<?xml version="1.0" encoding="UTF-8"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">
  <title>DSpace Collection:</title>
  <link rel="alternate" href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/6242" />
  <subtitle />
  <id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/6242</id>
  <updated>2026-06-24T11:03:10Z</updated>
  <dc:date>2026-06-24T11:03:10Z</dc:date>
  <entry>
    <title>இசைநாடகங்களில் இசைவடிவங்களின் அரங்கியல் வகிபாகம்  'நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு</title>
    <link rel="alternate" href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12726" />
    <author>
      <name>Navadharshani, K.</name>
    </author>
    <id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12726</id>
    <updated>2026-06-24T04:44:31Z</updated>
    <published>2018-01-01T00:00:00Z</published>
    <summary type="text">Title: இசைநாடகங்களில் இசைவடிவங்களின் அரங்கியல் வகிபாகம்  'நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
Authors: Navadharshani, K.
Abstract: நாடகபாடம் என்பது (Dramatic Text) என்பது நாடக ஆற்றுகையின் கூறுகளில் ஒன்றாகும். அவை உருவாக்கப்படும் முறைமையில் காலத்திற்குக்காலம் அரங்கவடிவங்களின் வேறுபாடுகளிற்கேற்ப்ப அவை தனது வடிவத்தினை நாடகபாடம் அதன் கட்டமைப்பினை வடிவமைத்துக் கொள்ளும். அந்தவகையில் கோபாலக்கிருஸ்ணபாரதியாரின் நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள் என்ற நாடகபாடம் இசைநாடகமாக அளிக்கை செய்வதற்காக 19ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகும். இசை நாடகங்களின் தோற்றம் 19ஆம் நூற்றாண்டில் பாசி அரங்கமரபுகளும் மற்றும் உள்ளூர் இசை, நாடகங்கள், ஏனைய ஆற்றுகை மரபுகளினதும் கலப் பொட்டாக தமிழில் அறிமுகமாகிய அரங்க வடிவமாகும். இவற்றில் தனித்துவமான பண்புகள் கொண்ட பல்வேறு இசைவடிவங்களும் இசை நாடகங்களின் உருவாக்கத்திற்குப் பயன் படுத்தப்பட்டுள்ளன. நாடக முழுமைக்கு இந்த இசைவடிவங்களின் பங்கு என்ன என்பதனை நந்தனார் சரித்திரக்கீர்த்தனைகளை அடிப்படையாகக் கொண்டு இவ்ஆய்வு விளக்க முற்படுகிறது. இசைநாடகங்களின் வரலாறு மற்றும் அவற்றின் சமூகவியல் ரீதியான நோக்கில் ஆய்வுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆயினும் அவற்றின் அரங்கியல் அம்சங்கள் தொடர்பான ஆய்வுகளின் தேவை அரங்கில் ஈடுபடுபவைகளுக்கு மிகவும் அவசியமானதாகும். அந்த வகையில பாத்திர உருவாக்கம், காட்சிப் படிமங்களின் உருவாக்கம், உணர்ச்சி வேறுபாடுகளை உருவாக்குதல் என்பவற்றிற்கு இசைவடிவங்களின் தனித்துவமான இயல்புகள் எவ்வாறு கூட்டு அனுபவமாக இசைநாடகத்தில் வெளிப்படுகிறது என்பது தொடர்பாக நாடக பாடத்தினை அடிப்படையாகக் கொண்ட அறிதலாக இவ் ஆய்வு அமைகிறது. "இந்திய அரங்கமரபில் (Convention of stage) நாடகங்களை மேடையேற்றுதல் என்பது குறிப்பிடத்தக்க செயற்பாடாகும். அரங்க எழுத்துருக்களைப் பொறுத்தவரை அவை அரங்கச் செயலின் (Presentation) பல்வேறு அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு புறவுருவம் (Configuration) ஆகும்." (கபிலவாத்சாயனர், 1968-24)</summary>
    <dc:date>2018-01-01T00:00:00Z</dc:date>
  </entry>
  <entry>
    <title>மஹாகவி காளிதாஸரின் அபிக்ஞான சாகுந்தலம் நாடக பாடமும் ஆற்றுகைக் குறிப்புகளும்</title>
    <link rel="alternate" href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12725" />
    <author>
      <name>Navadharshani, K.</name>
    </author>
    <id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12725</id>
    <updated>2026-06-24T04:45:33Z</updated>
    <published>2013-01-01T00:00:00Z</published>
    <summary type="text">Title: மஹாகவி காளிதாஸரின் அபிக்ஞான சாகுந்தலம் நாடக பாடமும் ஆற்றுகைக் குறிப்புகளும்
Authors: Navadharshani, K.</summary>
    <dc:date>2013-01-01T00:00:00Z</dc:date>
  </entry>
  <entry>
    <title>பண்பாட்டு எதிர்ப்பாக அரங்கப் பனுவல்கள் - பின்காலனித்துவ இலங்கையின் தமிழ்  நாடகங்களை மீளவாசித்தல்</title>
    <link rel="alternate" href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12724" />
    <author>
      <name>Navadharshani, K.</name>
    </author>
    <id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12724</id>
    <updated>2026-06-24T04:47:18Z</updated>
    <published>2021-01-01T00:00:00Z</published>
    <summary type="text">Title: பண்பாட்டு எதிர்ப்பாக அரங்கப் பனுவல்கள் - பின்காலனித்துவ இலங்கையின் தமிழ்  நாடகங்களை மீளவாசித்தல்
Authors: Navadharshani, K.
Abstract: நாடகங்கள் இயல்பாகவே அவை எழுதப்பட்ட சமகாலத்தினை பிரதிபலிப்பதாக அமையும். இவ் இயல்பினை பல்வேறு பண்பாடுகளின் நாடகங்களும் அவை காலந்தோறும் ஆற்றுகை செய்யப்பட்ட வரலாறு மூலமாகவும் அறிந்து கொள்ள முடியும். இது தமிழ் நாடகங்களிற்கும் பொருந்தி அமையும். ஈழத்துத் தமிழ்ச் சூழலைப் பொறுத்தவரையில் காலனித்துவ காலத்திலும் சுதந்திரத்திற்குப் பின்னான காலப்பகுதியிலும் நாடகங்கள் மேலாதிற்கு எவ்வாறு எதிர்வினையாற்றியது என்பது தொடர்பாகவே இந்த ஆய்வு கவனத்திற்கொள்கிறது. இத்தகைய நாடக வெளிப்பாடுகளை பண்பாட்டு எதிர்பாக விளங்கிக் கொள்ளலாம். இது குறித்த ஒரு பிரச்சனை தொடர்பான விழிப்புணர்வை ஏற்ப்படுத்தி அதற்கான நீதி தொடர்பான கதையாடல்களை உருவாக்க வல்லது. இந்த ஆய்வு இலங்கையில் எழுதப்பட்ட சங்கிலி பற்றிய நாடகங்களுள் எஸ்.தம்பிமுத்துப்பிள்ளையால் எழுதப்பட்ட சங்கிலி அரசன் நாடகம் (1903) மற்றும் பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் சங்கிலி (1956) என்பனவும் பூதத்தம்பியின் வரலாறு தொடர்பான நாடகங்களில் நல்லையாபிள்ளை எழுதிய பூதத்தம்பி விலாசம் (1888) மற்றும் த.சண்மகசுந்தரம் எழுதிய பூதத்தம்பி (1964 )ஆகிய நாடகங்கள் இங்கு ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இவற்றோடு தொடர்பு டையதாக பொருத்தமான இடங்களில் தமிழில் எழுதப்பட்ட ஏனைய வரலாற்று நாடகங்கள் ஒப்பிடப்படுகிறது. இந்த வரலாற்று நாடகங்கள் எவ்வாறு குறித்த வரலாற்றினூடாக ஒரு சமூகத்தின் கூட்டு மனநிலையை  பல்வேறு காலப்பகுதியில் வெளிப்படுத்தியது? என்பதில் இவ் ஆய்வு கவனம் செலுத்துகிறது. இலங்கையில் பின்காலனித்துவமும் தமிழ் நாடகங்களும், தமிழ் வரலாற்று நாடகங்களும் வரலாற்று உருவாக்கமும், சங்கிலி மற்றும் பூதத்தம்பி நாடகம்: காலனித்தவகாலம், சுதந்திரத்திற்குப் பின்னான இலங்கை என்ற விடயங்களுடாக நாடகம் எவ்வாறு ஒரு பண்பாட்டு எதிர்ப்பு வடிவமாக இருந்தது என்பதனை விளங்கிக் கொள் கிறது. இந்த வரலாற்று நாடகங்கள் ஒரு பண்பாட்டு எதிர்ப்பாக அரசியல் கதையாடல்களிற்கு வடிவம் கொடுத்தன. நடைமுறை அரசிய லிலும் ஏனைய சமூக முரண்பாடுகளை அணுகுவதிலும் தீர்வுகளை நோக்கிச் செல்வதிலும் செல்வாக்குச் செலுத்தியுள்ளது. இவ்வாறாக எழுதப்படும் நாடகங்கள் அவ்வக்காலத்தின் சூழமைவில் வைத்துப் புரிந்து கொள்ளப்பட வேண்டிய அதே வேளையில், இந்த வரலாற்று நாடகங்களின் சமகாலத் தேவை என்ன என்பதனை விளங்கிக் கொள்வதும் முக்கியமானது. இலங்கையில் இனமுரண்பாடும் அதன் மேலாதிக்கம் தொடர்பாக வெளிப்படையாகப் பேச முடியாத நிலையில், அவை காலனித்துவத்தின் மேலாண்மையைப் பேசுவதனூாடாக இந்த வரலாற்று நாடகங்கள் சொல்லவரும் செய்தி என்ன? என்பதும் நாடகங்களினூடாக பதிவு செய்யப்பட்ட அரசியல் வரலாறும் சமூக வரலாறும் எவ்வளவிற்கு சமூக நிலமைகளின் மீது எதிர்வினையாற்றி யுள்ளது என்பதனைக் கண்டுகொள்ள முடியும்.</summary>
    <dc:date>2021-01-01T00:00:00Z</dc:date>
  </entry>
  <entry>
    <title>இலங்கையில் உயர்கல்வியில் ஆற்றுகைக்கலைகள்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கக்கலைகளும் கற்கைநெறி ஒரு மீள்பார்வை</title>
    <link rel="alternate" href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12723" />
    <author>
      <name>Navadharshani, K.</name>
    </author>
    <id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12723</id>
    <updated>2026-06-19T09:42:26Z</updated>
    <published>2022-01-01T00:00:00Z</published>
    <summary type="text">Title: இலங்கையில் உயர்கல்வியில் ஆற்றுகைக்கலைகள்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கக்கலைகளும் கற்கைநெறி ஒரு மீள்பார்வை
Authors: Navadharshani, K.
Abstract: நாடகமும் அரங்கக் கலைகளும் நீண்டகாலமாக பயிலப்பட்டுவரும் கல்வி முறைகளிலொன்று. பாரம்பரியமாக இந்தக் கல்வி குருகுல மரபு மற்றும் குலமரபு முறையில் பயிலப்பட்டு வந்தது. காலனித்துவ காலத்தில் ஏனைய கல்வி முறையில் ஏற்ப்பட்ட மாற்றங்களைப் போன்று அரங்கக் கலைகளைப் பயிலுதலிலும் மாற்றம் ஏற்ப்பட்டது. 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்த பின்னர், உயர்தரவர்க்கம் மற்றும் மத்தியதரவர்க்கம் என்பவற்றின் உருவாக்கம் இந்தக் கலைப் பயிற்சியை உள்ளடக்கியது. இது தேசியவாதத்தற்கும் பங்களித்தது. தமிழ்நாட்டில் பயில்வதற்காக நிறுவப்பட்ட கலாசேத்திரா, அடையாறு இசைக்கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களில் மத்தியதர வர்க்கத் தமிழர்கள் இசை, நடனம் பயில்வதற்காகச் சென்றனர். இவர்கள் கற்கையை நிறைவு செய்த பின்பு, இலங்கைக்குத் திரும்பினார்கள். இவர்கள் தனிப்பட்ட முறையிலும் கல்வி நிறுவனங்களிலும் செயன்முறை வகுப்புகளை நடாத்தத் தொடங்கினர். நாடகக் கல்வி ஏனைய அழகியற் பாடங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தது. நாடகம் பனுவலை அடிப்படையாகக் கொண்டு கற்கப்பட்டது. மேற்தட்டு வர்க்கத்தினர் இங்கிலாந்தில் நாடகப் பயிற்சியை பெற்று கொழும்பில் பயிற்சி நிறுவனங்களை ஆரம்பித்தனர். இதன் மூலம் பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்களையும் வளவாளராக உருவாக்குவதற்கு பங்களிப்பு செய்துள்ளனர். அரங்கக் கலைகளின் செயன்முறைப் பயிற்சிகளும் நாடகத்தயாரிப்புகளும் உருவாகுவதற்கு பங்களித்துள்ளனர். இந்த வளவாளர்கள் உள்ளூர் மற்றும் மேலைத்தேய மரபுகளை இணைத்து நாடகங்களைத் தயாரித்ததன் மூலம் தேசிய அரங்க உருவாக்கத்திற்கு பங்களித்துள்ளனர். இத்தகைய பின்னணியில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கக் கலைகளும் பாடம் அறிமுகப்படுத்தப்பட்டபோது (1986) செயன்முறையை விடவும் கோட்பாடுகளிலும் வரலாற்றைக் கற்ப்பதிலும் கவனம் செலுத்தப்பட்டது. காலத்திற்குக் காலம் நாடகமும் அரங்கக் கலைகளும் கலைத்திட்டம் மறுசீரமைப்பு செய்யப்பட்டபோது செய்முறைப் பாடங்களின் தரம் அதிகரிக்கப்பட்டது. இந்த ஆய்வு ஆற்றுகைக் கலைகளின் கல்வியின் வரலாறு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வியில் அரங்கக்கலைகளின் கல்வி தொடர்பாக விவாதிப்பதோடு நாடகமும் அரங்கக் கலைகளும் கலைத்திட்டத்தையும் மீள்பார்வை செய்வதனை நோக்கமாகக் கொண்டுள்ளது.</summary>
    <dc:date>2022-01-01T00:00:00Z</dc:date>
  </entry>
</feed>

