<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
  <channel>
    <title>DSpace Collection:</title>
    <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8507</link>
    <description />
    <pubDate>Thu, 09 Apr 2026 00:41:02 GMT</pubDate>
    <dc:date>2026-04-09T00:41:02Z</dc:date>
    <item>
      <title>19-ம் நூற்றாண்டில் ஆங்கிலக் கல்வியும் தமிழ் நாவலின் தோற்றமும்</title>
      <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8530</link>
      <description>Title: 19-ம் நூற்றாண்டில் ஆங்கிலக் கல்வியும் தமிழ் நாவலின் தோற்றமும்
Authors: Shanthiny, S.
Abstract: பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியக் கல்வித் துறையில் ஏற்பட்ட மாபெ ரும் மாற்றங்கள் அந்நாட்டு அரசியல், சமூக, கலாசாரத் துறைகளுக்கு புத் துணர்ச்சியையும், நவீனத்துவத்தையும் கொடுத்தன. முக்கியமாக இலக்கியத்தில் அது காலவரை உருவம், உள்ளடக்கம் பற்றிக் கொள்ளப்பட்ட கருத்துக்கள் ஒதுக் கப்பட்டு, காலத்தைப் பிரதிபலித்துக் , காலத்துடன் இயைந்த இலக்கிய வடிவங் கள் தோன்றத் தொடங்கின.&#xD;
இக் கல்வி மாற்றங்களுள் ஆகக் கூடிய தாக்கத்தை ஏற்படுத்தியது ஆங்கிலக் கல் வியாகும் . '' மற்றைய எந்தக் காரணிகளையும் விட 19-ஆம் நூற்றாண்டு இந்தி யாவில் ஒரு பெரும் உருமாற்றத்தைக் கொண்டு வர உதவிய ஒரு தனிக்காரணிபைத் தெரிந்தெடுக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படின் நாம் சிறிதும் தயக்கமின்றி ஆங்கி லக் கல்வியின் அறிமுகத்தைச் சுட்டிக் காட்டலாம்.'' |&#xD;
இந்தியாவில் ஆங்கிலக் கல்வியையும், அதன் பயனாக உண்டாகிய இலக்கிய மறுமலர்ச்சியையும் ஆராயுமிடத்து வங்கத்தில் நிகழ்ந்த கல்வி மாற்றங்கள், கல்வி சம்பந்தமான சர்ச்சைகள், விவாதங்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், ஏறத் தாழச் சம காலத்தில், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, அப்பகுதிகளிலும் கல்வி, இலக்கிய இயக்கங்கள் தோன்றி வளரத் தேவையான உந்து தலைக் கொடுத்தன. அதனால் வங்கக் கல்விச் சூழ்நிலையைச் சற்று விரிவாகவே ஆராய வேண்டிய நிலை ஏற்படுகின்றது. ''ஹெலனிய கலாசாரத்தின் கல்விக் கூடமாக. கிரேக்கத்தின் கண் ணாக, கலைகளுக்கும் சொல்லாற்றலுக்கும் தாயாக எவ்விதம் பெரிக்கிளிஸ் காலத்து அதென்ஸ் நகரம் விளங்கியதோ அவ்விதமே பிரித்தானிய ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவிற்கு வங்கம் விளங்கியது.''2 இவ்வாறு அக்கால வங்கம் வகித்த முக்கிய இடத்தை சேர் ஜது நாத் சர்க்கார் விளக்கியுள்ளார்.&#xD;
18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வங்காளம் பொருளாதார சுரண்டல், பஞ்சம், வெள்ளப்பெருக்கு என்பவற்றால் பாதிக்கப்பட்டிருந்தது. இத் தொடர்ச்சியான சமூக, பொருளாதார நலிவு கலாசார நலவுக்குக் காரணமாகவிருந்தது. 1760 (பாரத் சந்திர ராய் இறந்த வருடம் ) க்கும், 1800 (போட் வில்லியம் கல்லூரி யின் ஸ்தாபிதம் ) க்கும் இடையில் உள்ள காலத்தை வங்க இலக்கிய வரலாற்றாசி ரியர்கள் வங்க இலக்கிய வரலாற்றில் ஒரு வளர்ச்சி குன்றிய தேக்கமான காலமெ னக் குறிப்பிடுவர். இக்காலத்தில் கலையுணர்வு குறைந்த வைஷ்ணவ பக்திப் பாடல் களும், சரிதைகளும், கதைப்பாடல்களுமே பெருமளவில் இயற்றப்பட்டன. இதே இலக்கிய வளர்ச்சி குன்றிய சூழ் நிலை தமிழ் நாட்டிலும் ஐரோப்பியத் தாக்கத்திற்கு முன்பு நாயக்கர் காலத்தில் நிலவியது என்பதும் குறிப்பிடத் தக்கது 19-ம், 20-ம் நூற்றாண்டுகளில் இந்திய இலக்கியம் அடைந்த பிரமாண்டமான வளர்ச்சியை 18-ஆம் நூற்றாண்டு இலக்கியப் பின்னணியில் வைத்துப் பார்க்கும் போது தான் ஆங்கிலக் கல்வியின் பங்களிப்பு எமக்குத் தெளிவாகின்றது.</description>
      <pubDate>Thu, 01 Jan 1976 00:00:00 GMT</pubDate>
      <guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8530</guid>
      <dc:date>1976-01-01T00:00:00Z</dc:date>
    </item>
    <item>
      <title>இரு காந்தீய நாவல்கள்</title>
      <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8527</link>
      <description>Title: இரு காந்தீய நாவல்கள்
Authors: Krishnarasa, S.
Abstract: சமுதாய வாழ்வை பிரதிபலிப்பனவே நாவலிலக்கியங்கள், அவை சமுதாய பிரச்சனைகளையும், அதன் முரண்பாடுகளையும் வெளிக்கொணருவனவாக அமைவது டன், தீர்வு மார்க்கங்களை முன்வைப்பனவாகவும் இருக்கும். நமது நாவலிலக்கியங் களைப் பொறுத்தவரை, இத்தகைய முயற்சிகள் பரவலாக காணப்பட்ட பொழுது , பிரச்னை சகளையும் முரண்பாடு களை யும் சரியானபடி இவை கண்டு கொள்ளவும், தீர்வு மார்க்கங்களை எடுத்துக் காட்டவும், தவறியனவாகவே பெரும்பாலான வை உள்ளன. அகிலன் , ராஜம் கிருஷ்ணன், நா. பார்த்தசாரதி, இந்திரா பார்த்த சாரதி என்போர் களது படைப்புகள் இங்கு குறிப்பிடத்தக்கன . ராஜம் கிருஷ்ணனின் ''வேருக்கு நீர்'' அகிலனின் ' எங்கே போகிறோம்'' என்ற இரு நாவல்களும் இக் கட்டுரையில் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.'&#xD;
காந்தீயம். கம்யூனிசம் என்ற நேரெதிரான கொள்கைகளும், அவற்றின் விளை வான அரசியற் பார்வைகளும் காரணமாக எழும் முரண்பாடுகளுடன் கதை நிகழ்ச்சிகளை அமைத்துச் செல்லும் பாங்கு 'வேருக்கு நீர்', ' எங்கே போகிறோம்' என்ற நாவல்களிரண்டிலும் காணப்படுகிறது. எந்தவொரு கோட்பாட்டையும் மக்களிடை யே இலகுவில் பரப்பவும்; தன் கொள்கைக்கு மாறான கருத்துக்களை பற்றிய தப் பபிப்பிராயங்களை எவ்வித தருச்க நியாயமுமின்றி பரப்பவும் நாவல்கள் சிறந்த தொரு சாதனமாகிறது. இதற்கு மேற்கூறிய நாவல்கள் இரண்டுமே சிறந்த எடுத் துக் காட்டுக்களாகும். 2&#xD;
காந்தீயம் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்துடன் ''வேருக்கு நீர்'' கதை ஆரம்பமாகிறது. காந்தியக் கொள்கைகளில் நம்பிக்கை கொண்டவளான யமுனா, புரட்சிகர இயக்கங்களில் நம்பிக்கை கொண்ட சுதீர் , ஆச்சிரம ஆதரவில் வளர்ந்து பட்டம் பெற்று பின்னாளில் சமூக அந்தஸ்து பெற விரும்பும் துரைராசன், காங்கி ரஸ் தொண்டன் என்ற போர்வையில் அயோக்கியத் தனம் புரியும் இந்து நாத், என்போர்களே இக் கதையின் முக்கிய பாத்திரங்கள்.&#xD;
புரட்சிகர அரசியல் இயக்கங்களிற்கு எதிராகவும், காந்தீயக் கொள்கைகளில் நம்பிக்கை இழந்தோருக்கு அதன் வலிமையை உணர்த்தவும், யமுனா காந்தீய இலட்சியங்களைப் பிரசாரம் செய்து வருகிறாள். யமுனாவை பயன்படுத்தி அரசியல் லாபம் தேட இந்து நாத் முயலுகிறாள். தனித்திருந்து வாழ முடியாது என்பதை உணர்ந்த யமுனா துரைராசனை மணம் புரிகிறாள். ஆனால் துரைராசனோ சமூக அந் தஸ்தை பெறும் விருப்பில் யமுனாவை பயன்படுத்திக் காரியமாற்ற முனைகிறான். யமுனாவிற்கு அது விருப்பமில்லாது போகவே அவர்களிடையே முரண்பாடுகள் தோன்றுகின்றன. இடையிடையே தி. மு. க. அரசியற் பிரசாரம் கல்கத்தா நகரின் அரசியற் குழப்ப நிலைகள் என்பன நாவலில் இடம் பெறுகின்றன.</description>
      <pubDate>Thu, 01 Jan 1976 00:00:00 GMT</pubDate>
      <guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8527</guid>
      <dc:date>1976-01-01T00:00:00Z</dc:date>
    </item>
    <item>
      <title>பெண்களும் தமிழ் நாவலும்</title>
      <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8525</link>
      <description>Title: பெண்களும் தமிழ் நாவலும்
Authors: Shanmugathas, M.
Abstract: தமிழ் நாவல் வடிவின் பின்னணி :&#xD;
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவின் வரலாற்றில் பல மாற்றங்க ளேற்பட்டன இந்நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆங்கிலேயர் தமது தேவைகளுக்காக பல மாற்றங்களையும் புகுத்தினர், இதனால் இந்திய சமூக அமைப்பு மாற முற்பட் டது. விவசாயத்தையும் கிராமக் கைத்தொழில்களையும் கொண்டதாக இருந்த சமுதாயம் மேனாட்டாரது நவீன நாகரிகத்தையும் பொருளாதார அமைப்பையும் கடைப்பிடிக்கத் தொடங்கியது. இதுவரை சமூகத்தில் நிலவிய பழமையான மரபுகள் உடையத் தொடங்கின. இம்மரபுகளில் குறிப்பாக பெண்களைப் பற்றி யிருந்த கட்டுப்பாடுகள் தகரத் தொடங்கின. இந்நிலையில் நாவல் என்ற இலக்கிய வடிவமும் சமூகத்தில் அறிமுகமாகியது. மேனாட்டாரது வருகையால் தமிழில் வந்து புகுந்த இவ்விலக்கிய வடிவம் புனைந்துரைக்கும் பான்மையுடையதாக விளங்கிய தால் புதினமெனவும் பட்டது. சிலப்பதிகாரம், சிந்தாமணி போன்ற காவியங்களும் பரமார்த்த குரு கதை, விநோதரசமஞ்ஈரி போன்ற உரை நடை நூல்களும் கட்டப் பொம்மன், தேசிங்குராஜன் போன்ற கதைப் பாடல்களும், மதுரை வீரன், பழைய னூர் நீலி போன்ற நாட்டுப்புறக் கதைகளும் நொண்டி நாடகம், முக்கூடற் பள்ளு போன்ற நாடகங்களும், புனை கதை என்ற வகையைச் சார்ந்த இலக்கிய வடிவங்க ளாக இருந்தபோதும் நாவல் என்பது இவற்றினின்றும் முற்றிலும் வேறுபட்ட தொரு வடிவமாக அமைந்தது. அது வழி வழியாக வந்த மரபுகளையும் நெறிப் படுத்தப்பட்ட முறை களையும் மீறி அவற்றிலிருந்து வேறுபட்டு விளங்கியது. இப் போக்கு அக்காலத்திற்குப் புதுமையாகவும் இருந்தது. இப்புதுமைப் பண்பு நாவ லின் அடிப்படைப் பண்பாகவும் அதே வேளையில் சமூக சீர்திருத்தத்தினை வேண்டி நின்றவர்களுக்கு தமது எண்ணக்கருத்தினைப் பிரதிபலித்துக் காட்டுவதற்கேற்ற சாதனமாகவும் அமைந்ததெனலாம்.</description>
      <pubDate>Thu, 01 Jan 1976 00:00:00 GMT</pubDate>
      <guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8525</guid>
      <dc:date>1976-01-01T00:00:00Z</dc:date>
    </item>
    <item>
      <title>வங்காள நாவல்கள் தமிழ் நாவல்களில் ஏற்படுத்திய தாக்கம்</title>
      <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8524</link>
      <description>Title: வங்காள நாவல்கள் தமிழ் நாவல்களில் ஏற்படுத்திய தாக்கம்
Authors: Yogarasa, S.
Abstract: "இவ்வாறு வடநாட்டு மொழிகளிலிருந்து பெயர் த்த நாவல்கள் தமிழ் நாட்டில் மலிந்தபொழுது முதலில் யாவரும் அவற்றை வரவேற்றுப் படித்து மகிழ்ந்தார்கள். ஒரு பத்திரிகையில் ரவீந்திரர் நாவலும், வேறொரு பத் திரிகையில் பங்கிம் சந்திரர் நாவலும், மற்றொன்றில் சரச்சந்திரர் நாவ லும் போட்டி போட்டுக் கொண்டு தொடர் கதையாக வந்தன. அவற்றை ஆர்வத்துடன் வாசித்து இன்புற்றார்கள் '' 1&#xD;
மேலே விவரிக்கப்பட்டுள்ளது தமிழ் நாவல் வரலாற்றின் ஒரு காலப்பிரிவு . இந்நூற்றாண்டின் இரண்டாம், மூன்றாம் தஸாப்தங்களில் இந்திய மொழிகளிலி ருந்து - குறிப்பாக வங்காள மொழியிலிருந்து - அதிகளவு நாவல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இதனால் தமிழ் நாவல்களின் போக்குகளும், உள்ளடக்க மும் மட்டுமன்றி நாவலாசிரருயம். வாச கருங்கூடப் பெரிதும் பாதிக்கப்பட்டுள் ளனர். இதுபற்றி இன்னமும் விரிவாக ஆராயப்படவில்லை. 2 அதுமட்டுமன்று; இன்றும் நம்மவர்களிற் பலர் வங்காள இலக்கியத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது சகலதும் இருப்பதாகக் கருதுகின்றனர். 3 எனவே, இது பற்றிய தனி ஆய்வு அவசியமாகின் றது. 4&#xD;
இந்திய மொழி சளுள் ஏன் வங்காள மொழியிலிருந்து அதிக நாவல்கள் மொழிபெயர்க்கப்பட வேண்டும்? இதற்குச் சில முக்கிய காரணங்களுள்ளன. இந்தியாவில் பிரித்தானிய ஆட்சி முதன் முதலாக வங்காளத்திலே நிலையூன்றியமை யால் அதன் பெறுபேறுகளும் அங்கேயே முதலில் வெளிப்பட்டன. அதனால் வங் காள இலக்கியமும் நவீன தன்மைகளைப் பெறுவதில் ஏனைய மொழிகளை விட முந் திக் கொண்டது: வங்காளத்திற்குத் தடிமன் ஏற்படும்போது ஏனைய மாகாணங் களும் தும்முவது வழக்கமாயிற்று.&#xD;
அத்துடன், அடிப்படையில் வங்காளத்தின் பண்பாடும், நாகரிகமும் தமிழ்ப் பண்பாட்டிலிருந்தும், நாகரிகத்திலிருந்தும் பெருமளவு வேறுபடவில்லை. கூட்டுக் குடும்பம், குடும்பத்திலே தகப்பன் தலைவன். திருமணம், சாவு முதலியவற்றில் பின்பற்றப்படும் வைதிகச் சடங்குகள், உணவு முறைகளில் அரிசிச் சாதம், மீன் குழம்பு ஆகியவற்றில் இரு இனங்களும் ஒன்றுபட்டே தோன்றுகின்றன.</description>
      <pubDate>Thu, 01 Jan 1976 00:00:00 GMT</pubDate>
      <guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8524</guid>
      <dc:date>1976-01-01T00:00:00Z</dc:date>
    </item>
  </channel>
</rss>

