின்றிச் சமயம் இலக்கியப் பொருளாக இடம்பெற்றே வந்துள்ளது. இவ்வகையில் ஈழத்திலே பதினான்காம் நூற்றாண்டிலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை தோற்றம் பெற்ற இந்து இலக்கியங்களை வரலாற்றொழுங்கில் காலப்பின்னணியுடன் எடுத்து விளக்குவதே இக்கட்டு&#xD;
ரையின் நோக்கமாகும்.</summary>
    <dc:date>1983-11-01T00:00:00Z</dc:date>
  </entry>
</feed>

