<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rdf:RDF xmlns="http://purl.org/rss/1.0/" xmlns:rdf="http://www.w3.org/1999/02/22-rdf-syntax-ns#" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">
<channel rdf:about="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12039">
<title>2022</title>
<link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12039</link>
<description/>
<items>
<rdf:Seq>
<rdf:li rdf:resource="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12119"/>
<rdf:li rdf:resource="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12116"/>
<rdf:li rdf:resource="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12115"/>
<rdf:li rdf:resource="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12114"/>
</rdf:Seq>
</items>
<dc:date>2026-04-06T14:23:24Z</dc:date>
</channel>
<item rdf:about="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12119">
<title>Claiming Quality: Discourses on Quality and Arts Education in Sri Lanka</title>
<link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12119</link>
<description>Claiming Quality: Discourses on Quality and Arts Education in Sri Lanka
Prabha, S. A.; Manuratne, M.
Discourses on quality are central to how the corporatization of the State&#13;
university system has occurred in Sri Lanka. Neoliberal universities maintain an&#13;
extensive governance system that implements quality through a disciplinary&#13;
system that aims to produce quality within the university. In this paper, I examine&#13;
how such disciplinary measures are also productive. They produce discourses on&#13;
quality that are then performatively enabled by the university community. I&#13;
particularly focus on how Arts faculties navigate such discourses on quality by&#13;
examining how policy documents, guidelines, self-evaluation reports, annual&#13;
reports, and even promotion circulars perform a productive role, leading the&#13;
university community to produce the practices that are demanded of them. I will&#13;
specifically focus on IR guidelines, SLQF, annual reports and SERs produced by&#13;
the UGC and the University of Kelaniya as well as publicly available data on&#13;
academics from the two Arts Faculties at the University of Kelaniya. In this paper,&#13;
I focus on the Manual for Institutional Review in my analysis.
</description>
<dc:date>2022-01-01T00:00:00Z</dc:date>
</item>
<item rdf:about="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12116">
<title>யாழ் மாவட்டத்தில் பேரூந்துப் பயணத்தின் போது பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் தொந்தரவுகள்</title>
<link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12116</link>
<description>யாழ் மாவட்டத்தில் பேரூந்துப் பயணத்தின் போது பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் தொந்தரவுகள்
Ambihai, A.; Jebagowri, P.; Nalina, K.; Tharuman, S.
உலகளாவிய ரீதியில் போக்குவரத்தின்போது பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு முகம் கொடுக்கிறார்கள். UNPA இலங்கையில் மேற்கொண்ட ஆய்வின்படி 90% பெண்கள் பேரூந்து மற்றும் புகையிரதபோக்குவரத்தின் போது பாலியல் தொந்தரவிற்கு உள்ளாகின்றார்கள். இத்தகைய பாலியல் தொந்தரவானது பாரதூரமான பாலியல் வல்லுறவுக்கும் பாலியல் சமத்துவம் இன்மை என்ற அடிப்படை மனித உரிமை மீறலுக்கும் இட்டுச்செல்கிறது. இதுமட்டுமன்றி பெண்கள் உடல்,உள ரீதியாக பாதிக்கப்படுவதனால் சமுதாயத்தில் தொழில் மற்றும் கல்வி நடவடிக்கைகளில் அவர்களின் வினைதிறன் மற்றும் விளைதிறனான பங்களிப்பு மட்டுப்படுத்தப்படுகின்றது. இலங்கையின் புள்ளி விபரத்திணைக்களத்தின் பொருளாதாரநிலைசார்ந்த ஆய்வின் அடிப்படையில் 2016ஆம் ஆண்டு வடமாகாணத்திலேயே வறுமைக்கோட்டின் கீழ்வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகிறது. இதனால் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்த வேண்டிய தேவை யாழ்ப்பாண மக்களிடையே அதிகமாகக் காணப்படுகிறது. அந்தவகையில் பெண்களும் தமது அன்றாடத் தேவை கருதி பேரூந்தில் பயணிக்கவேண்டியிருக்கிறது. இதன்காரணமாக பெண்கள் பாலியல் தொந்தரவுகளிற்கு உள்ளாதலும் அதிகளவில் காணப்படுகிறது. பொதுமக்களின் பார்வையில் பெண்களுக்கெதிராகப் பேருந்தில் இடம்பெறும் பாலியல் தொந்தரவுகள் ஒருமுக்கிய பிரச்சினையாகப் பார்க்கப்படுவதில்லை. அதேநேரத்தில் இப்பிரச்சினை தொடர்பான கருத்துப்பரிமாற்றங்கள், ஆய்வுகள் மற்றும் மூலங்கள் போதியளவு கிடைக்கப்பெறாமை, பெண்களுக்கு இதுபற்றிய தெளிவின்மை, விளக்கமின்மை, இதன்பாரதூரங்கள்பற்றிய கவனமின்மை என்பதும் எமது ஆய்விற்கான தேவைப்பாடாக இருந்தது. இவ்ஆய்வினை மேற்கொள்வதற்கு எழுமாறாக தெரிவு செய்யப்பட்ட 15 வயதிற்குமேற்பட்ட 280 பெண்களிடம் இருந்து&#13;
தரவுகள் சேகரிக்கப்பட்டன. இவ் ஆய்வுக்கான வினாக்கொத்துக்கள் பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடம் வழங்கப்பட்டன. இத்தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெண்களுக்கெதிராகப் பேருந்தில் இடம்பெறும் பாலியல்&#13;
தொந்தரவுகளை அடையாளப்படுத்தல். இவ்வாறான சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கையை வெளிப்படுத்தல், பாலியல் தொந்தரவுகளை கட்டுப்படுத்துவதற்கு இலங்கையில் உள்ள சட்டஏற்பாடுகளை ஆராய்தல், இலங்கைச்சட்டத்தில் காணப்படுகின்ற இடைவெளிகளை நிரப்புவதற்கான முன்மொழிகளைப் பரிந்துரை செய்தல் போன்றவற்றை நோக்காகக்கொண்டு இவ்வாய்வு முன்னெடுக்கப்பட்டது. இவ்வாய்வின் பிரகாரம் யாழ் மாவட்டத்தில் பேருந்துப்பயணத்தின்போது 52.5% சதவீதமான பெண்கள் பாலியல் தொந்தரவிற்கு உள்ளாகின்றார்கள். 75.71% சதவீதமான பெண்கள் பேருந்தில் இடம்பெறும் பாலியல் தொந்தரவு பற்றிய அறிவினைக்கொண்டுள்ளார்கள்.
</description>
<dc:date>2022-01-01T00:00:00Z</dc:date>
</item>
<item rdf:about="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12115">
<title>ஈழத்துப் பாநாடக மரபில் முருகையனின் வகிபாகம்</title>
<link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12115</link>
<description>ஈழத்துப் பாநாடக மரபில் முருகையனின் வகிபாகம்
Gnanasambandhan, V.; Visakaruban, K.
இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகில் நன்கு அறியப்பட்டவர் முருகையன். ஈழத்துப் புலமைசார் மரபில், பாநாடகத்துறையில் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிலைநாட்டியுள்ளார். ஈழத்துப் பாநாடக மரபில் முருகையனின் வகிபாகத்தின் கண்டறிதலே இந்த ஆய்வின் நோக்கமாகும். விவரண மற்றும் ஒப்பீட்டு ஆய்வுமுறையினூடாகவும் இந்த ஆய்வு முன்னெடுக்கப்படுகிறது. அச்சில் வெளிவந்த வந்துசேர்ந்தன, தரிசனம் (1965), கோபுரவாசல் (1969), வெறியாட்டு (1986), மைற்பூச்சு (1995) சங்கடங்கள் (2000), அன்ரிகனி| (2007), உண்மை (2002), எனும் ஏழு பாநாடக நூல்களும் இந்த ஆய்வின் முதல் நிலைத்தரவுகாகவும் இதுவரை வெளிவந்த ஆய்வுநிலை எழுத்துகள் இரண்டாம் நிலைத் தரவுகளாகவும் அமைந்துள்ளன. முற்போக்குச் சிந்தனையுடைய இவர் பாநாடகத்துறை மட்டுமன்றி கவிதை, திறனாய்வு, மொழிபெயர்ப்பு, கலைச் சொல்லாக்கம் போன்ற பல்வேறுபட்ட துறைகளில் சாதனைகளை நிலைநாட்டியுள்ளனர். ஈழத்துப் பாநாடகத்துறையின் மூலம் இவர் தனது பாநாடகங்கினூடு சமூக மாற்றம், சமூக விடுதலை, பொதுவுடமைச் சித்தாந்தம், அரசியல் பிரச்சினைகள் போன்றவற்றை படம் பிடித்துக் காட்டியுள்ளனார். இந்த ஆய்வின் மூலம், ஈழத்துப் பாநாடகத்துறையின் முன்னோடியாகவும் இத்துறையில் பல்வேறுபட்ட புதிய உத்திமுறைகளைக் கையாண்டு புதுமைகள் நிகழ்த்தியவராகவும் ஏனைய படைப்பாளிகளுக்கு வழிகாட்டியாகவும் ஏனைய படைப்பாளிகளிருந்து தனித்துத் தெரியும் ஆளுமையாகவும்  முருகையனை இனங்காண முடிந்தது
</description>
<dc:date>2022-01-01T00:00:00Z</dc:date>
</item>
<item rdf:about="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12114">
<title>சமூக விஞ்ஞானங்கள் மற்றும் மானுடம்சார் கற்கைகளின் தற்போதைய நிலைமை: ஒரு தேடல் ஆய்வு</title>
<link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12114</link>
<description>சமூக விஞ்ஞானங்கள் மற்றும் மானுடம்சார் கற்கைகளின் தற்போதைய நிலைமை: ஒரு தேடல் ஆய்வு
Hanifa, F.
"ஒரு தனிமனிதனாக மாத்திரமன்றி, ஒரு நல்ல பிரஜையாக இருக்கவும், தன்னைப் பற்றி மாத்திரமல்லாது, சமுதாயம் சார்ந்து சிந்திக்கவும், நடந்து கொள்ளவும், செயற்படவும், மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பது அவசியமாகும். நவீன வாழ்க்கையினது சிக்கலான அரசியல், பொருளாதார மற்றும் சமூகப் பின்னணியைப் புரிந்து கொள்ளக் கூடிய தன்மையும், சமூகத்திற்கும் தேசத்திற்கும் கடமை செய்யும் உணர்வும் ஒருவரை ஒரு நல்ல குடிமகனாக்குகின்றது. சமூகத்தின் நல்வாழ்வு என்பது கூட்டு நோக்கங்கள் பற்றிய சரியான தேர்விலேயே தங்கி இருக்கின்றது. அவையாவன: அரசியற் கொள்கை, கூட்டு இயக்கத்துக்கான பொறிமுறையின் செயற்றிறன், அரசியல் அரசாங்கம். ஜனநாயகத்தினைத் தோல்வி அடைய விடாது பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பு இன்றைய ஒவ்வொரு குடிமகன் மீதும் உள்ளது. ஒரு கொள்கையின் திசை தொடர்பான உண்மையான விடயங்கள் பற்றிய அறிவினை அவர் கொண்டிருப்பதோடு, நோக்கங்கள் மற்றும் சிக்கல்களை மதிப்பிடுவதற்கான விவேகமும் அவருக்கு இருக்க வேண்டும். இந்தத் தகுதிகள் இல்லாத பட்சத்தில், தேசத்தின் தலைவிதி சரியான தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதனை யாராலும் உத்தரவாதப்படுத்த முடியாது. இதன் காரணமாகப் பாடசாலைகள் மீது ஒரு முக்கியமான பொறுப்பு சுமத்தப்படுகிறது. பாடசாலைகள் இந்தத் தேவையை நிறைவேற்றக் கூடிய வகையில், கல்வி முறைமையானது திட்டமிடப்படல் வேண்டும். பாடசாலைகள் பாகுபாட்டினை உருவாக்கும் அரசியலைத் தவிர்க்க வேண்டும் என்றாலும், தேசத்தின் இளைஞர்களினது அரசியற் கல்விக்கான பொறுப்பிலே அவற்றுக்கு இருக்கும் பங்கினை அவை ஏற்க வேண்டும்".
</description>
<dc:date>2022-01-01T00:00:00Z</dc:date>
</item>
</rdf:RDF>
