<?xml version="1.0" encoding="UTF-8"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">
<title>RSGEE</title>
<link href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8539" rel="alternate"/>
<subtitle/>
<id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8539</id>
<updated>2026-04-06T12:44:39Z</updated>
<dc:date>2026-04-06T12:44:39Z</dc:date>
<entry>
<title>பெண்களின் மேம்பாட்டில் தும்புப் பொருள் உற்பத்திக் கைத்தொழிலின் வகிபங்கு - கொழும்புத்துறை கிராமத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகவியல் ஆய்வு</title>
<link href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8658" rel="alternate"/>
<author>
<name>Vajitha, T.</name>
</author>
<author>
<name>Vithuja, V.</name>
</author>
<id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8658</id>
<updated>2022-11-30T09:17:33Z</updated>
<published>2022-01-01T00:00:00Z</published>
<summary type="text">பெண்களின் மேம்பாட்டில் தும்புப் பொருள் உற்பத்திக் கைத்தொழிலின் வகிபங்கு - கொழும்புத்துறை கிராமத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகவியல் ஆய்வு
Vajitha, T.; Vithuja, V.
இலங்கையில் தும்புத் தொழிலின் நீண்ட வரலாறும் 19ஆம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட தும்பு உற்பத்தி முறைமையும், உலக தும்புச் சந்தையில் இலங்கையை ஒரு முக்கிய தும்பு உற்பத்தி நாடாக நிலைநிறுத்தியுள்ளது. தும்புப் பொருள் உற்பத்திக் கைத்தொழிலில் பெண்களின் வகிபங்கினை இனங்காணுதலும் அது சார்ந்து அவர்கள் எதிர்நோக்கும் சவால்களை இனங்கண்டு அவற்றுக்கான தீர்வுகளை முன்மொழிதலும் ஆய்வின் பிரதான நோக்கமாகக் காணப்படுகின்றது. ஆய்வின் வினாக்களாக ஆய்வுப் பிரதேசத்தில் பெண்கள் தும்புப்பொருள் உற்பத்திக் கைத்தொழிலில் ஈடுபடுவதற்கான காரணிகள் எவை? தும்புப்பொருள் உற்பத்திக் கைத்தொழில் சார்ந்து பெண்களின் வௌ;வேறுபட்ட வகிபங்குகள் எவை? என்பனவாகும். சமுதாயத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த ஆய்வில் கலப்புமுறை ஆய்வு வடிவம் பயன்படுத்தப்பட்டுள்ளது. வினாக்கொத்து, பிரதான தகவல் வழங்குநருடனான நேர்காணல், குவிமையக் குழுக்கலந்துரையாடல் மற்றும் விடய ஆய்வுகள் மூலம் முதலாம் நிலைத்தரவுகள் சேகரிக்கப்பட்டன. அவ்வகையில் நோக்கம் கருதிய மாதிரி எடுப்பு (Pரசிழளiஎந ளுயஅpடiபெ ஆநவாழன) அடிப்படையில் 50 பெண்கள் ஆய்விற்கான மாதிரிகளாகத் தெரிவுசெய்யப்பட்டனர். ஆய்வு ஒழுக்கவியலானது ஆய்வாளரால் ஆய்வின் அனைத்துக் கட்டங்களிலும் முறையாகப் பின்பற்றப்பட்டது. ஆய்வுக்கு உட்படுத்தப்படுபவர்களின் தரவுகளின் விபரங்கள் இரகசியமான முறையில் பேணப்பட்டு தகவல் தருநர்களின் நம்பகத்தன்மை பேணப்படும் வகையில் ஆய்வு ஒழுக்கவியல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வினாக்கொத்தின் மூலம் பெறப்பட்ட கணியம்சார் தரவுகள் சமூக விஞ்ஞான ஆய்வுகளிற்கான புள்ளிவிபரவியல் மென்பொதியின் (ளுPளுளு எநசளழைn 21) உதவியுடன் விபரணப் புள்ளிவிபரவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டடதுடன், பண்புசார் தரவுகள் கருப்பொருள் உள்ளடக்கப் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டது. இதனடிப்படையில் தும்புக்கைத்தொழிலினை மேற்கொள்கின்ற காலத்தின் அடிப்படையில் 18மூ சதவீதமானோர் சிறுபராயம் வரையும், 4மூ சதவீதமானோர் ஒரு வருட காலமாகவும், 16மூ சதவீதமானோர் மூன்று வருடங்களாகவும், நான்கு வருடங்களாகவும் சம எண்ணிக்கையில் தும்புக்கைத்தொழிலினை மேற்கொண்டுள்ளனர். 62மூ சதவீதமானோர் நான்கு வருடங்களிற்கு மேலாகத் தும்புக் கைத்தொழிலினை மேற்கொண்டுள்ளனர். வாழ்வாதாரத்தின் அடிப்படையினை மேம்படுத்துவதன் நோக்கோடு தும்புக் கைத்தொழிலினை மேற்கொள்வதாகக் கூறுகின்றனர். முயற்சியாளர்கள் பொருளிற்கான சந்தைக் கேள்வியினைக் கவனத்தில் கொள்ளாது தம்மால் இயன்ற உற்பத்தியினை செய்து வருவதால் விற்பனை கடினமாக உள்ளது. எனவே இந்த நிலையினை மாற்றியமைத்தல் வேண்டும். பாரம்பரிய உற்பத்தி முறையினை விடுத்து நவீன உற்பத்தி முறைக்கு மாறுதல் வேண்டும். தொழில்நுட்பம் சார்ந்த அறிவினைக் கொண்டிருத்தல் வேண்டும் மற்றும் உற்பத்திச் செலவுகளைக் குறைத்தல் வேண்டும் போன்றன தும்புப் பொருள் உற்பத்திக் கைத்தொழிலில் ஈடுபடுகின்ற பெண்களின் தீராத மனக்குறைகள் மற்றும் அபிலாசைகளாகக் காணப்படுகின்றது.
</summary>
<dc:date>2022-01-01T00:00:00Z</dc:date>
</entry>
<entry>
<title>யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூக விஞ்ஞான கல்விசார் உத்தியோகத்தர்களின் மனித வளப்பயன்பாட்டில்  பாலின சமத்துவம்</title>
<link href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8650" rel="alternate"/>
<author>
<name>Vasuki, R.</name>
</author>
<author>
<name>Nimalathasan, P.</name>
</author>
<author>
<name>Jeyaluckshmi, R.</name>
</author>
<id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8650</id>
<updated>2022-11-30T04:41:52Z</updated>
<published>2022-01-01T00:00:00Z</published>
<summary type="text">யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூக விஞ்ஞான கல்விசார் உத்தியோகத்தர்களின் மனித வளப்பயன்பாட்டில்  பாலின சமத்துவம்
Vasuki, R.; Nimalathasan, P.; Jeyaluckshmi, R.
பாலின சமத்துவம் (Gender Equality) குறிப்பாக ஆசிய நாடுகளில் பேணப்படுவது குறைவாகவே உள்ளது என்ற கருத்து வலுவானதாக உள்ளது. இந்நாடுகளில் ஆணாதிக்க நெறிமுறைகளும் விழுமியங்களும், சமூக, பண்பாட்டு, பொருளாதார நிலைகளும் பாலின சமமின்மையை வலுவானதாக்கி வருகின்றது. அதிலும் கல்வி, சுகாதார துறைகளில் பாலின இடைவெளி இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனித வளப்பயன்பாட்டில், இருபாலாரும் பாலின சமத்துவத்தின் அடிப்படையில் தமது கடமைகளையும் உரிமைகளையும் செயற்படுத்தும் போதே ஒரு நிறுவனம் வினைத்திறன் மிக்க விளைவுகளை அடைய முடியும். இதன் அடிப்படையில் யாழ் பல்கலைக்கழகத்தின் சமூகவிஞ்ஞானக் கற்கைநெறியில், மனித வளப்பயன்பாட்டில் பாலின சமத்துவம் குறிப்பாக பணிச்சுமையில் பேணப்படுகின்றதா என்பதைக் கண்டறிதலே இவ் ஆய்வின் பிரதான நோக்கமாக உள்ளது. கடந்தகால ஆய்வுகள் பிரதான நிறுவனங்களில் பாலின சமத்துவத்தைப் பேணுதல் உலகளாவிய பிரச்சினையாக நோக்கப்படுகின்றது. எனினும் மனித வளப்பயன்பாட்டில் பாலின சமத்துவம் தொடர்பான சர்வதேச, உள்நாட்டு ஆய்வுகள் அரிதாகவே காணப்படுகின்றன. யாழ் பல்கலைக்கழக சமூக விஞ்ஞானக் கற்கைநெறியில் முகாமைத்துவ மற்றும் கலைப்பீட பிரிவில் உள்ள 17 துறைகளில் கல்விசார் பணியாளர்கள் நூறு பேருக்கு வழங்கப்பட்ட முதல்நிலை மூலமான வினாக்கொத்தின் மூலம் 65 பணியாளர்களிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த முடிவுகள் கண்டறியப்பட்டுள்ளன. மாதிரிகளாக 65 பணியாளர்களில் 31 ஆண்களும், 34 பெண்களும் உள்ளனர். மாதிரி அளவைத் தீர்மானிப்பதற்கென பல கட்டமைக்கப்பட்ட முறைகள் கையாளப்பட்டுள்ளன. சிறிய அளவு கொண்ட சனத்தொகைக்கான புள்ளிவிபரங்கள், பிரசுரிக்கப்பட்ட அட்டவணைகள் மற்றும் சமன்பாடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 'மனித வளப்பயன்பாட்டில் பாலின வேறுபாடு இல்லை' என்பது இவ் ஆய்விற்கான எடுகோளாக எடுக்கப்பட்டுள்ளது. இவ் எடுகோளைப் பரீட்சிப்பதற்கென தன்னிச்சையான மாதிரி t - test ஆனது SPSS மென்பொருளில் பயன்படுத்தப்பட்டது. மாறிகளுக்கிடையிலான ஒருமைப்பாட்டினைக் கண்டறிந்ததன் மூலம் மாறுபாடுகள் அனைத்தும் சமனாக இல்லை என்பது பரிசீலனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதன் விளைவாக சமூக விஞ்ஞானப் பிரிவின் பாலின மனித வளப்பயன்பாடு வேறுபாட்டினை காட்டியுள்ளது. ஆகவே முன்வைக்கப்பட்ட கருதுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, யாழ் பல்கலைக்கழக சமூக விஞ்ஞானக் கற்கைநெறியின் கல்விசார் ஊழியர்களிடையே பணிச்சுமையில் பாலின சமத்துவம் பேணப்படுகின்றது என்ற முடிவினை எட்டமுடிகிறது.
</summary>
<dc:date>2022-01-01T00:00:00Z</dc:date>
</entry>
<entry>
<title>பெண்களின் வலுவூட்டலும் சமூக, பொருளாதாரக் காரணிகளும்: கண்டாவளை பிரதேச ஆடைக் கைத்தொழிற்சாலை பெண்களை மையப்படுத்திய ஆய்வு</title>
<link href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8649" rel="alternate"/>
<author>
<name>Sajitha, J.</name>
</author>
<author>
<name>Kamalakumari, K.</name>
</author>
<id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8649</id>
<updated>2022-11-30T04:37:02Z</updated>
<published>2022-01-01T00:00:00Z</published>
<summary type="text">பெண்களின் வலுவூட்டலும் சமூக, பொருளாதாரக் காரணிகளும்: கண்டாவளை பிரதேச ஆடைக் கைத்தொழிற்சாலை பெண்களை மையப்படுத்திய ஆய்வு
Sajitha, J.; Kamalakumari, K.
ஆடைக் கைத்தொழிற்சாலையில் பணிபுரிகின்ற பெண்களின் வலுவூட்டலில் சமூக, பொருளாதார காரணிகள் எவ்வாறு செல்வாக்கு செலுத்துகின்றன என்பதையறிதலை ஆய்வு நோக்காகக் கொண்டது இவ் ஆய்வு. தமிழ்ப்பெண்களுக்கான கட்டுப்பாடுகளுடன் ஆடைக் கைத்தொழிற்சாலை வேலைக்குச் செல்வதையே தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் சமூகத்தில், வேலைவாய்ப்பு ஊடாக பெண்களுக்கான வலுவூட்டலும் சமூக, பொருளாதார காரணிகளின் பங்கும் போதியதாக இல்லை என்பது ஆய்வுப் பிரச்சினை ஆகும். பெண் வலுவூட்டல் தொடர்பாக பல ஆய்வுகள் செய்யப்பட்டுள்ள போதிலும் யுத்தப்பாதிப்புக்குள்ளானவர்களும் வேலைத்தெரிவு குறைந்தவர்களுமான, குறித்த பிரதேச ஆடைக் கைத்தொழிற்சாலைப் பெண்கள் தொடர்பாக எவ்வித ஆய்வும் சரியான முறையில் ஆராயப்படவில்லை என்பது ஆய்வு இடைவெளியாகக் காணப்படுகின்றது. நேர்காணல், வினாக்கொத்து மூலமும், இரண்டாம் நிலைத்தரவுகளை ஆடைக் கைத்தொழிற்சாலை நிறுவன அறிக்கைகளில் இருந்தும் பெற்றுக் கொண்ட இவ் ஆய்வு விபரணப் புள்ளிவிபரவியல், வரைபடங்கள், அட்டவணைகள் மற்றும் 5புள்ளி லிக்கேர்ட் அளவுத்திட்ட கூற்றுக்களாலான தீர்மான விதிப்பகுப்பாய்வு பயன்படுத்தப்பட்டு மாறிகள் அளவீடு செய்யப்பட்டுள்ளது. ஆய்வானது கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 4 கிராம சேவகர் பிரிவுகளிலிருந்தும் இலகு மாதிரி மூலம் தெரிவு செய்யப்பட்ட 60 மாதிரிகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு, இவ் ஆய்வின் முடிவுகளாக பெண்களின் வலுவூட்டலைத் தீர்மானிப்பதில் சமூகக் காரணிகள் (கல்வியறிவு, மேலதிக திறன்கள், அனுபவம், குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கை) நேரான செல்வாக்கினையும் பொருளாதாரக் காரணியான வருமானம் மற்றும் செலவு, பலவீனமான ஆனால் எதிரான தொடர்பையே காட்டுகின்றது என்பது கண்டறியப்பட்டுள்ளது. இவ் ஆய்வானது பணிபுரியும் பெண்கள் தொழிற்சாலையில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் என்பவற்றுடன் சமூகத்தில் பெண்களின் மீதான தவறான கண்ணோட்டம் என்பவற்றை குறித்த பெண்களுக்கும் சமூகத்திற்கும் விழிப்புணர்வூட்டுவதனால் முக்கியத்துவம் பெறுகின்றது.
</summary>
<dc:date>2022-01-01T00:00:00Z</dc:date>
</entry>
<entry>
<title>இலங்கையின் தேர்தல் முறைகளில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கான தடைகளும் வாய்ப்புகளும</title>
<link href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8627" rel="alternate"/>
<author>
<name>Thirusenthooran</name>
</author>
<id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8627</id>
<updated>2022-11-28T04:01:17Z</updated>
<published>2022-01-01T00:00:00Z</published>
<summary type="text">இலங்கையின் தேர்தல் முறைகளில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கான தடைகளும் வாய்ப்புகளும
Thirusenthooran
பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் அடித்தளமாகக் காணப்படுவது தேர்தல் முறைகள் ஆகும். இலங்கையில் 1910ஆம் ஆண்டு குறூ மக்கலம் அரசியல் சீர்திருத்தத்தின்படி தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், பெண்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கோ அல்லது வாக்களிப்பதற்கோ அனுமதிக்கப்படவில்லை. ஆண்கள் வாக்குரிமை பெற்று நீண்ட காலத்திற்குப் பிறகு குறிப்பாக 1931ஆம் ஆண்டு சர்வஜன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்ட போதே பெண்கள் வாக்குரிமையைப் பெற முடிந்தது. அந்த வகையில் 1931ஆம் ஆண்டு அடலின் மொலமூரே (யுனநடiநெ ஆழடயஅரசந) முதலாவது அரசாங்க சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். இலங்கையில் டொனமூர் காலத்தில் இருந்து பெண்கள் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான வாய்ப்புக்கள் வழங்கப்பட்ட போதிலும் இலங்கை அரசியலில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. 1978ஆம் ஆண்டு இலங்கையில் நிறைவேற்றதிகார ஜனாதிபதி தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டு இதுவரை எட்டுத் தேர்தல்கள் இடம்பெற்ற போதிலும் சந்திரிக்கா பண்டாரநாயக்கா மாத்திரமே நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதேபோல பாராளுமன்ற, உள்ளூராட்சி மன்ற, மாகாண சபைகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாகவே காணப்படுகின்றது. குறிப்பாக இலங்கையின் முக்கிய தேர்தல்களில் பெண்கள் போட்டியிடுவதும், போட்டியிட்டு வெற்றிபெறுவதும் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இப்பின்புலத்தில் இவ் ஆய்வானது இலங்கையின் தேர்தல் முறையின் பிரகாரம் பெண்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கான சட்டரீதியான தடைகளை இனங்காணல், தேர்தலின் போது பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை வெளிக்கொணர்தல், பெண்கள் கூடுதலான அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கான சிபார்சுகளை முன்வைத்தல் போன்றவற்றை நோக்கங்களாகக் கொண்டுள்ளது. ஆய்வுப் பொருளையும் ஆய்வு நோக்கத்தினையும் கருத்தில் கொண்டு கலப்பு ஆய்வு முறையியல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ்வகையில் மரபுசார் சட்ட - நிறுவன முறையும் (டுநபயட- ஐளெவவைரவழையெட ஆநவாழன), மரபும் அறிவியலும் சார் வரலாற்று ஒப்பீட்டு முறையும் (ர்ளைவழசiஉயட-உழஅpயசயவiஎந ஆநவாழன) கவனத்தில் கொள்ளப்படுகின்றது. ஆழமான நோக்கில் பெண்கள் காலத்திற்கு காலம் இடம்பெறும் தேர்தல்களில் வாக்களிக்கின்ற போதிலும் பெரியளவில் ஆர்வத்துடன் தேர்தல்களில் போட்டியிடுவதில்லை. இதற்கு பிரதான அடிப்படை இலங்கை தேர்தல் முறைகளின் பலவீனங்களே ஆகும். இலங்கையின் நிறைவேற்றதிகார ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான கடுமையான நிபந்தனைகள் இல்லாதொழிக்கப்படல் வேண்டும். அதேபோல பாராளுமன்றத் தேர்தலில் காணப்படும் கட்சிப் பட்டியல் முறை தவிர்க்கப்படுவதுடன் தேசியப் பட்டியலில் பெண்களுக்கு 50 வீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். மேலும் விருப்பு வாக்கு முறை இல்லாமல் செய்யப்பட்டு பெண்கள் தேர்தலில் அச்சமற்ற உள்ளார்ந்த விருப்பத்துடன் போட்டியிடுவதற்கான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். இதுதவிர சமூகமட்டத்தில் பெண்கள் விழிப்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு தேர்தல் நீரோட்டத்திற்குள் அவர்கள் முழுமையாக இணைக்கப்படுகின்ற போது சிறந்த அரசியல் கலாசாரமும் அரசியல் அபிவிருத்தியும் கட்டியெழுப்பப்படும்.
</summary>
<dc:date>2022-01-01T00:00:00Z</dc:date>
</entry>
</feed>
