<?xml version="1.0" encoding="UTF-8"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">
<title>Christian &amp; Islamic Civilization</title>
<link href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/90" rel="alternate"/>
<subtitle/>
<id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/90</id>
<updated>2026-08-17T02:38:38Z</updated>
<dc:date>2026-08-17T02:38:38Z</dc:date>
<entry>
<title>கிறிஸ்தவமும் பால்நிலையினரும்: பால்புதுமையினர் (LGBTQIA+) குறித்த ஒரு  சிறப்புப் பார்வை</title>
<link href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12860" rel="alternate"/>
<author>
<name>Thanusha, S.</name>
</author>
<author>
<name>Mary Winifreeda, C.</name>
</author>
<id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12860</id>
<updated>2026-08-10T05:38:53Z</updated>
<published>2026-01-01T00:00:00Z</published>
<summary type="text">கிறிஸ்தவமும் பால்நிலையினரும்: பால்புதுமையினர் (LGBTQIA+) குறித்த ஒரு  சிறப்புப் பார்வை
Thanusha, S.; Mary Winifreeda, C.
மனித நாகரிகத்தின் தொடக்கத்திலிருந்தே சமயம் என்பது தனிமனித ஒழுக்கம், சமூகக்&#13;
கட்டமைப்பு மற்றும் விழுமியங்களைத் தீர்மானிக்கும் முதன்மைக் காரணியாகவும், மனித&#13;
வாழ்வியலோடு நெருங்கிய தொடர்பு கொண்டும் திகழ்ந்துள்ளது. பால், பால்நிலை என்னும் இரு பதங்களில் 'பால்' இயற்கையானதாக அமைகிறது. ஆயினும் 'பால்நிலை' சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட ஒன்றாக சமூகவியலாளர்கள் கருதுகின்றனர். அந்த வகையில் பால்நிலை என்ற கட்டமைப்பிற்குள்ளே ஆண், பெண் மற்றும் பால்புதுமையினர் (LGBTQIA+) என அனைவரும் உள்ளடக்கப்படுகின்றனர். ஆய்வானது பால்நிலை என்ற பிரதான மையப்பொருளில் உள்ளடங்கும் பால்புதுமையினரை முதன்மைப்படுத்துவதாக அமையப் பெற்றுள்ளது. 'பால்புதுமையினர்' எனக் குறிக்கப்படும் பதமானது சமூகத்தில் வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு மூலச்சொற்களினால் (umbrella terms) அடையாளப்படுத்தப்படுகின்றது. ஆயினும்&#13;
ஆய்வுகளையும் துறைசார் கற்கை நெறிகளையும் மேற்கொள்ளும் பொழுதும் பெரும்பாலும்&#13;
பயன்படுத்தக்கூடிய சுருக்கக் குறியீட்டுச் சொல்லாக LGBTQIA+ விளங்குகிறது. ஆரம்பம் முதல் இன்று வரை ஆண், பெண் என இரு பால்நிலையினருக்கும் இடையே பல்வேறு&#13;
ஏற்றத்தாழ்வுகளும், முரண்பாடுகளும், உரிமை மீறல்களும், வன்முறைகளும் காணப்படுகின்ற நிலையில், பால்புதுமையினரின் தோற்றம் சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. சமூகம் மனிதனைப் பால்நிலை என்ற அடிப்படையில் பாகுபடுத்தினாலும் ஆண், பெண் ஏற்பு சமூகத்தில் ஓரளவுக்குக் காணப்படுகின்றது. ஆயினும் பால்புதுமையினர் என்ற மனித சமூகத்தைத் தற்கால சமூகம் மற்றும் சமயங்கள் என்பன ஏற்க மறுக்கின்றமைக்கான காரணம் என்னவென்பதே ஆய்விற்கான தேடலாக அமைந்தது. அதனை அடிப்படையாகக் கொண்டு பால்புதுமையினர் குறித்து கிறிஸ்தவம் கொண்டுள்ள கருத்து நிலைகளை அடையாளம் கண்டு, ஒரு வரலாற்றுப் பின்னணியில் எடுத்துரைப்பது ஆய்வின் பிரதான நோக்கமாக அமைந்துள்ளது. கிறிஸ்தவ சமயத்தில் பால்புதுமையினர் குறித்த பலவிதமான நேர் மற்றும் எதிர்மறையான சிந்தனைகள் காணப்படுகின்றன என்னும் கருதுகோள் இங்கு முன்;வைக்கப்படுகின்றது. இவ் ஆய்விற்கான தரவுகள் மூல நூலான விவிலியம், தலைப்புடன் தொடர்புடைய நூல்கள், திரு அவையின் சுற்றுமடல்கள், சஞ்சிகைகள், வரலாற்று ஆவணங்கள் மற்றும் சமகால ஆய்வுக் கட்டுரைகளில் இருந்து பெறப்படும் தரவுகள் என்பன தொகுக்கப்பட்டு, பெறப்பட்ட கருத்துக்கள் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்படும். மேலும் ஆரம்பக் காலங்களில் சமயங்களுடன் இணைந்த கலாசாரப் பின்புலங்களில் பால்புதுமையினருக்கு&#13;
வழங்கப்பட்ட அங்கீகாரம், காலனித்துவக் காலப்பகுதியில் ஏற்பட்ட சமூக மாற்றங்களினால்&#13;
எவ்வாறு ஒடுக்குமுறைக்கு உள்ளானது என்பதைச் சமகாலப் பின்னணியில் இவ்வாய்வு&#13;
புலப்படுத்துகின்றது. பெரும்பான்மையான சமயங்களில் அவற்றின் அடிப்படைத் தத்துவங்கள் ஒன்றாயினும் காலப்போக்கில் உருவான சமூகக் கட்டமைப்புக்கள் மற்றும் ஆணாதிக்கப் பார்வைகள், புனித நூல்களுக்கு வழங்கிய குறுகிய விளக்கங்களே பால்புதுமையினரை விளிம்பு நிலைக்குத் தள்ளியுள்ளன. பால்நிலைப்  பன்முகத்தன்மையைப் புரிந்து கொள்வதற்கு சமயங்கள் அதன் புனித நூல்களைச் சமகாலச் சமூகப் பின்னணியில் மறுவாசிப்புச் செய்தல் அவசியம். சமயத்திற்கும் பால்புதுமையினருக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதன் மூலமே ஒருங்கிணைந்ததொரு சமுதாயத்தினை உருவாக்க முடியும் என்பதை இந்த ஆய்வானது&#13;
வலியுறுத்துகின்றது.
</summary>
<dc:date>2026-01-01T00:00:00Z</dc:date>
</entry>
<entry>
<title>Dignity at Work: Integrating Christian Social Teachings and Sustainable  Development Goals in the Labour Landscape of Sri Lanka</title>
<link href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12719" rel="alternate"/>
<author>
<name>Paul Rohan, J.C.</name>
</author>
<id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12719</id>
<updated>2026-06-17T05:49:54Z</updated>
<published>2026-01-01T00:00:00Z</published>
<summary type="text">Dignity at Work: Integrating Christian Social Teachings and Sustainable  Development Goals in the Labour Landscape of Sri Lanka
Paul Rohan, J.C.
This article explores the concept of  ̳work with dignity ̳ in Sri Lanka through an&#13;
interdisciplinary integration of Christian Social Teaching (CST) and the United Nations&#13;
Sustainable Development Goals (SDGs), particularly SDG 8.5, which targets full and&#13;
productive employment, decent work, and equal pay for all. Drawing on foundational CST&#13;
encyclicals such as Rerum Novarum (1891), Laborem Exercens (1981), and Fratelli Tutti&#13;
(2020), it posits work as a divine vocation that affirms human dignity, critiques exploitative&#13;
systems, and promotes solidarity, subsidiarity, and the common good. In Sri Lanka ̳s labour&#13;
landscape - marked by colonial legacies, ethnic conflicts, the Covid-19 pandemic, the 2022&#13;
economic crisis, and persistent inequities in plantations, garments, and informal sectors -&#13;
these principles address structural challenges like gender wage gaps (20 - 30%), informal&#13;
employment (over 60%), and minority discrimination. By synthesising theological ethics with&#13;
empirical data and International Labour Organization (ILO) frameworks, the analysis&#13;
identifies convergences between CST ̳s moral imperatives and SDG 8.5 ̳s policy targets,&#13;
&#13;
proposing pathways for ethical reforms: community cooperatives for full employment, rights-&#13;
based protections for decent work, and justice-oriented audits for equal pay. This holistic&#13;
&#13;
approach transcends economic metrics, envisioning labour as integral to human flourishing.&#13;
Ultimately, the integration offers Sri Lanka a transformative agenda, enriching SDG&#13;
implementation with CST ̳s prophetic vision to foster just, sustainable economies rooted in&#13;
the inherent worth of every worker.
</summary>
<dc:date>2026-01-01T00:00:00Z</dc:date>
</entry>
<entry>
<title>Proclamation and Beyond: Rethinking Evangelization in 21st-Century Asia</title>
<link href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12685" rel="alternate"/>
<author>
<name>Paul Rohan, J.C.</name>
</author>
<id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12685</id>
<updated>2026-05-26T08:24:22Z</updated>
<published>2025-01-01T00:00:00Z</published>
<summary type="text">Proclamation and Beyond: Rethinking Evangelization in 21st-Century Asia
Paul Rohan, J.C.
</summary>
<dc:date>2025-01-01T00:00:00Z</dc:date>
</entry>
<entry>
<title>வடக்கு மாகாணத்தில் கொலைகளால் காவுகொள்ளப்பட்டுள்ள மனித உயிர்கள்: உயிரின் மாண்பினை  அடிப்படையாகக் கொண்ட கிறிஸ்தவ நோக்கு (2009 - 2022)</title>
<link href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12684" rel="alternate"/>
<author>
<name>Paul Rohan, J.C.</name>
</author>
<author>
<name>Herosini, J.</name>
</author>
<id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12684</id>
<updated>2026-05-26T08:14:27Z</updated>
<published>2024-01-01T00:00:00Z</published>
<summary type="text">வடக்கு மாகாணத்தில் கொலைகளால் காவுகொள்ளப்பட்டுள்ள மனித உயிர்கள்: உயிரின் மாண்பினை  அடிப்படையாகக் கொண்ட கிறிஸ்தவ நோக்கு (2009 - 2022)
Paul Rohan, J.C.; Herosini, J.
மனிதர்கள் மாண்போடு வாழ்வதற்கான உரிமை மனித உரிமைகளிலேயே மிகமிக முக்கியமானதும்&#13;
அடிப்படையானதுமானதாக அமைந்துள்ளது. மனித மாண்பைப் போற்றும் திருவிவிலியம் முழுவதும்&#13;
பரந்துபட்டு உள்ள சிந்தனைகள் மானுட மாண்பு மற்றும் மானிட உயிர் சார்ந்ததாகும். கிறிஸ்தவ&#13;
நோக்கில் மனித உயிர் மூச்சானது மாண்புமிக்கதாகத் திகழ்கின்றது. மனித உயிர் கடவுள் வழங்கிய மிகப்&#13;
பெரிய கொடைகளுள் ஒன்றாகும். மனிதர்களாகிய ஒவ்வொருவருக்கும் இவ்வுலகில் உயிர்&#13;
வாழ்வதற்கான உரிமை உள்ளது. மனித கொலை என்பது ஒரு மனிதனின் உயிரினை இன்னொரு மனிதர்&#13;
மரணம் அடையச் செய்வதாகும். போருக்குப் பிற்பட்ட காலத்திலிருந்து சமகாலம் வரை மனித&#13;
கொலையினால் வடக்கு மாகாணத்தில் உயிர் வாழ்வதற்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளது.&#13;
இம்மாகாணத்தில் பதின்மூன்று ஆண்டுகளுள் ஏராளமான உயிர்கள் மனித கொலைக்கு&#13;
உட்படுத்தப்பட்டுள்ளன. கடவுள் மனித உயிரை காவுகொள்ளச் செய்வதற்கான அதிகாரத்தினை&#13;
மனிதர்களுக்கு வழங்கவில்லை. கிறிஸ்தவமானது மனித உயிரின் மாண்பினை பத்துக்கட்டளைகள்&#13;
மூலமாக வலியுறுத்துகின்றன. அவற்றுள் கொலை செய்யாதே என்ற ஐந்தாவது கட்டளையின்&#13;
பின்னணியில் மனித கொலைகளை தடுப்பதற்கு அழைப்புவிடுத்துள்ளது. ஐந்தாவதாக அமையும்&#13;
இக்கட்டளை ஏனைய மனிதர்களின் உயிரை கொலை மூலம் காவுகொள்வதை முற்றிலும்&#13;
நிராகரிக்கின்றது. அத்தோடு இக்கட்டளை வாயிலாக மனித உயிரின் மாண்பினை உணரச் செய்யத்&#13;
தூண்டியுள்ளது. இவ் ஆய்வில் மனித கொலைகள் இடம்பெற்றமைக்கான தரவுகள் மற்றும் கொலைகளில்&#13;
செல்வாக்குச் செலுத்தியுள்ள காரணிகள் மற்றும் பாலின ரீதியான எண்ணிக்கைகள் கள ஆய்வின் மூலம்&#13;
சேகரிக்கப்பட்டுள்ளன. மனித உயிர் கடவுளுக்குச் சொந்தமானது. மனித உயிர் புனிதமானது,&#13;
மேன்மையானது மற்றும் விலைமதிப்பற்றது போன்ற சிந்தனையை இவ் ஆய்வானது&#13;
ஆழப்படுத்தியுள்ளது. மனித கொலைகளைத் தவிர்த்து உயிரைப் பாதுகாப்பது ஒவ்வொருவருடைய&#13;
கடமையாகத் திகழ்கின்றது. பிறரில் இறைசாயலை உணர்வதன் ஊடாகவே மனித கொலைகள்&#13;
இடம்பெறுவதைக் குறைக்கலாம்.
</summary>
<dc:date>2024-01-01T00:00:00Z</dc:date>
</entry>
</feed>
