<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rdf:RDF xmlns="http://purl.org/rss/1.0/" xmlns:rdf="http://www.w3.org/1999/02/22-rdf-syntax-ns#" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">
<channel rdf:about="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8410">
<title>1983 JULY  Vol I  ISSUE 2</title>
<link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8410</link>
<description/>
<items>
<rdf:Seq>
<rdf:li rdf:resource="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8463"/>
<rdf:li rdf:resource="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8462"/>
<rdf:li rdf:resource="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8461"/>
<rdf:li rdf:resource="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8460"/>
</rdf:Seq>
</items>
<dc:date>2026-04-07T21:22:28Z</dc:date>
</channel>
<item rdf:about="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8463">
<title>புராண படனம் : அன்றும் இன்றும்</title>
<link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8463</link>
<description>புராண படனம் : அன்றும் இன்றும்
Yogeswary, G.
புராணபடனம் இந்துக்களுடைய சமய வாழ்வோடு இரண்டறக்கலந்து விளங்கிய ஓர் அம்சமாகும். சைவ ஆலயங்களிலே வருடாந்த உற்சவம் ஆரம்பமாவதற்கு முன்னரும், குறிப்பிட்ட சில விரத நாட்களிலும் புரா ணம் படிக்கும் மரபு இன்றும் இருந்துவருகின்றது. கந்தபுராணம், பெரிய புராணம் போன்ற சமய நூல்களையோ அன்றேல் விரதமகிமைகூறும் நூல்களையோ ஒருவர் படிக்க, அதற்கு இன்னொருவர் உரைவிளக்கம் கூறுவதே புராணபடனம் ஆகும். புராணப்படிப்பை விதிப்படி மெய்யன் போடு நியமமாகக் கேட்பவர்கள் நோய் நீக்கம், சத்துருஜயம், புத்திரபாக் கியம் ஆகிய பயன்களைப் பெற்றுப் பலராலும் போற்றப்படுவார்கள் என்ற நம்பிக்கையும் மக்கள் மத்தியிலே நிலவியது. புராணம் படிப்பவர் விதிப்படி படிக்க, அப்படிப்பைக் கேட்பவர் சித்திரப் பாவையின் அத்தக' இருந்து கேட்ட ஒரு காலப்பகுதியே புராணபடனம் செல்வாக்குப் பெற்று விளங் கிய காலமாகும். ஆனால் அப்புராணப் படிப்பானது இன்று சமய வாம் வில் இடம் பெற்றிருந்தபோதும், தான் பெற்றிருந்த செல்வாக்கை மக்கள் மத்தியில் முழுமையாகப் பெற்றிருக்கின்றது என்று கூறிவிடமுடியாது.
</description>
<dc:date>1983-07-01T00:00:00Z</dc:date>
</item>
<item rdf:about="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8462">
<title>நாவலரும் சைவசித்தாந்தமும்</title>
<link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8462</link>
<description>நாவலரும் சைவசித்தாந்தமும்
Ramanathan
ஈழநாட்டு இந்துக்களது சமயமும் சரி, தத்துவமும் சரி, இந்திய சமயத் தத்துவப் பாரம்பரியத்துடன் நீண்டகாலத் தொடர்புடையதாகவே வளர்ந்து வந்துள்ளது. அறுவகை இந்து தரிசனங்கட்குப்பின் இறுதியாக வைத்தெண்ணப்படும் சைவசித்தாந்தாந்தம் 'தென்னாட்டுச் சித்தாந்தம்', எனச் சிறப்பிக்கப்படும். தென்னிந்தியாவிற்கும் ஈழத்திற்குமுள்ள புராதன காலத் தொடர்புகளின் பயனாக ஈழத்தறிஞர் பலரும் தென்னாடு சென்று தமது தமிழ்ப்புலமை, சமயப்புலமை என்பவற்றை வளர்த்துக்கொண்ட தோடு தத்துவக் கோட்பாடுகளில் சிறந்த பயிற்சியாளராகவும் விளங் கினர். ஏனைய தரிசனங்களைவிட சைவசித்தாந்தத்துடன் ஈழத்தறிஞர்களது நெருக்கமான தொடர் பினதும், பயிற்சியினதும் காரணமாக ஈழத்திலும் சித்தாந்தம் முழுமுதற் கோட்பாடுடைய ஒரு தத்துவமாக வளர்க்கப்பட லாயிற்று. நாவலரும் வைதிக சைவ நெறியில் தலைசிறந்து விளங்கியமை யினால் சைவசித்தாந்தம் அவரது உயர்வான தத்துவக்கோட்பாடாயிற்று.&#13;
சைவசித்தாந்த மரபினை சாஸ்திரக்கோட்பாட்டு முறையிலே முதன் முதல் ஈழத்திலே ஆரம்பித்துவைத்த பெருமை 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருநெல்வேலி கமலை ஞானப்பிரகாசரைச் சாரும் {1625-1658). மெய் கண்டசாஸ்திரங்களில் ஒன்றான சிவஞானசித்தியார் பரபக்கத்திற்கு உரை செய்த அறுவருள் ஞானப்பிரகாசரும் ஒருவராவர். இது 'அறுவர் உரை' என்ற பெயரிலே வழங்குகின்றது. 1 இவ்வாறு ஞானப்பிரகாசர் தொடக்கி வைத்த சைவசித்தாந்த மரபானது ஈழத்திலே நாவலர் காலத்தில் நன்கு வேரூன்றியுள்ளது. இத்தகைய ஞானப்பிரகாசர் மரபிலேதான் நாவலரும் தோன்றினார்.2 நாவலர் தம்முடைய நூல்கள் சிலவற்றிலே ஞானப்பிர காசர் பற்றிய சில செய்திகளையும் தந்துள்ளார். ' 'சிதம்பரத்திலே ஞானப் பிரகாசம் என்னும் திருக்குளம் செய்வித்தவரும், சமஸ்கிருதத்திலே பௌஷ்கராமவிருத்தி, சிவஞானபோதவிருத்தி, சித்தாந்தசிகாமணி, பிரா மண தீபிகை, பிரசாததீபிகை, சிவயோகசாரம், சிவயோகரத்னம் என்பவை களையும், சிவஞானசித்தியாருக்கு ஓர் உரையை இயற்றியவரும் திரு வண்ணாமலை ஆதீனத் தம்பிரான்களுள் பலருக்குச் சைவாகம உபதேசம் செய்வித்தவருமான ஸ்ரீஞானப்பிரகாச முனிவர் யாழ்ப்பாணத்தவர்'' என நாவலர் தமது ' நல்லறிவுச் சுடர் கொளுத்தல்' என்னும் பிரசுரத்தில் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.
</description>
<dc:date>1983-07-01T00:00:00Z</dc:date>
</item>
<item rdf:about="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8461">
<title>பண்டைய ஈழத்து யக்ஷ, நாக வழிபாடுகள்</title>
<link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8461</link>
<description>பண்டைய ஈழத்து யக்ஷ, நாக வழிபாடுகள்
Sittampalam, S.K.
தென்னாசியா, பண்டைய நாகரிக வரிசையில் இடம்பெறும் பிராந்தி யம் மட்டுமன்று, பண்டைய வழிபாட்டின் எச்சங்களின் தொடர்ச்சியையும் உடைய பிரதேசமாகும். இங்கு பல்வேறு நிலையில், பல்வேறு காலங்களில் வாழ்ந்த மக்கள் நம்பிக்கைகள், பின்வந்த நம்பிக்கைகளுடன் கலந்து நிற் கின்ற நிலையைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இத்தகைய நம்பிக்கை யில் குறிப்பிடத்தக்கவைதான் யக்ஷ, நாக வழிபாடுகளாகும். இவற்றைப் பற்றி பரணவித்தானா போன்றோர் (Paranavitane S. 1929) இற்றைக்கு அரை நூற்றாண்டுக்கு முன்பாக ஆராய்ந்திருந்தாலும் தற்போது நமக்குக் கிடைக்கும் சான்றுகளுக்கமைய இன்னொரு கோணத்தில் இவற்றை அணுகு வது பொருத்தம் என்றே கருத இடமிருக்கிறது. அன்று பரணவித்தானா இவை பற்றிக் கூறும்போது பின்வருமாறு குறிப்பிட்டார்,&#13;
- “பௌத்தம் இங்கு வரமுன்பு நிலவிய யக்ஷ வழிபாடு புத்தர்காலத் தில் வடநாட்டில் நிலவிய யக்ஷ வழிபாட்டை அப்படியே ஒத்துக் காணப் படுகிறது. பெளத்தம் இங்கு தேசியமதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டா லும்கூட, பௌத்தத்தோடு யஷ வழிபாடு அருகருகில் மக்கள் மத்தி யில் வழக்கிலிருந்து தற்காலம்வரை நீடித்துள்ளது. இவ்வித வழிபாடு கணிசமான அளவு நாட்டார் இலக்கிய வளர்ச்சிக்கும் உதவி உள்ளது. இவற்றுள் (இலக்கியங்களில்) பெரும்பாலானவை காலத்தால் பிற்பட்ட வையே. அத்துடன் இன்று வழக்கிலிருக்கும் யக்ஷ கடவுளரும் பிற்பட்ட காலத்தில் எழுச்சி பெற்றவையே அல்லது அவர்கள் பெயர்கள் எடுத்துக் காட்டுவனபோல் தென்னிந்தியாவிலிருந்து இங்கு பின் தங்கிய கலாச்சா ரத்தை உடையோரால் புகுத்தப்பட்டவையே. இருந்தும் இவற்றின் சான்றுகள் பற்றிக் கூறும் இலக்கியங்களையும், பௌத்த, ஜைன, மற்றும் இந்திய இலக்கியங்கள் யக்ஷ வழிபாடு பற்றித் தரும் தகவல்களோடு ஒப் பிட்டு ஆய்வது நிச்சயமாக நல்ல முடிபுகளைத் தரும்'' (Paranavitane S. 1929 : 317) எவ்வாறாயினும் அன்று தொட்டு இன்றுவரை இவைபற்றி விரி வாக ஆராயப்படாதது வருந்தத்தக்கது.
</description>
<dc:date>1983-07-01T00:00:00Z</dc:date>
</item>
<item rdf:about="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8460">
<title>அம்பாறை மாவட்டத்தின் நிலப்பிரச்சனைகளும் குடியேற்றப் பிரச்சனைகளும்</title>
<link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8460</link>
<description>அம்பாறை மாவட்டத்தின் நிலப்பிரச்சனைகளும் குடியேற்றப் பிரச்சனைகளும்
Mohamed Siththik, M.Y.
இது இலங்கையிலுள்ள பரப்பில் கூடிய மாவட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இது ஒரு செறிவு குறைந்த மாவட்டமும் ஆகும். செறிவு குறைவாக இருப்பதற்குக் காரணம் பெரும் பகுதி நிலம் வளம் உள்ள, நெற்பயிர்ச் செய்கைக்குரிய நிலமாகக் காணப் படுவதாகும். பெரும்பாலான மக்களின் ஜீவனோபாயத்தின் மூலதாரமாக நெற்பயிர்ச் செய்கையே அமைந்துள்ளது. இம் மாவட்டத்தில் மொத்தமாக 3,88.786 மக்கள் வாழ்கிறார்கள். இவர்களுள் 1,61,754 முஸ்லீங்களும், 1,46,371 சிங்களவர்களும், 78,315 இலங்கைத் தமிழர்களும் வாழ்கிறார் கள். விகிதாசார ரீதியாக கூறுவதானால் இலங்கைச் சோனகர்களும், சிங் களவர்களும் இலங்கைத் தமிழர்களும் முறையே 41-6%, 37*6%, 20•1% தினராகவுள்ளனர். இது ஐந்து பாராளுமன்ற அங்கத்தவர்களைக் கொண் டது. தனி அங்கத்தவர் தொகுதிகள் மூன்றும் இரட்டை அங்கத்தவர் தொகுதி ஒன்றும் இதனுள் அடங்குகின்றன. வரலாற்றினைப் பின் நோக்கிப் பார்த்தால் இம் மாவட்டத்தின் பூர்வீகக் குடிகளாக முஸ்லீம்கள் உள்ளனர். இவர்களது வரலாறு சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளையுடையது. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாக இந் நாட்டின் நிரந்தரக் குடிகளாக வாழ்ந்து வந்துள்ள அராபியர்களின் வழித் தோன்றல்கள் இவர்கள். முஸ்லீம்களின் ஒரு பரம்பரைத் தாயகமாக் திகழ்வதும் இம் மாவட்டமாகும். இலங்கை முஸ்லீம்களுக்கென இருக்கின்ற ஒரேயொரு முஸ்லீம் மாவட்டமும் இது வாகும். முஸ்லீம்களை ஒரு சிறுபான்மைத் தேசிய இனம் எனக் கூறிக் கொள்வதற்கு இருக்கின்ற ஒரேயொரு ஆதாரமும் இம் மாவட்டமே . இம் மாவட்டத்தின் வந்தேறு குடிகளாகச் சிங்களவர்கள் உள்ளனர். இவர்களது வரலாறு 1647ல் இருந்தே ஆரம்பிக்கின்றது. 1947 ம் ஆண்டில் 1394 சிங் களவர்கள் மட்டுமேகாணப்பட்டனர்.
</description>
<dc:date>1983-07-01T00:00:00Z</dc:date>
</item>
</rdf:RDF>
