<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
  <channel>
    <title>DSpace Collection:</title>
    <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/6237</link>
    <description />
    <pubDate>Sat, 04 Apr 2026 09:46:20 GMT</pubDate>
    <dc:date>2026-04-04T09:46:20Z</dc:date>
    <item>
      <title>ஈழத்துக் கலை வளர்ச்சியில் தவில் நாகசுரக் கலை மரபின்  பரிணாமம்</title>
      <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11616</link>
      <description>Title: ஈழத்துக் கலை வளர்ச்சியில் தவில் நாகசுரக் கலை மரபின்  பரிணாமம்
Authors: Karuna, K.
Abstract: கலைகளைப் பற்றிய விளக்கம் தரும் டி.வி.நாராயணசாமி, 'கலை என்பது மக்களின்&#xD;
வாழ்வியலை, பண்பாட்டை, நாகரிகத்தை எடுத்துக்காட்டும் கண்ணாடி. மக்கள் வாழ,&#xD;
வளர சமுதாய நீதிகளையும் அறத் தத்துவங்களையும் தெளிவாகப் படம் பிடித்துக்&#xD;
காட்டிடக் கலைகளைப் போல் வேறு சாதனம் இல்லை' (நாராயணசாமி, 1980. ப.23)&#xD;
என்று கூறுகிறார். இக்கூற்று ஒரு நாட்டுக்கோ, ஒரு பிரதேசத்திற்கோ பொருந்தும்.&#xD;
இந்தவகையில் பார்க்கும்போது ஈழத்தில் குறிப்பாக, யாழ்ப்பாணத்தில் மன்னர்கள்,&#xD;
அரசவைப் புலவர்கள். ஆர்வலர்கள் ஆகியோரது ஆதரவோடு கலைகள் தோற்றம்பெற்று வளர்ச்சியடைந்துள்ளன. இக்கலைகளுள் இசைக்கலையானது&#xD;
ஆலயங்கள் மூலமாகவும், வாய்மொழிப்பாடல்கள் மூலமாகவும், கூத்துக்கள்&#xD;
இசைநாடகங்கள் மூலமாகவும், மக்களுக்குள் அறிமுகமாகி வரன்முறையான கர்நாடக&#xD;
இசையாகப் பரிணமித்துள்ளது. இந்தவிதத்தில் ஈழத்திலுள்ள இந்து ஆலயங்கள்&#xD;
புராணபடனம், திருமுறைகள், சிவாகமக் கிரியைகள், சங்கீத கதாப்பிரசங்கம், தவில்-&#xD;
நாகசுரம் ஆகிய அம்சங்கள் மூலம் இசையை வளர்ப்பதற்குப்&#xD;
பெரும்பங்காற்றியுள்ளன. இவற்றுள் தவில்-நாகசுரம் ஆகிய வாத்தியங்கள்&#xD;
ஆலயங்களில் மட்டுமன்றி மங்கள நிகழ்வுகள், அரசுசார ; நிகழ்வுகள், நிறுவன&#xD;
நிகழ்வுகள், பொது வைபவங்கள் ஆகியவற்றிலும் இன்றியமையாத ஒன்றாகக்&#xD;
கருதப்படுகின்றன. ஆகவே, தவில்-நாகசுரக் கலைஞர்களின் ஈழத்து வருகைபற்றி இவ்&#xD;
ஆய்வில் கூறப்படுகின்றது.</description>
      <pubDate>Wed, 01 Jan 2025 00:00:00 GMT</pubDate>
      <guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11616</guid>
      <dc:date>2025-01-01T00:00:00Z</dc:date>
    </item>
    <item>
      <title>திருக்குறளில் இசை பற்றிய செய்திகள்</title>
      <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11217</link>
      <description>Title: திருக்குறளில் இசை பற்றிய செய்திகள்
Authors: Karuna, K.
Abstract: திருக்குறள் முக்காலத்திற்கும், எந்நாட்டவர்க்கும் எம் மதத்தவர்க்கும் ஏற்ற வகையில் பரந்துபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ள திருக்குறளில் இசை பற்றிய செய்திகள்  திருக்குறளில் இசை பற்றிய செய்திகள் கொண்டுள்ள அறிவுச் சுரங்கமாகும். பழந்தமிழ் இலக்கியங்கள் பெரும்பாலும் ,சையை 'ஏழிசை'என்று சிறப்பித்தாலும்  திருக்குறளில் ஏழிசை என்று கூறப்படவில்லை. ஆனால் வள்ளுவர் குழல், யாழ், பறை ஆகிய இசைக்கருவிகளை முதன்மைப்படுத்தித் தன்நூலில் கூறியுள்ளமை சிறப்புடையது. ,சைநிலையில் சூழலும் யாழும் ,னியது. என்று குறிப்பிட்டுள்ள வள்ளுவர், சூழலின் பின் யாழை வைத்துள்மை குறிப்பிடத்தக்கது. பழந்தமிழ் மன்னர்களின் அவைக்களங்களில் பெருமைக்குரிய கருவியாகத் திகழ்ந்த யாழ் இசைக்கருவியை, திருவள்ளுவரும் 'குழலினிது யாழ் இனிது'எனச் சிறப்பித்துள்ளார். திருக்குறளில் வில்லைப் போன்று வளைவான யாழ் இருந்தது எனக் குறிப்பிடுகின்றார். இன்னம் மனிதன் தோன்றிய காலம் முதல் இன்று வரை பயன்பாட்டில் உள்ள சிறப்புடைய பறை மற்றும் பண், பாடல் பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன. இந்தவகையில் வள்ளுவர் இசையை பற்றிய கருத்துக்களையும் இசைக் கருவிகள் பற்றிய குறிப்புக்களையும் கூறியுள்ளமை இக்கட்டுரை மூலம் ஆராயப்படுகின்றது.</description>
      <pubDate>Mon, 01 Jan 2018 00:00:00 GMT</pubDate>
      <guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11217</guid>
      <dc:date>2018-01-01T00:00:00Z</dc:date>
    </item>
    <item>
      <title>க.ச.கனகசிங்கத்தின் இசை முத்துக்கள், செந்தில்நாதனின் கீர்த்தனை மாலை,  ஈழத்து இசை  -  ஓர் ஒப்பீடு.</title>
      <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11184</link>
      <description>Title: க.ச.கனகசிங்கத்தின் இசை முத்துக்கள், செந்தில்நாதனின் கீர்த்தனை மாலை,  ஈழத்து இசை  -  ஓர் ஒப்பீடு.
Authors: Karuna, K.</description>
      <pubDate>Mon, 01 Jan 2018 00:00:00 GMT</pubDate>
      <guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11184</guid>
      <dc:date>2018-01-01T00:00:00Z</dc:date>
    </item>
    <item>
      <title>யாழ்ப்பாணம் இயலிசைவாரிதி ந.வீரமணிஐயரின் திருக்குறள் கீர்த்தனைகள் நூலிலுள்ள பாடல்கள் புலப்படுத்தும் திருவள்ளுவம்</title>
      <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11183</link>
      <description>Title: யாழ்ப்பாணம் இயலிசைவாரிதி ந.வீரமணிஐயரின் திருக்குறள் கீர்த்தனைகள் நூலிலுள்ள பாடல்கள் புலப்படுத்தும் திருவள்ளுவம்
Authors: Karuna, K.
Abstract: தேவாரம் முதலான பக்தி இலக்கியங்களும் பிற்காலத்தில் எழுந்த கீர்த்தனை, பதம், தில்லானா போன்ற இசைவடிவங்களும் எல்லோராலும் பாடப்பட்டுவரும் முறையான இசையமைப்புக்கள் கொண்டவை. இவற்றிற்கெல்லாம் முன்னோடியாகத் திகழும் சங்கப்பாடல்கள், காப்பியப் பாடல்கள், பக்தி இலக்கியப்பாடல்கள் இசையுடன் பாடப்படுவது மிக அரிது. இந்த வகையில் திருவள்ளுவரின் திருக்குறள் பாடல்கள் ஒப்பற்ற நீதிப்பாடல்களாகத் திகழ்கின்றன. இன்றைய உலகில் எல்லோராலும் மதிக்கப்படுகின்ற க்குறள் பாடல்களில் சில அதிகாரங்கள் இசைக்குறியீடுகளுடனும் வெளிவந்துள்ளன. ஆயினும், இரத்தினச் சுருக்கமாக இருக்கும் திருக்குறளின் பொருளைக் கருவாகக் கொண்டு பாமரரும் &#xD;
 &#xD;
விளங்கக்கூடிய பாடல்களை இயற்றமுடியும், இவற்றைக் கொண்டு இசை நிகழ்ச்சிகளை ஆற்றுகை செய்யமுடியும் என்ற கருதுகோளின் அடிப்படையில் இந்த ஆய்வு நகர்த்தப்படுகின்றது. யாழ்ப்பாணம் தந்த மிகப் பெரிய தமிழ் வாக்கியக்காரரான பிரம்மஸ்ரீ ந. வீரமணி ஐயரின் திருக்குறள் கீர்த்தனைகள் ஆய்வுக்கான மூல நூலாக எடுக்கப்படுகின்றது. வீரமணி ஐயாவின் திருக்குறள் கீர்த்தனைகள் சாதாரண மக்களும் திருக்குறளைப் புரிந்து கொள்ளும் வகையில் தனித்தமிழ் பாடல்களாகவும் இசைக்கக் கூடிய பாடல்களாவும் உள்ளமையை வெளிக்கொணர்வது இவ்ஆய்வின் நோக்கமாகும்.</description>
      <pubDate>Mon, 01 Jan 2024 00:00:00 GMT</pubDate>
      <guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11183</guid>
      <dc:date>2024-01-01T00:00:00Z</dc:date>
    </item>
  </channel>
</rss>

