<?xml version="1.0" encoding="UTF-8"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">
  <title>DSpace Collection:</title>
  <link rel="alternate" href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8263" />
  <subtitle />
  <id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8263</id>
  <updated>2026-04-17T17:33:38Z</updated>
  <dc:date>2026-04-17T17:33:38Z</dc:date>
  <entry>
    <title>திருக்குறள் கூறும் தொடர்பாடல் : ஓர் அறிநிலை ஆய்வு</title>
    <link rel="alternate" href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8281" />
    <author>
      <name>Koduthor, J.</name>
    </author>
    <author>
      <name>Raguram, S.</name>
    </author>
    <id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8281</id>
    <updated>2022-10-21T09:54:18Z</updated>
    <published>2017-07-01T00:00:00Z</published>
    <summary type="text">Title: திருக்குறள் கூறும் தொடர்பாடல் : ஓர் அறிநிலை ஆய்வு
Authors: Koduthor, J.; Raguram, S.
Abstract: ஈரடிகளால் வாழ்க்கைத் தத்துவத்தைப் போதித்தவரும், தமிழர்களின் பண்பாட்டுச் செறிவின் அடையாளமாகவும் திகழும் திருவள்ளுவர் தமிழுக்குத் தந்த நிலையான சொத்து திருக்குறள். அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று முப்பால் கொண்டு வாழ்வின் அனைத்துச் சூழலுக்கும் பொருந்தும், அனைத்துக் காலத்துக்கும் பொருந்தும் விடயங்களை திருக்குறள் தந்தமையினாலேயே இந்த நவீன உலகிலும் வள்ளுவர் நீடு வாழ்கின்றார். ஆய்வாளரின் இந்த ஆய்வானது திருக்குறளில் திருவள்ளுவர் எவ்விதம் தொடர்பாடல் தொடர்பில் எவ்வாறான கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார் என்பதினை அறிதலாக அமைந்தது. 1330 குறட்பாக்கள், அவை அனைத்தும் 133 அதிகாரங்களில் உள்ளடக்கம் பெற்றுள்ளன. திருக்குறள் பல்வேறு விடயங்களை உள்ளடக்கியுள்ளது. அவற்றுள் திருக்குறளானது தொடர்பாடல் தொடர்பாக எவ்வாறான கருத்தினை மற்றும் எண்ணத்தினை வெளிப்படுத்துகின்றன, என்பதை அறிதல் இவ்வாய்வின் பிரதான நோக்கமாக அமைந்துள்ளது. இந்த ஆய்வின் எல்லையாக திருக்குறளில் தொடர்பாடல் தொடர்பாக விளக்கியுள்ள குறட்பாக்கள் மாத்திரம் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆய்வின் கருதுகோளாக திருக்குறள் பல் வேறுபட்ட விழுமியக் கருத்துக்களை முன்வைத்துள்ளது அவற்றுள் தொடர்பாடலினை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பதினையும் விளக்கியுள்ளது. அவை தொடர்பாடலை சிறப்பாக மேற்கொள்ள துணைபுரிகின்றன. இன்று தொடர்பாடல் தொடர்பாக பல்வேறு புத்தகங்கள், ஆய்வுகள் வெளிவந்தாலும் எமது ஆரம்ப தமிழ் வரலாற்றிலே தோற்றம் கண்ட திருக்குறளில் தொடர்பாடல் தொடர்பாக முக்கிய விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், இந்த ஆய்வானது பகுப்பாய்வு, விபரண ஆய வு முறையியல்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வின் மூலாதாரமாக திருக்குறளில் தொடர்பாடல் தொடர்பாக எழுதப்பட்ட 12 அதிகாரங்கள் அமைந்துள்ளது. இரண்டாம் நிலைத் தரவுகளாக இந்த ஆய்வுப் பொருண்மையோடு தொடர்புடையதான நூல்கள், ஆய்வு நூல்கள், கட்டுரைகள், ஆய்வுக்கட்டுரைகள் என்பன அமைகின்றன. இத்தகைய ஆய்வுகள் மூலம் வள்ளுவரிடத்தே தொடர்பாடல் பற்றிய சிந்தனை இருந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதோடு, அச்சிந்தனைகளும் தேடித் தொகுக்கப்பட்டுள்ளன. மேலும், இத்தகைய ஆய்வுகள், வள்ளுவரின் எதிர்வு கூறும், விஞ்ஞானத் தன்மை வாய்ந்த சிந்தனைகளை வெளிக் கொணர்வதோடு, தொடர்பாடலை வெற்றிகரமாக மேற்கொள்ளவும் வழிகாட்டும் எனலாம்.</summary>
    <dc:date>2017-07-01T00:00:00Z</dc:date>
  </entry>
  <entry>
    <title>தொல்லியல் மரபுரிமை சின்னங்களைப் பாதுகாப்பதில் எதிர்ப்படும் சவால்கள் : யாழ்ப்பாணத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு தொல்லியல் ஆய்வு</title>
    <link rel="alternate" href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8280" />
    <author>
      <name>Sivaruby, S.</name>
    </author>
    <id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8280</id>
    <updated>2022-10-21T09:54:15Z</updated>
    <published>2017-07-01T00:00:00Z</published>
    <summary type="text">Title: தொல்லியல் மரபுரிமை சின்னங்களைப் பாதுகாப்பதில் எதிர்ப்படும் சவால்கள் : யாழ்ப்பாணத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு தொல்லியல் ஆய்வு
Authors: Sivaruby, S.
Abstract: தொல்லியல் மரபுரிமை என்பது பல்லினப் பண்பாடு கொண்ட மக்கள் வாழும் நாட்டில் ஒவ்வொரு இனமக்களினது தொன்மையான, தொடர்ச்சியான வரலாற்றையும், பண்பாட்டையும் அடையாளப்படுத்தி காட்டும் நம்பகரமான ஆதாரமாகப் பார்க்கப்படுகின்றது. பண்டு தொட்டு இலங்கை வரலாற்று மூலங்களில் தனியொரு பிராந்தியமாக கூறப்பட்ட யாழ்ப்பாணத்திற்கு தொன்மையான தொடர்ச்சியான வரலாறு உண்டு என்பதை தொல்லியல் மரபுரிமைச் சின்னங்கள் எடுத்துக் காட்டுகின்றன. அவை தொல்லியல், வரலாற்று, சமூக, சமய, விஞ்ஞான, தொழிநுட்ப, கட்டட கலை பெறுமானங்களை பிரதிபலிக்கும் வகையிலும் அமைந்துள்ளன. யாழ்ப்பாண தொல்லியல் மரபுரிமைகளானது ஆதியிரும்புக் காலத்தில் இறந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள், ஐரோப்பியர் வருகைக்கு முன்பிருந்து மக்கள் ஒன்று கூடும் இடங்களில் அமைக்கப்பட்ட மரபுரிமைச் சின்னங்கள், இந்து, பௌத்த மதம் சார்ந்த மரபுரிமைச் சின்னங்கள், அரச மரபு சார்ந்த மரபுரிமைச் சின்னங்கள், ஐரோப்பியர் கால மரபுரிமைச் சின்னங்கள் என ஐந்து வகையாக பார்க்கப்படுகின்றது. இவ் மரபுரிமைச் சின்னங்களில் பலவும் ஐரோப்பியரது நடவடிக்கை, கடந்த உள்நாட்டு யுத்த சூழ்நிலை, இயற்கை அழிவுகள், மக்களிடையே மரபுரிமைச்சின்னங்கள் பற்றிய போதிய விழிப்புணர்வின்மை போன்ற பல்வேறு காரணங்களால் காலத்துக்கு காலம் அழிவுக்குட்பட்டிருந்தது. இவ் அழிவிலிருந்து எஞ்சிய மரபுரிமைச் சின்னங்களின் பாதுகாப்பில் எதிர்நோக்கும் பிரச்சனைகள், சவால்களினை இனங்காணுதல், அவற்றின் பாதுகாப்பிற்காக எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை ஆராய்வதே இவ்வாய்வின் நோக்கங்களாகும். இவ் ஆய்வு நோக்கங்களினை நிறைவு செய்யும் பொருட்டு களவாய்வினூடாக மரபுரிமைச் சின்னங்கள் நேரடி அவதானிப்பிற்கு உட்படுத்தப்பட்டே அவற்றின் சிதைவிற்கான காரணங்கள் அடையாளப்படுத் தப்பட்டதுடன் பாதுகாப்பு வழிமுறைகளும் கண்டறியப்பட்டுள்ளன. இலங்கை தொல்லியற் சட்ட ம் (Antiquities Amendment Act No.24 of 1988) இன் பிரகாரம் இற்றைக்கு 100 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்லியல், வரலாற்றுப் பெறுமதியுடைய காணிகள், கட்டிடங்கள், மரங்கள் போன்ற யாவற்றையும் மரபுரிமைச் சின்னங்களாக பிரகட - னப்படுத்தி வருகின்றது. இதன் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் பதிவு செய்யப்பட்ட மரபுரிமைச் சின்னங்கள் மற்றும் அடையாளப்படுத்தப்பட்ட அடையாளப்படு - த்தப்படாத மரபுரிமைச் சின்னங்கள் போன்றன இயற்கை, சமூகம், நிர்வாகம், வளங்கள் சார்ந்த பிரச்சனைகளால் அழிவுக்குட்பட்டு வருவதனை அவதானிக்க முடிவதால் அவற்றுக்கான பாதுகாப்பு வழிமுறைகளை சிறந்த திட்டமிடலின் அடிப்படையில் கையாளப்பட வேண்டும் என்பதனையே இவ்வாய்வு எடுத்துரைக்கின்றன.</summary>
    <dc:date>2017-07-01T00:00:00Z</dc:date>
  </entry>
  <entry>
    <title>வனக்குறவரின் வாழ்வியல் - நீ . பி. அருளானந்தத்தின் 'இந்தவனத்துக்குள்' என்னும் நாவலினூடான ஒரு தேடல்</title>
    <link rel="alternate" href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8279" />
    <author>
      <name>Ragunathan, M.</name>
    </author>
    <id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8279</id>
    <updated>2022-10-21T09:54:10Z</updated>
    <published>2017-07-01T00:00:00Z</published>
    <summary type="text">Title: வனக்குறவரின் வாழ்வியல் - நீ . பி. அருளானந்தத்தின் 'இந்தவனத்துக்குள்' என்னும் நாவலினூடான ஒரு தேடல்
Authors: Ragunathan, M.
Abstract: ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கிய உலகில் விளிம்புநிலை மாந்தர்களின் வாழ்வியலைப் படைப்பிலக்கியமாக்கி வருபவர்களில் நீ. பி. அருளானந்தமும் ஒருவர். இவரின் இந்த வனத்துக்குள்' என்னும் நாவல் இலங்கையில் வாழ்கின்ற வனக்குறவர்களின் வாழ்வியலை எடுத்துக் காட்டுகின்றது. இலங்கையில் வாழும் வனக்குறவர்கள் தென்னிந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். இவர்களின் தாய்மொழி தெலுங்காகும். நிரந்தரமான வாழிடமின்றி அலைந்து திரியும் இக்கூட்டத்தினர் வேட்டையாடுதல்; பாம்பாட்டுதல், குரங்காட்டுதல், சாத்திரம் சொல்லுதல் முதலான தொழில்களைச் செய்துவருகின்றனர். விஜயனின் கூட்டத்தினருடன் இலங்கைக்கு வந்த தெலுங்கர்களையும், மன்னராட்சிக் காலத்தில் அரண்மனைகளில் பணிபுரிந்த தெலுங்கர்களையும் தமது முன்னோர்களாகக் கூறிவரும் இக்கூட்டத்தினர் சமூக மட்டத்தில் ஒதுக்கப்பட்டவர்களாக வாழ்ந்து வந்தாலும் இவர்கள் தமக்கெனத் தனியான பண்பாட்டு அடையாளங்களைப் பேணிவருகின்றனர். இவை இந்நாவலினூடாக இலக்கியப் பதிவாகியுள்ளன</summary>
    <dc:date>2017-07-01T00:00:00Z</dc:date>
  </entry>
  <entry>
    <title>கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவின் நிலப்பயன்பாட்டு மாற்றங்களை படமாக்கலும், மதிப்பிடலும்</title>
    <link rel="alternate" href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8278" />
    <author>
      <name>Subajini, U.</name>
    </author>
    <author>
      <name>Karunakaran, S.</name>
    </author>
    <id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8278</id>
    <updated>2022-10-21T09:54:08Z</updated>
    <published>2017-07-01T00:00:00Z</published>
    <summary type="text">Title: கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவின் நிலப்பயன்பாட்டு மாற்றங்களை படமாக்கலும், மதிப்பிடலும்
Authors: Subajini, U.; Karunakaran, S.
Abstract: ஒரு நாட்டின் அல்லது ஒரு பிரதேசத்தின் அபிவிருத்திக்கு நிலப்பயன்பாடு பற்றிய ஆய்வுகள் அவசியமாக உள்ளன. குறிப்பாக பிரதேசத்தின் சமூக, பொருளாதார, பெளதிக ரீதியான திட்டமிடல்களை மேற்கொள்வதற்கு நிலப்பயன்பாடுகள், நிலப்பயன்பாட்டில் ஏற்பட்டு வருகின்ற மாற்றங்கள் பற்றிய ஆய்வுகள் மிகவும் அவசியமாக உள்ளன. நிலப் பயன்பாடு என்பது நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படும் மனிதனது செயற்பாடுகளையும் இயற்கையான மற்றும் செயற்கையான நிலப்போர்வைகளையும் குறிக்கின்றது. நிலப் பயன்பாட்டு மாற்றம் என்பது ஆகக் குறைந்தது இரண்டு வெவ்வேறு காலப்பகுதிகளில் புவி மேற்பரப்பில் காணப்படும் பல்வேறு நிலப்பயன்பாடுகளின் வேறுபாடுகளை அடையாளம் செய்தலை குறிக்கின்றது. இலங்கையின் வட மாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீள்குடியேற்றங்களைத் தொடர்ந்து அபிவிருத்திப் பணிகள் மிக வேகமாக நடைப்பெற்று வருகின்றன. இதன் காரணமாக குறுகிய காலத்தில் நிலப்பயன்பாட்டில் அதிகளவான மாற்றங்கள் நிகழ்வதால் அவற்றினைப் படமாக்குதலும், மதிப்பிடலும் அவசியமாக உள்ளது. அந்த வகையில் கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவின் நிலப்பயன்பாட்டு மாற்றங்களை படமாக்குதலும், அவற்றினை மதிப்பிடலுமே இவ் ஆய்வின் நோக்கமாக உள்ளது. பங்குபற்றுதலுடனான களவாய்வு, செய்மதி படிமங்கள், இலங்கை நிலவளவைத் திணைக்கள எண்ணிலக்க (Digital map) நிலப்பயன்பாட்டுப் படங்கள் போன்ற வற்றிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி புவியியல் தகவல் தொழினுட்பத்தின் உதவியுடன் நிலப்பயன்பாட்டு மாற்றங்கள் கண்டறியப்பட்டு அவை மதிப்பிடப்பட்டுள்ளன. இதன் மூலம் இரண்டு ஆண்டுகளுக்கும் இடைப்பட்ட காலத்தில் நிலப்பயன்பாட்டில் ஏற்பட்ட மாற்றங்களை மதிப்பிட முடிந்துள்ளது. ஆய்வுப் பிரதேச நிலப்பயன்பாட்டு மாற்றங்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியனவாக இருந்தாலும் எதிர்காலத் திட்டமிடல்களை மேற்கொள்ளும் போது நிலப்பயன்பாட்டினைக் கருத்தில் கொள்ளல் அவசியமாகும். எனவே இவ் ஆய்வானது நிலப்பயன்பாடுகளையும் அதில் ஏற்பட்டு வரும் மாற்றங்களையும் படமாக்கிக் காட்டியுள்ள தோடு மாற்றங்களை அளவுசார் ரீதியாகவும், பண்புசார் ரீதியாகவும் அறிந்து கொள்ள முடிந்ததுடன் எதிர்காலத்திலே கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவில் மேற்கொள்ளுகின்ற ஆய்வுகளுக்கு வழிகாட்டியாகவும் அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.</summary>
    <dc:date>2017-07-01T00:00:00Z</dc:date>
  </entry>
</feed>

