<?xml version="1.0" encoding="UTF-8"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">
<title>UoJ Publications</title>
<link href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/140" rel="alternate"/>
<subtitle/>
<id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/140</id>
<updated>2026-09-18T19:44:05Z</updated>
<dc:date>2026-09-18T19:44:05Z</dc:date>
<entry>
<title>உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகளும் பிரஜைகளின் திருப்தி நிலையும்: வலி தெற்கு பிரதேச சபையை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு</title>
<link href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/13075" rel="alternate"/>
<author>
<name>Thanuja, M.</name>
</author>
<author>
<name>Vigneswaran, T.</name>
</author>
<id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/13075</id>
<updated>2026-09-16T08:03:01Z</updated>
<published>2025-01-01T00:00:00Z</published>
<summary type="text">உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகளும் பிரஜைகளின் திருப்தி நிலையும்: வலி தெற்கு பிரதேச சபையை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு
Thanuja, M.; Vigneswaran, T.
ஒரு நாட்டில் உள்ள அரசானது அந்நாட்டில் வாழுகின்ற மக்களின் நலன்களை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட நிறுவனங்களே உள்ளூராட்சி அரசாங்கங்களாகும். அதனடிப் படையில் இலங்கையில் மாநகரசபைகள், நகரசபைகள், பிரதேசசபைகள் என்ற மூன்று வகையான உள்ளூராட்சி கட்டமைப்புக்கள் காணப்படுகின்றன. அந்தவகையில் பிரதேசசபைக் கட்டமைப்பான வலி தெற்கு பிரதேச சபையானது இலங்கையில் உயர்தரத்திலான சேவைகளினையும் உட்கட்டமைப்பு வசதியினையும் கொண்ட உள்ளூராட்சி அமைப்பாக விளங்குதல் எனும் தூரநோக்கினைக் கொண்டு தமது சேவைகளை நடைமுறைப்படுத்தி வருகின்றது. வலி தெற்கு பிரதேசமானது யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தின் மத்திய பகுதியில் 30.01 சதுர கிலோமீற்றர் பரப்பளவையும், 51612 மக்கள் தொகையினையும் உள்ளடக்கிய ஒரு பிரதேசமாக காணப்படுகின்றது. வலி தெற்கு பிரதேச சபையானது எவ்வகையான சேவைகளினை வழங்குகின்றது என்பதனை இணங்கண்டு அந்த சேவைகளை வலி தெற்கு பிரதேச சபை நடைமுறைப்படுத்துவதில் எதிர்நோக்குகின்ற சவால்கள் மற்றும் தடைகளினையும் ஆராய்வதாகவும் வலி தெற்கு பிரதேச சபையினால் இச் சேவைகளை நடைமுறைப்படுத்தும் போது அச்சேவைகள் தொடர்பாக மக்களின் மனோநிலை எவ்வாறு காணப்படுகின்றது என்பது தொடர்பாகவும் இவ்வாய்வானது ஆராய்கின்றது. மேலும் இவ் ஆய்வானது பண்புசார், அளவுசார் தரவுகள், தகவல்களினைக் கொண்டு புள்ளிவிபரவியல் விபரணப் பகுப்பாய்வு முறையினைப் பயன்படுத்தி ஆராயப்பட்டுள்ளது. அதாவது வலி தெற்கு பிரதேச மக்களுக்கு வலி தெற்கு பிரதேச சபையானது எவ்வாறான சேவைகளை வழங்குகின்றது அந்த சேவைகள் தொடர்பாக மக்கள் எவ்வாறான திருப்தி மட்டத்தில் உள்ளார்கள் என்பதனை அறிந்து கொள்வதாக முதலாம் நிலை தரவுகளான வினாக்கொத்து, குழுக்கலந்துரையாடல், நேர்காணல் முறைகளின் ஊடாக தரவுகள் பெற்றுக்கொள்ளப்பட்டது. மேலும் ஆய்விற்குத் தேவையான தரவுகளை ஆய்வுக்கட்டுரைகள், இணையதளங்கள், புத்தகங்கள், சஞ்சிகைகள், பிரதேச சபை ஆவணங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றம் தொடர்பான பாராளுமன்றச் சட்டங்கள் என இரண்டாம் நிலை தரவுகளின் மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆய்வின் மூலம் பெறப்பட்ட தரவுகள் மற்றும் தகவல்களின் பகுப்பாய்வின் அடிப்படையில் பரிந்துரையும் முடிவுரையும் முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே இவ் ஆய்வின்படி வலி தெற்கு பிரதேச சபையினால் வழங்கப்படுகின்ற சேவைகள் குறித்த பிரதேச மக்களுக்கு போதுமானவையாகவும் அவர்களை திருப்திப்படுத்தக் கூடியதாகவும் அமைந்துள்ளதா? என்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. எனினும் இவ் ஆய்வின் பிரகாரம் வலி தெற்கு பிரதேச சபையினால் வழங்கப்படுகின்ற சேவைகள் குறித்த பிரதேச மக்களுக்கு போதுமானவையாகவும் அவர்களினை திருப்திப்படுத்த கூடியதாகவும் அமைய வில்லை என்ற ஆய்வு முடிவானது ஆதாரங்களின் மூலம் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.
</summary>
<dc:date>2025-01-01T00:00:00Z</dc:date>
</entry>
<entry>
<title>மாத்தளை மாவட்டத்தின் அம்பங்கங்க கோரளை பிரதேச செயலகப் பிரிவின் தேயிலை நிலப்பரப்பு மாற்றம் (2001-2024): தொலையுணர்வு தொழில்நுட்பம் மற்றும் புவியியல் தகவல் ஒழுங்கினை அடிப்படையாக கொண்ட ஆய்வு</title>
<link href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/13074" rel="alternate"/>
<author>
<name>Anusha, P.</name>
</author>
<author>
<name>Subajini, U.</name>
</author>
<author>
<name>Padmanathan, P.</name>
</author>
<id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/13074</id>
<updated>2026-09-16T07:57:53Z</updated>
<published>2025-01-01T00:00:00Z</published>
<summary type="text">மாத்தளை மாவட்டத்தின் அம்பங்கங்க கோரளை பிரதேச செயலகப் பிரிவின் தேயிலை நிலப்பரப்பு மாற்றம் (2001-2024): தொலையுணர்வு தொழில்நுட்பம் மற்றும் புவியியல் தகவல் ஒழுங்கினை அடிப்படையாக கொண்ட ஆய்வு
Anusha, P.; Subajini, U.; Padmanathan, P.
அயன மண்டல நாடுகளில் நிலப்பயன்பாட்டு மாற்றத்தில் தேயிலைச்செய்கை பிரதான காரணியாக உள்ளது. தேயிலை உலகளாவிய ரீதியில் மூன்று மில்லியன் மக்களால் விரும்பி பருகப்படும் மருத்துவ பானமாகவும் நீண்டகால வர்த்தக பணப்பயிராகவும் காணப்படுகின்றது. அந்தவகையில் இலங்கை தேயிலை தரத்திலும் சுவையிலும் மணத்திலும் தனக்கென ஒரு இடத்தை இன்று வரை தக்கவைத்து வருகின்றது. எனினும் தற்காலத்தில் காலநிலை மாற்றம், மலையக மாணவர்களின் கல்வியில் ஏற்பட்ட வளர்ச்சி, தனியாருக்கு தேயிலை நிலங்களை விற்பனை செய்தல் மற்றும் போதிய வருமானம் இன்மை ஆகிய காரணங்களினால் தொழி லாளர் எண்ணிக்கை படிப்படியாக குறைவடைந்து செல்கின்றது. இதன் விளைவாக பராமரிப்பு மிகக் குறைவாக காணப்படுகின்றமையினால் தேயிலை நிலப்பரப்பு குறைவடைந்து செல் கின்றது. இதன் தீவிரத்தன்மையினை எடுத்துக்காட்டும் வகையில் மாத்தளை மாவட்டத்தின் அம்பங்கங்க கோரளை பிரதேச செயலகப் பிரிவில் தேயிலை நிலப்பரப்பு மாற்றம் எனும் தலைப்பில் தொலையுணர்வு தொழில்நுட்பம் மற்றும் புவியியல் தகவல் ஒழுங்கினை அடிப்படையாக கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வினூடாக தேயிலை நிலப்பரப்பின் இடம்சார் மற்றும் காலம்சார் ரீதியிலான மாற்றங்களை எடுத்துக் காட்டுதல், தேயிலை நிலப்பரப்பு மாற்றத்திற்கான காரணங்களை கண்டறிதல் மற்றும் தேயிலை நிலப்பரப்பு மாற்றத்தினால் ஏற்படுகின்ற பாதிப்புகளை கண்டறிதல் போன்ற நோக் கங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவ்வாய்விற்காக நிலப்பயன்பாட்டுப்படம், பிரதேசசெயலக பிரிவிலிருந்து வளத்திரட்டு பதிவேடு, மற்றும் தோட்ட தொழிலாளர்களின் விபரம் ஆகிய இரண்டாம்நிலை தரவுகளும் நேர்காணல், இலக்குக்குழு கலந்துரையாடல், நேரடி அவ தானம் ஆகியவற்றின் மூலம் முதலாம்நிலை தரவுகளும் சேகரிக்கப்பட்டன. தேயிலை நிலப் பரப்பு குறைவடைவதனை எடுத்துக்காட்ட புவியியல் தகவல் ஒழுங்கு மற்றும் தொலையுணர்வு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி நிலப்பயன்பாட்டு மாற்ற பகுப்பாய்வு செய்யப்பட்டது. முதலாம் நிலை தரவுகள் கருப்பொருள் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு தேயிலை நிலப்பரப்பு குறைவடைவதற்கான காரணங்கள் மற்றும் அதனால் ஏற்படுகின்ற பாதிப்புகள் கண்டறியப்பட்டன. இவற்றினை அடிப்படையாகக் கொண்டு தொழிலாளர்களின் எண் ணிக்கை குறைவடைதல், போதிய வருமானம் கிடைக்காமை, மலையக சமூகத்தில் கல்வியில் ஏற்பட்ட மாற்றம், சுய தேவைக்காக நிலங்களைப் பயன்படுத்துதல், அபிவிருத்தி நடவடிக்கைகள், பொருளாதாரப் பல்வகைபடுத்தல் போன்ற தேவைகளுக்காக தேயிலை நிலமானது ஆக்கிரமிக்கப்படுகின்ற போது அங்கு தேயிலை நிலப்பரப்பானது குறைவடைந்து செல்கின்றது. இவ்வாறு தேயிலை நிலப்பரப்பு குறைவடைந்து செல்கின்றமையால் அதனை நம்பிய தொழிலாளர்களின் வருமானம் குறைவடைகின்றது. அத்துடன் இவர்களின் வேலை நாட்களின் அளவும் குறைவடைகின்றது. இதன் விளைவாக வேறு தொழிலை நோக்கிய இடப்பெயர்வு,தேயிலை நிலங்கள் கைவிடப்பட்ட நிலமாக மாறுதல், காட்டு விலங்குகளின் ஊடுருவல் போன்ற பாதிப்புக்களை ஏற்படுத்தியமை அடையாளம் காணப்பட்டுள்ளன. இவ் வாய்வினூடாக தீர்வுகளும் பரிந்துரைகளும் அரசு, நிறுவனம், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு முன்வைக்கப்பட்டன. அதாவது காலநிலைக்கு தாக்குபிடிக்க கூடிய புதிய தேயிலை இனங்களை அறிமுகப்படுத்தல், நில உரிமைகளை தேயிலை தொழி லாளர்களுக்கு வழங்குதல், தேயிலை நிலப்பரப்பு குறைவடைவதற்கான பொறுப்புக்கூறலை கட்டாயப்படுத்தல், தேயிலை தொழிலாளர்களின் சம்பளத்தினை உயர்த்துதல் அல்லது தொழிலாளர்களைக் கொண்டு இயந்திரமயப்படுத்தல் போன்ற நடவடிக்கையினூடாக தேயிலை நிலப்பரப்பை பராமரிக்கவும் அதனுடைய நிலப்பரப்பின் அளவு குறைவடைவதை தடுக்கக்கூடியதாகவும் இருக்கும் என்பதையே இவ்வாய்வு வெளிக்கொணர்கிறது.
</summary>
<dc:date>2025-01-01T00:00:00Z</dc:date>
</entry>
<entry>
<title>கலைப்பிரிவு மாணவிகளின் மாதவிடாய் சுகாதாரம் தொடர்பான அறிவு, உளப்பாங்கு மற்றும் நடைமுறைச்செயற்பாடுகள் : ஹட்டன் கல்வி வலய (1C) பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு மருத்துவ சமூகவியல் ஆய்வு</title>
<link href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/13073" rel="alternate"/>
<author>
<name>Shriyani, S.</name>
</author>
<author>
<name>Sivakanthan, S.</name>
</author>
<id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/13073</id>
<updated>2026-09-16T07:48:22Z</updated>
<published>2025-01-01T00:00:00Z</published>
<summary type="text">கலைப்பிரிவு மாணவிகளின் மாதவிடாய் சுகாதாரம் தொடர்பான அறிவு, உளப்பாங்கு மற்றும் நடைமுறைச்செயற்பாடுகள் : ஹட்டன் கல்வி வலய (1C) பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு மருத்துவ சமூகவியல் ஆய்வு
Shriyani, S.; Sivakanthan, S.
மாதவிடாய் என்பது பெண்களின் இனப்பெருக்க வயதில் தோற்றம் பெறும் இயல்பான ஒரு உடலியல் செயன்முறை ஆகும். மாதவிடாய் சுகாதாரம் குறித்து பருவ வயதுப் பெண்களி டையே காணப்படும் குறைந்தளவான அறிவு, தவறான உளப்பாங்குகள் மற்றும் வழிகாட் டல்கள் மாதவிடாய் சுகாதார நடைமுறைகளைப் பாதிக்கின்றன. மேலும் ஹட்டன் கல்வி வலய 20 (1C) பாடசாலைகளில் க.பொ.த உயர்தர கலைப்பிரிவு மாணவிகள் மத்தியில் மாதவிடாய் சுகாதாரம் குறித்த அறிவு, உளப்பாங்கு மற்றும் நடைமுறைச் செயற்பாடுகளை மதிப்பிடுதல் ஆய்வின் பிரதான நோக்கமாகும். பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்ட குறித்த ஆய் வில் விபரணக் குறுக்குவெட்டு கலப்பு முறைகள் (Descriptive cross- sectional mixed methods) ஆய்வு வடிவத்தைப் பயன்படுத்தி, நுவரெலியா மாவட்டத்தின் ஹட்டன் கல்வி வலயத்தின் 20 (1C) பாடசாலைகளில் 428 கலைப்பிரிவு மாணவிகள் அடுக்கமைக்கப்பட்ட எழுமாற்று மாதிரி நுட்பத்தின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சுயமாக நிர்வகிக்கும் வினாக்கொத்து, நேர்காணல், விடய ஆய்வு மற்றும் குவிமையக் குழுக்கலந்துரையாடல் போன்றன மூலம் முதலாம் நிலைத் தரவுகள் சேகரிக்கப்பட்டன. ஆய்வின் அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் ஆய்வு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டன. கணியம்சார் தரவுகள் SPSS (verson - 22): உதவியுடன் விபரணப் புள்ளிவிபரவியல் பகுப் பாய்விற்கு உட்படுத்தப்பட்டது. பண்புசார்தரவுகள் கருப்பொருள் பகுப்பாய்விற்கும் உட்படுத் தப்பட்டது. ஆய்வின் முடிவுகளின்படி பெருந் தோட்டத்துறைப் பாடசாலைகளில் க.பொ.த உயர்தர கலைப்பிரிவு மாணவிகள் மத்தியிலான மாதவிடாய் சுகாதாரம் குறித்த சிறந்த அறிவு (21.5%) ஆக உள்ளது, திருப்திகரமான அறிவு (43.2%) ஆகவும், குறைந்த அளவி லான அறிவினை (35.3%) ஆனோரும் கொண்டுள்ளனர். மாதவிடாய் சுகாதாரம் குறித்த உளப் பாங்கு பற்றிய முடிவுகளில், மாதவிடாய் என்பது ஆண்களுக்குக் கூற விரும்பாத விடயமாக வும், மாதவிடாய்க் காலங்களில் எரிச்சலாகவும், பதட்டமாகவும், உற்சாகமற்ற பொழுது களாகவும் உணர்வதாகவும் வெளிப்படுத்தி உள்ளனர். மாதவிடாய் சுகாதாரம் தொடர்பான நடைமுறைச் செயற்பாட்டில் (86%) ஆனோர் பேட் (Pad) பயன்பாட்டினையும், (14%) ஆனோர் தனித் துணிப்பாவனையையும் மட்டும் பயன்பாட்டில் கொண்டுள்ளனர். மேலும் (77%) ஆனோர் மாதவிடாய்க் காலங்களில் கற்றல் செயல்பாடுகள் தடையாக உள்ளதாகக் குறிப்பிட் டனர். துணி அல்லது பேட்களை (60%) ஆனோர் ஒரு நாளில் நான்கு தடவைகள் மாற்றுகின்றனர். மாணவிகள் மத்தியில் மாதவிடாய் சுகாதாரம் குறித்த அறிவு, மனப்பாங்கு, நடைமுறைச் செயற்பாடுகளில் தீட்டு அல்லது துடக்கு போன்ற கலாசார நம்பிக்கைகளின் செல்வாக்கு அவர்களின் மாதவிடாய் சுகாதார முகாமைத்துவத்திற்குப் பாரிய சவாலாக உள்ளது. பாட சாலைகளில் மாதவிடாய் சுகாதாரம் தொடர்பான உரிய சுகாதாரக்கல்வியினை வழங்குவதன் மூலம் மாதவிடாய் சுகாதாரம் குறித்த அறிவு, உளப்பாங்கு மற்றும் நடைமுறைச் செயற்பாடு களில் முன்னேற்றத்தினை ஏற்படுத்த முடியும்.
</summary>
<dc:date>2025-01-01T00:00:00Z</dc:date>
</entry>
<entry>
<title>சைவ சித்தாந்த வைஷ்ணவ வேதாந்த நோக்கில் அளவைப் பிரமாணங்கள் ஓர் ஒப்பீடு</title>
<link href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/13072" rel="alternate"/>
<author>
<name>Sachithanantham, P.</name>
</author>
<id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/13072</id>
<updated>2026-09-16T07:30:05Z</updated>
<published>2025-01-01T00:00:00Z</published>
<summary type="text">சைவ சித்தாந்த வைஷ்ணவ வேதாந்த நோக்கில் அளவைப் பிரமாணங்கள் ஓர் ஒப்பீடு
Sachithanantham, P.
அளவைப் பிரமாணங்களைக் கையாண்டு பௌதிகவதீத உண்மைகளை வியாக்கியானப் படுத்தும் முறைமை இந்திய மெய்யியலில் மிக நீண்ட கால பாரம்பரியத்தைக் கொண்டு விளங்குகின்றது. குறிப்பாக சைவ சித்தாந்திகள் அதனைச் சிறப்பாக எடுத்தாண்டுள்ளனர். அதேபோல வைஷ்ணவ வேதாந்திகளும் பிரமாணங்களை எடுத்துக்காட்டி பௌதிகவதீத உண்மைகளை விளக்கியுள்ளனர். இவ்வாய்வானது சைவ சித்தாந்திகள் மற்றும் வைஷ்ணவ வேதாந்திகள் எவ்வாறு தத்தம் நியாயப்பாடுகளை முப்பொருள் தத்துவங்களை நிறுவிப்பதற்கு கையாண்டுள்ளனர் என்பதனை எடுத்துக்காட்ட விளைகின்றது. அத்தோடு சைவசித்தாந்திகள் எவ்வாறு தமக்கென தனித்துவமான பிரமாணங்களைக் கையாண்டு அவற்றை விளக்கியுள்ளனர், வைஷ்ணவ வேதாந்திகள் எவ்வாறு தமது கருத்துக்களை பிரமாணங்களின் வழி எடுத்தாண்டுள்ளனர் என்பதனை வெளிக் கொண்டு வருகின்றது. அதற்கு அவர்கள் எடுத்துக்காட்டியுள்ள மூலநூல்கள், இலக்கியங்கள், உரைநூல்கள் அவற்றின் மொழிபெயர்ப்புக்கள், போன்றன பயன்படுத்தப்பட்டுள்ளன. வேதாந்த நோக்கில் சைவ சித்தாந்தமும் வைஷ்ணவ வேதாந்தமும் பிரமாணங்களை கையாண்டுள்ள முறை இரு சமய தத்துவ முறைகள் பிரமாணங்களை கையாளுதல் எனும் ஒரு பொதுத்தளத்தில் ஒன்றுபட்டு பயணித்துள்ளன. எண்ணிக்கை அடிப்படையில் பிரமாணங்களை ஏற்றுக் கொள்வதில் இரு தத்துவ முறைகளுக்கும் இடையே வேறுபாடுகள் காணப்பட்டாலும் பொதுவாக பிரமாணங்களை அடிப்படையாகக் கொண்டே இரு தத்துவ முறைகளும் மெய்ப்பொருள் உண்மையை எடுத்தாண்டுள்ளன.
</summary>
<dc:date>2025-01-01T00:00:00Z</dc:date>
</entry>
</feed>
