<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
<channel>
<title>2004 NOVEMBER ISSUE 14 VOL III</title>
<link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8330</link>
<description/>
<pubDate>Tue, 28 Apr 2026 13:09:41 GMT</pubDate>
<dc:date>2026-04-28T13:09:41Z</dc:date>
<item>
<title>வாஸ்துவும் வீட்டுக்கட்டடக்கலையும்</title>
<link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8376</link>
<description>வாஸ்துவும் வீட்டுக்கட்டடக்கலையும்
Krishnananthasarma, S.
இந்துக் கட்டடக்கலை மரபில் வாஸ்துவின் பயன்பாடு பற்றிய சிந்தனை தற்போது புத்துயிர்ப்படைந்து வருகின்றது. இக்கட்டுரை வாஸ்து பற்றிய சிந்தனைகளை இலக்கியங்களினூடு நோக்குவதாக அமைந்துள்ளது.
</description>
<pubDate>Thu, 01 Jan 2004 00:00:00 GMT</pubDate>
<guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8376</guid>
<dc:date>2004-01-01T00:00:00Z</dc:date>
</item>
<item>
<title>நாட்டார் வழக்காற்றியல் நோக்கில் பட்டப் பெயர்கள் (ஈழத்துத் தமிழ் நாவல்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு)</title>
<link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8373</link>
<description>நாட்டார் வழக்காற்றியல் நோக்கில் பட்டப் பெயர்கள் (ஈழத்துத் தமிழ் நாவல்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு)
Visakaruban, K.
'நாட்டார் வழக்காற்றியல்' (Forkloe) என்ற புலமைத்துறை இன்று அனைத்துலகக் கல்விப்புலமாக வளர்ச்சி கண்டு வருகிறது. உலகின் பல்வேறு இனங்களும் தத்தமது தனித்துவமான பண்பாட்டு அடையாளங்களை நாட்டார் பண்பாட்டுக் கூறுகளில் இனங்கண்டு மீட்டுருவாக்கம் செய்து வருகின்றன. அந்த வகையில் இந்த ஆய்வுக்கட்டுரையானது பெயர்களுடன் தொடர்புடைய வழக்காறுகளில் மிகவும் முக்கியத்துவமான ஒரு கூறாக விளங்கும் பட்டப்பெயர்கள் உருவாக்கம் பெறும் அடிப்படைகள் குறித்து ஆராய்வதாக அமைகிறது.
</description>
<pubDate>Thu, 01 Jan 2004 00:00:00 GMT</pubDate>
<guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8373</guid>
<dc:date>2004-01-01T00:00:00Z</dc:date>
</item>
<item>
<title>பொலநறுவைக்கால சைவநாயன்மார் வெண்கலப்படிமங்கள் காட்டும் ஈழத்து வார்வைக் கலைமரபு</title>
<link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8371</link>
<description>பொலநறுவைக்கால சைவநாயன்மார் வெண்கலப்படிமங்கள் காட்டும் ஈழத்து வார்வைக் கலைமரபு
Krishnaraja, S.
மத்திய காலத்து ஈழத்து வெண்கலப்படி மக்கலைவரலாற்றில் பௌத்தமும் இந்து மதமும் சமத்துவமான செல்வாக்கினை செலுத்தியிருந்தமையை அண்மைய காலத்துத் தொல்லியல் ஆய்வுகள் வெளிப்படுத்தி வருகின்றன. சமுத்திரவியல் செல்வாக்கிற்குட்பட்டிருந்த இத்தீவினது கலைக்கூடங்களில் இவ்விருமதங்களினாலும் உருவாக்கப்பட்டிருந்த கலைக்கோலங்கள் தனித்துவமான வகையில் வெளிப்படுத்தப்பட்டிருந்தன. அவ்வழியே பொலனறுவையில் உருவாக்கப்பட்டிருந்த சைவநாயன்மார் வெண்கலப்படி மங்களும் ஈழத்திற்கேயுரிய கலை மரபினை இனங்காண்பதற்குரிய ஓர் ஊடகமாக அமைந்து கொண்டமை பற்றியே இச்சிறிய கட்டுரை ஆராய்கிறது.
</description>
<pubDate>Thu, 01 Jan 2004 00:00:00 GMT</pubDate>
<guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8371</guid>
<dc:date>2004-01-01T00:00:00Z</dc:date>
</item>
<item>
<title>ஈழத்து நவீன இலக்கியமும் அறிவியல் கருத்துக்களும்</title>
<link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8369</link>
<description>ஈழத்து நவீன இலக்கியமும் அறிவியல் கருத்துக்களும்
Sivasubramaniam, S.
இலக்கியம் ஓர் அழகியல் சார்ந்த துறையாகவே கருதப்பட்டு வந்தது. ஆனால் அதுவும் கால ஒட்டத்தில் அறிவியலோடு தொடர்புற்ற துறையாகவும் அமையத்தொடங்கியது. அறிவியற் கருத்துக்களை கவிதை, நாவல், சிறுகதை போன்ற இலக்கிய வடிவங்களுடாகச் சிறந்த இலக்கியப் படைப்பாளிகள் புலப்படுத்திவருகின்றனர். ஈழத்து நவீன இலக்கியப் படைப்பாளிகள் சிலர் இத்தகைய படைப்புகளைத் தந்துள்ளனர். இக்கட்டுரை அவை பற்றியதாகும்.
</description>
<pubDate>Thu, 01 Jan 2004 00:00:00 GMT</pubDate>
<guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8369</guid>
<dc:date>2004-01-01T00:00:00Z</dc:date>
</item>
</channel>
</rss>
