<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rdf:RDF xmlns="http://purl.org/rss/1.0/" xmlns:rdf="http://www.w3.org/1999/02/22-rdf-syntax-ns#" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">
<channel rdf:about="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8408">
<title>1984 NOVEMBER ISSUE 3 Vol II</title>
<link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8408</link>
<description/>
<items>
<rdf:Seq>
<rdf:li rdf:resource="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8497"/>
<rdf:li rdf:resource="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8496"/>
<rdf:li rdf:resource="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8495"/>
<rdf:li rdf:resource="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8494"/>
</rdf:Seq>
</items>
<dc:date>2026-04-07T21:23:42Z</dc:date>
</channel>
<item rdf:about="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8497">
<title>ஈழமும் இந்து மதமும் பொலநறுவை அரசுக்குப் பிற்பட்ட - போத்துக்கேயர் வருகைக்கு முற்பட்ட காலம் (கி. பி. 1250 - 1505)</title>
<link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8497</link>
<description>ஈழமும் இந்து மதமும் பொலநறுவை அரசுக்குப் பிற்பட்ட - போத்துக்கேயர் வருகைக்கு முற்பட்ட காலம் (கி. பி. 1250 - 1505)
Sittampalam, S.K.
கி. பி. 13ஆம் நூற்றாண்டு தென் ஆசிய, தென் கிழக்காசிய நாடு களின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகிறது. அப்போது தென் கிழக் காசியாவும் இந்தியாவில் வட இந்தியா, தக்கணம் ஆகிய பகுதிகளும் இஸ்லாமியர் வசம் வந்தன. இதனால் இக்காலகட்டத்தில் இந்தியாவில் தென்னகத் திற்றான் இந்துமதமும் கலாசாரமும் பேணிப் பாதுகாக்கப்பட் டது. ஈழமும் தென்னாசியப் பிராந்தியத்தின் ஓரங்கமாக விளங்குவதால் இந்திய கலாச்சாரத்தின் தாக்கம் காலகாலமாக ஏற்பட்டாலும் கூட, வட இந்தியாவில் கி. பி. 8ஆம் நூற்றாண்டில் பௌத்தம் சீரழிய, அதன் பின் னர் அராபிய படை எடுப்புக்கள் ஏற்பட கி. பி. 10ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் ஈழ - வட இந்தியத் தொடர்புகளில் ஸ்தம்பிதநிலை காணப்பட் டது. இதனால் இக்காலத்திற்குப் பின்னர் போத்துக்கேயர் வருகைக்கு முன்னர் ஈழ - இந்திய உறவுகள் இந்தியாவின் தென் பிராந்திய வட்டத் தினை மையமாக வைத்தே தொடர்ந்தன. மென்டிஸ் போன்றோர் இதனால் இக்காலப் பகுதியை ஈழ வரலாற்றில் தென்னிந்திய காலப்பகுதி எனக் கூறி இதனை இரு பிரிவுகளாகவும் பிரித்துள்ள னர். (Mendis, G. C. 1954) இவை முறையே பொலநறுவை அரசுக்காலமும் அதற்குப் பிற்பட்ட போத் துக்கேயர் வருகைக்கு முற்பட்ட காலமுமாகும். முன் எப்போதுமில்லாத அளவுக்கு இந்து மதத்தின் தாக்கம் பொலநறுவைக் காலத்தில் ஏற்பட வழி வகுத்ததுதான் இக்காலத்தில் ஈழத்தில் ஏற்பட்ட சோழரது ஆட்சியாகும் இப்பின்னணியில் வளர்ச்சிபெற்ற இந்து கலாச்சாரம், பின் வந்த பால் டிய, விஜய நகர அரசுகளின் தாக்கத்தினால், மேலும் உரம்பெற்று வளர்ச்சி யடைந்தது.
</description>
<dc:date>1984-01-01T00:00:00Z</dc:date>
</item>
<item rdf:about="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8496">
<title>இலக்கணக் கொள்கைக் கட்டுரைகளிலே கணேசையரின் அணுகுமுறை</title>
<link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8496</link>
<description>இலக்கணக் கொள்கைக் கட்டுரைகளிலே கணேசையரின் அணுகுமுறை
Velupillai, A.
இருபதாம் நூற்றாண்டு முற்பாதியிலே, இலங்கை யாழ்ப்பாணத்திலி ருந்து, ஆறுமுக நாவலர் மர பிலே, தமிழ்க் கல்விமான்களாகப் பிரகாசித்த பலருள், சுன்னாகம் குமார சுவாமிப் புலவரும், மகாவித்துவாள் கணேசையரும் ஈடிணையற்றவர்கள். ஆறுமுகநாவலரின் மருகரான வித்துவசிரோன்மணி பொன்னம்பலபிள்ளையின் மாணவராக இருந்த கணேசையர் (1878 - 1958) பொன்னம்பலபிள்ளையின் மறைவின் பின் சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரின் மாணவரானார். உரையாசிரியர் மட்டுவில் க. வேற்பிள்ளை, காசி வாசி செந்திநாதையர் முதலியோரும் இவர் ஆசிரியராக விளங்கியவர்கள். இராகவையங்கார் என்ற பெயர் தாங்கிய அறிஞர்கள் இருவரும் வேண் டிக்கொண்டபடி, 'செந்தமிழ்' என்னும் மதுரைத் தமிழ்ச் சங்க வெளியீட் டுக்ரூ, கணேசையர் நீண்டகாலமாக ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதிவந் தார்.&#13;
கணேசையரின் அறிவுவளர்ச்சியில், அவருக்குச் சுன்னாகம் பிராசீன பாடசாலையிலே, தலைமைத் தமிழாசிரியராகக் கிடைத்த பதவிக்காலம் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. மதுரைத் தமிழ்ச் சங்கத்தை ஒத்ததாக இலங்சையிலும் ஓர் அமைப்பு வேண்டு மென்ற அபிலாசை 1921 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் 'ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம்' என்ற அமைப்பு வித்தியாதரிசி யா. தி. சதாசிவ ஐயர் முயற்சியில் உரு வாகக் காலாயிற்று. அச்சங்கம் நடத்திய பண்டித, பாலபண்டித , பிர வேசபண்டிதத் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார் செய்வதற்காகப் பிராசீன பாடசாலையொன்று அதே ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அப் பாடசாலையிலே கணேசையர் தலைமைத் தமிழாசிரியராகக் கடமையாற்றிய காலம் எட்டாண்டுகளா , பதினோராண்டுகளா என்பதிலே கருத்து வேறு பாடு காணப்படுகிறது : கணேசையர் பதவி விலகிய பின்பும் தனிப்பட்ட முறையிலே, திண்ணைப் பள்ளிக்கூட அமைப்பிலே மாணவர்களுக்குத் தொடர்ந்து பாடஞ் சொல்லி வந்தாராதலின், அவர் கல்வி வளர்ச்சி தடைப்படவில்லை. பிராசீன பாடசாலையிலே, பாலக்காட்டிலிருந்து வந்த வேதவிசாரதர் சிதம்பர சாஸ்திரியுங் கடமையாற்றியதால், கணேசையர் சங்கதமொழி அறிவையும் விருத்திசெய்து கொண்டார்.&#13;
கணேசையரின் தமிழ்ப்பணிகள் பரந்துபட்டன. புலவர். வாழ்க்கை வரலாற்றாசிரியர், இலக்கிய உரையாசிரியர், இலக்கண ஆராய்ச்சியாளர் என்று பலவாறு வருணிக்கப்படத்தக்க முறையிலே. அவர் பணிகள் அமைந் தன. இலக்கண ஆராய்ச்சியாளர் என்ற முறையிலேயே, அவர் பெருஞ் இறப்பப் பெறுகிறாரெனலாம்.
</description>
<dc:date>1984-01-01T00:00:00Z</dc:date>
</item>
<item rdf:about="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8495">
<title>இலங்கையில் நெல்லிற்கான உத்தரவாத விலைத் திட்டமும், அதன் செயற்பாடும்.</title>
<link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8495</link>
<description>இலங்கையில் நெல்லிற்கான உத்தரவாத விலைத் திட்டமும், அதன் செயற்பாடும்.
Perinpanathan, N.
இலங்கை மக்களின் பிரதான உணவாக விளங்கும் நெல்லானது இந் நாட்டின் விவசாயப் பொருளாதாரத்தில் பெரும் பங்கை வகித்து வரு கின்றது.1 நெல் பயிரிடும் துறை, பாரிய துறையாக விரிவடைந்திருப்ப துடன் மட்டுமல்லாது, ஏனைய பல துறைகளுடனும் தொடர்புடைய தொன்றாகவும் உள்ளது. இலங்கையில் தற்போதிருக்கும் சனத்தொகைக்கும் எதிர்காலத்தில் அதிகரித்துச்செல்லும் சனத்தொகைக்கும் உணவினை வழங் கவும், வேலைவாய்ப்பினை அதிகரிப்பதன் மூலம் வேலையின்மைப் பிரச்சினை யைக் குறைக்கவும், கிராமப்புற மக்களின் வருமானத்தினை அதிகரித்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்கும், நாட்டில் கைத் தொழில் விருத்தியினை ஏற்படுத்தவும், அரிசி, கோதுமை மா போன்றவற்றின் இறக்குமதியைக் குறைத்துச் சென்மதி நிலுவையின் பாதக நிலையினைக் குறைக்கவும், மிருகங்களுக்கான உணவினை (வைக்கோல், தவிடு போன் றன) அதிகரிக்கவும் நெற்பயிரின் உற்பத்தி அதிகரிப்பு இன்றியமையாத தாக உள்ளது. இத்தகைய முக்கியத்துவம் காரணமாக இலங்கையில் சுதந்திரத்தின் பின் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் நெல் உற்பத்தியினை அதி கரிப்பதற்குப் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் விவசாயிகளை ஊக்கப் படுத்தின. குடியேற்றத் திட்டங்கள் மூலம் காணி வழங்கல். விவசாயி களுக்குக் குறுங்கால நீண்டகாலக் கடன்களை நிறுவன ரீதியான மூலா தாரங் கள் மூலம் வழங்கல், மானிய அடிப்படையில் குறைந்த விலையில் கிருமி நாசினி, களைகொல்லி, உரம் போன்றவற்றை வழங்குதல், இந்திரமயமாக் கலை ஊக்கப்படுத்துதல், இலவச ஆலோசனைகள் வழங்குதல் போன்ற நட வடிக்கைகள் மூலம் அரசாங்கம் நெல்லின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு முயன்று வந்துள்ளது.
</description>
<dc:date>1984-01-01T00:00:00Z</dc:date>
</item>
<item rdf:about="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8494">
<title>'விலாசம்' தமிழ் நாடக வகை ஒன்று பற்றிய ஆய்வு</title>
<link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8494</link>
<description>'விலாசம்' தமிழ் நாடக வகை ஒன்று பற்றிய ஆய்வு
Mounaguru, S.
‘விலாசம்' என்பது 19ஆம் நூற்றாண்டளவில் தமிழ் நாடக உலகில் வந்து புகுந்த ஒரு புதிய நாடக வடிவமாகும். இதன் அமைப்பு முறை இன்னும் பூரணமாக ஆராயப்படவில்லை."&#13;
''நாடகத்திற்கு விலாசம் என்ற பெயரிட்டு பல விலாசங்கள் தமி ழகத்தில் நடைபெற்று வந்துள்ளன. இந்த விலாசம் என்ற பெயர் ஏன் வந்தது என்று இன்னும் தெளிவாகத் தெரியவில்லை''2&#13;
இதுவரை விரிவாக ஆராயப்படாததும், பெயர்க் காரணம் தெரியா ததும், 19 ஆம் நூற்றாண்டில் தமிழகத் திலும், ஈழத்திலும் பெருவாரியாக ஆடப்பட்டதுமான 'விலாசம்' என்னும் நாடக வடிவத்தின் தோற்றம் பற்றியும் அத்தோற்றத்திற்கான காரணம் பற்றியும் ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.&#13;
விலாசம் என்பது சமஸ்கிருதச் சொல்லாகும்: வடமொழியில் அமைந்த சில இலக்கியங்கள் விலாசம் என்ற பெயர் பெற்றிருந்தன. கி. பி. 7ஆம் நூற்றாண்டில் மகேந்திர பல்லவன் வடமொழியில் இயற்றிய மத்த விலாசப் பிரகசனம் என்ற நாடகத்தில் விலாசம் என்ற பெயர் வந்துள்ளமை அவதானித்தற்குரியது. எனவே விலாசம் என்பது வடமொழி மரபினடி யாக எழுந்த ஒரு இலக்கிய வடிவ மெனலாம்.&#13;
விலாசம் பற்றி தமது சதுரகராதியில் வீரமாமுனிவர் ஆடல் மகளிர் விளையாட்டு என்று விளக்கம் தருகின்றார். தமிழ் லெக்ஸிகனும் விலாசத் திற்கு விளையாட்டு என்றே விளக்கம் தருகிறது. 4 Play என்று நாடகத்தினை வழங்குவது மேனாட்டு வழக்கு. எனவே தான் விலாசத்தைப் play எனக் கருதி இத்தகையதொரு விளக்கத்தை இவர்கள் அளித்தனர் போலும்.&#13;
வடமொழி மரபினடியாக விலாசம் என்ற சொற்பிரயோகம் தமிழ் நாட்டில் 9ஆம் நூற்றாண்டிலிருந்து வந்திருப்பினும் தமிழில் விலாச நூல் கள் எழுந்த காலம் 19 ஆம் நூற்றாண்டுக் காலப் பகுதியே யாகும். தமிழ் நாடக உலகில் இவ்விலாசம் வந்து புகுந்தமையைப் பேராசிரியர் நாரண துரைக்கண்ணன் பின்வருமாறு கூறுவார். "தஞ்சாவூரிலே சரபோஜி மகாராஜா போன்றவர்களின் ஆட்சி சிலகாலம் நிலவியிருந்ததால் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பூனாவிலிருந்து சாங்கிலி நாடக சபை போன்ற சில மராத்திய நாடக சபைகள் இந்திர விலாசம் போன்ற நாடகங்களை மராத்திய மொழியில் நடத்தலாயின. அதே தருனத்தில் பார்ஸி நாடகக் கம்பனிகள் சில வந்து பார்ஸி நாடகங்களையும் நடத்தின.
</description>
<dc:date>1984-01-01T00:00:00Z</dc:date>
</item>
</rdf:RDF>
