<?xml version="1.0" encoding="UTF-8"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">
<title>University Journals</title>
<link href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/5683" rel="alternate"/>
<subtitle/>
<id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/5683</id>
<updated>2026-04-22T06:41:55Z</updated>
<dc:date>2026-04-22T06:41:55Z</dc:date>
<entry>
<title>முல்லைத்தீவு கல்விவலயப் பாடசாலை ஆசிரியர்களிடையே வகுப்பறை முகாமைத்துவத் திறன்கள்</title>
<link href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11226" rel="alternate"/>
<author>
<name>Premalatha, A.</name>
</author>
<id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11226</id>
<updated>2025-05-05T05:58:59Z</updated>
<published>2024-01-01T00:00:00Z</published>
<summary type="text">முல்லைத்தீவு கல்விவலயப் பாடசாலை ஆசிரியர்களிடையே வகுப்பறை முகாமைத்துவத் திறன்கள்
Premalatha, A.
கல்வியைக் காத்திரமாக வழங்கும் பாடசாலைகளின் இலக்கை அடைந்து கொள்வதற்கு&#13;
வகுப்பறை முகாமைத்துவத் திறன் விருத்தி அவசியமாகும். மனித பௌதிக வள&#13;
மேம்பாட்டோடு நிறுவனத்தை சீர் செய்துகொள்வது முகாமைத்துவமாகும். இவ் ஆய்வில்&#13;
பிரச்சினைகளை இனங்கண்டு பிரச்சினைகளில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளைக்&#13;
கண்டறிந்து இவற்றிலிருந்து விடுபட்டு எவ்வாறு மேம்பாடடையவைக்கலாம் என்பது&#13;
குறிக்கோளாக உள்ளது. முல்லைத்தீவு கல்வி வலயத்தில் முகாமைத்துவத் திறன்&#13;
விருத்திக்காக 35 பாடசாலைகளில் 196 பேர் ஆய்வுக்காக தெரிவு செய்யப்பட்டு ஆவணத்&#13;
தகவல்கள், வினாக்கொத்து, நேர்காணல், குவியமையக் கலந்துரையாடல் என்பவற்றின்&#13;
மூலம் தரவுகள் திரட்டப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கண்டறிதல்&#13;
களாக அதிபர் ஆசிரியர்களுக்கு பொருத்தமான வழிகாட்டல்கள் போதுமானதாக இல்லை.&#13;
பொருத்தமான ஆளணிவளம் குறைவாக உள்ளமை, பௌதிக வளம் போதுமானதாக&#13;
இல்லை, விழிப்புணர்வின்மை என்பன இனங்காணப்பட்டன. இவற்றை நிவர்த்தி செய்து&#13;
எதிர்கால ஆய்வுவினாக்களுக்காக நிபுணத்துவவிழிப்புணர்வு, பௌதிகவளங்கள், தொடருறு&#13;
பயிற்சிகள் வேலைப்பகிர்வு, ஆசிரியர் கூட்டங்கள் என்பனவற்றைப் போதுமானளவு&#13;
மேற்கௌ;ள வேண்டும்.
</summary>
<dc:date>2024-01-01T00:00:00Z</dc:date>
</entry>
<entry>
<title>அகோரசிவாசாரியார் நோக்கில் அபரக்கிரியைகள் - மரபும் மாற்றமும்</title>
<link href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11225" rel="alternate"/>
<author>
<name>Krishnamoorthy Iyar, T.</name>
</author>
<id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11225</id>
<updated>2025-05-05T05:56:34Z</updated>
<published>2024-01-01T00:00:00Z</published>
<summary type="text">அகோரசிவாசாரியார் நோக்கில் அபரக்கிரியைகள் - மரபும் மாற்றமும்
Krishnamoorthy Iyar, T.
சைவசமயத்தில் கிரியைகள் இன்றியமையாத இடத்தினைப் பெற்று விளங்குகின்றன. அவை&#13;
கோயிற் கிரியைகள், பூர்வக்கிரியைகள், அபரக்கிரியைகள் எனப் பல வகைப்படுவன.&#13;
கிரியைகள் யாவும் ஞானம் கிடைத்தற்காகவே செய்யப்படுகின்றன என சைவசித்தாந்த&#13;
நூல்கள் குறிப்பிடுகின்றன. விதிகளைப் பிரமாணமாகக்கொண்டு கிரியைகள் செய்யும்&#13;
முறையினை முறையாகக் கூறும் நூல்களாகப் பதினெண் பத்ததிகள் விளங்குகின்றன.&#13;
இதனடிப்படையில் இறந்தவருக்குச் செய்யப்படுகின்ற அபரக்கிரியைகளானவை இறந்த&#13;
உயிருக்கு ஆன்ம ஈடேற்றத்தோடு ஞானத்தை உண்டாக்கி அவரின் ஆன்மிக&#13;
விடுதலைக்காகச் செய்யப்படுகின்றன. இதற்கு அகோரசிவாச்சாரியார் தனது கிரியா கிரம&#13;
யோதிகா பத்ததியில் அபரக்கிரியைகள் பற்றிப் பல விளக்கங்களைத் தெளிவாக&#13;
விபரித்துள்ளார். பதினெண் பத்ததிகளுள் அகோரசிவாச்சாரியார் பத்ததியே உரை&#13;
விளக்கத்துடன் ஆக்கப்பட்டதாகும். அபரக்கிரியைகள் சைவசித்தாந்தத் தெளிவோடு&#13;
நடைபெறுகின்றன. அபரக்கிரியைகளுள் பேரிதாடனம், சூர்ணோற்சவம், அந்தியேட்டி,&#13;
அஸ்திசஞ்சயனம், பாஷாணஸ்தாபனம், ஏகோதிட்டம், மாசிகம், சோதகும்ப சிரார்த்தம்,&#13;
சபிண்டீகரணம், சிரார்த்தம் போன்றவை அடிப்படையாக உள்ளன. அவற்றையே&#13;
இன்றுவரை பெரும்பாலும் பின்பற்றப்படுகின்றன. ஆயினும் அவற்றுள்ளும் காலச்&#13;
சூழமைவு, தேசவழமை, பொருளாதார வசதிப்பாடு, வேறுசில பத்ததிக்கலப்பு ஆகிய&#13;
காரணிகளால் அபரக் கிரியைகள் செய்வதில் மாற்றங்கள் காணப்படுகின்றன. அவற்றை&#13;
இக்கட்டுரை ஆராய்வதாக அமைகின்றது.
</summary>
<dc:date>2024-01-01T00:00:00Z</dc:date>
</entry>
<entry>
<title>மொழியியல் நோக்கில் இலக்கணமும் இலக்கண மரபுகளும்</title>
<link href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11224" rel="alternate"/>
<author>
<name>Nuhman, M.A.</name>
</author>
<id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11224</id>
<updated>2025-05-05T05:52:00Z</updated>
<published>2024-01-01T00:00:00Z</published>
<summary type="text">மொழியியல் நோக்கில் இலக்கணமும் இலக்கண மரபுகளும்
Nuhman, M.A.
நவீன மொழியியல் நோக்கில் இலக்கணம், இலக்கண மரபுகள் பற்றியும், இலக்கண மரபில்&#13;
ஏற்படும் மாற்றங்கள் பற்றியும் விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இலக்கணம்&#13;
என்றால் என்ன? இலக்கண மரபுகள் எவ்வாறு உருவாகின்றன? இலக்கண மரபுகளில்&#13;
மாறற் தது; கக் hன தேவை எனன் ? முதலிய வினாகக் ள் இகக் டடு; ரையில் விவாதிகக் பப் டுகினற் ன.&#13;
எழுதப்பட்ட இலக்கண நூல்களில் கூறப்பட்டுள்ளவையே இலக்கணம் என்றும், அவை&#13;
மீறபப் ட முடியாத விதிகள் எனறு; ம,; அதத் கைய நூலக் ள் இலல் hத மொழிகளுககு; இலகக் ணம்&#13;
இலi; ல எனறு; ம,; அதத் கைய நூலக் ளைப் படியாதவரக் ளுககு; இலகக் ணம் தெரியாது என்றும்&#13;
பொதுவாகக் கருதப்படுகின்றது. நவீன மொழியியல் இதனை ஏற்பதில்லை. மொழியின்&#13;
உள்ளார்ந்த அமைப்பே இலக்கணம் என்றும், இலக்கணம் இல்லாத மொழிகள் எவையும்&#13;
இல்லை என்றும், ஒரு மொழியைத் தாய்மொழியாகப் பேசுவோர் சிறுவயதிலிருந்தே அந்த&#13;
மொழியின் அமைப்பை உள்வாங்கிக் கொள்கின்றனர் என்றும், அவ்வகையில் ஒரு&#13;
மொழியைத் தாய்மொழியாகப் பேசுவோருக்கு அம்மொழியின் இலக்கணம் நன்கு தெரியும்&#13;
என்றும் மொழியியலாளர் நிறுவியுள்ளனர். தாய்மொழியாளரின் மூளையில் பதிந்துள்ள&#13;
இந்த இலக்கணத்தை அக இலக்கணம் (ஐஅpடiஉவை புசயஅஅயச) என்றும் அவர்கள் அழைப்பர்.&#13;
இலகக் ணகாரரக் ள் தாயn; மாழியாளரின் மூளையில் பதிநது; ளள் இநத் அக இலகக் ணைதi; தப்&#13;
பகுபப் hயவு; செயது; , அதன் விதிகளைக் கணட் றிநது; நூலாக எழுதுவதையே நாம் பொதுவாக&#13;
இலகக் ணம் எனக் pறோம.; இதை மொழியியலாளர் புற இலகக் ணம் (நுஒpடiஉவை புசயஅஅயச) என்பர்.&#13;
இவ்வாறு எழுதப்படும் புற இலக்கணங்கள் இலக்கண ஆசிரியர்களின் தேவை, திறமை,&#13;
கருத்துநிலை, காலம் என்பனவற்றுக்கு ஏற்ப வேறுபடும். இவ்வாறு வௌ;வேறு இலக்கண&#13;
ஆசிரியர்கள் ஒரு மொழியின் இலக்கண அமைப்பை எவ்வாறு விளக்கிவந்துள்ளனர்?&#13;
எத்தகைய வகைப்பாடுகளை மேற்கொண்டனர்? எத்தகைய கலைச் சொற்களைப்&#13;
பயன்படுத்தினர் போன்ற விடயங்கள் இலக்கண மரபு எனப்படும். இவ்வகையில் ஒரு&#13;
மொழியின் இலக்கண மரபுகள் வேறுபடுவதைக் காண்கின்றோம். இவ்வாறு நோக்கும் போது&#13;
இலக்கண மரபு நிலையானது அல்ல. அது காலப்போக்கில் மாறக்கூடியது. தமிழ் இலக்கண&#13;
மரபும் அவ்வாறே மாறிவந்துள்ளது. தமிழ் இலக்கண ஆசிரியர் மத்தியில் சில பொதுத்&#13;
தன்மைகளும் வேறுபாடுகளும் இருப்பதை தொல்காப்பியம் முதல் தொன்னூல் விளக்கம்&#13;
வரை நாம் காணலாம். மொழி மாறும்போது இலக்கண அமைப்பும் மாறுகின்றது.&#13;
அதற்கேற்ப இலக்கண மரபிலும் மாற்றம் ஏற்படுவது இயல்பே. தமிழ் இலக்கண மரபைப்&#13;
புரிந்துகொள்வதற்கும் அதை வளப்படுத்துவதற்கும் மொழியியல் அறிவு அவசியமாகும்.
</summary>
<dc:date>2024-01-01T00:00:00Z</dc:date>
</entry>
<entry>
<title>இலங்கையில் குடியுரிமையின் பரிணாம வளர்ச்சியும் தற்கால நிலையும்</title>
<link href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11222" rel="alternate"/>
<author>
<name>Yasmiya, K.</name>
</author>
<id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11222</id>
<updated>2025-05-05T05:48:15Z</updated>
<published>2024-01-01T00:00:00Z</published>
<summary type="text">இலங்கையில் குடியுரிமையின் பரிணாம வளர்ச்சியும் தற்கால நிலையும்
Yasmiya, K.
தற்போதைய இருபத்தோராம் நூற்றாண்டில் மிக முக்கியமான ஒரு கருத்தியலாகக்&#13;
குடியுரிமை பற்றிய சிந்தனை மாறியுள்ளது. இன்றுவரை குடியுரிமை தொடர்பான&#13;
தெளிவான அறிவுப் பிரஜைகள் மதத்pயில் மிகவும் குறைநத் ளவிலேயே காணபப் டுகினற் து.&#13;
ஏனெனில் இவ் எணண்கக் ருவானது காலத்திற்கேற்ப் மாறற் மடைந்ததும் வளர்ச்சியடைந்தும்&#13;
வருகின்றது. பொதுவாகக் குடியுரிமை என்பது ஒரு நாட்டின் சிறந்த குடிமகனாகவோ,&#13;
குடிமகளாகவோ இருப்பதற்கான உரிமையைக் குறித்து நிற்கின்றது. இவ்வுரிமையில்&#13;
அந்நாட்டு அரசியலில் பங்குகொள்ளும் உரிமையும் அடங்கும். சிவில், அரசியல், சமூக&#13;
குடியுரிமைகள் ஆரம்ப காலத்தில் அரசுகளிடையே முக்கியத்துவம் பெற்றன. இருப்பினும்&#13;
சமகாலத்தில் பிராந்தியக் குடியுரிமை, சர்வதேசக் குடியுரிமை, இரட்டைக் குடியுரிமை&#13;
என்பன முக்கியம் பெறுகின்றன. மனிதனின் சிறப்பான வாழ்விற்கு, குடியுரிமையானது&#13;
மிக அவசியமாகும். இலங்கையிலும் குடியுரிமை என்பது பல்வேறு பரிணாமங்களைக்&#13;
கொண்ட ஒன்றாகவும் குழப்பம் நிறைந்த ஒன்றாகவும் காணப்பட்டது. குறிப்பாக&#13;
இலங்கையில் குடியுரிமை தொடர்பான பிரச்சினை என்பது மிக அண்மைக் காலம்&#13;
வரையில் தீர்க்கப்படாத ஒன்றாகவே இருந்து வருகின்றது. அந்தவகையில் இரண்டாம்&#13;
நிலைத்தரவுகளை மையமாகக்கொண்டமைந்த இவ்வாய்வானது இலங்கையில்&#13;
குடியுரிமையின் பரிணாம வளர்ச்சியினையும் தற்காலத்தில் காணப்படும்&#13;
சிக்கல்களையும் விபரண ரீதியாகப் பகுப்பாய்வு செய்கின்றது. குடியுரிமைச் சட்ட&#13;
ஏற்பாடுகளின் பலம் மற்றும் பலவீனங்கள், நிலையான சமாதானத்தினைக் கட்டியெழுப்&#13;
புவதில் குடியுரிமை ரீதியான ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுத்திய தாக்கங்கள் என்பன இவ்&#13;
வாய்வின் ஊடாகக் கண்டறியப்பட்டுள்ளன.
</summary>
<dc:date>2024-01-01T00:00:00Z</dc:date>
</entry>
</feed>
