<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
  <channel>
    <title>DSpace Community:</title>
    <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/5667</link>
    <description />
    <pubDate>Wed, 08 Apr 2026 19:47:34 GMT</pubDate>
    <dc:date>2026-04-08T19:47:34Z</dc:date>
    <item>
      <title>முதலீட்டாளர்களது முதலீட்டு நடத்தையில் குடித்தொகை காரணிகள் ஏற்படுத்தும்  தாக்கம் - யாழ் மாவட்டத்தின் நல்லூர் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட ஆய்வு</title>
      <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4175</link>
      <description>Title: முதலீட்டாளர்களது முதலீட்டு நடத்தையில் குடித்தொகை காரணிகள் ஏற்படுத்தும்  தாக்கம் - யாழ் மாவட்டத்தின் நல்லூர் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட ஆய்வு
Authors: டிலானி, ச.; பவன், த.
Abstract: பொருளாதாரத்தில் முதலீடு முக்கிய கருவியாகக் 
காணப்படுகிறது. வீட்டுத்துறையினரது மொத்த வருமானத்தில் 
நுகர்வு செய்த பின்னர் எஞ்சியுள்ள பகுதி சேமிப்பாகக் கருதப்படும். 
அந்தவகையில் இவ் ஆய்வின் பிரதான நோக்கம் யாழ் மாவட்டத்தின் 
நல்லூர் பிரதேச செயலக முதலீட்டாளர்களது முதலீட்டு நடத்தையில் 
குடித்தொகை காரணிகள் எவ்வாறான தாக்கத்தினை செலுத்துகிறது என 
கண்டறிதல் ஆகும். இவ் ஆய்வானது முதலாம் நிலைத்தரவுகளையும் 
இரண்டாம் நிலைத்தரவுகளையும் ஆதாரமாக கொண்டு இந்த ஆய்வு 
மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் மாதிரி எடுப்பானது நல்லூர் பிரதேச 
செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட 265 மொத்த முதலீட்டாளர்களில் இருந்து 
100 முதலீட்டாளர்களை எளிய எழுமாற்று முறையினை பயன்படுத்தி 
தெரிவு செய்யப்பட்டுள்ளது. பல்மாறி பிற்செலவுஅணுகுமுறையின் மூலம் 
பெறப்பட்ட தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு முடிவுகள் பெறப்பட்டுள்ளது.
சார்ந்த மாறியாக முதலீட்டுத் தீர்மானமும் சாரா மாறியாக பால், 
திருமணநிலை, குடும்ப அளவு, தொழில், வயது, கல்விமட்டம், முதலீட்டு 
அனுபவம்,முதலீடு தொடர்பான அறிவு என்பன காணப்படுகின்றன. 
ஆய்வின் முடிவின் படி முதலீடு தொடர்பான அறிவு,முதலீட்டுஅனுபவம், 
நண்பர்கள் ஒத்துழைப்பு,திருமணநிலை ஆகிய குடித்தொகை 
காரணிகள் முதலீட்டு தீர்மானம் எடுத்தலில் நிர்ணயிக்கும் காரணிகளாக 
காணப்படுகின்றன.</description>
      <pubDate>Mon, 01 Jan 2018 00:00:00 GMT</pubDate>
      <guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4175</guid>
      <dc:date>2018-01-01T00:00:00Z</dc:date>
    </item>
    <item>
      <title>பட்டிப்பளை பிரதேச செயலகப்பிரிவில் பால் உற்பத்தியாளர்களின்  வருமானத்தினை தீர்மானிக்கும் காரணிகள்</title>
      <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4174</link>
      <description>Title: பட்டிப்பளை பிரதேச செயலகப்பிரிவில் பால் உற்பத்தியாளர்களின்  வருமானத்தினை தீர்மானிக்கும் காரணிகள்
Authors: கிருசாந்தினி, சி.; மகேஸ்வரநாதன், ச.
Abstract: இலங்கைப் பொருளாதாரத்தில் கால்நடை 
உற்பத்தியானது பிரதான பங்கினை வகிக்கின்றது. கால்நடை வளர்ப்பானது 
வேலைவாய்ப்புக்களை வழங்குவதுடன் வருமானத்தை அதிகரித்து 
வறுமையைக் குறைக்கின்ற ஒரு துறையாகவும் காணப்படுகின்றது. 
கால்நடை வளர்ப்பில் அதிகளவிலான வருமானத்தை பெற்றுத்தருவதில் 
பாலுற்பத்தி தொழிலானது முக்கியமான இடத்தைப் பெறுகின்றது. தற்போது 
உலகளாவிய ரீதியில் மந்தபோசாக்கு காரணமாக மக்கள் அதிகளவிலான 
தொற்றுநேய்களுக்கு உள்ளாகின்றனர். இதற்கு காரணமான போசாக்கு 
குறைபாட்டை குறைப்பதற்கான ஊட்டச்சத்துகள் நிறைந்த நிறையுணவாக 
பாலுற்பத்தி உணவுகள் காணப்படுகின்றன.
இவ்வாய்வானது பட்டிப்பளை பிரதேச செயலகப்பிரிவில் பால் 
உற்பத்தியாளர்களின் வருமானத்தினை தீர்மானிக்கும் காரணிகளைக் 
கண்டறிதலை நோக்கமாகக் கொண்டு முதலாம் நிலை, இரண்டாம் நிலை 
தரவுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. முதலாம் 
நிலை தரவுகள் பாலுற்பத்தி மூலம் வருமானம் பெற்றுக்கொள்ளும் 100 
உற்பத்தியாளர்களை எழுமாறாக தெரிவு செய்து வினாக்கொத்துகள் மூலம் 
தகவல்கள் பெற்றுக்கொள்ளப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.
இங்கு மாறிகளாக எடுத்துக்கொள்ளப்பட்ட வருமானத்தினை 
தீர்மானிக்கின்ற உற்பத்தியின் அளவு, சந்தைப்படுத்தல் வசதி, பாலின 
தரம், கால்நடைகளின் எண்ணிக்கை, கால்நடைகளின் இனம் 
ஆகிய காரணிகள் பாலுற்பத்தியின் மூலம் பெற்றுக்கொள்ளப்படுகின்ற 
வருமானத்தில் நேர்க்கணிய தாக்கத்தினை ஏற்படுத்துவனவாகக் 
காணப்படுகின்றன. இவற்றில் பாலுற்பத்தியின் அளவானது அதிகளவிலான 
தாக்கத்தை ஏற்படுத்தும் அதேவேளை இப்பிரதேசத்தில் உள்ள10ர் 
இனப்பசுக்களே அதிகமாக காணப்படுகின்றன. இவற்றின் மூலமாக 
குறைந்தளவிலான உற்பத்தியினையே பெற்றுக்கொள்ள முடியும் என்பதால் 
பாலுற்பத்தியாளர்களிடையே குறைந்தளவான வருமானம் பெறுபவர்களே 
அதிகளவில் உள்ளனர் என முடிவு கண்டறியப்பட்டுள்ளது.</description>
      <pubDate>Mon, 01 Jan 2018 00:00:00 GMT</pubDate>
      <guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4174</guid>
      <dc:date>2018-01-01T00:00:00Z</dc:date>
    </item>
    <item>
      <title>தேயிலைத் தோட்டதொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சமூகப் பொருளாதார பிரச்சினைகள்  ஹயிற்றி கிராம சேவையாளர் பிரிவினை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகவியல் ஆய்வு</title>
      <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4173</link>
      <description>Title: தேயிலைத் தோட்டதொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சமூகப் பொருளாதார பிரச்சினைகள்  ஹயிற்றி கிராம சேவையாளர் பிரிவினை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகவியல் ஆய்வு
Authors: முருகன், பொ.
Abstract: தேயிலைத் தோட்டதொழிலாளர்கள் எதிர்கொள்ளும் 
சமூகப் பொருளாதாரபிரச்சினைகள் என்ற ஆய்வானது கண்டிமாவட்டத்தில் 
அம்பகமுவபிரதேசசெயலாளர் பிரிவுக்குட்பட்ட ஹயிற்றி கிராமசேவகர் 
பிரிவினைஅடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள் எத்தகைய சமூக, பொருளாதார 
பிரச்சினைகளினை எதிர்கொள்ளுகின்றார்கள், எதிர்கொள்ளும் 
பிரச்சினைகளினை குறைத்துக் கொள்வதற்கு எடுக்கப்பட்டுள்ள 
நடவடிக்கைகள், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய 
நடவடிக்கைகள் ஆகியன தொடர்பில் தெளிவானமுறையில் ஆராய்கின்றது. 
தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சமூகப் பொருளாதார 
பிரச்சினைகளில் குடியிருப்புசார் பிரச்சினைகள் பிரதானமானவையாக 
காணப்படுகின்றன. குடியிருப்புகள் தொடர்ச்சியான முறையில் 
அமைந்திருப்பதனால் சுகாதார ரீதியான பிரச்சினைகள், மலசலகூடம் 
தொடர்பிலான பிரச்சினைகள் போன்றன ஏற்படுகின்றன. வடிகாலமைப்பு, 
குடிநீர், கழிவகற்றல் என்பன அனைத்து குடியிருப்புகளுக்கும் 
பொதுமைப்பாடானஅடிப்படையிலேயே காணப்படுவதனால், சுகாதார 
மற்றும் சமூகமுரண்பாடுகள் ஏற்படவும் வாய்ப்பாகஅமைகின்றது. 
தொழிலாளர்களினுடைய பிள்ளைகள் கல்வியினை கற்பதற்கான 
வாய்ப்புகளும் இப்பிரதேசத்தில் குறைவாகவே காணப்படுகின்றது. 
ஆரம்ப கல்வியினை அல்லது இடைநிலைக்கல்வியினை மாத்திரம் கற்று 
பாடசாலையில் இருந்து இடைவிலகும் தன்மையானது இப்பகுதிகளில் 
அதிகமாகும். பொருளாதார அடிப்படையில் குறைவான வருமானம், 
சுயதொழில் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவாக காணப்படல், 
சொந்தமாக நிலமின்மை, அரசாங்கத்தின் மூலமாக முறையான 
உதவிகள் கிடைக்காமை. தொடர்ந்தும் கூலித்தொழில்களிலேயே 
தங்கியிருக்கவேண்டிய நிலைமை காணப்படல், லீசிங் அடிப்படையில் 
தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சுரண்டல்கள் போனற பிரச்சினைகளினை 
எதிர்கொள்ளுகின்றனர். ஆய்வானது ஆய்வுசார் பிரச்சினைகளினை 
விளக்கும் விபரணரீதியிலான ஆய்வாக அமைந்துள்ளது. அளவுசார், 
பண்புசார் தரவுகளினை உள்ளடக்கிய களப்புமுறையில் தரவுகள் 
பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. நேரடி அவதானம், விடயஆய்வு, 
நேர்காணல், வினாக்கொத்து மூலமாக முதலாம் நிலைத்தரவுகள் 
பெறப்பட்டுள்ளன. இரண்டாம் நிலைத் தரவுகளானவை கிராமசேவரின் 
அறிக்கை, பெருந்தோட்ட கம்பனியின் அறிக்கை என்பனவற்றின் 
மூலமாக பெறப்பட்டுள்ளன. ஆய்வுக்கான மாதிரி எடுப்பானது பிரதேச 
அடிப்படையிலான எளிய எளுமாற்று அடிப்படையில் அமைந்துள்ளது. 
தேயிலைத்தோட்டங்களில் வேலைசெய்யும் தொழிலாளர்களின் 
எண்ணிக்கையானது பிரதேச அடிப்படையில் கணக்கிடப்பட்டு 
எளியஎளுமாற்று மாதிரி எடுப்பின் அடிப்படையில் 200 தொழிலாளர்கள் 
மாதிரிகளாக தெரிவுச்செய்யப்பட்டுதரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளது. 
150 வினாக்கொத்துகள், 25 விடயஆய்வுகள், 20 நேர்காணல்கள், 
05 பிரதானதகவல் வழங்குனருடனான நேர்காணல்கள் மூலமாக 
தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்களுக்கான நாட்சம்பளம் 
அதிகரிக்கப்படல் வேண்டியது அவசியமாகும். மேலும் லயன் 
அடிப்படையிலான குடியிருப்பு முறைமை நீக்கப்பட்டு தனித்தனியாக 
அமைக்கப்பட்ட குடியிருப்பு திட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டியது 
அவசியமாகும் இவை மக்களுக்கு சொந்தமானதாக அமைக்கப்படல் 
வேண்டும், சட்ட அடிப்படையில் காணப்படுகின்ற வரையறைகள் 
நீக்கப்பட்டுபெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சலுகைகள் 
வழங்கப்படுவது அவசியமாகும். கல்வி, சுகாதாரம், உடகட்டமைப்புசார் 
வசதிகள் முறையாக முன்னெடுக்கப்படும் போது தொழிலாளர்கள் 
எதிர்கொள்ளும் சமூகபொருளாதாரப் பிரச்சினைகளை குறைத்துக் 
கொள்ளமுடியும்.</description>
      <pubDate>Mon, 01 Jan 2018 00:00:00 GMT</pubDate>
      <guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4173</guid>
      <dc:date>2018-01-01T00:00:00Z</dc:date>
    </item>
    <item>
      <title>சங்க இலக்கிய ஆய்வில் பேராசிரியர் சு.வித்தியானந்தனின் பங்களிப்பு - 'தமிழர் சால்பு' என்ற நூலை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு</title>
      <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4172</link>
      <description>Title: சங்க இலக்கிய ஆய்வில் பேராசிரியர் சு.வித்தியானந்தனின் பங்களிப்பு - 'தமிழர் சால்பு' என்ற நூலை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
Authors: அஜந்தகுமார், வ.; விசாகரூபன், கி.
Abstract: சங்ககால இலக்கியங்கள் தமிழின் செம்மொழி 
அந்தஸ்துக்கு கட்டியம் கூறிய பெருமைக்குரியன. இந்த சங்க 
இலக்கியங்கள் பற்றிய பல ஆய்வுகள் பலவிதங்களில் பல பார்வைகளில் 
மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவை சான்றோர் இலக்கியங்கள் எனவும் 
தமிழர் தமது நாகரிகத்தின் உச்சக் காலத்தில் எழுந்தவை எனவும் கொண்டு 
ஒரு சாரார் ஆய்வு நடத்தினர். தொல்காப்பிய பொருளிலக்கணத்துக்கும் 
சங்ககால நூல்களுக்குமிடையே உள்ள தொடர்பை இலக்கியம் கண்டதற்கு 
இலக்கணம் இயம்பல் என்ற அடிப்படையில் வைத்தும் ஆராய்ந்தனர். 
மற்றுமொரு பிரிவினர் தொல்காப்பிய தரவுகளையும் சங்க இலக்கியத் 
தரவுகளையும் ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் அவை சுட்டும் சமூகவியல் 
காரணிகளின் அடிப்படையில் தமது இலக்கிய ஆய்வை நடத்தினர். இவற்றில் 
எல்லாம் ஈழத்துத் தமிழ் அறிஞர்களின் வகிபாகம் கவனத்துக்குரியது ஆகும். 
இலங்கையைப் பொறுத்தவரையில் சங்க இலக்கியங்களைக் கற்றும் 
கற்பித்தும் உரைவிளக்கம் தந்தும் பதிப்பித்தும் வந்ததன் பயனாகவே 
தமிழரின் வரலாறு, பண்பாடு, சமூகவாழ்வு என்பவற்றைத் தேடுகின்ற 
ஆய்வுப்புலம் உதயமாகியது எனலாம். மல்லாகம் வி.கனகசபைப்பிள்ளை, 
பேராசிரியர்களான சுவாமி விபுலானந்தர், சு.வித்தியானந்தன், 
க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, அம்மன்கிளி முருகதாஸ் மற்றும் கலாநிதி 
மனோன்மணி சண்முகதாஸ் என்று சங்க இலக்கிய ஆய்வுப்புலத்தில் 
ஈடுபட்டவர்களை வரிசைப்படுத்தலாம். இவர்களில் தொடக்கமும் 
முதன்மையும் ஆழமும் மிக்க சங்க இலக்கிய ஆய்வைத் தன்னுடைய 
'தமிழர் சால்பு' நூலுக்கு ஊடாக அறுபது ஆண்டுகளுக்கு முன்னரே 
வெளிக்கொணர்ந்த பெருமைக்குரியவர் பேராசிரியர் சு.வித்தியானந்தன் 
ஆவார். 'தமிழர்சால்பு' நூலுக்கு ஊடாக வெளிப்படும் அவரது சங்க 
இலக்கிய ஆய்வுப்பணியின் கனதியையும் முக்கியத்துவத்தையும் 
தனித்துவத்தையும் வெளிப்படுத்துவதே இவ்வாய்வுக்கட்டுரை 
ஆகும். சங்ககால அரசரின் வரலாறு, அரசியல், போர் முறைகள், 
வழிபாட்டுமுறைகள், நம்பிக்கைகள், சமயவாழ்க்கை, மக்கள் பாகுபாடு, 
தொழிலும் வணிகமும், அக்காலப் பெண்களின் சமுதாய நிலை, கல்வியும் 
கலைகளும் போன்ற துறைகளையும், பகுதிளையும் பதினான்கு 
இயல்களில் விரிவாக ஆராய்ந்துள்ளார். தமிழியல் என்ற துறை வளர்வதற்கு 
முன்னரே அத்துறையில் ஆழமான ஆய்வைச் சங்க இலக்கியங்கள் 
வழியாக மேற்கொண்டவர் என்ற பெருமையை இவர் பெறுகின்றார். 
ஆராய்ச்சியாளர்கள் பலரின் தவறான முடிவுகளிற்கு இவரின் ஆய்வு பதில் 
சொல்லுவதாக அமைந்தது. தொடர்ந்து வந்த ஆராய்ச்சியாளர்களுக்கு 
வழிகாட்டுவதாகவும் இன்றும் நினைத்து வியப்படையக்கூடியவாறும் 
இவரது தமிழர் சால்பு ஆய்வு அமைந்தது. இந்த ஆய்வானது விவரண 
ஆய்வு முறைக்கு ஊடாக மேற்கொள்ளப்படுகின்றது. இதன்மூலம் 
பேராசிரியரின் தமிழ்ப்பணியில் முதன்மைப் பணிகளில் ஒன்றாக இந்த 
ஆய்வினைத் தெளிதலும், சங்க இலக்கியம் தொடர்பான வரலாற்றுப் 
பண்பாட்டு ஆய்வில் இவ்வாய்வின் தனித்துவத்தினை இனங்காட்டலும் 
இவ்வாய்வின் மூலம் நிகழ்த்தப்படுகின்றது. மிகக்குறைவானவர்களே சங்க 
இலக்கிய ஆய்வில் இலங்கையிலிருந்து ஈடுபட்ட போதிலும் ஈடுபட்டவர்கள் 
அனைவரும் ஆழமான தமது தனித்துவங்களை பதிந்து சென்றதற்கு 
வித்தியானந்தனின் தமிழர்சால்பு மிகச்சிறந்த சான்றாக விளங்குவதை 
இவ்வாய்வு கண்டடைகின்றது</description>
      <pubDate>Mon, 01 Jan 2018 00:00:00 GMT</pubDate>
      <guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4172</guid>
      <dc:date>2018-01-01T00:00:00Z</dc:date>
    </item>
  </channel>
</rss>

