<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
<channel>
<title>1983 MARCH ISSUE 1 Vol I</title>
<link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8404</link>
<description/>
<pubDate>Tue, 07 Apr 2026 17:45:11 GMT</pubDate>
<dc:date>2026-04-07T17:45:11Z</dc:date>
<item>
<title>நிலவளமும் நிலப்பயன்பாடும்</title>
<link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8445</link>
<description>நிலவளமும் நிலப்பயன்பாடும்
Balachandran, S.
நிலவளமும் நிலப்பயன்பாடும் எந்தளவுக்கு ஒன்றுக்கொன்று தொடர்புடையவை? நிலம் வளமாக இருந்துவிட்டால் அந்த நிலம் நிலப்பயன்பாட்டுக்கு உள்ளாக்கப்பட்டுவிடுமா? இங்கு நீரின் தேவை எந்தளவுக்கு அவசியமாகின்றது? நிலத்தைப் புரிந்துகொள்வதில் குறிப்பிட்ட நிலத்தில் வாழும் மக்கள் எத்தகைய தொழில் நுட்ப அறிவு கொண்டுள்ளார்கள்? இத் தொழில் நுட்பம் எத்தகைய காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றது? இக் காரணிகள் உண்மையிலேயே சர்வ தேச தரத்தைக் கொண்டுள்ளனவா? என்ற பல தொடர்ச்சியான வினாக்கள் உருவாகியுள. இவற்றுக்கு விடைகள் சரியாக அமைகின்ற போது நிலவளம் உண்மையிலேயே பாவனைக்கு உள்ளாகின்றதா என்பது தெளிவாகின்றது.&#13;
இலங்கையைச் சிறப்பாகக் கருத்திற்கொண்ட கிராம சமுதாய அபிவிருத்திக்கான உபாயங்கள் அல்லது திறமுறைகளை (Strategies) ஆராய்வதில் நிலவளமும் அதற்குரிய நிலப்பயன்பாடுபற்றிப் புரிந்து கொள்ளும் திறனும் மிக் முக்கியமானவை. அதேபோன்று கிராமத் துக்கும் நிலத்துக்கும் உள்ள தொடர்பு எந்த நிலையில் உளது என் பதுபற்றி நோக்குதலும் அவசியமாகின்றது. நாம் எல்லோரும் அறிந்தது போல எமது நாட்டு மக்களில் 70% மானோர் கிராமத்திலேயே வாழ்கின்றார்கள். இவர்கள் மட்டுமல்லாமல் நகரவாசிகளும் கூட நிலத்தையே தமது உணவுக்கும் உறைவிடத்துக்கும் சில சமயங்களில் உடுபுடவைக்கும் நம்பியுள்ளார்கள் என்பது புரிந்து கொள்ளப்பட்ட உண்மையாகும். எமது ஜனாதிபதி J. R. ஜயவர்த்தனா அவர்கள் அண்மையில் இது பற்றிக் கூறும் போது 'The future of this country is in the rural sector We must modernize and make it productive and pleasant'' (Resource Development. 1978 - 82: 1983) என வலி யுறுத்துகின்றார்.
</description>
<pubDate>Tue, 01 Mar 1983 00:00:00 GMT</pubDate>
<guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8445</guid>
<dc:date>1983-03-01T00:00:00Z</dc:date>
</item>
<item>
<title>பிராமிக் கல்வெட்டுக்களும் தமிழும்</title>
<link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8444</link>
<description>பிராமிக் கல்வெட்டுக்களும் தமிழும்
Sittampalam, S.K.
நம் நாட்டின் வரலாற்றின் ஆரம்பத்தில் தோன்றிய வரிவடி வத்தைப் பிராமி வரிவடிவம் என அழைப்பது வழக்கம். இவை பெரும்பாலும் குகைகளில் அமைந்ததால் பிராமிக்குகைக் கல்வெட்டுக் கள் எனவும் பெயர் பெற்றன. கி. மு. 3 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் பெளத்தத்தின் வருகையோடு இந் நாட்டில் செல்வாக்குப் பெற்ற இவ் வடிவம், பிற்காலத்தில் சிங்கள மொழி வளர்ச்சியில் பெரும் பங்குகொண்ட பிராகிருத மொழியான பாளி மொழியில் அமைந்திருந்ததால் இந்நாட்டில் சிங்கள இனத்தின் வருகையை எடுத்துக்காட்டும் பிரதான சான்றுகளில் ஒன்றாகவும் இற்றைவரை கருதப்பட்டு வருகிறது. பௌத்தமத நூல்களாகிய தீபவம்சம், மகா வம்சம் ஆகியவை கூறும் விஜயன் கதையே இந்நாட்டில் சிங்கள மக்கள் குடியேறிய வரலாற்றுப் பின்னணி என நம்பிய கெய்கர் ( Bchert, 1960), பரணவித்தான (Ray , 1959) ஆகியோர் வழிவந்த வரலாற்று அறிஞர்களும் இக்கல்வெட்டுக்களைச் சிங்கள மக்களின் பழமைக்கு ஒரு சான்றாகவே கொள்ளுகின்றனர். ஆனால், புகழ்பூத்த வரலாற்று அறிஞரான மெண்டிஸ் (Mendis, 1965; இவ்விஜயன் கதை ஒரு கட்டுக்கதை ! Legend) என எடுத்துரைத்தும் கூட இக்கல்வெட் டுக்களை வடநாட்டிலிருந்து சிங்கள மக்கள் ஈழம் நோக்கிக் குடி பெயர்ந்ததை உறுதிப்படுத்தும் சான்றாகவே கருதினர். அனால். தொல்லியல் நோக்கில் ஈழவரலாற்றையும் மகாவம்சம் கூறும் விஜ யன் கதையையும் அராய்ந்த சேனரத்தின (Senaratne, 1969) வட நாட்டி லிருந்து சிங்கள இனம் இங்கு குடிபெயர்ந்ததற்கு எவ்வித சான்றும் இல்லை என எடுத்துக்காட்டினார். இவரைத் தொடர்ந்து அண்மையில் குணதிலகா ( Goonatilleke, 1980) இந் நாட்டின் வரலாற் றுக்கால நாகரிக வளர்ச்சிக்கு வித்திட்டவர்கள் வெறும் கற்பனையி லுள்ள விஜயனும் அவன் கூட்டத்தினருமல்ல என்றும், தென்னிந்தி யாவைப் போன்று பெருங்கற்காலப் பண்பாடே (Megalithic culture) என்றும் எடுத்துக்காட்டி உள்ளார். சுருங்கக் கூறின் ஈழ நாகரிகத்தின் தோற்றத்திற்கு வித்திட்டது பெருங்கற்காலப் பண்பாடே எனலாம்.
</description>
<pubDate>Tue, 01 Mar 1983 00:00:00 GMT</pubDate>
<guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8444</guid>
<dc:date>1983-03-01T00:00:00Z</dc:date>
</item>
<item>
<title>திருக்குறளும் ஒழுக்கமும்</title>
<link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8443</link>
<description>திருக்குறளும் ஒழுக்கமும்
Ramakrishnan, V.
காலத்திற்குக் காலம் சூழல் மாறுவது வரலாறு காட்டும் உண்மை என்பர். காலஞ் செல்லச் செல்லச் சூழல் மாறுவது நியதி என்பதல்ல இதன் பொருள். சூழல் மாறுவதினாலேயே வரலாற்றுக் காலகட்டங்களென வகுக்கிறோம். கால உணர்வு அவ்வாறே தோன்று கிறது. நிகழும் சம்பவங்கள் வாயிலாகவே முன்னது பின்னது எனும் உணர்வு எழும்.&#13;
இன்னொரு கோணத்திலிருந்து அனுபவ ஆய்வினை அணுகும் போது காலம் (Time), வெளி (Space) எனும் ஒழுங்கு முறையை முற் கற்பிதமாகக் கொண்டாலன்றி அனுபவத்திற்கே இடமில்லையெனக் கருதப்படுகின்றது. "நேற்றுக் காலை பண்ணைப் பாலத்தில் குண்டு வெடித்தது'' என்று கூறும் போது குண்டு வெடித்தது என்பது மட்டுமே நிகழ்ந்த சம்பவம். எப்போது, எங்கே யெனும் கேள் விகளுக்கு விடை தேடுமுகமாக ''நேற்றுக் காலை', ' பண்ணைப் பாலத்தில்'' எனும் தரவுகள் எழுந்து குண்டு வெடித்த சம்பவத்தைச் சற்றுத் தெளிவாக விளக்குகின்றன. யாரால், எவ்வாறு எனும் வினாக்களும் எழுந்தால் சாதாரண அல்லது விஞ்ஞான ரீதியான ஆய்வும் முழுமை பெற்று விடும் எனக் கொளலாம்.&#13;
இவையாவும் ஏன் எனும் விசாரணைக்குப் போதாதென்றே கூற வேண்டும் . யாரால் அல்லது யார் நிமித்தம் என்பதும் ஏன் என்பதும் வெவ்வேறு அறிவு அளவைகளைக் கொண்டவை. சமூக வாழ்க்கை யில் அரசாட்சியின் சட்ட ஒழுங்கிற்கும் அறம் நிலை நாட்ட முயலும் ஒழுங்கிற்கும் முற்கூறிய ஆய்வோடு 'ஏன்' எனும் விசாரணையும் அவசியமாகின்றது.
</description>
<pubDate>Tue, 01 Mar 1983 00:00:00 GMT</pubDate>
<guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8443</guid>
<dc:date>1983-03-01T00:00:00Z</dc:date>
</item>
<item>
<title>தமிழர் சமயப் பாரம்பரியத்தில் நாவலர்</title>
<link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8442</link>
<description>தமிழர் சமயப் பாரம்பரியத்தில் நாவலர்
Cithiraleka, M.
சமயம் சமூகப் பாரம்பரியத்தின் முக்கிய கூறாகும். சமூக வர லாற்றிலும் சமயம், முக்கிய பங்கு கொண்டதாகவும் விளங்குகிறது. இவ்வகையில் சமயம் தனி மனித, சமூக நடவடிக்கைகளை நெறிப் படுத்தியும் இந்நடவடிக்கைகளால் நெறிப்படுத்தப்பட்டும் வந்துள்ள தைக் கண்டுணரமுடியும். பெரும் சமய இயக்கங்களும் சமய தத் துவங்களும் சமூகத்தில் நடைபெறும் முக்கிய மாற்றங்களின் தத்து வார்த்த வடிவங்களாகக் காணப்படுகின்றன. தமிழ் நாட்டில் பல்லவ ராட்சிக்காலத்தில் நிகழ்ந்த பக்தியியக்கம் நிலவுடமையின் எழுச்சி யுடன் இணைந்திருந்தது. வட இந்தியா விற் பிராமணிய மேலாதிக் கத்தை எதிர்த்தோரின் தத்துவ வடிவமாகவே பௌத்தம் தோன்றி யது. கிறித்தவ புரொட்டஸ்தாந்து மதத்திற்கும் ஐரோப்பாவின் நிலமானியச் சிதைவிற்கும் தொடர்பிருந்தது. இவ்வுதாரணங்கள் சமயத்தின் சமூகவியலைச் சுட்டப் போது மானவை. சமயத்தில் காணப்படும். வளர்ச்சியும் மாறுதலும் அடையும் நெகிழ்ச்சியால் தான் அது பாரம்பரியத்தில் தன்னை மீண்டும் மீண்டும் நிலை நிறுத்தும் வலுவையும் பெறுகிறது.&#13;
தமிழர் சமயப் பாரம்பரியம் நீண்டதோர் வரலாறு டையது. புராதன இயற்கைப் பொருள் வழிபாட்டிலிருந்து இன்றைய சாயிபாபா வணக்கம் வரை இதனுள் அடங்கும். எனினும், இக்கட்டுரையில் தேவையும் பொருத்தமும் கருதி தமிழர் சமயப் பாரம்பரியத்தின் ஒரு பிரிவில் - அதாவது அதிகாரபூர்வமான சமயப் பெரும் பாரம் பரியத்தின் பின்னணியில் நாவலரை மதிப்பிட முற்படுகிறேன். இவ் விடத்தில் சமயப் பாரம்பரியத்தின் இருபோக்குகளைக் குறிப்பிடுதல் தகும். நீண்ட வரலாறுடைய சமூகங்களின் சமயம், பண்பாடு ஆகியவற்றில் இரு போக்குகள் செயற்பட்டிருப்பதைக் காணலாம். ஒன்று உயர் சமூகத்தினர் சார்ந்தது. அதிகாரச் சார்பானது, மற்றது சமூகத்தில் பொதுசனமட்டம் சார்பானது; ஜனரஞ்சகமானது. இத னையே சமூகவியலாளர் உயர்பாரம்பரியம், உபபாரம்பரியம், பெரும் பாரம்பரியம், சிறுபாரம்பரியம் முதலிய தொடர்களால் அழைப்பர். இத்தன்மை பற்றிப் பேராசிரியர் ஜோர்ஜ் தொம்சன் பின்வருமாறு கூறுவர்:
</description>
<pubDate>Tue, 01 Mar 1983 00:00:00 GMT</pubDate>
<guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8442</guid>
<dc:date>1983-03-01T00:00:00Z</dc:date>
</item>
</channel>
</rss>
