<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
<channel>
<title>Faculty of Arts</title>
<link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/88</link>
<description/>
<pubDate>Fri, 18 Sep 2026 22:28:17 GMT</pubDate>
<dc:date>2026-09-18T22:28:17Z</dc:date>
<item>
<title>வ.உ.சி. யின் உரைத்திறன் - திருக்குறள் அறத்துப்பால் விருத்தியுரையை முன் வைத்து..</title>
<link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/13066</link>
<description>வ.உ.சி. யின் உரைத்திறன் - திருக்குறள் அறத்துப்பால் விருத்தியுரையை முன் வைத்து..
Nitharshana, N.
திருக்குறளின் கருத்துவளம் காரணமாக அதற்குப் பல்வேறு உரைகள்&#13;
தோன்றியுள்ளன. உரை எழுதுவது என்பது வெறும் பொருள் விளக்கம் மட்டுமல்ல. அது குறளின் உள்ளார்ந்த தத்துவம், சமூக நோக்கம், மனிதநேயப் பார்வை ஆகியவற்றைக் காலச் சூழலோடு வெளிப்படுத்தும் அறிவார்ந்த செயலாகும். பழைய உரையாசிரியர்களின் உரைகள் இலக்கண விளக்கம், சொற்பொருள் விரிவாக்கல், சமய தத்துவ விளக்கம் என்பவற்றை மையமாகக் கொண்டிருந்தன. காலம் மாற சமூகச் சூழலும் அரசியல் நிலையும் மாற்றம் கண்டது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இந்திய சமூகத்தில் தேசிய விழிப்புணர்வு, சுதந்திர உணர்வு, சமூகச் சீர்திருத்த இயக்கங்கள் தீவிரமடைந்தன. இத்தகைய சூழலில் இலக்கியங்கள் புதிய கோணத்தில் அணுகப்பட்டன.திருக்குறளையும் சமகாலப்பிரச்சினையோடு இணைத்து உரைகாணத் தொடங்கினர். இத்தகைய புதிய அணுகுமுறையின் முக்கிய ஆளுமையாக வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்கள் திகழ்கின்றார். இவர் சுதந்திரப் போராட்ட வீரராக மட்டுமன்றி சிறந்த அறிஞராகவும் சமூக சீர்திருத்தவாதியாகவும் விளங்கினார். இதனால் இவரது உரையில் இலக்கிய நயம், அரசியல் விழிப்புணர்வு, சமூக நீதிக் கருத்துக்கள் இயல்பாகக் கலந்துள்ளன. இவரது திருக்குறள் உரைத்திறனை ஆய்வு செய்வதனூடு திருக்குறள் உரை மரபின் வளர்ச்சியையும் தேசியச் சிந்தனையும் தமிழ்ச்சிந்தனையும் இணையும் தன்மையையும் விளங்கிக் கொள்ள முடியும். வ.உ.சி அவர்களின் திருக்குறள் உரையின் தன்மையையும் சிறப்பையும் ஆராய்வதோடு திருக்குறள் ஒரு இலக்கிய நூலாக மட்டுமன்றி சமூக மாற்றத்திற்கான சிந்தனை நூலாகவும் விளங்குகிறது என்பதையும் அந்தப்பார்வையை வளர்த்தெடுத்தவர்களில் வ.உ.சி. அவர்களின் பங்கு எத்தகையது என்பதையும் ஆராயும் முயற்சியாக இவ்வாய்வு அமைகிறது. விவரண மற்றும் பகுப்பாய்வின் அடிப்படையில் இந்த ஆய்வு முன்னெடுக்கப்படுகிறது.
</description>
<pubDate>Thu, 01 Jan 2026 00:00:00 GMT</pubDate>
<guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/13066</guid>
<dc:date>2026-01-01T00:00:00Z</dc:date>
</item>
<item>
<title>வ.உ.சி. யின் இன்னிலை விருத்தியுரை</title>
<link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/13065</link>
<description>வ.உ.சி. யின் இன்னிலை விருத்தியுரை
Selvampikai, N.
தமிழ் இலக்கிய இலக்கண நூல்களுக்குப் பொருள் கூறி விளக்கும் மரபு நீண்டகாலமாகவே இருந்து வருகின்றது. இன்று நாம் காணும் உரைகள் யாவும் ஒரே காலத்தில் திடீரென்று தோன்றியவை அல்ல. அவை காலப்போக்கிற்கு ஏற்றவாறு முதலில் சிறிய அளவில் அரும்பி மெல்ல மெல்ல வளர்ந்து முழுமை பெற்றனவாகும். தமிழ்மொழி வளர்ச்சிக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் உரையாசிரியர் ஆற்றிய பணி, நூலாசிரியர் பணிக்கு அடுத்த படியாகத் திகழ்கின்றது. மறைந்த பழந்தமிழ் நூல்களை நாம் இழந்த நிலையிலும் அவற்றுள் சிலவற்றையும் அவற்றின் பெயர்களையும் அறிவதற்கு உதவியாக அமைந்தவை உரையாசிரியர்களது உரைகளே ஆகும்.&#13;
தமிழ் உரைமரபானது வாய்மொழியாக வழங்கி வந்து பின்னர் குறிப்புரை, விரிவுரை, விளக்கவுரை, உரைக்கு உரை எழுதுதல், பல்வேறு உரைகளைத் தொகுத்துக் காணுதல், உரைகளைப் பற்றிய ஒப்பீட்டுத் திறனாய்வும், உரைகளைப் பதிப்பித்தல் என்றவாறு தமிழ் உரை மரபின் வளர்ச்சி நிலைகளைக் கண்டுகொள்ளலாம். இத்தகைய சூழ்நிலையில் வ.உ.சிதம்பரனாரும் உரையாசிரியர் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். இன்னிலை, திருக்குறளின் அறத்துப்பால், சிவஞானபோதம் ஆகிய மூன்றிற்கும் வ.உ.சி உரை எழுதியுள்ளார். இவர் எழுதியுள்ள உரைகளுள் இன்னிலை விருத்தியுரை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.&#13;
பெற்றுக்கொள்ளும்&#13;
இன்னிலை விருத்தியுரையில் வெளிப்பட்டு நிற்கின்ற விவரணங்களினூடாகப் தகவல்களை ஒழுங்கமைத்தும் பகுப்பாய்வு செய்தும் வ.உ.சி யின் உரைச்சிறப்புக்கள் வெளிக்கொணரப்படும்.
</description>
<pubDate>Thu, 01 Jan 2026 00:00:00 GMT</pubDate>
<guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/13065</guid>
<dc:date>2026-01-01T00:00:00Z</dc:date>
</item>
<item>
<title>வ.உ.சியின் மெய்யறச் சிந்தனை: எண்ணங்களும் ஓட்டங்களும்</title>
<link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/13064</link>
<description>வ.உ.சியின் மெய்யறச் சிந்தனை: எண்ணங்களும் ஓட்டங்களும்
Sivasubramaniam, S.
தமிழ் இலக்கியம், தமிழர் கல்வி, தமிழர் வரலாறு, தமிழர் அறம் முதலான துறைகளில் பணியாற்றிய இலக்கிய கர்த்தாக்கள் குறித்த ஆய்வுகள் காலத்துக்குக் காலம் பலராலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவர்கள் குறித்த ஆய்வுகள் மேற்கூறப்பட்ட துறைகளில் பணியாற்றிய ஆளுமைகளின் படைப்பிலக்கியம் சார்ந்தே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றைத் தாண்டி இவ்வாறான இலக்கிய கர்த்தாக்களின் ஆக்கங்கள் அக்காலத்து மொழி, கல்வி, இலக்கியம், சமூகம், அவர்களது படைப்பிலக்கியம் முதலான துறைகளின் வரலாறாகவும் அமைந்து விடுகின்றன. அந்தவகையில் வ.உ.சி தமிழ்ப்புலமை மரபின் முக்கிய இலக்கிய கர்த்தாக்களுள் ஒருவராகக் கருதப்படுகின்றார். இவர் சுதந்திரப் போராட்ட வீரர், நூலாசிரியர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், மொழிபெயர்ப்பாளர், கவிஞர், படைப்பிலக்கியவாதி, அரசியல்வாதி என இலக்கிய உலகில் பல துறைகளில் பணியாற்றியுள்ளார். இவரது படைப்புக்களை நுணுகி நோக்கும் போது தனித்துவமான இரு அம்சங்கள் முனைப்புற்று நிற்பதனை இனங்காணலாம். ஒன்று அவரது ஆராய்ச்சி மனப்பான்மை மற்றையது அவற்றுள் காணப்படும் எளிமைத்தன்மை என்பனவாகும். அந்தவகையில் இந்த ஆய்வானது வ.உ.சியினுடைய மெய்யறம் தமிழர் வாழ்வியலில் எவ்வளவு தூரம் செல்வாக்குப் பெற்றுள்ளது என்பதை வெளிக்கொணரும் விதமாக அமையப்பெற்றுள்ளது. திருக்குறளில் கூறப்பட்ட அறக்கருத்துக்கள் வ.உ.சியின் மெய்யறத்தில் எவ்வாறான தாக்கத்தைச் செலுத்தியுள்ளன என்பதனை வெளிக்கொண்டு வருவதே இந்த ஆய்வின் நோக்கமாகும். விபரண மற்றும் பகுப்பாய்வு, திறனாய்வு முறைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</description>
<pubDate>Thu, 01 Jan 2026 00:00:00 GMT</pubDate>
<guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/13064</guid>
<dc:date>2026-01-01T00:00:00Z</dc:date>
</item>
<item>
<title>வ.உ.சி.யின் தொல்காப்பியப் பதிப்பு</title>
<link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/13063</link>
<description>வ.உ.சி.யின் தொல்காப்பியப் பதிப்பு
Seranjan, S.
தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், தமிழர் கல்வி முதலான துறைகளில் பணியாற்றிய ஆளுமைகள் குறித்த ஆய்வுகள் காலத்துக்குக் காலம் பலராலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்தகைய ஆய்வுகள் மேற்கூறப்பட்ட துறைகளில் பணியாற்றிய ஆளுமைகளின் வரலாறு 'தனிமனிதவரலாறு' என்ற வரையறைக்குள்மட்டுப்படுத்தப்படுவதில்லை. இவற்றைத் தாண்டி இவ்வாறான ஆளுமைகள் பற்றிய ஆய்வுகள் அக்காலத்து மொழி, கல்வி, இலக்கியம், சமூகம் முதலான துறைகளின் வரலாறாகவும் அமைந்து விடுகின்றன. அந்தவகையில் வ.உ.சி தமிழ்ப்புலமை மரபின் முக்கிய ஆளுமைகளுள் ஒருவராக உணரப்படுகின்றார். இவர் சுதந்திரப் போராட்ட வீரர், நூலாசிரியர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், மொழிபெயர்ப்பாளர், கவிஞர் எனப் பல துறைகளில் பணியாற்றியுள்ளார். இவரது படைப்புகளை நுணுகி நோக்கும் போது தனித்துவமான இரு அம்சங்கள் முனைப்புற்று நிற்பதனை இனங்காணலாம். ஒன்று அவரது ஆராய்ச்சி மனப்பான்மை மற்றையது அவற்றுள் காணப்படும் எளிமைத்தன்மை என்பனவாகும். இவரது தொல்காப்பிய எழுத்ததிகார உரைப்பதிப்பின் சிறப்பம்சங்களை வெளிக்கொண்டு வருவதாகவே இந்த ஆய்வு அமைந்துள்ளது. இந்த ஆய்வானது விவரண மற்றும் பகுப்பாய்வு முறைகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</description>
<pubDate>Thu, 01 Jan 2026 00:00:00 GMT</pubDate>
<guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/13063</guid>
<dc:date>2026-01-01T00:00:00Z</dc:date>
</item>
</channel>
</rss>
