<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
  <channel>
    <title>DSpace Community:</title>
    <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/140</link>
    <description />
    <pubDate>Sat, 04 Jul 2026 01:40:15 GMT</pubDate>
    <dc:date>2026-07-04T01:40:15Z</dc:date>
    <item>
      <title>University of Jaffna: The 'Knowledge Shrine' - Fifty Years of Academic Pursuits</title>
      <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12735</link>
      <description>Title: University of Jaffna: The 'Knowledge Shrine' - Fifty Years of Academic Pursuits
Authors: University of Jaffna</description>
      <pubDate>Wed, 01 Jan 2025 00:00:00 GMT</pubDate>
      <guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12735</guid>
      <dc:date>2025-01-01T00:00:00Z</dc:date>
    </item>
    <item>
      <title>கணவனால் கைவிடப்பட்ட பெண்களின் சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள்: யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமராட்சி தெற்கு மேற்குப் பிரதேச செயலகர் பிரிவை மையமாகக் கொண்ட ஒரு சமூகவியல் ஆய்வு</title>
      <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12713</link>
      <description>Title: கணவனால் கைவிடப்பட்ட பெண்களின் சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள்: யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமராட்சி தெற்கு மேற்குப் பிரதேச செயலகர் பிரிவை மையமாகக் கொண்ட ஒரு சமூகவியல் ஆய்வு
Authors: Sarthika, G.; Parthipa, A.; Sivakanthan, S.
Abstract: தீவிரமான சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பாதிக்கப்பட்ட&#xD;
சமூகக் குழுக்களில் கைவிடப்பட்ட பெண்கள் ஒரு பிரிவினராவர். வடமராட்சி தெற்கு மேற்குப் பிரதேச செயலகர் பிரிவில் வாழும் கைவிடப்பட்ட பெண்களின் சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளை மதிப்பிடுவது ஆய்வின் பிரதான நோக்கமாகும். சமுதாயத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த ஆய்வில் கலப்புமுறை ஆய்வு வடிவத்தைப் பயன்படுத்தி வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கணவனால் கைவிடப்பட்ட 294 பெண்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். வினாக்கொத்தின் மூலம் பெறப்பட்ட கணியம்சார் தரவுகள் SPSS (version 21) உதவியுடன் விபரணப் புள்ளிவிபரவியல் மற்றும் அனுமானப் புள்ளிவிபரவியல் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டது. விடய ஆய்வு முறைகள் மற்றும் பிரதான தகவல் தருநருடனான நேர்காணல் என்பவற்றிலிருந்து சேகரிக்கப்பட்ட பண்புசார் தரவுகள் கருப்பொருள் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டது. ஆய்வின் முடிவுகளின்படி பெரும்பாலானோர் (84%) இந்து மதத்தைச் சேர்ந்தவர்களாகவும் 58.2% ஆனவர்கள் 15-45 வயதிற்கு உட்பட்டவர்களாகவும் காணப்படுகின்றனர். பெரும்பாலானோர் (76.9%) இடைநிலைக்கல்வியைப் பூர்த்தி செய்துள்ளனர். கைவிடப்பட்ட பெண்கள் பலரின் பிரதான வாழ்வாதாரமாகக் கூலித்தொழில் (46.95%) காணப்பட்டதுடன் 62% க்கும் அதிகமானோரின் குடும்பத்தின் மாதாந்த மொத்த வருமானம் 20,000 இலங்கை ரூபாய்க்கும் குறைவாக இருந்தது. சமூகக் குடித்தொகைக் காரணிகளான வயது (p=0.001) கல்வி (p= 0.001) மற்றும் வருமானம் (p=0.001) என்பன பங்குபற்றுநர்களின் தொழில் நிலையில் புள்ளிவிபரவியல் ரீதியாகக் குறிப்பிடத்தக்க நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளன. கணவனால் கைவிடப்படுவதற்கான முக்கிய காரணங்களாக, குடும்ப ஆதரவு மற்றும் பராமரிப்பின்மை (72%), குடும்ப உறுப்பினர்களிடையே புரிந்துணர்வின்மை (62.8%) கணவரின் இரண்டாந்தரத் திருமணம் (47.6%) திருமணத்திற்கு அப்பாலான உறவுகள் (28.9%), சீதனப் பிரச்சினைகள் (10.5%) மற்றும் கடன் பிரச்சினைகள் (11.9%) போன்றன காணப்பட்டன. அத்துடன் பாதுகாப்புப் பிரச்சினைகள் (4.4%), பாலியல் அச்சுறுத்தல்கள் (15.3%), சமூக நிகழ்வுகள் மற்றும் சமூகச்செயற்பாடுகளில் புறக்கணிக்கப்படுதல் (21%), குறைந்தளவான வருமானம் மற்றும் வறுமை போன்றன கைவிடப்பட்ட பெண்கள் எதிர்கொள்ளும் குறிப்பிடத்தக்க சமூகப்பிரச்சினைகளாகக் காணப்பட்டன</description>
      <pubDate>Mon, 01 Jul 2024 00:00:00 GMT</pubDate>
      <guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12713</guid>
      <dc:date>2024-07-01T00:00:00Z</dc:date>
    </item>
    <item>
      <title>கயமனார் பாடல்களின்வழி அவரது பால்நிலையை அடையாளப்படுத்தல்</title>
      <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12712</link>
      <description>Title: கயமனார் பாடல்களின்வழி அவரது பால்நிலையை அடையாளப்படுத்தல்
Authors: Selva ampikai, N.
Abstract: சங்ககாலச் சமுதாயத்தில் பெண்கள், இல்லத்தைப் பேணுதல், பொருளீட்டல்,&#xD;
கலைப்பயிற்சி, அரசியல் ஈடுபாடு, படைப்பாக்கம் போன்ற ஆளுமைப் பண்புகள்&#xD;
நிறைந்தவர்களாக விளங்கியுள்ளனர். இவற்றுள் பெண்களின் படைப்பாளுமை என்பது&#xD;
தனித்து நோக்கப்பட வேண்டியதொன்று. சங்ககாலப் பெண்பாற் புலவர்கள் பெற்றிருந்த&#xD;
படைப்பாளுமைத் திறன்களை நோக்கும்போது அறிவுசார் துறையில் பெண்களுக்குப் பெரிய&#xD;
தடைகள் எதுவும் இல்லை என்றே கருதவேண்டியுள்ளது. இத்தகையதொரு சூழலில்&#xD;
சங்கப்புலவர்களின் எண்ணிக்கையில் பெண்பாற் புலவர்களின் மொத்த எண்ணிக்கை&#xD;
குறைவாக இருப்பதற்கான காரணங்கள் ஆராயப்பட வேண்டியதொன்றாகும். பொதுவாக&#xD;
பால்விகுதிகளை அடிப்படையாகக் கொண்டு பெண்பாலாரையும் ஆண்பாலாரையும்&#xD;
அடையாளப்படுத்தும் மரபு எம்மிடையே உண்டு. இதே மரபு சங்கப் புலவர்களின் பெயர்&#xD;
வரிசையிலும் பின்பற்றப்பட்டுள்ளது. சங்ககாலத்தில் சில பாடல்கள் இயற்பெயர்&#xD;
அறியப்படாத புலவர்களால் பாடப்பட்டுள்ளன. இப்புலவர்கள் தாம் பாடிய பாடல்களில்&#xD;
இடம்பெறும் சிறப்புச்சொற்றொடர் அல்லது உவமையால் பெயர் பெற்றவர்களாக&#xD;
விளங்குகின்றனர். இருபதுக்கும் மேற்பட்டவர்கள் அடைமொழியால் அறியப்பட்ட&#xD;
புலவர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.  இவர்களின் பால்நிலையை&#xD;
அடையாளப்படுத்துவது என்பது இன்றைய நிலையில் பெரும் பிரச்சினையாகவுள்ளது.&#xD;
அடைமொழியால் அறியப்பட்ட சங்கப் புலவர்களுள் ஒருவராகக் கயமனார் அமைகின்றார்.&#xD;
சங்ககாலச் சிறப்புப்பெயர்கள் (துரை அரங்கசாமி, மொ, அ., 1960), சங்கத் தமிழ்ப் புலவர்&#xD;
வரிசை (கோவிந்தன், கா.,1961) ஆகிய நூல்களில் கயமனார் பற்றிய குறிப்புக்கள்&#xD;
இடம்பெற்றுள்ளன. இவை கயமனாரின் பெயர்க்காரணம், பாடற்பொருண்மையின்&#xD;
சிறப்புக்கள் குறித்த பதிவுகளாகவே அமைகின்றன. இவற்றில் கயமனார் ஆண்&#xD;
பாற்புலவராகவே அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். கயமனார் பாடல்களையும் பாடற்&#xD;
பொருண்மைகளையும் இனங்காணுதல், அவரது பால்நிலையை அடையாளப்படுத்தல்&#xD;
ஆகியன இவரது பாடல்கள் தொடர்பில் கவனிக்கப்படவேண்டிய பிரச்சினைகள் ஆகும்.&#xD;
கயமனார் பாடல்கள் தொடர்பாக இதுவரை வெளிவந்த ஆய்வுகளை நோக்கும்போது&#xD;
பெரும்பாலானவை அவரைப் பற்றிய விவரணப் பதிவுகளாகவே அமைந்துள்ளன.&#xD;
கயமனாரின் பால்நிலையைக் கண்டறியும் வகையில் பெண்ணிய அணுகுமுறையின்&#xD;
வழியான விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. சங்கப்பாடல்களைப்&#xD;
பாடியவர்களுள் அடைமொழியால் அறியப்பட்டவர்களுள் கயமனார் எண்ணிக்கையில்&#xD;
அதிகமான பாடல்களைப் பாடியவராகக் காணப்படுகின்றார். இவரது பாடல்களில்&#xD;
பெரும்பான்மையானவை பாலைத்திணையில் உடன்போக்குத்துறையில் பெண்பாத்திரக்&#xD;
கூற்றுக்களைக் கொண்டவையாக அமைந்துள்ளன. எனவேதான் கயமனாரின் பாடல்கள் முதன்மை மூலங்களாகக் கொள்ளப்பட்டு, அவரது பாடல்களின்வழி கயமனாரின் பால்&#xD;
நிலையை அடையாளப்படுத்தல் ஆய்வின் நோக்கமாக அமைகின்றது. அடை மொழியால்&#xD;
அறியப்பட்டவர்களுள் பெண்பாற் புலவர்கள் யாவர் என்ற வினா ஆய்வில் முன்வைக்கப்&#xD;
படுகின்றது. கயமனாரின் பாடல்களில் வெளிப்பட்டு நிற்கின்ற விவரணங்களினூடாகப்&#xD;
பெற்றுக்கொள்ளும் தகவல்களை ஒழுங்கமைத்தும் பகுப்பாய்வு செய்தும் ஆண்பாற்&#xD;
புலவரின் பாடல்களோடு ஒப்பிட்டும் இவரது பால்நிலை அடையாளப்படுத்தப்படும்.</description>
      <pubDate>Mon, 01 Jul 2024 00:00:00 GMT</pubDate>
      <guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12712</guid>
      <dc:date>2024-07-01T00:00:00Z</dc:date>
    </item>
    <item>
      <title>வடக்கு மாகாணத்தில் கொலைகளால் காவு கொள்ளப்பட்டுள்ள மனித உயிர்கள்: உயிரின் மாண்பினை அடிப்படையாகக் கொண்ட கிறிஸ்தவ நோக்கு (2009 - 2022)</title>
      <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12711</link>
      <description>Title: வடக்கு மாகாணத்தில் கொலைகளால் காவு கொள்ளப்பட்டுள்ள மனித உயிர்கள்: உயிரின் மாண்பினை அடிப்படையாகக் கொண்ட கிறிஸ்தவ நோக்கு (2009 - 2022)
Authors: Herosini, J.; Paul rohan, J.C.
Abstract: மனிதர்கள் மாண்போடு வாழ்வதற்கான உரிமை மனித உரிமைகளிலேயே மிக&#xD;
முக்கியமானதும் அடிப்படையானதுமானதாக அமைந்துள்ளது. மனித மாண்பைப் போற்றும்&#xD;
திருவிவிலியம் முழுவதும் பரந்துபட்டு உள்ள சிந்தனைகள் மானுட மாண்பு மற்றும் மானிட&#xD;
உயிர் சார்ந்ததாகும். கிறிஸ்தவ நோக்கில் மனித உயிர் மூச்சானது மாண்புமிக்கதாகத்&#xD;
திகழ்கின்றது. மனித உயிர் கடவுள் வழங்கிய மிகப் பெரிய கொடைகளுள் ஒன்றாகும்.&#xD;
மனிதர்களாகிய ஒவ்வொருவருக்கும் இவ்வுலகில் உயிர் வாழ்வதற்கான உரிமை உள்ளது.&#xD;
மனித கொலை என்பது ஒரு மனிதனின் உயிரினை இன்னொரு மனிதர் மரணம் அடையச்&#xD;
செய்வதாகும். போருக்குப் பிற்பட்ட காலத்திலிருந்து சமகாலம் வரை மனித கொலையினால்&#xD;
வடக்கு மாகாணத்தில் உயிர் வாழ்வதற்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளது.&#xD;
இம்மாகாணத்தில் பதின்மூன்று ஆண்டுகளுள் ஏராளமான உயிர்கள் மனித கொலைக்கு&#xD;
உட்படுத்தப்பட்டுள்ளன. கடவுள் மனித உயிரை காவுகொள்ளச் செய்வதற்கான&#xD;
அதிகாரத்தினை மனிதர்களுக்கு வழங்கவில்லை. கிறிஸ்தவமானது மனித உயிரின்&#xD;
மாண்பினை பத்துக்கட்டளைகள் மூலமாக வலியுறுத்துகின்றது. அவற்றுள் கொலை&#xD;
செய்யாதே என்ற ஐந்தாவது கட்டளையின் பின்னணியில் மனித கொலைகளை தடுப்பதற்கு&#xD;
அழைப்புவிடுத்துள்ளது. ஐந்தாவதாக அமையும் இக்கட்டளை ஏனைய மனிதர்களின்&#xD;
உயிரை கொலை மூலம் காவுகொள்வதை முற்றிலும் நிராகரிக்கின்றது. அத்தோடு&#xD;
இக்கட்டளை வாயிலாக மனித உயிரின் மாண்பினை உணரச் செய்யத் தூண்டியுள்ளது. இவ்&#xD;
ஆய்வில் மனித கொலைகள் இடம்பெற்றமைக்கான தரவுகள் மற்றும் கொலைகளில்&#xD;
செல்வாக்குச் செலுத்தியுள்ள காரணிகள் மற்றும் பாலின ரீதியான எண்ணிக்கைகள் கள&#xD;
ஆய்வின் மூலம் சேகரிக்கப்பட்டுள்ளன. மனித உயிர் கடவுளுக்குச் சொந்தமானது. மனித&#xD;
உயிர் புனிதமானது, மேன்மையானது மற்றும் விலைமதிப்பற்றது போன்ற சிந்தனைகளை&#xD;
இவ் ஆய்வானது ஆழப்படுத்தியுள்ளது. மனித கொலைகளைத் தவிர்த்து உயிரைப்&#xD;
பாதுகாப்பது ஒவ்வொருவருடைய கடமையாகத் திகழ்கின்றது. பிறரில் இறைசாயலை&#xD;
உணர்வதன் ஊடாகவே மனித கொலைகள் இடம்பெறுவதைக் குறைக்கலாம்.</description>
      <pubDate>Mon, 01 Jul 2024 00:00:00 GMT</pubDate>
      <guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12711</guid>
      <dc:date>2024-07-01T00:00:00Z</dc:date>
    </item>
  </channel>
</rss>

