<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
<channel>
<title>Home Economics</title>
<link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/98</link>
<description/>
<pubDate>Mon, 17 Aug 2026 02:35:57 GMT</pubDate>
<dc:date>2026-08-17T02:35:57Z</dc:date>
<item>
<title>யாழ்மாநகர சபைக்குட்பட்ட உணவகங்களின் உணவுப் பரிமாறல் செயற்பாடுகளின் தரம் குறித்த மதிப்பீட்டு ஆய்வு</title>
<link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12878</link>
<description>யாழ்மாநகர சபைக்குட்பட்ட உணவகங்களின் உணவுப் பரிமாறல் செயற்பாடுகளின் தரம் குறித்த மதிப்பீட்டு ஆய்வு
Vimalkumar, R.
சுற்றுலாத்துறையின் நிலைத்து நிற்கும் தன்மையையும் வளர்ச்சியையும் தீர்மானிப்பதில் உணவு வழங்கல் முக்கிய பங்கினை வகிக்கின்றது. அவ்வகையில் 1765 ஆம் ஆண்டு முதன்முதலாக பரிஸ் நகரத்தில் உணவகமானது ஆரம்பிக்கப்பட்டது. நாளுக்கு நாள் மக்களின் தேவைகள் அதிகரித்த காரணத்தினால் உலகின் பல்வேறு பாகங்களிலும் உணவகங்களின் பரவலான வளர்ச்சியானது இடம்பெறத்தொடங்கியது. அவ்வகையில் உணவு மற்றும் பானங்கள் வழங்கும் சேவையில் உணவகங்கள் பாரிய பங்காற்றுகின்றன. இலாப நோக்கத்தைக் கொண்டு இயங்குகின்ற உணவு வழங்கும் ஸ்தாபனங்களில் இவ்வுணவகங்கள் முதன்மை பெறுகின்றன. இவ்வுணவு வழங்கும் ஸ்தாபனங்களில் உணவு சமைத்தல் மட்டுமன்றி அவற்றை வாடிக்கையாளர்களுக்கு திருப்திகரமான முறையில்&#13;
வழங்குவதில் பரிமாறல் செயற்பாடு இன்றியமையாததும் முதன்மையானதுமான ஓர் செயற்பாடாகக் காணப்படுகின்றது. இவ்வகையில் யாழ்மாநகர சபைக்குட்பட்ட உணவகங்களின் பரிமாறல் செயற்பாடுகளின் தரம் குறித்த இவ்வாய்வில் தொண்ணூற்று எட்டு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான உணவகங்களிலிருந்து முப்பது உணவகங்கள் எழுமாற்றாகத் தெரிவு செய்யப்பட்டு ஆய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்விற்கான தரவுகள் களநிலையிலிந்து பெறப்பட்ட நேரடி அவதானிப்புக்கள், நேர்காணல், வினாக்கொத்து என்பவற்றுடன் துணைநிலைத்தரவுகளான நூல்கள், ஆய்வுக்கட்டுரைகள், ஆய்வறிக்கைகள் என்பவற்றிலிருந்து பெறப்பட்டு பகுப்பாய்விற்குட்படுத்தப்பட்டு ஆய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</description>
<pubDate>Tue, 01 Jan 2019 00:00:00 GMT</pubDate>
<guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12878</guid>
<dc:date>2019-01-01T00:00:00Z</dc:date>
</item>
<item>
<title>தமிழர் பண்பாட்டில் விருந்தோம்பல் : சங்கமருவியகால அற இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு</title>
<link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12877</link>
<description>தமிழர் பண்பாட்டில் விருந்தோம்பல் : சங்கமருவியகால அற இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
Vimalkumar, R.
தமிழ் மொழியின் பழமையான இலக்கியங்கள் அரிய கருத்துக்களையும் உயர்ந்த பண்புகளையும் எடுத்துக்காட்டுகின்றன. மனிதனுடைய அறப்பண்புகள் எண்ணம், சொல், செயல் மூன்றிலும் வெளிப்படும் ஆயினும் காலச்சூழற்பண்பு மாற்றத்திற்கு வழிவகுத்துவிடும் என்பதால் இலக்கியங்கள் தொடர்ந்து அறத்தை வலியுறுத்தி வந்துள்ளன. தமிழர் பண்பாட்டில் அறம், ஒழுக்கம், கல்வி, விருந்தோம்பல், இன்னாசெய்யாமை&#13;
போன்றன உயரிய பண்பாட்டுக்கூறுகளாகவே காணப்பட்டன. இவற்றில் தமிழரின் ஒழுக்க நெறிமுறைகளிலும் பண்பாட்டிலும் சிறந்து விளங்குவது விருந்தோம்பற் பண்பாடாகும். இதனை அறங்களின் தலையாய அறமென திருவள்ளுவர் எடுத்தியம்பியுள்ளார். பண்டைய தமிழரின் வரலாற்றில் தலையானது விருந்தோம்பலாகும். பசிப்பிணி போக்குவதனையே முதன்மை நோக்கமாகக் கொண்டு வாழ்ந்த பெருமை தமிழ்ச் சமூகத்திற்கு&#13;
உரித்துடையதாகும். அவ்வகையில் தமிழர் பண்புகளில் நம்மால் மறைக்கப்பட்ட அல்லது மறுக்கப்பட்ட பண்புகளில்உன்றாக விருந்தோம்பல் அமைகின்றது. இவ்வகையான பண்பாட்டுக் கூறானது தற்போதைய தமிழ் சமூகத்தினரிடையே அருகி வருவதனைக் காணக்கூடியதாக உள்ளது. அவ்வகையில் தமிழர் பண்பாட்டில் விருந்தோம்பல் எனும் இவ்வாய்வானது சங்கமருவியகால பதினெண்கீழ்கணக்கு நூல்களில் அறம் தழுவிய இல்வாழ்க்கைப் பண்பாட்டை வலியுறுத்தும் திருக்குறள் ஆசாரக்கோவை போன்ற நூல்கள் சுட்டிக்காட்டும் விருந்தோம்பற் பண்பாடு பற்றிய கருத்துக்களை ஆராய்வதாக அமைகிறது. விருந்தோம்பலின் சிறப்புக்களையும் முக்கியத்துவத்தினையும் மக்களிமையே எடுத்துணர்த்தும் நோக்கிலும் தமிழர்களிடையே நலிவுற்று வரும் விருந்தோம்பற் பண்பாட்டை வலுப்பெறச்செய்வதனையும் நோக்காகக் கொண்டு இவ்வாய்வானது மேற்கொள்ளப்படடுள்ளது. ஆய்விற்கான தரவுகள் நூல்கள், ஆய்வுக்கட்டுரைகள் மூலமாகப் பெறப்பட்டு பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது.
</description>
<pubDate>Sun, 01 Jan 2023 00:00:00 GMT</pubDate>
<guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12877</guid>
<dc:date>2023-01-01T00:00:00Z</dc:date>
</item>
<item>
<title>குழந்தைக் கல்வியில் உளவியலின் செல்வாக்கு யாழ் கல்விக் கோட்டத்திலுள்ள முன்பள்ளிப் பாடசாலைகளை அடிப்படையாகக்கொண்ட ஆய்வு</title>
<link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12876</link>
<description>குழந்தைக் கல்வியில் உளவியலின் செல்வாக்கு யாழ் கல்விக் கோட்டத்திலுள்ள முன்பள்ளிப் பாடசாலைகளை அடிப்படையாகக்கொண்ட ஆய்வு
Vimalkumar, R.
மனித சமுதாய மாற்றத்திற்கும், பொருளாதார, மேம்பாட்டுக்கும் சமூக அசைவிற்கும் கல்வியே சிறந்த கருவி. கல்வியானது நுண்மதியாற்றலையும் திறன்களையும் வளர்க்கின்றது. இதனடிப்படையில் குழந்தையின் முதல் ஐந்து ஆண்டுகள் அதன் வளர்ச்சிக்கு அடித்தளமானவை. இக்கால கற்றல் நடவடிக்கையின் போதே குழந்தையானது தனது தேவைகளைச் சிறிதளவேனும் தானே நிறைவு செய்து கொள்ளும் சுயேச்சை நிலையை நோக்கி மெதுவாக முன்னேறுகின்றது. இக்கால கட்டத்தில் உடல் வளர்ச்சி, உளத்திறன்கள் விருத்தியடைதல், மனவெழுச்சி தொடர்புடைய சில துலங்கல்கள் மற்றும் சமூக வளர்ச்சி என்பவற்றை இப்பருவத்தினரிடையே அவதானிக்க முடிகின்றது. இவ்வகையில் குழந்தையின் உளவியலை மையப்படுத்திய கற்றல் செயற்பாடுகள் குறித்து குழந்தைக் கல்வியில் உளவியலின் செல்வாக்கு என்ற இவ்வாய்வானது முன்வைக்கின்றது. அவ்வகையில் குழந்தைக் கல்வியும் உளவியலும் ஒன்றோடொன்று தொடர்புடைய செயற்பாடாகக் காணப்படுகின்றது கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு உளவியல் இன்றியமையாத காரணியாக அமைகின்றது. அவ்வகையில் குழந்தைக் கல்வியில் கவனித்தல் என்பது கற்றலை முன்னெடுப்பதற்குரிய முக்கிய நிபந்தனையாக அமைகின்றது. கவனித்தல் உளவலுவுடன் இணைந்த ஒரு தொழிற்பாடாகக் காணப்படுகின்றது.கற்றல் செயற்பாட்டில் ஈடுபடும் ஓர் குழந்தையின் கற்றலுக்கான கால எல்லையை நிர்ணயிப்பதில் குழந்தையின் உளவியல் பெருமளவு செல்வாக்குச் செலுத்துகின்றது. மேலும் மனதை ஒருமுகப்படுத்தல், சிந்தித்தல், ஆராய்தல் வினாக்களை எழுப்புதல் என்பன உளக்காரணிகளோடு தொடர்புடையது.அவ்வகையில் குழந்தைக் கல்வியானது குழந்தையின் உள அறிவு அறநெறிசார் முதிர்ச்சியை ஏற்படுத்துவதனை குறிக்கோளாகக் கொண்டிருத்தல் வேண்டும்.இவ்வாறான குறிக்கோளை அடைவதற்கு குழந்தை உள ரீதியாக முதிர்ச்சியடைந்திருத்தல் வேண்டும். அவ்வகையில் இவ்வாய்வானது குழந்தைக் கல்வியில் உளவியலின் செல்வாக்கு எனும் தலைப்பில் யாழ் கோட்டத்திலுள்ள பத்து பிரதேச அபிவிருத்தி நிறுவனங்களின் கீழ் இயங்கும் முன்பள்ளிப் பாடசாலைகளில் கல்வி பயிலும் மூன்று தொடக்கம் ஐந்து வயதெல்லையைக் கொண்ட ஐம்பது குழந்தைகள் எழுமாறாகத் தெரிவு செய்யப்பட்டு இவ்வாய்வானது மேற்கொள்ளப்படுகின்றது. அவ்வகையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட முன்பள்ளிகளில் கல்வி பயிலும் குழந்தைகளின் கல்வியில் உளவியலின் முக்கியத்துவம் குறித்து இவ்வாய்வினூடாக எடுத்துரைக்கப்படுகின்றது.
</description>
<pubDate>Mon, 01 Jan 2018 00:00:00 GMT</pubDate>
<guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12876</guid>
<dc:date>2018-01-01T00:00:00Z</dc:date>
</item>
<item>
<title>Problems and Challenges Experienced by Home Science Teachers in Sri Lanka</title>
<link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12875</link>
<description>Problems and Challenges Experienced by Home Science Teachers in Sri Lanka
Vimalkumar, R.
Home Science integrates the application of various science and humanities to improve the&#13;
human environment, family nutrition, Home management, Child development, and Textile and&#13;
Clothing. Since Home Science is a broad subject area, to develop this subject the teachinglearning&#13;
resources should be increased and enhanced. In our country, due to the lack of&#13;
awareness of the subject, the teachers who are involved in teaching Home Science have faced&#13;
various problems and challenges in developing this subject at the school level. This study&#13;
highlights the problems and challenges experienced by Home Science teachers in government&#13;
schools in Sri Lanka. The sample was collected randomly and used a semi-structured&#13;
questionnaire to collect data. The findings show that there are several problems and challenges&#13;
experienced by Home Science teachers, most of the problems are related to resource&#13;
availability for teaching-learning activities of Home Science. Therefore, the teachers face&#13;
difficulties to improve Home Science education at the school level. The study found that nearly&#13;
70% of teachers faced difficulties in teaching textiles and clothing because of lack of teaching&#13;
- learning resources. Further, the findings reveal that the teachers face challenges related to a&#13;
wide range of syllabus, assessment procedures, challenges with instructional resources, and&#13;
other general challenges such as lack of motivation, and lack of interest of students in the&#13;
subject. These problems and challenges will affect the quality of teaching and learning&#13;
activities at the school level. So the present study aims to find the problems and solutions to&#13;
improve Home Science Education at the school level.
</description>
<pubDate>Sat, 01 Jan 2022 00:00:00 GMT</pubDate>
<guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12875</guid>
<dc:date>2022-01-01T00:00:00Z</dc:date>
</item>
</channel>
</rss>
