<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
  <channel>
    <title>DSpace Collection:</title>
    <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8406</link>
    <description />
    <pubDate>Thu, 16 Apr 2026 10:13:43 GMT</pubDate>
    <dc:date>2026-04-16T10:13:43Z</dc:date>
    <item>
      <title>யாழ்ப்பாணத்தில் நூலக வளர்ச்சி</title>
      <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8484</link>
      <description>Title: யாழ்ப்பாணத்தில் நூலக வளர்ச்சி
Authors: Shanmugathas, M.
Abstract: முதன் முதலாக ஆரியச் சக்கரவர்த்திகளது காலத்திலே சரல்வதிமகால் என்ற நூல் நிலையம் ஒன்று இருந்ததாக அறியப்படுகின்றது. இதுவே யாழ்ப்பாணக் குடா நாட்டின் நூல்நிலைய வரலாற்றில் நாம் அறிகின்ற முதன்முதல் நூலகம் பற்றிய செய்தியாகவும் இருக்கின்றது. இச்செய்தி பற்றி பல்வேறு சான்றுகளும் இருப்பதனால் இதனை உறுதிப்படுத்தக் கூடியதாகவும் இருக்கின்றது. எனினும் தொடர்பாக இந்நூல் நிலையத்தினைப் பற்றிய செய்திகளை அறியமுடியவில்லை. அதன் தன்மை பற்றியோ அன்றேல் அமைப்புப் பற்றியோ எவ்வித தகவல்களையும் பெற முடியாமல் இருக்கின்றது. கையெழுத்துப் பிரதிகள் பல அங்கு சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தன என்ற குறிப்பு மட்டுமே எமக்குக் கிடைக்கின்றது. அவ்வாறு சேகரிக்கப்பட்டு வைத்திருந்த பிரதிகளை யார் வாசித்தார்கள்? அவற்றை வாசிப் பதற்கு யாருக்கு உரிமை இருந்தன என்பன போன்ற விடயங்கள் தெளிவில்லாமலே இருக்கின்றன. தற்கால நூலகப் பண்புக்கமைய சரஸ்வதிம கால் இருந்ததாவென் பதையும் விளங்கிக்கொள்ள முடியாதிருக்கின்றது.&#xD;
பரராசசேகரன் யாழ்ப்பாணக் குடாநாட்டை ஆளுங்காலத்தில் ஊர் கடோ றும் பாடசாலைகள் அமைத்தும் தமிழ்ச் சங்கமொன்று தாபித்தும் தமிழை வளர்த்த தாக அறியமுடிகின்றது. புலவர்களைக்கொண்டு பலவகையான நூல்களையும் இயற்று வித்தான். இவனமைத்த தமிழ்ச் சங்கமே இரண்டாவது தமிழ்ச் சங்கமாகும்.</description>
      <pubDate>Thu, 01 Apr 1976 00:00:00 GMT</pubDate>
      <guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8484</guid>
      <dc:date>1976-04-01T00:00:00Z</dc:date>
    </item>
    <item>
      <title>பிரதேச நாவல்கள் - யாழ்ப்பாணப் பிரதேச நாவல்கள்</title>
      <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8483</link>
      <description>Title: பிரதேச நாவல்கள் - யாழ்ப்பாணப் பிரதேச நாவல்கள்
Authors: Manokaran, T.
Abstract: யாழ்ப்பாண வளாகம் மண் வாசனையை அடிப்படையாகக் கொண்டு பிரதேச நாவல்கள் எழுதப் படுகின்றன. பிராந்திய நாவல்கள், வட்டார நாவல்கள் மண் வாசனை நாவல்கள் என்ற பெயர்களாலும் இவ்வகை நாவல்கள் அழைக்கப்படுகின்றன. இந்நாவல் களில், குறிப்பிட்ட கதைக் கருவுக்குரிய களமாகிய நிலத்தோற்றம் அப்பிரதேசத் துக்குரிய மொழிவழக்கு, பழக்கவழக்கங்கள் ஆகியவைகள் முதன்மை பெறுகின்றன .&#xD;
பிரதேச நாவல்களை எழுதுவோர் எந்தவொரு மொழியிலும் மிகக் குறை வானவர்களாகவே உள்ளனர். ஏனெனில், பிரதேச நாவல்களை எழுதுவதற்கு மிகுந்த உழைப்பும், மானிடவியல் அறிவும் அவசியமாகின்றன. மேலை நாட்டில் சிறந்த பிரதேச நாவலாசிரியர்களாக வில்லியம் ஃபோக்னரையும், தோமஸ் ஹார்டி யையும் குறிப்பிடுவர். தமிழ்நாட்டில் பிரதேச நாவல்களின் மூலபிதாக்களாக கே. எஸ். வேங்கடரமணி (முருகன் ஓர் உழவன்); சண்முகசுந்தரம் (நாகம்மாள்) சங்கரராம் (மண்ணாசை) என்போரைக் குறிப்பிடுவர்.</description>
      <pubDate>Thu, 01 Apr 1976 00:00:00 GMT</pubDate>
      <guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8483</guid>
      <dc:date>1976-04-01T00:00:00Z</dc:date>
    </item>
    <item>
      <title>சைவ சித்தாந்த அறிவுக் கொள்கை - காட்சி</title>
      <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8482</link>
      <description>Title: சைவ சித்தாந்த அறிவுக் கொள்கை - காட்சி
Authors: Krishnarasa, S.
Abstract: சைவ சித்தாந்தத்தின் காட்சிக் கொள்கையை ஆராய்வதாயமையும் இவ் வாய்வுரை சிவஞான சித்தியாரில் காணப்படும் ' அளவைப்' பகுதியினை ஆதாரமாகக் கொண்டதாகும்.&#xD;
தற்கால அறிவாராய்ச்சிக் கொள்கைகள் போலல்லாது சைவசித்தாந்த அறிவுக் கொள்கைபற்றிய ஆய்வில் உளவியற்கருத்துக்கள் முக்கிய இடம் பெறுகின்றன. இத்தகையதோர் போக்கு இந்திய மெய்யியல் மரபிற்கேயுரிய ஒரு பொதுப்பண்பா கும். இந்திய உளவியற் கருத்துக்கள் பரிசோதனையை அடிப்படையாகக் கொள்ளாது பெருமளவு அனுமானங்களாகவே இருப்பதனை அவதானிக்கலாம். அவ்வனுமானங் களே அறிவுக் கொள்கைகளுக்கான முற்கற்பிதங்களாகவும் உள.&#xD;
காட்சியின் மூலமாக தரப்படும் அறிவு எனும்பொழுது அனுபவம் அதனுள் அடங்கியது என்பது பெறப்படும். அனுபவத்தை வகையீடு செய்பவர்கள் (1) புலன் அனுபவம் என்றும் (2) புலன் கடந்த அனுபவம் என்றும் பாகுபடுத்துவர் காலம், வெளி என்ற பதார்த்தங்களுள் அடங்கும் காட்சி புலன் அனுபவம் சார்ந்தது. அவ்வாறு இல்லாதிருப்பவை புலன் கடந்த காட்சிசார்ந்தது என்றும் கூறிக்கொள் ளலாம். ஆனால் முன்னைய காட்சியின் வாய்ப்பினைப் பரிசோதிப்பதற்குப் பௌதிக உலக அடிப்படை இருப்பதுபோல, பின்னயதைப் பரிசோதிக்க எவ்வித அடிப்படை களும் இல்லை என்ற வலிமையான குற்றச்சாட்டுக் கூறப்படுகின்றது.</description>
      <pubDate>Thu, 01 Apr 1976 00:00:00 GMT</pubDate>
      <guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8482</guid>
      <dc:date>1976-04-01T00:00:00Z</dc:date>
    </item>
    <item>
      <title>தென்னாசியவியற் கருத்தரங்குக் கட்டுரைகள்</title>
      <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8481</link>
      <description>Title: தென்னாசியவியற் கருத்தரங்குக் கட்டுரைகள்
Authors: Subramaniam, N.
Abstract: யாழ்ப்பாண வளாகத்தில் தென்னாசியவியற் கருத்தரங்குகள் பல்வேறு விடையங்களை பொட்டி நடைபெற்று வருகின்றன. இவ்வருடத்தில் இதுவரை நான்கு கருத்தரங்குகள் தமிழ் மொழி மூலமாக நடைபெற்றன. அக்கருத்தரங்குகளிற் படிக்கப்பட்ட கட்டுரைகள் இலக்கியம், மெய்யியல், நூலகவறிவியல் ஆகிய துறைகளைச் சார்ந்தன. அவற்றின் சுருக்கங்கள் பலருக் கும் பயனுடைத்தாகுமென எண்ணிததொகுத்து இவ்விதழிலே தரப்படுகின்றன</description>
      <pubDate>Thu, 01 Apr 1976 00:00:00 GMT</pubDate>
      <guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8481</guid>
      <dc:date>1976-04-01T00:00:00Z</dc:date>
    </item>
  </channel>
</rss>

