<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
<channel>
<title>1993 NOVEMBER ISSUE 3 Vol V</title>
<link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8687</link>
<description/>
<pubDate>Tue, 07 Apr 2026 17:45:11 GMT</pubDate>
<dc:date>2026-04-07T17:45:11Z</dc:date>
<item>
<title>கயிலாய வன்னியனார் மட தர்மசாதனப் பட்டையம் சில வரலாற்றுக் குறிப்புக்கள்</title>
<link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8756</link>
<description>கயிலாய வன்னியனார் மட தர்மசாதனப் பட்டையம் சில வரலாற்றுக் குறிப்புக்கள்
Pathmanathan, S.
ஈழத்து வன்னிமைகளைப்பற்றி இது வரை மூன்று சாசனங்கள் கிடைத்துள்ளன. அம்மூன்றும் தமிழ்மொழியில் எழுதப்பட் டுள்ளன. அவற்றுள் கங்குவேலிக் கல்வெட்டு, வெருகற் கல்வெட்டு ஆகியவிரண்டும் சிலா சாசனங்களாகும்.1 மற்றையது கயிலாய வன்னியனார் மடதர்ம சாதனப் பட்டை யம்' என்ற செப்பேடாகும்.2 மலையில் வன்னியனாரும் ஏழூர் அடப்பர்களுங் கூடித் 'தம்பிரானார் கோணைநாதனுக்கு' தானம் கொடுத்தமைபற்றிக் கங்குவேலிக் கல்வெட்டுக் குறிப்பிடுகின்றது. வெருகற் கல்வெட்டானது (சித்திர வேலாயுத சுவாமி) கோயிலின் தெற்குமதில் கயில வன்னிய னார் உபயம் எனக் குறிப்பிடுகின்றது. வெருகற் கல்வெட்டிலே அது எப்போது எழு தப்பட்டது என்று குறிப்பிடப்படவில்லை. அதன் வரிவடிவ அமைப்பினைக் கொண்டு அது பதினாறாம் நூற்றாண்டிற்குரிய தென்று கூறப்பட்டுள்ளது. ஆயினும் வெரு கற் கல்வெட்டுக் குறிப்பிடும் கயில வன்னி யனார் எக்காலத்திற்குரியவர், எப்பகுதிகளிலே வன்னிபமாய் விளங்கினார் என்பவை ஆராய்தற்குரிய விடயங்களாகும்.
</description>
<pubDate>Fri, 01 Jan 1993 00:00:00 GMT</pubDate>
<guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8756</guid>
<dc:date>1993-01-01T00:00:00Z</dc:date>
</item>
<item>
<title>செய்தித் தொடர்புறுத்தலுக்குரிய இடையூறுகளும் அவற்றை வெற்றி கொள்வதில் ஆவணப்படுத்தலுக்குரிய பங்களிப்பும்</title>
<link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8754</link>
<description>செய்தித் தொடர்புறுத்தலுக்குரிய இடையூறுகளும் அவற்றை வெற்றி கொள்வதில் ஆவணப்படுத்தலுக்குரிய பங்களிப்பும்
Pararasasingam, R.
"புதியன புகுதலும் பழையன கழித கின்றோம். சிந்தனை, அநுபவம், சமூக லும் வழுவல காலவகையினானே” என்ப தற்கிணங்க விஞ்ஞானத்தின் விந்தைகளான கணணிகளும், தொடர்புச் செய்மதிகளும், இலத்திரனியலும் ஆட்சி செலுத்தி வரு கின்ற 20 ஆம் நூற்றாண்டின்கடைக் கூறில் வலுவான, சிறந்த செய்தித் தொடர் பினை ஏற்படுத்துவதற்குச் செய்திகளின் பெருக்கத்திற்கேற்ப பலவித ஊடகங்கள் கையாளப்படுகின்றன. இவற்றுள் வலு வான, சிறந்த செய்தித் தொடர்பூடகமாக விளங்குவது நூலகத் தகவற்றுறைச் சேவை யாகும். இக்கட்டுரையானது செய்தித் தொடர்பில் தன்மை, அதன் முக்கியத்து வம் பற்றி ஆய்வு செய்வதோடு அதனைப் பாதிப்பனவாக அமையும் இடையூறுகளை இனங்காட்டி, அவ் இடையூறுகளை வெற்றி கொள்வதற்கு நூலகத் தகவற்றுறைச் சேவையில் தற்போதைய முக்கியம் வாய்ந்த சேவையாகக் கருதப்படும் ஆவணப்படுத்தல் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதைவிபரிக்கின்றது.
</description>
<pubDate>Fri, 01 Jan 1993 00:00:00 GMT</pubDate>
<guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8754</guid>
<dc:date>1993-01-01T00:00:00Z</dc:date>
</item>
<item>
<title>இலங்கை மீன்பிடித்துறையின் இன்றைய நிலை: - ஒரு நோக்கு</title>
<link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8751</link>
<description>இலங்கை மீன்பிடித்துறையின் இன்றைய நிலை: - ஒரு நோக்கு
Soosai, A.S.
இலங்கையின் அமைவிடம், இயற்கை அமைப்பு காரணமாக ஏனைய இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மீன்பிடித்துறை சார்ந்து கூடுதலான முக்கியத்துவத்தைக் கொண் டிருத்தல் வேண்டும். ஆனால் கடந்த பல வருடங்களாக மொத்தத் தேசிய உற்பத்தி யில் இத்துறையின் பங்களிப்பானது 1 தொடக்கம் 2சதவீதற்திற்கும் இடைப்பட்ட தாகவே இருந்து வருகின்றது. இக்குறை வான பங்களிப்பானது இத்துறை தொடர்ந் தும் பின்தங்கிய நிலையில் இருப்பதையே காட்டுகின்றது. நிறைவான மீன் உணவுத் தேவை இறக்குமதி மூலமே பூர்த்தி செய் யப்பட்டு வருவது மூலவளமானது முழுமை யான பயன்பாட்டுக்குட்படுத்தப்படவில்லை என்பதையே புலப்படுத்துகின்றது. உற்பத் திப் போக்கில் கணிசமான அதிகரிப்பு ஏற் பட்டு வருகின்ற போதிலும் எதிர்பார்க்கப் பட்ட இலக்கினை இத்துறையினால் இன் றும் எய்த முடியவில்லை. 1983 வரையி லும் நாட்டில் நிலவிய இயல்பான சூழ் நிலையின் காரணமாக உற்பத்தியில் ஒரளவு வளவாய்ப்புக்கள் அதிகரிப்பு ஏற்பட்டதோடு மீன் இறக் குமதிகளின் அளவும் ஓரளவு குறைவடைந்து சென்றது. அத்துடன் கடலக ஏற்றுமதிகளின் அளவும் கணிசமான அளவிற்கு அதிகரித்துச் சென்று அந்நியச் செலாவணியையும் சம்பாதித்தது.
</description>
<pubDate>Fri, 01 Jan 1993 00:00:00 GMT</pubDate>
<guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8751</guid>
<dc:date>1993-01-01T00:00:00Z</dc:date>
</item>
<item>
<title>மட்டக்களப்புப் பிரதேசத்தின் காலநிலையியல் நீர்ச்சமனிலை</title>
<link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8748</link>
<description>மட்டக்களப்புப் பிரதேசத்தின் காலநிலையியல் நீர்ச்சமனிலை
Rajendran, K.; Balachandran, S.
புவிமேற்பரப்பில் நீர் ஒரு முக்கிய பரி மா ண மா க இருப்பதனால் (Parameter) நீர்ச்சமனிலையாய்வுகளும் முக்கியமானவை யாக இருக்கின்றன. இம் முக்கியத்துவத்தின் அடிப்படையில் காலநிலையியலில் நீர்ச்சம னிலைக் காலநிலை (Water Balance Clim- atology) என்றவொரு புதியபிரிவும் தோற்று விக்கப்பட்டுள்ளது. விவசாயத்துக்கு மட்டு மன்றி கைத்தொழில் மற்றும் மனித தேவை களுக்கு நீர் அத்தியாவசியமானதாக இருக் கின்றது. இந்நீர்வளத்திற்கான மூலம்படிவு வீழ்ச்சியாகும். படிவுவீழ்ச்சியினால் பெறப் படுகின்ற முழுநீர்வளத்தினையும் நாம் பயன் பாட்டிற்குட்படுத்திவிட முடியாது. பல்வேறு வழிகளினால் இழக்கப்படுகின்ற நீரிளை வைக்கழித்து எஞ்சியளவு நீரே எமது பயன் பாட்டிற்குக் கிடைக்கின்றது. இவற்றைக் கணிதரீதியாகக் கணிப்பிட்டறிகின்றவொரு முறையாக நீர்ச்சமனிலைக் கணிப்பீடு உள்ளது.
</description>
<pubDate>Fri, 01 Jan 1993 00:00:00 GMT</pubDate>
<guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8748</guid>
<dc:date>1993-01-01T00:00:00Z</dc:date>
</item>
</channel>
</rss>
