<?xml version="1.0" encoding="UTF-8"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">
<title>Christian &amp; Islamic Civilization</title>
<link href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/90" rel="alternate"/>
<subtitle/>
<id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/90</id>
<updated>2026-05-18T18:02:07Z</updated>
<dc:date>2026-05-18T18:02:07Z</dc:date>
<entry>
<title>கிளாலி புனித யாகப்பர் ஆலயம்: கிறிஸ்தவ சமூக உருவாக்கப் பாரம்பரியம் பற்றிய ஒரு வரலாற்றுப் பார்வை</title>
<link href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12656" rel="alternate"/>
<author>
<name>Mary Winifreeda, S.</name>
</author>
<author>
<name>Arulsteepan, M.</name>
</author>
<id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12656</id>
<updated>2026-05-15T05:34:17Z</updated>
<published>2024-01-01T00:00:00Z</published>
<summary type="text">கிளாலி புனித யாகப்பர் ஆலயம்: கிறிஸ்தவ சமூக உருவாக்கப் பாரம்பரியம் பற்றிய ஒரு வரலாற்றுப் பார்வை
Mary Winifreeda, S.; Arulsteepan, M.
சமயங்கள் மனிதனுடைய அன்றாட வாழ்வியலுடன் இரண்டறக் கலந்துவிட்டதாகக் காணப்படுகின்றன. நாடோடிகளாக அலைந்து திரிந்த மனிதர்களை ஒன்றிணைத்து சமூகமாக உருவாக்குவதில் சமயங்களும் சமயத் தளங்களான ஆலயங்களும் பிரதான பங்கினை வகித்து வருகின்றன. ஏறக்குறைய நானூறு ஆண்டுகளுக்கு முன்னரான காலப்பகுதிகளில் இருந்து பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்திற்குட்பட்ட கிளாலிக் கிராமத்தில் அமைக்கப்பட்ட புனித யாகப்பர் ஆலயத்தினை மையப்படுத்தி கிறிஸ்தவ சமூக உருவாக்கம் நடைபெற்றுள்ளது. சமூக உருவாக்கமானது குறிப்பாக வழிபாடுகள், கிறிஸ்தவக் கலைகள், கிறிஸ்தவ சடங்குகள், கலாசார அம்சங்கள் என்பவற்றின் மூலம் இடம்பெற்றுள்ளது. ஆய்வானது கிளாலி புனித யாகப்பர் ஆலயம் போர்த்துக்கேயர் காலந்தொடக்கம் இன்று வரை கிறிஸ்தவ சமூக உருவாக்கப் பாரம்பரியத்தில் எவ்வாறான&#13;
பங்களிப்பினை வழங்கி வருகின்றது என்பதை வெளிக்கொணருதல் என்னும் பிரதான நோக்கத்தை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக கிளாலியில் வாழ்ந்த மக்களுடைய விசுவாசம், ஆலயத்தினை மையப்படுத்தி நடைபெற்ற தேர்ப் பவனி மற்றும் ஏழு கூட்டுப் பவனி, திறமையான கலைஞர்கள், மக்களிடையே காணப்பட்ட ஒற்றுமை என்பன சமூக உருவாக்கத்திற்கு வளமூட்டிய விடயங்களாக அமைகின்றன. எனினும் அண்மைக் காலங்களில் சமூக உருவாக்கங்கள் வலுவிழந்து செல்கின்றமையினை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக இக் கிராமத்தில் இடம்பெற்ற நீண்டகால இடப்பெயர்வு, மக்களுடைய விசுவாச வாழ்வில் ஏற்பட்ட தளர்ச்சி, ஆலயத்தினை மையப்படுத்தி நடைபெற்ற சடங்குகள் நடைபெறாமை, இளைஞர்களின் பங்களிப்புக்கள் குறைந்தமை போன்றவை சமூக உருவாக்கங்களின் வலுவிழப்பிற்குக் காரணிகளாக ஆய்வில்&#13;
கண்டறியப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் நேர்காணல், கள ஆய்வு என்பவற்றின் மூலம் அவதானிப்பு முறையும், நூல்கள், ஆய்வேடுகள், சஞ்சிகைகளில் பெறப்பட்ட தரவுகள் தொகுத்தறிவு முறையினூடகவும் பெறப்பட்ட தரவுகள் ஒப்பிட்டாய்வு மற்றும்&#13;
பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. எனவே இவ் ஆய்வுப் பிரச்சனைக்குப் பொருத்தமான பரிந்துரைகளை முன்வைப்பதன் மூலம் வலுவிழந்து செல்லும் சமூக உருவாக்கங்களை மீளுருவாக்கம் செய்யவும் அதன் நீடித்த நிலைத்திருப்பிற்கும் உதவவும் முடியும்&#13;
என்பதை ஆய்வு எடுத்துரைக்கின்றது.
</summary>
<dc:date>2024-01-01T00:00:00Z</dc:date>
</entry>
<entry>
<title>இலங்கைக் கிறிஸ்தவக் கலையில் தேசியக் கலைபாரம்பரியத்தின் பிரதிபலிப்பு: தெரிவு செய்யப்பட்ட அங்கிலிக்கன் ஆலயங்களை மையப்படுத்திய நோக்கு</title>
<link href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12412" rel="alternate"/>
<author>
<name>Mary Winifreeda, S.</name>
</author>
<id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12412</id>
<updated>2026-03-27T04:45:54Z</updated>
<published>2025-01-01T00:00:00Z</published>
<summary type="text">இலங்கைக் கிறிஸ்தவக் கலையில் தேசியக் கலைபாரம்பரியத்தின் பிரதிபலிப்பு: தெரிவு செய்யப்பட்ட அங்கிலிக்கன் ஆலயங்களை மையப்படுத்திய நோக்கு
Mary Winifreeda, S.
ஆசிய நாடுகளில் கிறிஸ்தவம் வேரூன்றிய போது அதன் பண்பாட்டு அம்சங்களுடன் இணைத்து கிறிஸ்தவம் தன்னை வளப்படுத்தியதுடன் தனது பண்பாட்டு வளங்களையும் உட்புகுத்தியது. அதன் ஒரு வடிவமாகக் கலை திகழ்கிறது. கலையூடாக மறை சார்ந்த கருத்துக்கள் இலகுவில் மக்களைச் சென்றடையும் வாய்ப்புள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கிறிஸ்தவம் தழைத்தோங்கியபோது வழிபாட்டு மையங்களாக விளங்கிய பிரமாண்டமான ஆலயங்களில் ஐரோப்பியக் கலை அம்சங்களும் வளமாக ஊடுருவின. அவ்வாறே ஆசியாவில் கிறிஸ்தவம் பரப்பப்பட்டபோது தோன்றிய வழிபாட்டு மையங்கள் சிறிய குடிசை அமைப்புக்களில் காணப்பட்டாலும் தொடர்ந்து, அவற்றின் வளர்ச்சிக் கட்டமானது ஐரோப்பியப் பாணியில் அமைந்த பிரமாண்டமான தூண், உயரமான கூரை என்பவற்றைக் கொண்ட ஆலயங்களாக வடிவம் பெற்றன. போர்த்துக்கேயரின் வருகையுடன் (கி.பி.1505) அதிகாரப்பூர்வமாக அறிமுகமான கிறிஸ்தவம், ஆரம்பத்தில் ஐரோப்பிய மயப்படுத்தப்பட்டதாகவே காணப்பட்டது. சுதந்திரத்திற்கான கருத்துக்கள் வளர்ச்சி பெற்ற காலத்திலே தேசியம், தேசிய உணர்வு என்பன எழுச்சியடையத் தொடங்கின. இக்காலப்பகுதியில் சமயம் பரப்பும் செயற்பாடுகளில் ஈடுபட்ட மறைபரப்பாளர்களும் தேசியப் பண்பாட்டு அம்சங்களினூடாக சமயக் கருத்துக்களை மக்களிடையே பரப்பினர். இதில் ஒரு அம்சமாகக் கலையும் விளங்குகிறது. ஆய்வானது இலங்கைக் கிறிஸ்தவக் கலையில் தேசியப் பண்பாட்டின் பிரதிபலிப்பை எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆய்வின் வரையறையைக் கருத்திற் கொண்டு, தெரிவு செய்யப்பட்ட இரு அங்கிலிக்கன் ஆலயங்களை மட்டுமே ஆய்வு முதன்மைப்படுத்தியுள்ளது. இலங்கையில் காலனித்துவ ஆட்சி நிலவியபோதும், அதன் பின்னரும் தோன்றிய கிறிஸ்தவ ஆலயங்களில் காணப்படும் கலைப் பிரதிபலிப்புக்களில், தேசியப் பண்பாட்டின் பிரதிபலிப்பு எவ்வாறு உள்வாங்கப்பட்டுள்ளன என்னும் விடயம் ஆழமாக உற்றுநோக்கப்படவில்லை என்னும் வினா ஆய்வுத் தேடலுக்குக் காரணமாயிற்று. இலங்கையிலுள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் அங்கிலிக்கன் திரு அவை ஆலய கலையம்சங்களில் அதிகமாகத் தேசிய பண்பாட்டுடன் தொடர்புடைய கலைப் பிரதிபலிப்புக்கள் காணப்;படுகின்றன என்னும் கருதுகோளை ஆய்வு மையப்படுத்தியுள்ளது. இலங்கையிலுள்ள கிறிஸ்தவ ஆலய கட்டுமானங்கள், அவற்றுடன் தொடர்புடைய கலைப் பிரதிபலிப்புக்களில் தேசியப் பண்பாட்டுடன் தொடர்புடைய கலையம்சங்களின் செல்வாக்கு உண்டு என்பதை எடுத்துரைப்பது ஆய்வின் பிரதானமான நோக்கமாகும். இதற்கென நேர்காணல், கள ஆய்வு மூலம் அவதானிப்பு முறையும் இலங்கையின் தேசியக் கலையம்சங்கள் தொடர்பான தேடலுக்கு நூல்கள், சஞ்சிகைகள், ஆய்வு ஏடுகள் மூலம் பெறப்பட்ட தரவுகள் தொகுத்தறிவு முறை மற்றும் ஒப்பீட்டாய்வு முறையுடன் முன்வைக்கப்பட்டுள்ளன. கிறிஸ்தவ கலைவடிவங்களை தேசியமயமாக்கும் கலைப் படைப்புக்களை அங்கிலிக்கன் ஆலயங்களில் அதன் கட்டட அமைப்பு, செதுக்குக் கலையம்சங்கள், ஆலய பாவனைப் பொருட்கள், ஓவியங்கள் என்பவற்றிலும் அடையாளம் காணலாம். எனவே ஆய்வானது இலங்கையின் தேசியக் கலையம்சங்களுடன் இணைந்த கிறிஸ்தவ கலைவடிவங்களையும் சமகாலம் வரையான அதன் தொடர் பராமரிப்பையும் வரலாற்று முக்கியத்துவத்தையும் அடையாளப்படுத்தும்.
</summary>
<dc:date>2025-01-01T00:00:00Z</dc:date>
</entry>
<entry>
<title>தமிழ் கிறிஸ்தவ நாடக வளர்ச்சியில் நீக்கிலாப்பிள்ளை மரியசேவியரின் மறைபொருள்  நாடகப் பிரதிகள்: விவிலிய உள்ளடக்கமும் இலக்கியச் செழுமையும்</title>
<link href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11992" rel="alternate"/>
<author>
<name>Mary Winifreeda, S.</name>
</author>
<id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11992</id>
<updated>2026-01-20T03:44:34Z</updated>
<published>2025-01-01T00:00:00Z</published>
<summary type="text">தமிழ் கிறிஸ்தவ நாடக வளர்ச்சியில் நீக்கிலாப்பிள்ளை மரியசேவியரின் மறைபொருள்  நாடகப் பிரதிகள்: விவிலிய உள்ளடக்கமும் இலக்கியச் செழுமையும்
Mary Winifreeda, S.
நாடகங்கள் சமயச் சடங்குகளிலிருந்து தோற்றம்பெற்று இன்று பல நிலைகளிலும் வளர்ச்சிக் கண்டுள்ளன.&#13;
கிறிஸ்தவ வரலாற்றில் மத்திய காலத்தில் இடம்பெற்ற சடங்குகளில் அதிகளவான நாடகப் பண்புகள்&#13;
காணப்பட்டமையால் நவீன நாடகத்தின் தோற்றுவாய்க்கு இவை வித்திட்டுள்ளன. அதன்படி முதலில்&#13;
உயிர்ப்பு நாடகங்களும் தொடர்ந்து பாடுகளின் நாடகங்களும் தோற்றம் பெற்றுள்ளன. பிற்பட்ட&#13;
காலங்களில் மறைபொருள் நாடகங்கள், புனிதர்களின் வரலாறுடன் தொடர்புடைய நாடகங்கள், ஒழுக்கப்&#13;
பண்பு நாடகங்கள் என மேலும் அவை வளர்ச்சிக் கண்டுள்;ளன. இலங்கையில் 1543இல் பிரான்சிஸ்கன்&#13;
சபையினரின் உத்தியோகப்பூர்வமான வருகையானது கத்தோலிக்கத்தைப் பரப்புவதற்கு வாய்ப்பளித்தது.&#13;
இதன்போது நாடகத் துறையில் ஆழ்ந்த அனுபவமுடைய இயேசு சபை குருக்களின் வருகையால் பல&#13;
நாடகங்கள் ஆற்றுகை செய்யப்பட்டுள்ளன. 1960களில் இருந்து தமிழ் மொழிக்குரிய தனித்துவமான&#13;
எழுத்தாக்கத்தில் மரியசேவியர் அடிகளார் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு திருப்பாடுகளின்&#13;
காட்சிகளை மேடையேற்றியுள்ளார். இவர் மறைபொருள் நாடகங்கள் சிலவற்றைக் கத்தோலிக்க வானொலி&#13;
சேவையில் ஒலிபரப்புவதில் ஆர்வமாய் ஈடுபட்டுள்ளார். இதற்கென கையெழுத்துப் பிரதியாக&#13;
ஆவணப்படுத்தப்பட்ட நாடகங்கள் ஏறக்குறைய முப்பது ஆண்டுகளின் பின்னர் 'மறை பொருள் நாடகங்கள்:&#13;
தொகுதி - 01' என்னும் தலைப்பில் 2019 ஆண்டு யாழ்ப்பாண திருமறைக் கலாமன்றத்தினால் நூல் வடிவில்&#13;
வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு நீண்டதொரு வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்ட இந்நாடக&#13;
பிரதிகளின் விவிலிய உள்ளடக்கங்களையும் அவற்றின் இலக்கியச் செழுமையையும்&#13;
வெளிக்கொணர்வதைப் பிரதான நோக்கமாகக் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்;பட்டுள்ளது. மரியசேவியர்&#13;
அடிகளின் கலை, இலக்கிய பங்களிப்பு என்பது பன்முக நோக்கில் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய&#13;
விடயமாகும். ஆய்வானது அவரின் நாடகத்துறை பங்களிப்புக்களில் ஒரு பகுதியான மறைபொருள்&#13;
நாடகங்களில், நூலாக வெளியிடப்பட்ட பத்து பிரதிகளை மட்டுமே மையப்படுத்தியுள்ளது. மரியசேவியர்&#13;
அடிகளாரின் மறைபொருள் நாடக பிரதியின் உள்ளடக்கங்களை வெளிப்படுத்தல், விவிலிய அறிவில்&#13;
ஆசிரியரிடம் காணப்பட்ட ஆளுமையைக் கண்டறியும் இலக்குகள் வழியாக மறைபொருள் நாடகங்களின்&#13;
இலக்கிய சிறப்புக்களும் ஆய்வில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. ஆய்விற்கான தரவுகளைப் பெறுவதற்கு&#13;
மரியசேவியர் அடிகளாரின் மேற்கூறிய நூல் பகுப்பாய்வு செய்யப்பட்டு விடயப்பொருள் திறனாய்வுக்கு&#13;
உட்படுத்தப்பட்டுள்ளதுடன், விவிலியத்த்தில் யூத கலாசாரப் பின்னணியில் எழுந்த வரலாறு, மறைசார்&#13;
உண்மைகளைத் தமிழ் பேசும் மக்கள் இலகுவில் விளங்கிப் பயனடையும் வகையில் ஆசிரியர் எவ்வாறான&#13;
இலக்கிய உத்திகளைக் கையாண்டுள்ளார் என்பதை வெளிக்கொணர்வதற்கு வரலாற்று ஆதார முறையுடன்&#13;
உய்த்துணர் முறையியலும் கையாளப்பட்டுள்ளன. யூதப் பின்னணியில் தோன்றிய மிகப்பெரிய வரலாற்றுச்&#13;
சம்பவத்தை, சாதாரண சமூகமும் இலகுவில் விளங்கிக்கொள்ளக்கூடிய எளிய நடையில், இரசனையோடு&#13;
எடுத்துரைத்துள்ள முறை அவரின் இலக்கிய நடையின் சிறப்புக்கு மேலும் ஆதாரமாயுள்ளது. மரியசேவியர் அடிகளின் மறைபொருள் நாடக பிரதிகளை ஆழமாக உற்றுநோக்கிய ஆய்வு என்னும் வகையில் இந்த&#13;
ஆய்வானது தமிழ்க் கிறிஸ்தவ இலக்கியப் பரப்பிற்கும் கிறிஸ்தவ இறையியலுக்கும் வலுவாயமையும்.
</summary>
<dc:date>2025-01-01T00:00:00Z</dc:date>
</entry>
<entry>
<title>திருவழிபாட்டில் பொதுநிலையினரின் பங்கேற்பு: கடந்த ஐந்து ஆண்டுகளில் கற்கிடந்தகுளம் புனித சூசையப்பர் ஆலயப் பங்கை மையமாகக் கொண்ட பார்வை</title>
<link href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11635" rel="alternate"/>
<author>
<name>Venuja Chrisolini, A.</name>
</author>
<author>
<name>Mary Winifreeda, S.</name>
</author>
<id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11635</id>
<updated>2025-10-13T08:51:41Z</updated>
<published>2025-01-01T00:00:00Z</published>
<summary type="text">திருவழிபாட்டில் பொதுநிலையினரின் பங்கேற்பு: கடந்த ஐந்து ஆண்டுகளில் கற்கிடந்தகுளம் புனித சூசையப்பர் ஆலயப் பங்கை மையமாகக் கொண்ட பார்வை
Venuja Chrisolini, A.; Mary Winifreeda, S.
கிறிஸ்தவத்தில் நோக்கில் திருவழிபாடானது இறைமக்கள் இறைமகன் இயேசுவுடன் இணைந்து இறைவனுக்குச் செலுத்தும் வழிபாடாகவே காணப்படுகின்றது. திருவழிபாடு குறித்து முன்வைக்கப்படும் விளக்கங்களில் கத்தோலிக்க சமய வரலாற்றில் கூட்டப்பட்ட சங்கங்களில் இரண்டாம் வத்திக்கான் சங்கமே திருவழிபாட்டில் பொதுநிலையினரின் பங்கேற்பு தொடர்பாக பல்வேறு கருத்துக்களை வலியுறுத்தியுள்ளது. திருவழிபாட்டின் முக்கியத்துவமும் அதில் பங்கேற்பதன் அவசியமும் குறித்து ஆய்வுசெய்யும் நோக்குடன், இலங்கையின் மன்னார் மறைமாவட்டத்தின் முருங்கன் மறைக்கோட்டத்தில் உள்ள கற்கிடந்தகுளம் புனித சூசையப்பர் ஆலயப் பங்கை மையப்படுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கற்கிடந்தகுளம் புனித சூசையப்பர் ஆலயப் பங்கைச் சார்ந்த மக்கள் நடைமுறையில் திருவழிபாடுகளில் பங்கெடுப்பதானது கணிசமான அளவு குறைந்துள்ளமையானது ஆய்வுப் பிரச்சினையாக நோக்கப்பட்டுள்ளது. பொதுநிலையினருக்கு திருவழிபாட்டின் மகத்துவத்தை எடுத்துரைத்தலும் அத்தோடு திருவழிபாட்டில் முழுமையாகவும், உணர்வுப் பூர்வமாகவும் பங்குகொள்வதன் அவசியத்தை ஏற்படுத்துதலும் இவ் ஆய்வின் நோக்கமாகும். இதன் அடிப்படையில் ஆய்வு குறித்த தேடலை முன்னெடுக்கும் வகையில் உய்த்துணர் முறை, வரலாற்று முறை, அவதானிப்பு முறை போன்றன பயன்படுத்தப்பட்டுள்ளன. கற்கிடந்தங்குளம் புனித சூசையப்பர் ஆலயப் பங்கில் பொதுநிலையினரின் பங்கேற்புத் தொடர்பான விடயங்களை  அறிய அவதானிப்பு முறையும், நூல்களில் இருந்து பெறப்பட்ட தரவுகளைப் பகுப்பாய்வு செய்வதற்குப் பகுப்பாய்வு முறையும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி திருவழிபாட்டில் பொதுநிலையினரின் கடந்த ஐந்து ஆண்டுக் கால பங்கேற்பு தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டு திருவழிபாட்டில் பொதுநிலையினரின் பங்கேற்பின் அவசியத்தை மேலும் வெளிக் கொணருவதற்கான ஊக்குவிப்புத் திட்டங்களை முன்வைப்பதற்கான பரிந்துரைகள் ஆய்விலே முன்மொழியப்பட்டுள்ளன.
</summary>
<dc:date>2025-01-01T00:00:00Z</dc:date>
</entry>
</feed>
