Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12963
Full metadata record
DC FieldValueLanguage
dc.contributor.authorKumaran, E.-
dc.date.accessioned2026-09-01T09:40:52Z-
dc.date.available2026-09-01T09:40:52Z-
dc.date.issued2024-
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12963-
dc.description.abstractஈழத்துத் தமிழ்க் கவிதை உலகிற்கு 1950 இல் அறிமுகமான கவிஞர்களுள் ஒருவர் பசுபதி. இடதுசாரி இயக்கங்களுடன் தன்னை இனங்காட்டி வந்த இவர் சமகாலத்தில் ஈழத்திலிருந்தும் தமிழகத்திலிருந்தும் வெளியான பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் கவிதைகளை எழுதியுள்ளார். அவரது இறப்பின் பின்னர் அவை தொகுக்கப்பட்டுப் 'புது உலகம்' என்ற பெயரில் வெளிவந்துள்ளன. பசுபதியின் கவிதைகளில் பெரும்பாலானவை மானுடவிடுதலை சார்ந்தன. பொதுவுடைமைச் சிந்தனைகளின் பின்னணியில் சமூகத்தையும் அதில் உள்ள அசமத்துவத்தையும் விமர்சித்து, ஏற்றத்தாழ்வற்ற சமூகத்தினைக் காண்பதற்கான வழியினை இனங்காட்டுவனவாக அவை உள்ளன. அவரது கவிதைகளைப் பகுப்பாய்வு செய்வதன் மூலம் அவற்றின் ஊடாக அறியப்படும் மானுட விடுதலை பற்றிய கருத்துக்களையும் அவற்றின் கனதியினையும் வெளிப்படுத்துவதே இந்த ஆய்வின் பிரதான நோக்கமாகும். மேலும் மானுட விடுதலை பற்றிக் கவிதைகளை எழுதிய ஆரம்பகாலக் கவிஞர் என்ற வகையில் அவரது கவிதைகள் பிற்காலங்களில் இந்த விடயத்தினைக் கவிதைகளில் கையாண்டவர்களுக்கு எவ்வாறு முன்மாதிரியாக அமைந்தன என்பதை அறிந்து கொள்ள முனைவது இவ்வாய்வின் துணை நோக்காக அமைகின்றது. இந்த ஆய்வு விவரண ஆய்வு முறையியலின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றது. பகுப்பாய்வு, ஒப்பீட்டு அணுகுமுறைகள் முறையே அவரது படைப்பினை நுனித்து நோக்குவதற்கும் மதிப்பிடுவதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆய்விற்கான முதனிலை ஆதாரமாகப் புது உலகம் கவிதைத் தொகுதியில் உள்ள கவிதைகள் பயன்படுத்தப்படுவதோடு, துணை ஆதாரங்களாகப் புதுஉலகம் தொகுதிக்கு எழுதப்பட்ட விமர்சனங்கள், இரசனைக் குறிப்புக்கள் என்பனவும் கவிஞர் பசுபதி பற்றிய கட்டுரைகளும் எடுத்தாளப்படுகின்றன. இந்த ஆய்வின் மூலம் கவிஞர் பசுபதி தனது கவிதைகளில் வெளிப்படுத்தியுள்ள மானுட விடுதலை பற்றிய கருத்துக்கள், அவற்றின் கனதி, முன்மாதிரி என்பனவற்றை விளங்கிக் கொள்ள முடிவதோடு இத்தகைய கருத்துக்களை வெளிப்படுத்தும் போது அவர் கலைத்துவத்தினைப் பேணிக்கொண்ட முறையினையும் அறிந்து கொள்ள முடியும்en_US
dc.language.isootheren_US
dc.publisherUniversity of Jaffnaen_US
dc.subjectபசுபதிen_US
dc.subjectமானுடவிடுதலைen_US
dc.subjectமுற்போக்குen_US
dc.subjectபொதுவுடைமைen_US
dc.titleகவிஞர் பசுபதியின் கவிதைகளில் மானுடவிடுதலை நோக்குen_US
dc.typeConference paperen_US
Appears in Collections:Tamil



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.