<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
<channel>
<title>2017 FEBRUARY ISSUE 17 VOL I</title>
<link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8285</link>
<description/>
<pubDate>Tue, 07 Apr 2026 17:38:54 GMT</pubDate>
<dc:date>2026-04-07T17:38:54Z</dc:date>
<item>
<title>இந்துக் கோயில்களில் கட்புலக்கலை வெளிப்பாடுகள் - யாழ்ப்பாணப் பிரதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்துக் / கோயில்களை மையமாகக் கொண்ட ஓர் ஆய்வு</title>
<link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8335</link>
<description>இந்துக் கோயில்களில் கட்புலக்கலை வெளிப்பாடுகள் - யாழ்ப்பாணப் பிரதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்துக் / கோயில்களை மையமாகக் கொண்ட ஓர் ஆய்வு
Prakash, R.
இலங்கையில் இந்து ஆலயங்கள் பக்தி நெறிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதே பட்சத்தில் கலை வெளிப்பாடுகளை கட்புலக்கலை வடிவங்களினுாடு எடுத்துக்காட்டுவதற்கான கலைக் கோயில்களாகவும் விளங்குகின்றன. தொன்மையான வேர்களைக் கொண்ட ஒரு தனித்துவ கண்ணோட்டத்தை வழங்கும் கண்கவர் கலைப்படைப்புக்களை பிரதிபலிக்கும் கலைக் களஞ்சியமாக இந்துக் கோயில்கள் விளங்குகின்றன. இலங்கையில் எண்ணிக்கையில் அதிகமான இந்து ஆலயங்களைக் கொண்ட மாவட்டமாக யாழ்ப்பாணம் காணப்படுகின்றது. அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தொன்மையான இந்து ஆலயங்களின் கட்புல கலை வெளிப்பாடுகள் இனங்காணப்பட்டு இங்கு ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றன. புராதன இந்து ஆலயங்களின் கட்புல கலை வெளிப்பாடுகள் பாரம்பரிய மற்றும் நவீன பாணிகளுடன் இணைந்ததான தன்மையை மெய்ப்பிக்கின்றன. தென்னிந்திய திராவிடக் கலையின் வீச்சு அதிகமாக இந்து ஆலயங்களின் கட்புலக் கலை வடிவங்களில் பிரதிபலிக்கின்றது. அத்துடன் இங்கு சமகாலத்திய கட்புலக் கலைகளில் அதிநவீன நடைமுறைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு பழமைகள் புறந்தள்ளப்படும் போக்கினையும் இனங்காண முடிகிறது. திராவிட மரபுகளில் ஊடக ரீதியான வேறுபாடுகள் மற்றும் தொழில்நுட்பம் முதலியவற்றின் ஊடாக கட்புலக்கலைகள் புதிய அவதாரங்களை எடுத்திருக்கின்றமையை இங்கு சுட்டிக்காட்ட முடியும்.
</description>
<pubDate>Sun, 01 Jan 2017 00:00:00 GMT</pubDate>
<guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8335</guid>
<dc:date>2017-01-01T00:00:00Z</dc:date>
</item>
<item>
<title>யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய உணவுகளினதும் உடன் உணவுகளினதும் உணவுத் தரம் குறித்த ஒரு விடய ஆய்வு</title>
<link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8334</link>
<description>யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய உணவுகளினதும் உடன் உணவுகளினதும் உணவுத் தரம் குறித்த ஒரு விடய ஆய்வு
Pathmashani, K.
மானிட வாழ்க்கைக்கு அடிப்படையான உணவு, உடை, உறையுள் ஆகியவை இன்றியமையாதவை என்பது யாவரும் அறிந்ததே. இவற்றுள் உணவுக்கே முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணம் உணவின்றி மனிதனால் உயிர் வாழ முடியாது என்பதனாலாகும். உணவு உடலுக்கு சக்தியயும், வளர்ச்சியையும், பாதுகாப்பையும் வழங்குகின்றது. உடலுக்கு தீங்கு விளைவிக்காத திண்ம, திரவ, அரைத்திண்மப் பதார்த்தங்களையே உணவு என வரையறுக்கப்படுகின்றது.&#13;
பாரம்பரிய உணவு என்பது ஆரம்ப காலத்திலிருந்தும் மரபு ரீதியாகவும் பண்பாட்டு கலாச்சார அடிப்படையிலும் இயற்கையாகக் கிடைக்கக் கூடிய உணவுப் பொருட்களினால் தயாரிக்கப்படுதல் பாரம்பரிய உணவு எனப்படுகின்றது. உடன் உணவு என்பது குறைந்த நேரத்தில் தயாரித்து வைத்த உணவுப் பொருட்களை உண்பதற்கு ஏற்ப தயாரித்து விற்பனை செய்தலையே உடன் உணவு என்பர். (சிவசண்முகராஜா. சே , 20020. 13)&#13;
உணவின் தரங்களை அடிப்படையாகக் வைத்து பாரம்பரிய உணவினையும், உடன் உணவினையும் ஒப்பிட்டு ரீதியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இதுவாகும். உணவின் தரங்களாக போசனைப் பொறுமானம் சுகாதாரப்பாதுகாப்பு, தோற்றம், நிறம், மணம், தன்மை, இழையமைப்பு, சுவை போன்றவை பாரம்பரிய உணவுகளிற்கும் உடன் உணவுகளிற்கும் எவ்வாறு விஞ்ஞான ரீதியில் தாக்கம் செலுத்துகின்றன என்பதனை இங்கு ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது.&#13;
யாழ்ப்பாணப் பிரதேசத்தை ஆய்வுப் பிரதேசமாகக் கொண்டும், மக்களின் பாரம்பரிய , உடன் உணவுப் பழக்கவழக்கத்தினை மையமாகக் கொண்டும் யாழ்ப்பாண மக்களிடையே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பிரதேசத்திலுள்ள வலிதென்மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட 50 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு வயது அடிப்படையில் 25 பெண்பிள்ளைகளையும் (6-20) 25 யுவதிகளையும் (25 - 40) எழுமாறாக தெரிவு செய்து, அவர்களின் பாரம்பரிய உணவு, உடன் உணவு போன்ற இரண்டு உணவுகளையும் உட்கொள்ளும் பெண்பிள்ளைகளையும் யுவதிகளையும் தெரிவு செய்து இவ்விரு சாராரினதும் உட்கொள்ளும் உணவுகளுக்கிடையிலும் தரத்தின் அடிப்படையிலும் எத்தகைய வேறுபாட்டை உணருகின்றனர் - ஏன் பாரம்பரிய உணவிற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதனை ஆராய்வதற்கும், தகவல்கள் சேகரித்தல் மூலம் இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தரவு சேகரிக்கும் கருவிகளாக வினாக்கொத்துக்கள், கலந்துரையாடல்கள், அவதானிப்புமுறைகள் போன்றவை பயன்படுத்தப்பட்டுள்ளன.&#13;
ஆய்வின் முடிவாக பாரம்பரிய உணவின் பெறுமதியை உணர்ந்து ஆரோக்கியமான சுகதேகியாக வாழ்வதற்கு எமது உணவுப்பழக்கவழக்கங்களை பாரம்பரிய உணவுமுறைகள் எம்மை விட்டு மறைந்து போகாமல் பேணி பாதுகாப்பதுடன் எமது ஆரோக்கியத்தை பேணி வழமான வாழ்வு வாழமுடியும் என்பதனையே கண்டு கொள்ள முடியும்.
</description>
<pubDate>Sun, 01 Jan 2017 00:00:00 GMT</pubDate>
<guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8334</guid>
<dc:date>2017-01-01T00:00:00Z</dc:date>
</item>
<item>
<title>சம்ஸ்கிருத காவியவியல் நூல்களுள் அதிகமான சாத்ருஸ்யகர்ப்ப அலங்காரங்களை வரைவிலக்கணப்படுத்தும் குவலயானந்தம் - ஓர் ஒப்பியலாய்வு</title>
<link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8329</link>
<description>சம்ஸ்கிருத காவியவியல் நூல்களுள் அதிகமான சாத்ருஸ்யகர்ப்ப அலங்காரங்களை வரைவிலக்கணப்படுத்தும் குவலயானந்தம் - ஓர் ஒப்பியலாய்வு
Navaneethakrishnan, S.
சம்ஸ்கிருதகாவியவியல் நூல்களுள் குவலயானந்தம் அதிக எண்ணிக்கையான சாத்ருஸ்யகர்ப்ப அலங்காரங்களை விளக்கியுள்ளது என்பதை ஒப்பீட்டு ரீதியில் நிறுவுதலை நோக்காகக் கொண்ட இவ்வாய்வானது விவரண முறைமையினை அடிப்படையாகக் கொண்டுள்ளது. சாத்ருஸ்யகர்ப்ப வகை சார்ந்த ஒற்றுமைத் தன்மையை அடிப்படையாகக் கொண்ட அலங்காரங்களாக முப்பத்தியொரு அலங்காரங்கள் கூறப்படுகின்றன. அவையாவன உபமா, உபமேயோபமா, அநன்வய, ஸ்மரண , ரூபக, பரிணாம , ஸந்தேஹ, ப்ராந்திமத், உல்லேக , நிஸ்ச்சய , அபஹ்னுதி, உத்பிரேஷா, அதிசயோக்தி, துல்யயோகிதா, தீபக, ப்ரதிவஸ்துபமா, த்ருஷ்டாந்த, நிதர்சனா, வயதிரேகா , ஸ ஹோக்தி. விநோக்தி, சமாசோக்தி, பரிகரா, ஸ்லேஷ, அப்ரஸ்துதப்ரசம்சா, அர்த்தாந்தரநியாஸ, பர்யாயோக்த, வ்யாஜஸ்துதி, ஹேது, அனுகூல, ஆஷேப் என்பனவாகும். இவற்றுள் நிஸ்ச்சய, அனுகூல ஆகிய இரு அலங்காரங்களைத் தவிர ஏனைய இருபத்தொன்பது அலங்காரங்களையும் குவலயானந்தம் விளக்குவதால் அதிக எண்ணிக்கையான சாத்ருஸ்யகர்ப்ப அலங்காரங்களை குவலயானந்தம் வரைவிலக்கணப்படுத்தியுள்ளமை ஒப்பீட்டு ரீதியில் நிறுவப்பட்டுள்ளது.
</description>
<pubDate>Sun, 01 Jan 2017 00:00:00 GMT</pubDate>
<guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8329</guid>
<dc:date>2017-01-01T00:00:00Z</dc:date>
</item>
<item>
<title>சிந்துவெளி நாகரிகம் பற்றிய ஆய்வாளர்களின் கருத்துக்கள் - ஒரு மீள் பரிசீலனை</title>
<link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8328</link>
<description>சிந்துவெளி நாகரிகம் பற்றிய ஆய்வாளர்களின் கருத்துக்கள் - ஒரு மீள் பரிசீலனை
Kalaivany, R.
மிக நீண்ட காலமாக இந்து நதிப் பள்ளத்தாக்கில் வாழ்ந்த மக்களால் உருவாக்கப்பட்டு, வளர்த்தெடுக்கப்பட்டிருந்த நகர நாகரிக வாழ்வின் அடியாகத் தோற்றுவிக்கப்பட்டிருந்த இந்திய சமய முறையானது இந்தோ - கங்கைப்பள்ளத்தாக்கில் இரண்டாவது தடவையாக நகரமயமாக்கல் முறையினை உருவாக்கித்தந்த இந்தோ - ஆரிய இனமக்களால் அழித்தொழிக்கப்பட்டிருக்கவில்லை என்பதனை இவ்வாய்வுக் கட்டுரை உறுதிப்படுத்த முயல்கின்றது. ஆனால் திராவிடர் - ஆரியர் என்ற இனவேறுபாட்டினை மட்டும் மையப்படுத்திய வகையில் இந்துநதிப்பள்ளத்தாக்கு நாகரிக வாழ்வின் வீழ்ச்சிக்கும், முடிவுக்கும் ஆரியர் படையெடுப்புக்கள் காரணமா அமைந்திருந்தன என்ற வரலாற்றாசிரியர்களின் கூற்றுக்களை இருக்கு வேத கால பாசுரங்களில் இடம்லற்றுள்ள வரலாற்றுச் செய்திகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இக் கட்டுரை மறுதலிக்க முயல்கின்றது. இருக்குவேத சமய பாசுரங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ள வரலாற்றுக் குறிப்புக்களை சிந்துவெளியில் தொல்லியல் ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்களுடன் ஒப்பிட்டு சிந்துநதிப் பள்ளதாக்கு மக்களால் வளர்த்தெடுக்கப்பட்ட இன்னொரு கட்ட பண்பாடே இருக்கு வேத கால இந்துதோ - கங்கைப் பள்ளத்தாக்கு வாழ்க்கை முறையாகும் என இக் கட்டுரை உறுதிப்படுத்துகின்றது. சிந்துவெளி நகர வாழ்விற்கும் வேத கால நாகரிக வாழ்விற்கும் தொடர்பே இல்லையென்று இருந்த காலகட்டம் இன்று விலகி, சிந்து வெளி நாகரிக மக்களின் சமய - சித்தாந்த - தத்துவார்த்த சிந்தனைகளை வெளிப்படுத்தும் ஒரு திறவுகோலாக இருக்கு வேதபாசுரங்கள் இன்று கையாளப்பட்டுக்கொண்டு வரப்படுவதனை பரவலாக காணமுடிகிறது. இக் கருத்தோட்டத்தினை நிறுவுவதாகவே இவ் ஆய்வுக் கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது.
</description>
<pubDate>Sun, 01 Jan 2017 00:00:00 GMT</pubDate>
<guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8328</guid>
<dc:date>2017-01-01T00:00:00Z</dc:date>
</item>
</channel>
</rss>
