<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rdf:RDF xmlns="http://purl.org/rss/1.0/" xmlns:rdf="http://www.w3.org/1999/02/22-rdf-syntax-ns#" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">
<channel rdf:about="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8543">
<title>1995 MARCH, JULY, NOVEMBER ISSUE 1,2 &amp;  3 Vol VII</title>
<link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8543</link>
<description/>
<items>
<rdf:Seq>
<rdf:li rdf:resource="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8552"/>
<rdf:li rdf:resource="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8551"/>
<rdf:li rdf:resource="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8550"/>
<rdf:li rdf:resource="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8549"/>
</rdf:Seq>
</items>
<dc:date>2026-04-07T21:23:27Z</dc:date>
</channel>
<item rdf:about="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8552">
<title>பூநகரிப் பிராந்திய தொல்லியல் மேலாய்வில் கிடைத்த தொல்பொருள் சின்னங்கள் - ஒரு வரலாற்று ஆய்வு</title>
<link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8552</link>
<description>பூநகரிப் பிராந்திய தொல்லியல் மேலாய்வில் கிடைத்த தொல்பொருள் சின்னங்கள் - ஒரு வரலாற்று ஆய்வு
Pusparatnam, P.
இலங்கையில் தமிழ்ப் பிராந்தி யத்தின் பாரம்பரிய வரலாறு&#13;
I முழுமையாக ஆராயப்பட வில்லை என்பதும், அவ்வாறான நோக் கில் அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்பட வில்லை என்பதும், நீண்டகாலக் குறை பாடாக இருந்து வருகிறது. இதற்கு சிங்கள மக்களைப் போல் தமிழ் மக்களிடையே வரலாற்றை பேணுகின்ற மரபு வளர்ந்திரு க்கவில்லை என்றும், அரச மட்டத்தில் இலங்கையின் பிறபாகங்களில் மேற்கொள் ளப்பட்டது போன்ற வரலாற்று ஆய்வுகள் இப்பிராந்தியங்களில் மேற்கொள்ளப் படவில்லை என்றும் காரணங்கள் கூறப் பட்டு வந்துள்ளன. ஆயினும் அண்மைக் காலத்தில் இப்பிராந்தியங்களில் மேற்கொள் ளப்பட்ட ஒரு சில தொல்லியல் அகழ் வாய்வுகளும் (Excavations) தொல்லியல் மேலாய்வுகளும் (Expolorations) இப்பிராந் தியமும் இலங்கையில் தொடர்ச்சியான வரலாற் றைக் கொண்ட பகுதி என்பதை உறுதிப்படுத்த உதவின. இதற்குப் பூநகரிப் பிராந்தியமும் விதிவிலக்கல்ல என்பதை ஆசிரியர் மேற்கொண்ட ஆய்வின் போது கிடைத்த தொல்லியல் சின்னங்கள்&#13;
உறுதிசெய்கின்றன. தமிழ்ப் பிராந்திய த்தின் சில இடங்களின் வரலாற்றை அறிந்துகொள்ள பாளி, சிங்கள இலக்கிய ங்களும், பிற்காலத்தில் எழுந்த தமிழ் இலக்கியங்களும் ஓரளவு உதவு கின்றன. அத்தகைய இலக்கிய ஆதாரமெதுவும் பூநகரிப் பிராந்திய புராதன வரலாற்றை அறிய உதவவில்லை . ஆயினும் இங்கு குறுணிக் கற்காலம் முதற் தொட்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் வரைக்கும் மக்கள் தொடர்ச்சியாக வாழ்ந்தமையை யும், முக்கிய பண்பாட்டு மாற்றங்கள் நிகழ்ந்தமையையும் உறுதி செய்யும் தொல் லியல் ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
</description>
<dc:date>1995-01-01T00:00:00Z</dc:date>
</item>
<item rdf:about="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8551">
<title>செல்வச்சந்நிதி ஆலய வழிபாட்டு மரபு - ஒரு குறிப்பு</title>
<link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8551</link>
<description>செல்வச்சந்நிதி ஆலய வழிபாட்டு மரபு - ஒரு குறிப்பு
Nachchiyar, S.
ஈழத்து முருக வழிபாட்டுத் தலங்களில் முதன்மை பெற்று&#13;
விளங்குவது கதிர்காமம். 1 யாழ்ப்பாணத்து முருகன் தலங்களில் பிரசித்தி பெற்று விளங்குவது செல்வச் சந்திதி. மட்டக்களப்பு முருகன் ஆலயங்களில் முதன்மை வகிப்பது தில்லை மண்டூர் என அழைக்கப்படும் மண்டூர்க் கந்தசுவாமிகோயில். இம்மூன்று ஆலயங்களினதும் வழிபாட்டு மரபில் மிகத் தொன்மையான முக்கிய பொதுப் பண்புகள் இடம் பெற்று வருவதை அவதானிக்கலாம். இந்து சமய மரபிலே இரண்டு வகையான வழிபாட்டு மரபுகள் பேணப்பட்ட வருகின்றன.
</description>
<dc:date>1995-01-01T00:00:00Z</dc:date>
</item>
<item rdf:about="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8550">
<title>தென்னாட்டு வைணவ பக்திநெறியில் இராமானுஜர்</title>
<link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8550</link>
<description>தென்னாட்டு வைணவ பக்திநெறியில் இராமானுஜர்
Vigneswary, S.
இந்து மதத்தின் அறுவகைச் சமயநெறிகளுள் விஷ்ணுவை&#13;
முழுமுதற் கடவுளாகக் கொண்டு விளங்கும் வைணவ சமயமும் ஒன்றாகும். இன்றும் இந்தியாவின் பல் வேறு பகுதிகளிலும் வைணவ சமயத்தி னைப் போற்றிப் பின்பற்று பவர்கள் இருந்து வருகின்றனர். இந்தியாவில் மட்டுமல்லாது இலங்கை மற்றும் தென் கிழக்காசிய நாடுகள் பலவற்றிலும் விஷ்ணுவை வழிபடும் மரபு இருந்து வருகின்றமை கண்கூடு.&#13;
இப்பக்தி பற்றிய கருத்தினை நாரத பக்தி சூத்திரம் விரிவாகக் கூறுகின்றது. நாரத பக்தி சூத்திரத்தின்படி பக்தியானது குணங்குறியற்றது. அது பிரதிபலனை எதிர் பார்ப்பதில்லை; கணந்தோறும் மேலும் மேலும் பெரிதாக வளர்வது; அதில் இடையீடு இல்லை; அது நுண்ணிய திலும் நுண்ணியது; அது அனுபவத்திற்கு உரியது; பக்தியைப் பெறுகிறவன் பக்தியையே காண்கிறான்; அதையே கேட்கிறான்; அதையே பேசுகிறான். அதையே சிந்திக்கிறான்; பக்தர்கள் முற்றிலும் பகவான் மயமானவர்கள்; பக்தர்களுக்கிடையில் ஜாதி, கல்வி, உடல் அமைப்பு . குலம், செல்வம். தொழில் முதலியவைகளை முன்னிட்டுப் பேதமில்லை என விளக்கம் தரப்படுசிறது.
</description>
<dc:date>1995-01-01T00:00:00Z</dc:date>
</item>
<item rdf:about="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8549">
<title>பிராந்திய ஒத்துழைப்பிற்கான தெற்காசியச் சங்கம் :அமைப்பும் பிரச்சினைகளும்</title>
<link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8549</link>
<description>பிராந்திய ஒத்துழைப்பிற்கான தெற்காசியச் சங்கம் :அமைப்பும் பிரச்சினைகளும்
Krishnamohan, T.
உலகில் அரசியல், புவியியல் ரீதியாக வரையறுத்துக் கூறக்&#13;
கூடிய ஒரு பிராந்திய மா தென்னாசியாவுள்ளது. மனித வளங்க ளையும், இயற்கை வளங்களையும் பெருமளவில் கொண்டுள்ள இப்பிராந் தியம் அபிவிருத்தியின்மை , வறுமை, கட்டுப்படுத்த முடியாத சனத்தொகை வளர்ச்சி போன்ற பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றது. இப்பிராந்திய மக்கள் பொதுவான வரலாறு, கலாசார, மொழி, இன ஒற்றுமை போன்றவற்றினூடாக பொதுவான சமூகப் பெறுமானத்தினை கொண்டவர்களாகவும் காணப்படுகின் றனர். இக்காரணிகள் தென்னாசியாவில் ஐக்கியத்தினை ஏற்படுத்த போதுமானவை களாகும். இப்பிராந்தியத்தின் மைய அரசாக இந்தியா விளங்குகின்றது. பொதுவாக பிராந்தியக் கூட்டுக்கள் பாதுகாப்பினை நோக்கமாகக் கொண்டே உருவாக்கப்படுகின்றன. ஆனால் இதிலிரு ந்து விலகி உருவாக்கப்பட்ட அமைப்பாக&#13;
சார்க் அமைப்பு: காணப்படுகின்றது. இப்பிராந்தியத்திலுள்ள நாடுகள் தமது பொருளாதார கூட்டுறவினை வளர்க்க வும், சமாதானம், உறுதிப்பாடு, கலாசார அபிவிருத்தி, வாழ்க்கைத்தரம் என்பவ ற்றை பேணவும் ஒருமித்து செயற்பட முற்பட்டன. இதன் விளைவாகத் தோற்றம் பெற்றதே சார்க் அமைப்பாகும். இக்கட் டுரை இன்றிருக்கும் பிராந்திய சூழ்நிலை யில் சார்க் அமைப்பு எதிர் நோக்கும் பிரச்சினைகளையும், மேலாதிக்கப் போக் கினை தக்க வைத்துக் கொள்ள இந்தியா எடுக்கும் தந்திரோ பாயச் செயற்பாடுகளை யும் பரிசீலிக்கின்றது.
</description>
<dc:date>1995-01-01T00:00:00Z</dc:date>
</item>
</rdf:RDF>
