<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
<channel>
<title>2000 MARCH ISSUE 1 Vol XII</title>
<link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8689</link>
<description/>
<pubDate>Tue, 07 Apr 2026 17:45:54 GMT</pubDate>
<dc:date>2026-04-07T17:45:54Z</dc:date>
<item>
<title>இந்து மரபுக் கல்வியின் ஆன்மீக சிந்தனைகள்</title>
<link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8709</link>
<description>இந்து மரபுக் கல்வியின் ஆன்மீக சிந்தனைகள்
Rasanayagam, J.
ஆன்மீக ஞானத்தில் சிறந்து விளங்கிய பலர் ஆன்மீக வாழ்விலே இலயித்து அவை பற்றிய பல அவ்வப்போது விஞ்ஞானம், கலை, கருத்துக்களையும் வெளியிட்டுள்ளார்கள். பொருளாதாரம், அரசியல், பொறியியல் போன்ற அறிவு முன்னேற்றத்துடன் ஆன்ம முன்னேற்றத்தையும் இணைத்துக் கொண்டு போக முடியும் என்று அவர்கள் நம்பினார்கள். இன்று பிரத்தியட்ச உண்மையாக விளங்கும் விஞ்ஞானமானது எவ்வளவு தூரம் மக்கள் மத்தியில் கலந்து விட்டதோ அதே போல் ஆன்மீக விழுமியங்களும் காலத்தால் அழிய முடியாதனவாய் அழிக்க முடியாதனவாய் செல்வாக்குப் பெறுகின்றன.
</description>
<pubDate>Sat, 01 Jan 2000 00:00:00 GMT</pubDate>
<guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8709</guid>
<dc:date>2000-01-01T00:00:00Z</dc:date>
</item>
<item>
<title>ஈழத்தில் தமிழ்மொழி பெயர்ப்பும் - கலைச் சொல்லாக்கமும்.</title>
<link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8708</link>
<description>ஈழத்தில் தமிழ்மொழி பெயர்ப்பும் - கலைச் சொல்லாக்கமும்.
Selvarangitham, S.
உலகு தழுவிய அறிவினை அதன் விளைவுகளான தகவலறிவு. தொடர்பாடல் பண்பாடு, ஆகியனவற்றை உலகளாவியன வாக்குவதற்கும் மக்கள் உறவையும் மானிட&#13;
முன்னேற்றத்தையும் வளர்ப்பதற்கும் மொழிபெயர்ப்பு அவசியமானதாகும். கிரேக்கக் கவிஞர்களுடைய செழுமையான கவிதைகளையும் சேக்ஸ்பியருடைய கவிநயமுடைய பாடல்களையும் பிறநாட்டு நல்லறிஞர் அறிவியல் தகவல்களையும் தமிழ்மொழியிலே அறிவதற்கு மொழி பெயர்ப்புத்தான் துணை செய்கின்றது. மொழி பெயர்க்கும் முயற்சிக்கு தமிழ் மொழிக்குப் புதியது அன்று.&#13;
"தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த் ததர்ப்பட யாத்தலோடணை மரபினவே'' என்று சூத்திரஞ் செய்துள்ளார்.
</description>
<pubDate>Sat, 01 Jan 2000 00:00:00 GMT</pubDate>
<guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8708</guid>
<dc:date>2000-01-01T00:00:00Z</dc:date>
</item>
<item>
<title>தொலைஉணர்வுத் தொழில்நுட்பம் ஊடாக மேற்பரப்பு நீர்நிலைகளைப் படமாக்கல்</title>
<link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8707</link>
<description>தொலைஉணர்வுத் தொழில்நுட்பம் ஊடாக மேற்பரப்பு நீர்நிலைகளைப் படமாக்கல்
Suthakar, K.
மேற்பரப்பு நீர்நிலைகளைத் தொலை உணர்வுத் தொழில்நுட்பத்தைப்&#13;
பயன்படுத்தி துல்லியமாகப் படமாக்குவதை நோக்கமாகக் கொண்ட இவ் ஆய்வானது, யாழ்ப்பாணக் குடாநாட்டின் ஓர் பகுதியான வலிகாமம் பிரதேசத்தில் மேற்கொள்ள ப்பட்டுள்ளது. செய்மதி மற்றும் களவாய்வுத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு கணணிப் பகுப்பாய்வின் மூலம் மேற்பரப்பு நீர்வளங்களான நன்னீர்க்குளங்கள், உவர்நீர்த்தேக்கங்கள், வழுக்கையாற்று வடிநிலம் என்பன படமாக்கப்பட்டுள்ளன. சிறியதும் பெரியதுமாக 127 நீர்நிலைகள் இங்கு அடையாளம் செய்யப்பட்டுள்ளன. ஆய்வுப்பிரதேசத்தில் ஒரு சதுர கிலோ மீற்றருக்கு 0.4 நீர் நிலைகள் காணப்படுகின்றபோதும் ஆய்வுப் பகுதியினுள் நீர்நிலைகளின் பரம்பலில் கணிசமான வேறுபாடுகள் காணப்படுகின்றன.
</description>
<pubDate>Sat, 01 Jan 2000 00:00:00 GMT</pubDate>
<guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8707</guid>
<dc:date>2000-01-01T00:00:00Z</dc:date>
</item>
<item>
<title>யாழ் குடாநாட்டில் மீன்பிடித்தடைகளும் மீனவர் எதிர்நோக்கும் பிரச்சினைகளும்</title>
<link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8706</link>
<description>யாழ் குடாநாட்டில் மீன்பிடித்தடைகளும் மீனவர் எதிர்நோக்கும் பிரச்சினைகளும்
Soosai, A.S.
கடந்த பதினைந்து வருடங்களுக்கும் மேலாக இலங்கையின் வடக்குக் கிழக்குக் கரையோரப் பகுதிகளில் சிறிலங்கா இராணுவம் மேற்கொண்டு வருகின்ற பல்வேறு தடை நடவடிக்கைகளின் விளைவாக இப்பிரதேசத்தின் கடல் வளத்துறையானது. மோசமாகப் பாதிக்கப்பட்டு மிகவும் நலிவடைந்த நிலையில் காணப்படுகின்றது. குறிப்பாக, இலங்கையின் வடபகுதியில் அமைந்துள்ள மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஆகிய மீன்பிடிப் பிரதேசங்களில் இத்துறையில் தங்கி வாழ்கின்ற கிட்டதட்ட ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் மீனவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருப்பதுடன் இவர்களில் ஐம்பது சதவீதத்திற்கும் அதிகமானோர் மாற்றுத் தொழில் ஏதுமின்றி அகதி முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளவர்களாகவும் அரைகுறை நிவாரணத்தை நம்பி வாழ்வோராகவும் காணப்படுகின்றனர். வேறு வழியின்றிகரையோரங்களில் இன்று மீன்பிடியில் ஈடுபடுவோர் சுதந்திரமாக தமது தொழில் நடவடிக்கைகளை முன்னெடுத்துச்செல்ல முடியாதவர்களாகவும் உயிரைப்பணயம் வைத்துத் தமது தொழில் முயற்சிகளை மேற்கொள் வோராகவும் காணப்படுகின்றனர்.
</description>
<pubDate>Sat, 01 Jan 2000 00:00:00 GMT</pubDate>
<guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8706</guid>
<dc:date>2000-01-01T00:00:00Z</dc:date>
</item>
</channel>
</rss>
