<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
  <channel>
    <title>DSpace Collection:</title>
    <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/97</link>
    <description />
    <pubDate>Mon, 18 May 2026 06:49:36 GMT</pubDate>
    <dc:date>2026-05-18T06:49:36Z</dc:date>
    <item>
      <title>இலங்கையின் ஐதீக கதைமரபுகளில் விஐயன் மற்றும் உக்கிரசிங்கன் மாருதப்புரவீகவல்லி கதைகள்  ஓர் ஒப்பீட்டாய்வு</title>
      <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12654</link>
      <description>Title: இலங்கையின் ஐதீக கதைமரபுகளில் விஐயன் மற்றும் உக்கிரசிங்கன் மாருதப்புரவீகவல்லி கதைகள்  ஓர் ஒப்பீட்டாய்வு
Authors: Sajitharan, S.
Abstract: எழுத்துக்களின் உருவாக்கத்திற்கு முன்னரான வரலாற்றுக்கு முற்பட்டகால வரலாற்றினை விளக்குவதில் ஐதீக கதைமரபுகளுக்கு முக்கிய பங்குண்டு. இவை ஒரு பிரதேசத்தின் அல்லது நாட்டின் வழமைகளை அல்லது தொன்மையை விளக்குவதன் பொருட்டு எடுத்துரைக்கப்படுவதால் அப்பிரதேசத்திற்குரிய தொட்டுணர முடியாத மரபுரிமைச் சொத்துக்களாகவும் விளங்குகின்றன. ஆசியாவின் தொன்மையான அரச உருவாக்கமானது பெரும்பாலும் ஐதீககதை மரபுகளுடன் தொடர்ப்புபடுத்தப்பட்டிருப்பது பொதுவானதொரு பண்பாக காணப்பட்டிருந்தது. இப்பண்பினை கௌண்டின்யர், விஐயன், அர்ச்சுனன் கதைமரபுகளுக்கிடையிலான ஒற்றுமைகளுடாக காணமுடிகின்றது. இக்கதை மரபுகள் மிகநீண்டதொரு தொன்மையான வரலாற்றினை விளக்குவதன் பொருட்டு பல வடிவங்களிலும், இலக்கிய காவியப்பண்பிற்குகேற்ப மாற்றமடைந்த வகையிலும், காலவரன்முறையற்ற வகையிலும் வரலாற்று இலக்கியங்களில் இடம்பிடித்தன. இதனால் ஐதீக்கதைமரபுகளில் நம்பகத்தன்மையை எதிர்பார்க்கமுடியாதெனிலும் அவற்றிலும் ஒரு சில தொன்மைச் சான்றுகளிருப்பதனை மறுப்பதற்கில்லை. இதனை பிற்கால தொல்லியல் ஆய்வுகளுடன் ஐதீககதைமரபுகளை ஒப்பிட்டு ஆராய்வதனூடாகவே அறிந்துகொள்ளலாம். இந்தவகையில் தமிழ் மக்களிடையே செல்வாக்கு பெற்றிருக்கின்ற உக்கிரசிங்கமன்னன், மாருதப்புரவீகவல்லி பற்றிய வரலாற்றுக் கதைகளை இலங்கை வரலாறு பற்றி எழுந்த விஐயனது வரலாற்றுக் கதையுடன் ஒப்பிட்டு, வடஇலங்கை அரசமரபின் தோற்றம் பற்றிய ஆய்வில் அக்கதையின் வகிபாகத்தை மதிப்பீடு செய்வதே இவ்வாய்வின் பிரதான நோக்கமாக அமைகின்றது. இவ்வாய்வின் இன்னொரு நோக்கமாக விஐயனது வரலாற்றுக்கதை மற்றும் உக்கிரசிங்கமன்னன், மாருதப்புரவீகவல்லி கதை ஆகியவற்றில் வரும் வரலாற்றுச் சம்பவங்களினை தொல்லியல் ஆதாரங்களுடன் ஒப்பிட்டு, கதையின் உண்மைத் தன்மையை மீளாய்வு செய்வதாகவும் அமைகின்றது. இவ்வாய்வு நோக்கங்களை நிறைவுசெய்வதன் பொருட்டு ஆய்வுடன் தொடர்புடைய வரலாற்றுக் கதைகளினை உள்ளடக்கியுள்ள மூலநூல்களிலிருந்தும், இம்மூலநூல்களினை அடிப்படையாகக் கொண்டெழுந்த இரண்டாம்தர நூல்களிருந்தும் தரவுகள் பெறப்பட்டிருப்பதுடன், இரண்டாம்தர தரவுகள் தொல்லியல் களப்பயணங்கள், நேரடி நேர்காணல் ஊடாகவும் சேகரிக்கப்பட்டுள்ளன. முதல்தர தரவுகள் இரண்டாம்தர தரவுகளுடன் ஒப்பிட்டு ஆராயப்பட்டு அதனை பகுப்பாய்வு செய்வதாகவே இவ்வாய்வு அமைகின்றது.</description>
      <pubDate>Sat, 01 Jan 2022 00:00:00 GMT</pubDate>
      <guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12654</guid>
      <dc:date>2022-01-01T00:00:00Z</dc:date>
    </item>
    <item>
      <title>யாழ்ப்பாணத்தின் தென்மராட்சிப் பிரதேசத்திற்குரிய கலாசார மரபுரிமைச் சின்னங்கள் : ஓர் ஆய்வு</title>
      <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12653</link>
      <description>Title: யாழ்ப்பாணத்தின் தென்மராட்சிப் பிரதேசத்திற்குரிய கலாசார மரபுரிமைச் சின்னங்கள் : ஓர் ஆய்வு
Authors: Sajitharan, S.
Abstract: யாழ்ப்பாணத்தின் தென்மராட்சி பிரதேசம் புவியியல் ரீதியாக வடக்கில் தொண்டைமனாறு கடல்நீரேரி, தெற்கில் யாழ்குடா கடல்நீரேரி மற்றும் பூநகரிப் பிரதேசம், மேற்கில் நாவற்குழி, செம்மணிப் பாலம், உப்பாறு கடல்நீரேரி, கிழக்கில் பச்சிலைப்பள்ளி பிரதேசம் ஆகியவற்றை எல்லைகளாக கொண்டுள்ளது. இந்த புவியல் அமைப்பும், கச்சாய், இயற்றாலை போன்ற தொன்மையான துறைமுக நகரங்களும், தென்மராட்சியின் அண்மைப் பகுதிகளான பூநகரி, அம்பனை, குடத்தனை, வல்லிபுரம், நாகர்கோவில், வெற்றிலைக்கேணி, உடுத்துறை போன்றவற்றின் அமைவு போன்றனவெல்லாம் இப்பிரதேசத்தில் தொன்மையான குடியிருப்பின் தோற்றத்திற்கும், அதன் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும், பண்பாட்டுத் தொடர்புகளுக்குமான சாதகத் தன்மையினை உறுதிப்படுத்துகின்றன. 1980 களில் கலாநிதி. பொ.ரகுபதியால் யாழ்குடாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகளில் தென்மராட்சிப் பிரதேசத்தில் உள்ள கல்வளை (தாவளை இயற்றலை) - மந்துவில், சங்கிலியன்திடல் - வரணி, பங்குனிப்பிட்டி - வரணி, கச்சாய் போன்ற மையங்கள் உள்ளடங்குகின்றன. இங்கு இடம்பெற்ற ஒருசில ஆய்வுகள் ஊடாக கிடக்கப்பெற்ற புராதனகால, இடைக்கால நாணயங்கள், சுண்ணாம்புக்கல், செங்கல் கட்டிட பாகங்கள், உரோம, சீன மட்பாண்டங்கள், எண்ணிக்கையில் அதிகமான உரோமநாணயங்கள், சங்ககாலத்திற்கு சமகாலத்திற்குரியதான நடுகல் வழிபாட்டு முறைகள் என்பவையெல்லாம் இப்பிரதேசத்தின் தொன்மை வரலாற்றிற்கு மிகச்சிறந்த சான்றுகளாகும். பாளி, சிங்கள, மற்றும் யாழ்ப்பாண அரசு தொடர்பாக எழுந்த தமிழ் இலக்கியங்களில் இடம்பெறும் வரலாற்றுச் சம்பவங்கள், வரலாற்றுக்கதைகள் என்பன தென்மராட்சிப் பிரதேசத்திற்கு உட்பட்ட பலஇடங்களுடன் தொடர்ப்புபடுத்தப்படுவதும், 12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழச்சாசனங்கள் வடஇலங்கை மீதான சோழப்படையெடுப்பின் போது வெற்றிகொள்ளப்பட்ட இடங்களில் தென்மராட்சிக்குட்பட்ட மட்டுவில் (மட்டுவால்) பிரதேசத்தினைக் குறிப்பிடப்பட்டுள்ளமையும் இப்பிரதேசத்தின் தொன்மைக்கு வலுச்சேர்க்கிறது. இந்நிலையில், தென்மராட்சிப் பிரதேசத்தில் இதுவரை முறையாகத் திட்டமிடப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்படாமலிருப்பது அதன் தொன்மை வரலாற்றை முழுமையாக வெளிகொணர முடியவில்லையெனலாம். அத்துடன் இப்பிரதேசத்திற்குரிய கலாசார மரபுரிமைச் சின்னங்கள் இன்னும் முழுமையாக ஆவணப்படுத்தி, ஆய்வுக்குட்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒருசில கலாசார மரபுரிமைச் சின்னங்கள் அடையாளப்படுத்தப்பட்ட போதிலும் அவை பிற்கால மாறுதல்களுக்கு உட்பட்ட நிலையிலும், பல்வேறான காரணங்களால் காலத்துக்கு காலம் மாற்றங்களுக்குள்ளாகி, சிதைவடைந்து வருகின்றன. இவ்வாறானதொரு நிலையில் தென்மராட்சிப் பிரதேசத்திற்குரிய கலாசார மரபுரிமைச் சின்னங்களை முறையாக ஆவணப்படுத்தி, அவற்றின் வரலாற்று முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதும், அவற்றின் பாதுகாப்பில் பின்பற்றப்பட வேண்டிய நடவடிக்கைகளை முன்மொழிதலும், அதனூடாகப் இப்பிரதேசம் அடையக்கூடிய நன்மைகளை ஆராய்வதனையும் இவ்வாய்வு நோக்கங்கங்களாகக் கொண்டுள்ளது. இவ்வாய்வு நோக்கங்களினை நிறைவு செய்வதன் பொருட்டு நேரடி களவாய்வின் ஊடாக முதன்நிலைத்தரவுகள் பெறப்படுவதுடன், ஏனைய இலக்கிய, தொல்லியல் சான்றுகளினையும் இரண்டாம்தர தரவுகளாகக் கொண்டு, அவற்றினை ஒப்பிட்டு ஆராய்வதனூடாக இவ்வாய்வு மேற்கொள்ளப்படும்.</description>
      <pubDate>Sat, 01 Jan 2022 00:00:00 GMT</pubDate>
      <guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12653</guid>
      <dc:date>2022-01-01T00:00:00Z</dc:date>
    </item>
    <item>
      <title>Protests against casteism in the social reform discourse of the thanthai periyar: a historical review</title>
      <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11638</link>
      <description>Title: Protests against casteism in the social reform discourse of the thanthai periyar: a historical review
Authors: Arunthavaraja, K.; Dinosha, S.
Abstract: This study critically examines the anti-caste reformist interventions of erode Venkata Ramasamy (Thanthai Periyar), focusing on his pivotal role in reshaping the socio-political landscape of early twentieth-century tamil nadu. While critiques of caste hierarchy and untouchability had intermittently emerged within indigenous intellectual traditions, colonial transformations particularly the spread of modern education, liberal legal reforms, and print culture enabled such critiques to attain sustained public visibility. Through the self- respect movement, founded in 1925, periyar advanced a systematic and uncompromising challenge to caste orthodoxy and religious conservatism. His rationalist, humanist, and egalitarian ideology sought the abolition of untouchability, the promotion of inter-caste marriage, the democratization of educational and occupational access, and temple entry for all communities. Despite resistance from dominant caste groups and religious institutions, periyar’s activism catalyzed enduring shifts in public consciousness. Though tangible structural changes during his lifetime were limited, his ideas profoundly influenced later struggles for social justice and equality in South India. This research adopts a historically grounded methodology, integrating   primary sources including speeches, writing, and organizational documents with secondary academic scholarship. By situating Periyar’s activism within broader anti-caste movements in colonial and postcolonial India, it underscores his enduring legacy in shaping contemporary debates on caste, identity, and structural reform.</description>
      <pubDate>Wed, 01 Jan 2025 00:00:00 GMT</pubDate>
      <guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11638</guid>
      <dc:date>2025-01-01T00:00:00Z</dc:date>
    </item>
    <item>
      <title>தமிழிலக்கியங்களினூடாக பௌத்தப் பரவலாக்கம்; மணிமேகலையை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு</title>
      <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11637</link>
      <description>Title: தமிழிலக்கியங்களினூடாக பௌத்தப் பரவலாக்கம்; மணிமேகலையை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
Authors: Kayathiry, J.; Dinosha, S.
Abstract: தமிழில் தோன்றிய இலக்கியங்களில் சமயம் சார்ந்தவை என்ற வகையில் &#xD;
காப்பியம் குறிப்பிடத்தக்கது. சங்கமருவிய காலத்தில் எழுந்த பெருங்காப்பியமான மணிமேகலை இலக்கியமானது தமிழ் பௌத்தப் பரவலாக்கத்தில் முக்கிய பங்காற்றியுள்ளது. இந்தியாவில் அக்காலச் சூழலில் மக்கள் மத்தியில் அறம் போதிக்க வேண்டிய &#xD;
போதிக்க வேண்டிய தேவை உணரப்பட்டு கூலவாணிகன் சாத்தனாரால் பௌத்த அறம் முன்வைக்கப்பட்டது. நூலில் சிறந்த இலக்கிய இரசனையூடாகவும் நல்ல கதாபாத்திரங்களினூடாகவும் உப கதைகள் மூலமாகவும் பௌத்த தத்துவக் கருத்துக்கள் எளிமையான முறையில் கூறப்பட்டுள்ளன. புத்தரையும் புத்த மதக்கொள்கைகளையும் பாராட்டி நிற்பது இவ் இலக்கியத்தின் சிறப்பம்சமாகும். மணிமேகலை என்ற பெண்ணே பௌத்த சமயத் துறவியாகிறாள். பௌத்த தத்துவார்த்த கருத்துக்களான பிறப்பு நிலையாமை, நல்வினை தீவினை, துன்பம், துறவு, துறவுக்கான வழிகள், பஞ்சசீலக் கொள்கைகள், ஊழ்வினைக் கோட்பாடு, மறுபிறப்பு, பன்னிரு நிதானங்கள் என்பன பரவலாக்கம் செய்யப்பட்டள்ள விதத்தை முன்வைப்பதே இவ் ஆய்வின் நோக்கமாகும். இன்று தமிழ் பௌத்த நகர்வு பற்றிய சிந்தனையும் ஆராயப்பட வேண்டியதே. இவ்வகையில் விபரண ஆய்வு, பகுப்பாய்வு முறைகள் கையாளப்படுகின்றன.</description>
      <pubDate>Fri, 01 Jan 2021 00:00:00 GMT</pubDate>
      <guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11637</guid>
      <dc:date>2021-01-01T00:00:00Z</dc:date>
    </item>
  </channel>
</rss>

