<?xml version="1.0" encoding="UTF-8"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">
  <title>DSpace Community:</title>
  <link rel="alternate" href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12776" />
  <subtitle />
  <id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12776</id>
  <updated>2026-07-30T13:44:06Z</updated>
  <dc:date>2026-07-30T13:44:06Z</dc:date>
  <entry>
    <title>மாணவர்களிடையே சமூக சகவாழ்வை வளர்ப்பதில் குடியியற் பாடத்தின் பங்களிப்பு</title>
    <link rel="alternate" href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12792" />
    <author>
      <name>Pusppam, R.</name>
    </author>
    <author>
      <name>Sivananthan, P.</name>
    </author>
    <id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12792</id>
    <updated>2026-07-30T09:55:46Z</updated>
    <published>2026-01-01T00:00:00Z</published>
    <summary type="text">Title: மாணவர்களிடையே சமூக சகவாழ்வை வளர்ப்பதில் குடியியற் பாடத்தின் பங்களிப்பு
Authors: Pusppam, R.; Sivananthan, P.
Abstract: தென்மராட்சிக் கிழக்குப் பிரதேச வகை II  பாடசாலைகளின் தரம் 10 மாணவர்களிடையே சமூக சகவாழ்வை வளர்ப்பதில் குடியியற் பாடத்தின் பங்களிப்பினை பாட உள்ளடக்கம், கற்பித்தல் அணுகுமுறை, இணைக்கலைத்திட்டச் செயற்பாடுகள் ஊடாக கண்டறிவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. பல்லினப் பண்பாட்டுச் சூழலில் மாணவர்களிடையே அண்மைக்காலமாக ஒத்துழைப்பின்மை, வன்முறை, குழு மனப்பான்மை மற்றும் தவறான நடத்தைகள் அதிகரித்துச் செல்வது இங்கு ஆய்வுப் பிரச்சினையாக இனங்காணப்பட்டுள்ளது. விவரண அளவை நிலை ஆய்வு வடிவத்தையும், தொகைசார் மற்றும் பண்புசார் முறைகளை ஒருங்கிணைத்த கலப்பு ஆய்வு அணுகுமுறையையும் கொண்டு இவ்வாய்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. தென்மராட்சிக் கிழக்குப் பிரதேசத்தின் தரம் 10 இல் கல்வி கற்கும் 80 மாணவர்கள் முழுவகை மாதிரியாகவும், தரவு முக்கோணப்படுத்தலுக்காக நோக்க மாதிரியெடுப்பு முறையில் 20 குடியியல் பாட ஆசிரியர்களும், ஒன்பது அதிபர்களும் மாதிரிகளாக உள்வாங்கப்பட்டனர். வினாக்கொத்து மற்றும் நேர்காணல் மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகள் சராசரி, நியம விலகல் மற்றும் கருப்பொருட் பகுப்பாய்வு முறைகள் மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டன. ஆய்வு முடிவுகளின்படி, குடியியற் பாடத்திலுள்ள சட்ட, பண்பாட்டு ரீதியான கடமைகளும் (அடிப்படைக் கடமைகள், உரிமைகளை மதித்தல்), சமூக நிறுவன மற்றும் ஜனநாயக விழுமியங்களும் மாணவர்களிடையே சமூக சகவாழ்வை வளர்ப்பதில் மிகவும் உயர்வான பங்களிப்பினை &#xD;
 (M = 4.21 - 5.00) வழங்கியுள்ளன. மேலும், வகுப்பறைக் கவிநிலையும் பாடத்தின் போதான மதிப்பீடுகளும் உயர் பங்களிப்பை நல்கிய போதிலும், விவாதங்கள் மற்றும் குழு வேலைகள் போன்ற மாணவர் மையக் கற்பித்தல் அணுகுமுறைகள் மிதமான பங்களிப்பையே  (M = 2.61 - 3.40) வழங்கியுள்ளன என்பது கண்டறியப்பட்டது. அதேவேளை, மாணவர் நாடாளுமன்றம், சமூக விஞ்ஞானப் போட்டிகள் மற்றும் கல்விச் சுற்றுலா போன்ற இணைக்கலைத்திட்டச் செயற்பாடுகள் கோட்பாட்டு ரீதியாக முக்கியத்துவம் பெற்றிருந்தாலும், மாணவர்களின் குறைந்த ஈடுபாடு மற்றும் நடைமுறைச் சவால்கள் காரணமாக ஆய்வுப் பிரதேசப் பாடசாலைகளில் போதிய பங்களிப்பை வழங்கவில்லை என அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் நேர்காணல் தரவுகள் புலப்படுத்துகின்றன. எனவே, இலங்கையின் தற்போதைய பரீட்சை மையக் கல்வி முறையினால் குடியியற் பாடம் ஏட்டுக்கல்வியாக மட்டுமே சுருங்கிவிடுவதைத் தடுத்து, விழுமியப் பதிவேட்டு முறை மற்றும் செயல்முறைச் செயல்பாடுகள் மூலம் அதனை ஒரு சமூக நிறுவனக் கற்றலாக மாற்றுவதற்குக் கலைத்திட்ட மறுசீரமைப்பை மேற்கொள்வது இன்றியமையாதது என இவ்வாய்வு இறுதி முடிவு செய்கின்றது.</summary>
    <dc:date>2026-01-01T00:00:00Z</dc:date>
  </entry>
  <entry>
    <title>ஆரம்பக்கல்வி ஆசிரியர்களின் கற்பித்தல் செயற்றிறனில் செல்வாக்குச் செலுத்தும் ஆசிரியர் சார் காரணிகள்</title>
    <link rel="alternate" href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12791" />
    <author>
      <name>Christen Vergini, C.</name>
    </author>
    <author>
      <name>Sathiyakumar, M.</name>
    </author>
    <id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12791</id>
    <updated>2026-07-30T09:45:45Z</updated>
    <published>2026-01-01T00:00:00Z</published>
    <summary type="text">Title: ஆரம்பக்கல்வி ஆசிரியர்களின் கற்பித்தல் செயற்றிறனில் செல்வாக்குச் செலுத்தும் ஆசிரியர் சார் காரணிகள்
Authors: Christen Vergini, C.; Sathiyakumar, M.
Abstract: ஆரம்பக்கல்வி என்பது மாணவர்களின் அடிப்படை அறிவு, திறன் மற்றும் ஆளுமை வளர்ச்சிக்கான முக்கிய கட்டமாகும். இந்நிலையில் ஆசிரியர்களின் கற்பித்தல் செயற்றிறன் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இவ்வாய்வு, யாழ்ப்பாண கல்வி வலயத்திலுள்ள நல்லூர் கோட்ட வகை II பாடசாலைகளில் பணியாற்றும் ஆரம்பக்கல்வி ஆசிரியர்களின் கற்பித்தல் செயற்றிறனில் செல்வாக்குச் செலுத்தும் ஆசிரியர்சார் காரணிகளை ஆய்வு செய்வதை நோக்கமாகக் கொண்டது. இவ்வாய்வில் விவரண மற்றும் விளக்க ஆய்வு முறைகள் பயன்படுத்தப்பட்டன. குறுக்குவெட்டு கணக்கெடுப்பு ஆய்வு முறை  (Cross-sectional Survey Research) பயன்படுத்தப்பட்டு, 65 ஆரம்பக்கல்வி ஆசிரியர்கள் குடித்தொகை மாதிரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தரவுகள் வினாக்கொத்து மூலம் சேகரிக்கப்பட்டு,  Spearman Correlation பகுப்பாய்வு மூலம் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின் முடிவுகள் ஆசிரியர்களின் தயார்நிலை, மனப்பாங்கு, வகுப்பறை முகாமைத்துவத் திறன் மற்றும் படைப்பாற்றல் திறன் ஆகியவை கற்பித்தல் செயற்றிறனுடன் குறிப்பிடத்தக்க தொடர்பு கொண்டுள்ளதை வெளிப்படுத்தின. குறிப்பாக வகுப்பறை முகாமைத்துவத் திறன் கற்பித்தல் செயற்றிறனுடன் அதிகமான நேர்மறைத் தொடர்பைக் காட்டியது. மேலும், ஆசிரியர்களின் மனப்பாங்கும் தயார்நிலையும் உயர்ந்த நிலையில் காணப்பட்டாலும், வகுப்பறை முகாமைத்துவம் மற்றும் படைப்பாற்றல் தொடர்பான சில குறைபாடுகள் காணப்பட்டன. இவ்வாய்வு ஆசிரியர்களுக்கான தொடர்ச்சியான தொழில்முறை பயிற்சிகள், வகுப்பறை முகாமைத்துவ மேம்பாட்டு நடவடிக்கைகள், கற்பித்தல் வளங்களின் அதிகரிப்பு மற்றும் ஆசிரியர் ஊக்குவிப்பு திட்டங்கள் ஆகியவற்றை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது. இதன் மூலம் ஆரம்பக்கல்வி ஆசிரியர்களின் கற்பித்தல் செயற்றிறனை மேம்படுத்தி மாணவர்களின் கல்வி அடைவுகளை உயர்த்த முடியும்.</summary>
    <dc:date>2026-01-01T00:00:00Z</dc:date>
  </entry>
  <entry>
    <title>கற்றலில், ஆசிரியர் - மாணவர் உறவின் தாக்கம்</title>
    <link rel="alternate" href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12790" />
    <author>
      <name>Athirathan, S.</name>
    </author>
    <id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12790</id>
    <updated>2026-07-30T09:37:43Z</updated>
    <published>2026-01-01T00:00:00Z</published>
    <summary type="text">Title: கற்றலில், ஆசிரியர் - மாணவர் உறவின் தாக்கம்
Authors: Athirathan, S.
Abstract: இந்த ஆய்வு, கொழும்பு தெற்கு கல்வி வலய தமிழ்மொழிமூல இடைநிலைப் பாடசாலைகளில் ஆசிரியர்-மாணவர் உறவு மாணவர்களின் கற்றல் விளைவுகளில் ஏற்படுத்தும் தாக்கத்தை ஆராய்வதனை நோக்கமாகக் கொண்டது. தனிநபர் மற்றும் சமூக வளர்ச்சிக்குக் கல்வி இன்றியமையாதது. மேலும், ஆசிரியர்-மாணவர் உறவின் தரமானது, மாணவர்களின் கற்றல் செயற்பாடு, ஊக்கல், உணர்வு மற்றும் முழுமையான கற்றல் அனுபவம் ஆகியவற்றை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. பரஸ்பர மரியாதை, நம்பிக்கை, ஆதரவு மற்றும் இடைவினை ஆகியவற்றால் வளர்த்தெடுக்கப்படும் நேரான ஆசிரியர்-மாணவர் உறவு, உள்ளடங்கல் கற்றல் சூழலை வளர்க்க உதவுகின்றது. மாறாக, எதிரான ஆசிரியர்-மாணவர் உறவு கற்றல் ஈடுபாடின்மைக்கும் பாதகமான விளைவுகளுக்கும் வழிவகுக்கின்றது. இந்த ஆய்வானது விபரண மற்றும் இணைவு ஆய்வு வடிவங்களைப் பின்பற்றி அளவு சார்ந்த அணுகுமுறையில் முன்னெடுக்கப்பட்டது. தொடர்பாடல், ஒத்துழைப்பு, நம்பிக்கை, ஈடுபாடு மற்றும் ஊக்கல் போன்ற பரிமாணங்களை மதிப்பிடும் வகையில்  Likert அளவுத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட கட்டமைக்கப்பட்ட வினாக்கொத்துக்கள் மூலம் 100 ஆசிரியர்கள் மற்றும் 100 மாணவர்களிடமிருந்து தரவுகள் சேகரிக்கப்பட்டன. ஆய்வுக் குடித்தாகையின் சரியான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்காக, படைமுறை எழுமாற்று மாதிரி முறை மூலம் மாதிரி தெரிவு செய்யப்பட்டது. மேலும், தரவுப் பகுப்பாய்வில் விபரணப் புள்ளிவிபர நுட்பங்கள், பியர்சனின் தொடர்புச் சோதனை மற்றும் பிற்செலவு மாதிரிகள் பயன்படுத்தப்பட்டன. இந்த ஆய்வின் முடிவுகளாக, ஆசிரியர்-மாணவர் உறவுமுறை கற்றல் அடைவில் மிதமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது, ஆசிரியர் -மாணவர் உறவின் தரம், மாணவர் ஈடுபாடு மற்றும் ஊக்கல் ஆகியவற்றுக்கு இடையே பொருண்மையான நேர்த் தொடர்புகள் (r = .68 முதல் .75 வரை P &lt; .001) காணப்படுகின்றன. ஆசிரியர்களிடமிருந்து கிடைக்கும் ஒத்துணர்வும் ஊக்கலும் மாணவர்களின் சுயஊக்கலையும் திருப்தியையும் கணிசமான அளவில் பாதிக்கின்றன. மாணவர்களுடனான தங்கள் உறவுகள் மற்றும் கற்பித்தல் நடைமுறைகள் குறித்து ஆசிரியர்கள் கொண்டிருக்கும் புலக்காட்சிக்கும் கற்பித்தலுக்கும் இடையில் நேரான தொடர்பு நிலவுகின்றது. மாணவருடனான உறவுகள் குறித்து நேரான புலக்காட்சியைக் கொண்ட ஆசிரியர்கள், மாணவர்களை மையமாகக் கொண்ட கற்பித்தல் உத்திகளை அதிகம் பின்பற்ற முனைகிறார்கள் என்றும், இது அதிக ஈடுபாட்டிற்கும் மேம்பட்ட கற்றல் விளைவுகளுக்கும் பங்களிக்கிறன, கலாசார ரீதியாகப் பன்முகத்தன்மை வாய்ந்த சூழல்களில், தொழில்முறை மேம்பாட்டின் மூலம் வலுவானதும் ஒத்துணர்வானதுமான ஆசிரியர்-மாணவர் உறவை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை இந்த முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன. உறவுமுறை தொடர்புகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் கல்வித் தரத்தையும் சமத்துவத்தையும் மேம்படுத்த முடியும் என்பது இந்த ஆய்வினூடாக வெளிப்படுத்தப்பட்டது.</summary>
    <dc:date>2026-01-01T00:00:00Z</dc:date>
  </entry>
  <entry>
    <title>Developing Digital Technological Literacy in Pirivena Education Based on Discipline-Oriented Theoretical Principles</title>
    <link rel="alternate" href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12789" />
    <author>
      <name>Narada Thero, H.</name>
    </author>
    <id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12789</id>
    <updated>2026-07-30T09:28:36Z</updated>
    <published>2026-01-01T00:00:00Z</published>
    <summary type="text">Title: Developing Digital Technological Literacy in Pirivena Education Based on Discipline-Oriented Theoretical Principles
Authors: Narada Thero, H.
Abstract: This article presents a theoretical literature review on the development of digital technological literacy in Pirivena education through discipline-oriented theoretical principles. The revised manuscript strengthens the original argument by explicitly positioning Pirivena digital literacy as a value-mediated educational construct rather than a purely technical skill set. The analysis integrates Thomas Lickona’s Character Education Theory, Albert Bandura’s Social Learning Theory, and Paul Gilster’s Digital Literacy Theory to identify how moral formation, social modeling, and critical information competence can be combined within Buddhist monastic education. In response to the revision requirement, the paper now clarifies the problem statement, expands the methodological basis of the theoretical literature review, updates the literature with international digital competence frameworks such as DigComp 2.2, UNESCO’s technology-in-education evidence base, and OECD digital education ecosystem analysis, and proposes an integrated conceptual model for disciplined digital conduct in Pirivena settings. The review concludes that digital technological literacy in Pirivena education should be developed through guided access, teacher and senior-monk modeling, critical source evaluation, protection of identity and monastic dignity, and institutional norms for safe, purposeful, and ethically restrained technology use. The contribution of the study is a context-sensitive framework that links digital competence development with the moral and disciplinary objectives of Pirivena education in Sri Lanka.</summary>
    <dc:date>2026-01-01T00:00:00Z</dc:date>
  </entry>
</feed>

