<?xml version="1.0" encoding="UTF-8"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">
<title>Faculty of Arts</title>
<link href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/88" rel="alternate"/>
<subtitle/>
<id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/88</id>
<updated>2026-08-29T18:20:26Z</updated>
<dc:date>2026-08-29T18:20:26Z</dc:date>
<entry>
<title>ஆறுமுகநாவலரின் அறிவியல் சிந்தனை</title>
<link href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12919" rel="alternate"/>
<author>
<name>Sivasubramaniam, S.</name>
</author>
<id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12919</id>
<updated>2026-08-28T03:00:01Z</updated>
<published>2022-01-01T00:00:00Z</published>
<summary type="text">ஆறுமுகநாவலரின் அறிவியல் சிந்தனை
Sivasubramaniam, S.
அறிவியல் என்பது இயற்கையை நோக்கி, அடிப்படையான பகுத்தறிவு நோக்கிலான அறிவு பெறும் முறையையும், அம்முறையில் பெறப்பட்ட அறிவையும், உள்ளியக்கத்தைப் புரிந்து கொள்ளுதலையும் குறிக்கிறது. ஈழத்தில், பத்தொன்பதாம் நூற்றாண்டில் சமய, தமிழ்க் கல்வியின் வாயிலாக அறிவியல் ரீதியான சிந்தனைகளை மாணவர்களுக்குப் போதித்தவர் நாவலர். சமயம், தமிழ் என்பவற்றுக்கு அப்பால் புவியியல். கணிதம், விஞ்ஞானம், பூகோளம், விவசாயம், உயிரியல் பல்வகைமை முதலிய கற்கைநெறிகளையும் தன் நூல்களின் மூலம் பதிவுசெய்துள்ளார். இவரது படைப்புக்களினூடாக இவரது அறிவியல் பார்வையினை மதிப்பீடு செய்யும் முயற்சிகள் தெளிவாகப் பார்க்கப்படாத நிலையில் இவரது அறிவியற் சிந்தனைகளை மதிப்பீடு செய்யும் நொக்கில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வானது பண்புசார் முறைமையைக் கொண்ட மைந்துள்ளதுடன். விபரணப் பகுப்பாய்வு முறை. திறனாய்வு முதலிய அணுகுமுறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்விற்கு நாவலரின் இலக்கியப் படைப்புக்கள் முதன்மைத் தரவுகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், ஆய்வுத்தலைப்புடன் தொடர்புடைய கட்டுரை நூல்கள், இதழ்கள் போன்றவை துணைநிலைத் தரவுகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
</summary>
<dc:date>2022-01-01T00:00:00Z</dc:date>
</entry>
<entry>
<title>யாழ்ப்பாணத் தமிழர் பண்பாட்டில் மரபுவழிச் சீர்மியம்</title>
<link href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12918" rel="alternate"/>
<author>
<name>Visakaruban, K.</name>
</author>
<id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12918</id>
<updated>2026-08-25T09:03:31Z</updated>
<published>2022-01-01T00:00:00Z</published>
<summary type="text">யாழ்ப்பாணத் தமிழர் பண்பாட்டில் மரபுவழிச் சீர்மியம்
Visakaruban, K.
யாழ்ப்பாணத் தமிழர் பண்பாடு மிகவும் தொன்மையான ஒன்றாகும். மிகவும் கட்டிறுக்கான பண்பாட்டுப் பாரம்பரியங்கள் பலவற்றைக்கொண்ட யாழ்ப்பாணத் தமிழ்ச்சமூகம். பழைமைபேணுதலில் மிகுந்த ஆர்வத்தைக் கொண்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. அந்நிய ஊடாட்டம் காரணமாக மேலைத்தேயப் பண்பாட்டு நடைமுறைகள் பலவும் இப்பண்பாட்டில் ஊடுருவிய நிலையிலும் தனக்கான தனித்துவங்கள் சிலவற்றை இப்பண்பாடு இன்றும் தக்கவைத்துள்ளதனைக் அவதானிக்க முடிகிறது. அவற்றுள் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க ஒரு பண் பாட்டுக்கூறாக அமைவது மரபுவழிச்சீர்மிய நடைமுறையாகும். மேலைப்புல மருத்துவத்தின்வழி நவீன உள ஆற்றுப்படுத்தல் சிகிச்சை நடைமுறைகள் வருவதற்கு முன்பே யாழ்ப்பாணத் தமிழரிடையே வளமான ஒரு மரபுவிச்சீர்மியப் பாரம்பரியம் (Traditional Councilling Mechanisim) ஒன்று வழக்கில் இருந்து வந்துள்ளதனைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும். இக்கட்டுரையானது யாழ்பாணத் தமிழரிடையே குறிப்பாக இந்துக் களிடையே அன்று தொட்டு இன்றுவரை வழக்கில் இருந்துவரும் மரபு வழிச்சீர்மியங்களையும் அவற்றின் நடைமுறைகளையும் இனங்கண்டு வெளிக்கொணர் வதை ஆய்வு நோக்கங்களாகக் கொண்டுள்ளது. நேரடி அவதானம், களஆய்வுப் பணி மூலம் திரட்டிக் கொள்ளப்பட்ட முதன்மைத்தரவுகள் மற்றும் ஆய்வுப் பொருண்மை யோடு தொடர்புடைய ஆய்வுநிலை எழுத்துக்களான இரண்டாம்நிலைத் தரவுகள் என்பன விவரணஆய்வு (Descriptive Standing) முறையியலில் இக்கட்டுரையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன.
</summary>
<dc:date>2022-01-01T00:00:00Z</dc:date>
</entry>
<entry>
<title>வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் காதல் பிரபந்தத்தில் புலப்பாட்டு மரபு</title>
<link href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12917" rel="alternate"/>
<author>
<name>Selvampikai, N.</name>
</author>
<id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12917</id>
<updated>2026-08-25T08:33:05Z</updated>
<published>2022-01-01T00:00:00Z</published>
<summary type="text">வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் காதல் பிரபந்தத்தில் புலப்பாட்டு மரபு
Selvampikai, N.
ஈழத்துச் சமய மரபுகளில் முருகவழிபாடு குறிப்பிடத்தக்க இடத்தினைப் பெற்றிருக்கின்றது. கிழக்கிலங்கையின் திருப்படைக் கோயில்களில் ஒன்றாக வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் கோயில் விளங்குகின்றது. இக்கோயிலின் மீது வீரக்கோன் முதலியார் காதல் பிரபந்தமொன்றினைப் பாடியுள்ளார். சித்திரவேலாயுதர் காதலைச் சமய இலக்கியமாகவே பலர் நோக்குகின்றனர். இந்நூல் இலக்கியப் பண்புகள் பல வற்றைத் தன்னகத்தே கொண்டு விளங்குகின்றது. சித்திரவேலாயுதர் காதலை இலக்கிய நோக்காகக் கொண்டு அதன் புலப்பாட்டு மரபை ஆய்வு செய்வதே ஆய்வின் முக்கிய பிரச்சினையாகக் கொள்ளப்படுகின்றது. வீரக்கோன் முதலியாரின் வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் காதல் பிரபந்தம் ஆய்வின் முதன்மை மூலமாகக் கொள்ளப்படு கின்றது. இந்நூல் தொடர்பாக எழுந்த வசனநூல். கட்டுரைகள். ஆய்வுகள் துணைமை ஆதரங்களாகக் கொள்ளப்படுகின்றன. இந்நூல் இலக்கியப் பண்புகளைக் கொண்டு விளங்குகின்றது என்ற கருதுகோளின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது. வீரக்கோன் முதலியாரின் வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் காதல் பிரபந்தத்தில் இலக்கியப் புலப்பாட்டு மரபு எவ்வாறு வெளிப்பட்டு நிற்கின்றது என்பதை விவரண மற்றும் பகுப்பாய்வு முறையியல்களைத் துணைக்கொண்டு ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
</summary>
<dc:date>2022-01-01T00:00:00Z</dc:date>
</entry>
<entry>
<title>இளங்கோவின் கண்ணகியும் ஈழத்துக் கண்ணகையும்</title>
<link href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12916" rel="alternate"/>
<author>
<name>Ragunathan, M.</name>
</author>
<id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12916</id>
<updated>2026-08-25T08:11:25Z</updated>
<published>2022-01-01T00:00:00Z</published>
<summary type="text">இளங்கோவின் கண்ணகியும் ஈழத்துக் கண்ணகையும்
Ragunathan, M.
சிலப்பதிகாரம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டிருந்தாலும் பத்தொன்ப தாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே அச்சிற் பதிப்பிக்கப்பட்டது. அச்சில் பதிப்பிக்கப்படும்வரை தமிழகத்தில் இந்நூல் பற்றிப் பலரும் அறிந்திருக்கவில்லை. ஆனால் ஈழத்தவர்கள் கி.பி. 15ஆம் நூற்றாண்டிற்கும் 17ஆம் நூற்றாண்டிற்கும் இடைப் பட்ட காலப்பகுதி யிலேயே சிலப்பதிகாரம் பற்றி அறிந்திருந்தனர். இக்காலப்பகுதியிலேயே ஈழத்தவர்களால் கண்ணகியின் கதை காவியமாகப் பாடப்பட்டது. இளங்கோ கண்ணகியைச் சாதாரண மானிடப் பெண்ணாகப் படைத்து - வாழ்வில் இன்பம் காணவைத்து இறுதியில் தெய்வீகத்தன்மை உள்ளவளாகப் படைத்துள்ளார். ஆனால் ஈழத்தவர்கள் கண்ணகையைத் தீண்டத்தகாத கற்புடையவளாகவும். அவதாரமாகவும் படைத்ததால் - அவள் இல்லற வாழ்வில் இன்பம் காண்பவளாக இருக்கவில்லை. இறுதிவரை தெய்வீகப் பெண்ணாகவே காணப்படுகிறாள். இதனால் இளங்கோவின் கண்ணகியும் ஈழத்துக் கண்ணகையும் வேறுபாடுகளைக் கொண்டவர்களாக உள்ளனர்.
</summary>
<dc:date>2022-01-01T00:00:00Z</dc:date>
</entry>
</feed>
